புதையலை காக்கும் முதலைகள்
மன்னர் ஆட்சி காலங்களின் போது சேகரிக்கப்பட்ட தங்கம் வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை போரின் போது இவைைகள் கொள்ளைையடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கிணறுகள், சுரங்கம் போன்ற ரகசிய இடங்களில் வைத்து பாதுகாத்தனர்.
அத்துடன் இந்த சொத்துகளை ரகசியமாகவும் பாதுகாத்து வந்தனர். கால மாற்றத்தில் இவை புதையலாக வெளிப்படுகின்றன. அப்படி குஜராத் மாநிலத்தில் உள்ள புதையல் ஒன்றை முதலைகள் காவல் காப்பதாக நம்பப்படுகிறது. குஜராத், அகமதாபாத், காந்திகிராமம் போன்ற பகுதிகளை போன்று ஜுனாகத் பகுதி வானுயர்ந்த கோட்டைகளுக்கு புகழ்பெற்றது. சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகருடைய பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததாம். இங்கு ஸகா அரசர் மஹாசத்ரப் ருத்ரதாமன் ஆட்சியை சேர்ந்த கல்வெட்டுகளை நாம் காண முடியும்.
இந்நகரத்தின் மேலே கிர்நார் சிகரம் உள்ளது. இதனை அடைய 9999 படிகளை உடைய மலைப்பாதைகள் மற்றும் கோவில்களை கடக்க வேண்டும்.
மிகமுக்கியமாக மர்மமான பகுதியாக காணப்படும் உபர்கோட் கோட்டை கி.மு 320 - ம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியரால் கட்டப்பட்ட கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள குகைகளில் அழகான நுழைவாயில்கள்,தூண்கள், தண்ணீர் கோட்டைகள் மற்றும் சட்டசபை மண்டபம், தியான மண்டபம் போன்றவை உள்ளன.
இவற்றை கடந்து இருள் சூழ்ந்த சுரங்கத்தில் பயணித்தால் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான மறைமுக குறியீடுகளும் குகையின் உட்புறத்தில் காணப்படுகிறது. அத்துடன் குகையின் உள்ளே ஒரு மீட்டர் தூரத்தில் 300 அடி ஆழம் கொண்ட அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதற்கான தடயங்களை காணலாம். யாரேனும் உள்ளே வந்தால் முதலைக்கு இரையாகும்படி இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். இன்று முதலைகள் இல்லை என்று சொல்லப்பட்டாலும் புதையலை தேடிச் செல்பவர்கள் உயிரிழந்து விடுவது தொடர்கதையாகி உள்ளதாம்.
மன்னர் ஆட்சி காலங்களின் போது சேகரிக்கப்பட்ட தங்கம் வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை போரின் போது இவைைகள் கொள்ளைையடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கிணறுகள், சுரங்கம் போன்ற ரகசிய இடங்களில் வைத்து பாதுகாத்தனர்.
அத்துடன் இந்த சொத்துகளை ரகசியமாகவும் பாதுகாத்து வந்தனர். கால மாற்றத்தில் இவை புதையலாக வெளிப்படுகின்றன. அப்படி குஜராத் மாநிலத்தில் உள்ள புதையல் ஒன்றை முதலைகள் காவல் காப்பதாக நம்பப்படுகிறது. குஜராத், அகமதாபாத், காந்திகிராமம் போன்ற பகுதிகளை போன்று ஜுனாகத் பகுதி வானுயர்ந்த கோட்டைகளுக்கு புகழ்பெற்றது. சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகருடைய பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததாம். இங்கு ஸகா அரசர் மஹாசத்ரப் ருத்ரதாமன் ஆட்சியை சேர்ந்த கல்வெட்டுகளை நாம் காண முடியும்.
இந்நகரத்தின் மேலே கிர்நார் சிகரம் உள்ளது. இதனை அடைய 9999 படிகளை உடைய மலைப்பாதைகள் மற்றும் கோவில்களை கடக்க வேண்டும்.
மிகமுக்கியமாக மர்மமான பகுதியாக காணப்படும் உபர்கோட் கோட்டை கி.மு 320 - ம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியரால் கட்டப்பட்ட கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள குகைகளில் அழகான நுழைவாயில்கள்,தூண்கள், தண்ணீர் கோட்டைகள் மற்றும் சட்டசபை மண்டபம், தியான மண்டபம் போன்றவை உள்ளன.
இவற்றை கடந்து இருள் சூழ்ந்த சுரங்கத்தில் பயணித்தால் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான மறைமுக குறியீடுகளும் குகையின் உட்புறத்தில் காணப்படுகிறது. அத்துடன் குகையின் உள்ளே ஒரு மீட்டர் தூரத்தில் 300 அடி ஆழம் கொண்ட அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதற்கான தடயங்களை காணலாம். யாரேனும் உள்ளே வந்தால் முதலைக்கு இரையாகும்படி இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். இன்று முதலைகள் இல்லை என்று சொல்லப்பட்டாலும் புதையலை தேடிச் செல்பவர்கள் உயிரிழந்து விடுவது தொடர்கதையாகி உள்ளதாம்.