அத்தியாயம் - 4
“கடைசி நேரத்துல, இவ இப்படித் தான் ஏதாவது செய்வான்னு எனக்கு அப்பவே தெரியும்” கணவரிடம் எரிச்சலுடன் பொருமிக் கொண்டிருந்தார் கற்பகம்.
“சரிம்மா! வேணும்னா வராம இருக்கா? அவளோட வேலை அப்படி. அவளும் தான் வர ஆசையா இருந்தா. என்ன செய்யறது?” என்ற கணவரை முறைத்தார்.
“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிருங்க. அப்புறம் நான் சொல்றதை அவள் எப்படி மதிப்பா?” என்றவரது முகம் கடுகடுவென இருந்தது.
“திரும்பத் திரும்பப் புலம்பிட்டு இருக்காதே. ரெண்டு நாள்ல வந்திடுறேன்னு சொல்லியிருக்காயில்ல. வந்திடுவா. வரலன்னா, நானே அவளைக் கேட்கறேன்” என்றார் சற்றுக் காட்டமாக.
“ம்க்கும்! அப்படியே கேட்டுட்டாலும்” என்று நொடித்துக் கொண்டவர், “கேட்கற லட்சணம் எனக்குத் தெரியாதாக்கும்?” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
“சரி சரி. முகத்தைக் கொஞ்சம் சிரிச்சது போல வச்சிக்க. பத்து நிமிஷத்துல வீடு வந்திடும்” என்றார் சோமநாதன்.
“ம்ம் தெரியும்” என்றார் மிடுக்காக. டாக்ஸி வந்து நிற்கும் சப்தம் கேட்டு வெளியே வந்த வளர்மதி, “வாங்க அண்ணே!” என்று முகம் கொள்ளா சிரிப்புடன் வாய் நிறைய அழைத்தார்.
“அண்ணி எப்படி இருக்கீங்க?” என்று காரிலிருந்து இறங்கியவரை, “கற்பகம் வாவா. அண்ணன் வீட்டுக்கு வர இப்போதான் உனக்கு வழி தெரிந்ததா?” என்று உரிமையுடன் கேட்டார் வளர்மதி.
“எப்படிம்மா இருக்க?” என்று விசாரித்த சோமு, எதிர்கொண்டு அழைத்த மைத்துனரிடம் பேசச் செல்ல, வளர்மதி நாத்தனாரை உள்ளே அழைத்துச் சென்றார்.
வளர்மதி, கற்பகத்தின் அண்ணன் மனைவி. மாமியார் இல்லாத குடும்பத்தைத் தனது குடும்பமாகவும், கணவனின் தம்பி, தங்கைகளைத் தனது உடன்பிறந்தவர்களாகவும் வரித்துக் கொண்டவர். இருவரும் அண்ணன் மனைவி, நாத்தனார் என்ற பாகுபாடில்லாமல் தோழிகளைப் போல உறவாடிக் கொள்வர்.
“அத்தை!” என்றழைத்தபடி வந்த ஹரிணி, “என்னத்த இந்த முறையும் டிமிக்கிக் கொடுத்துட்டாளா வைஷு” என்று கேட்டாள் சிரிப்புடன்.
“நாளன்னைக்கு வந்திடுவா ஹரிணி. அவசரமா அவங்க ஹெட் ஆஃபிஸ்லயிருந்து மெயில் வந்தது. இவள் போனாதான் விஷயம் ஈஸியா முடியும்ன்னு இவளை அனுப்பியிருக்காங்க” என்ற கற்பகத்தின் முகத்தில் அவ்வளவு பெருமை.
மைத்துனருடன் பேசிக்கொண்டிருந்த சோமநாதன் கிண்டலான ஒரு பார்வையை மனைவியின் பக்கம் வீசினார். இதைப் போல எவ்வளவு முறை பார்த்திருப்பேன் என்று கற்பகமும் பார்வையாலேயே சொல்லாமல் சொன்னார்.
உறவுகளைப் பார்த்தச் சந்தோஷத்தில் கற்பகம், மகளைப் பற்றிய கவலையைச் சற்றுநேரம் மறந்தார். ராஜேஷிற்கு ஒரு வரன் அமைந்திருப்பதாகவும், வளைகாப்பு முடிந்த மறுநாள் அனைவரும் சென்று பார்த்துவிட்டு வருவதென்றும் முடிவானது.
இரவு ஹரிணியும், ஜனனியும் வாட்ஸ் ஆப் கான்ஃப்ரன்ஸ் காலில், வைஷ்ணவியை பிடிபிடியென பிடித்துக் கொண்டனர்.
“ஏய்! வராம ஏமாத்தலாம்ன்னு நினைக்காதே. அப்புறம் உன்கிட்டப் பேச்சே வச்சிக்க மாட்டேன். சொல்லிட்டேன்” என்று கடுப்புடன் சொன்ன ஜனனியை, சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது வைஷ்ணவிக்கு.
“கண்டிப்பா நாளன்னைக்கு வந்திடுவேன். ராஜேஷுக்குப் பெண் பார்க்கப் போறதா அம்மா சொன்னாங்களே. அதுக்காகவே வருவேன்” என்றாள் சிரிப்புடன்.
“வா வா. அண்ணனை ஒரு வழி பண்ணுவோம். அண்ணனைச் சமாளிக்க நீதான் கரெக்ட்டான ஆள்” என்றாள் ஹரிணி.
“ம்க்கும்! இவதான் நம்ம அண்ணியா வருவான்னு, நான் என் வீட்டுக்காரர்கிட்டக் கூடச் சொல்லிட்டு இருந்தேன். கடைசில இதுங்க ரெண்டும் சேர்ந்து எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்தாங்க” என்று அலுப்பும் சலிப்புமாகச் சொன்னாள் ஜனனி.
அவளது வார்தைகள் வைஷ்ணவிக்குச் சிறு சங்கடத்தை உண்டாக்கினாலும், சட்டெனச் சமாளித்துக் கொண்டாள். “ம்ம், இவ அண்ணியா வந்தா இங்கேயே டேரா போட்டு வேலை வாங்கலாம்ன்னு நினைச்சிருப்ப. அதுக்கு நாங்க இடம் கொடுக்கல இல்ல” என்று கிண்டலாகச் சொன்னாள்.
“ஆமாமாம். நீ அப்படியே வேலை செய்துட்டாலும்… எங்களுக்குத் தெரியாதா உன்னை? நீ வேணா பாரு, ரெண்டு மாமியார். நாலு நாத்தனார் இருக்க வீட்ல தான் உனக்கு மாப்பிள்ளை அமையப் போகுது” என்றாள் ஜனனி.
“அது சரி. நான் பார்த்து ஓகே சொன்னா தான் எங்க அப்பா கல்யாணத்துக்கு ஒத்துப்பார்” என்றாள் அவளும் விடாமல்.
“ஏற்கெனவே, என் ராஜகுமாரிக்கு ஏத்த ராஜகுமாரன் எங்கிருந்தாலும் வருவான்னு சொல்லிட்டு இருக்கார் மாமா. ஆக மொத்தத்தில் இவங்க ராஜ குமாரன் இல்ல, இவளுக்கு கூஜா தூக்கற ஆளைத் தான் பார்ப்பாங்க” என்றாள் ஹரிணி கிண்டலாக.
“நியாயமான விஷயத்துக்கு கூஜா தூக்கினா தப்பில்ல” என்றாள் வைஷ்ணவி வீராப்புடன்.
“எல்லோருக்கும் ஒரே விஷயம் நியாயமா படுமா என்ன?” என்ற ஜனனியை முறைத்தாள்.
“முறைக்காதே. உண்மையைச் சொல்றேன்” என்றாள் ஜனனி. சில நொடிகள் அமைதியாக இருந்த வைஷு, “உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கல்யாணம் செய்துக்கறதுல இப்போதைக்கு விருப்பம் இல்ல” என்றாள்.
“ஏண்டி! இன்னும் எவ்வளவு நாளைக்கு இதையே சொல்வ? எல்லாமே நம்ம விருப்பத்துக்கு நடக்கும்ன்னு எதிர்பார்க்க முடியாதில்ல” என்றாள் ஹரிணி.
“அதனால தான் நான் எந்த எதிர்பார்ப்பும் வச்சிக்கல” என்றாள் மென்குரலில்.
“மனசு இருக்கில்ல… அது நிலையா எப்பவும் இருக்காது. உனக்குப் பிடிக்கறது போல ஒரு ஆளைப் பார்க்கற வரை, நீ இப்படித் தான் பேசிட்டு இருப்ப. சீக்கிரமே அப்படி ஒருத்தன் உன் கண் முன்னால வந்து நிற்கட்டும்” என்றாள் ஹரிணி சிரிப்புடன்.
“நீ வாழ்த்து சொல்றியா? இல்ல…” என்று இழுத்தாள்.
“தேவதைகள் ததாஸ்து சொன்னது உனக்குக் கேட்கலாயா வைஷு” என்ற ஜனனியைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.
“கடைசி நேரத்துல, இவ இப்படித் தான் ஏதாவது செய்வான்னு எனக்கு அப்பவே தெரியும்” கணவரிடம் எரிச்சலுடன் பொருமிக் கொண்டிருந்தார் கற்பகம்.
“சரிம்மா! வேணும்னா வராம இருக்கா? அவளோட வேலை அப்படி. அவளும் தான் வர ஆசையா இருந்தா. என்ன செய்யறது?” என்ற கணவரை முறைத்தார்.
“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிருங்க. அப்புறம் நான் சொல்றதை அவள் எப்படி மதிப்பா?” என்றவரது முகம் கடுகடுவென இருந்தது.
“திரும்பத் திரும்பப் புலம்பிட்டு இருக்காதே. ரெண்டு நாள்ல வந்திடுறேன்னு சொல்லியிருக்காயில்ல. வந்திடுவா. வரலன்னா, நானே அவளைக் கேட்கறேன்” என்றார் சற்றுக் காட்டமாக.
“ம்க்கும்! அப்படியே கேட்டுட்டாலும்” என்று நொடித்துக் கொண்டவர், “கேட்கற லட்சணம் எனக்குத் தெரியாதாக்கும்?” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
“சரி சரி. முகத்தைக் கொஞ்சம் சிரிச்சது போல வச்சிக்க. பத்து நிமிஷத்துல வீடு வந்திடும்” என்றார் சோமநாதன்.
“ம்ம் தெரியும்” என்றார் மிடுக்காக. டாக்ஸி வந்து நிற்கும் சப்தம் கேட்டு வெளியே வந்த வளர்மதி, “வாங்க அண்ணே!” என்று முகம் கொள்ளா சிரிப்புடன் வாய் நிறைய அழைத்தார்.
“அண்ணி எப்படி இருக்கீங்க?” என்று காரிலிருந்து இறங்கியவரை, “கற்பகம் வாவா. அண்ணன் வீட்டுக்கு வர இப்போதான் உனக்கு வழி தெரிந்ததா?” என்று உரிமையுடன் கேட்டார் வளர்மதி.
“எப்படிம்மா இருக்க?” என்று விசாரித்த சோமு, எதிர்கொண்டு அழைத்த மைத்துனரிடம் பேசச் செல்ல, வளர்மதி நாத்தனாரை உள்ளே அழைத்துச் சென்றார்.
வளர்மதி, கற்பகத்தின் அண்ணன் மனைவி. மாமியார் இல்லாத குடும்பத்தைத் தனது குடும்பமாகவும், கணவனின் தம்பி, தங்கைகளைத் தனது உடன்பிறந்தவர்களாகவும் வரித்துக் கொண்டவர். இருவரும் அண்ணன் மனைவி, நாத்தனார் என்ற பாகுபாடில்லாமல் தோழிகளைப் போல உறவாடிக் கொள்வர்.
“அத்தை!” என்றழைத்தபடி வந்த ஹரிணி, “என்னத்த இந்த முறையும் டிமிக்கிக் கொடுத்துட்டாளா வைஷு” என்று கேட்டாள் சிரிப்புடன்.
“நாளன்னைக்கு வந்திடுவா ஹரிணி. அவசரமா அவங்க ஹெட் ஆஃபிஸ்லயிருந்து மெயில் வந்தது. இவள் போனாதான் விஷயம் ஈஸியா முடியும்ன்னு இவளை அனுப்பியிருக்காங்க” என்ற கற்பகத்தின் முகத்தில் அவ்வளவு பெருமை.
மைத்துனருடன் பேசிக்கொண்டிருந்த சோமநாதன் கிண்டலான ஒரு பார்வையை மனைவியின் பக்கம் வீசினார். இதைப் போல எவ்வளவு முறை பார்த்திருப்பேன் என்று கற்பகமும் பார்வையாலேயே சொல்லாமல் சொன்னார்.
உறவுகளைப் பார்த்தச் சந்தோஷத்தில் கற்பகம், மகளைப் பற்றிய கவலையைச் சற்றுநேரம் மறந்தார். ராஜேஷிற்கு ஒரு வரன் அமைந்திருப்பதாகவும், வளைகாப்பு முடிந்த மறுநாள் அனைவரும் சென்று பார்த்துவிட்டு வருவதென்றும் முடிவானது.
இரவு ஹரிணியும், ஜனனியும் வாட்ஸ் ஆப் கான்ஃப்ரன்ஸ் காலில், வைஷ்ணவியை பிடிபிடியென பிடித்துக் கொண்டனர்.
“ஏய்! வராம ஏமாத்தலாம்ன்னு நினைக்காதே. அப்புறம் உன்கிட்டப் பேச்சே வச்சிக்க மாட்டேன். சொல்லிட்டேன்” என்று கடுப்புடன் சொன்ன ஜனனியை, சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது வைஷ்ணவிக்கு.
“கண்டிப்பா நாளன்னைக்கு வந்திடுவேன். ராஜேஷுக்குப் பெண் பார்க்கப் போறதா அம்மா சொன்னாங்களே. அதுக்காகவே வருவேன்” என்றாள் சிரிப்புடன்.
“வா வா. அண்ணனை ஒரு வழி பண்ணுவோம். அண்ணனைச் சமாளிக்க நீதான் கரெக்ட்டான ஆள்” என்றாள் ஹரிணி.
“ம்க்கும்! இவதான் நம்ம அண்ணியா வருவான்னு, நான் என் வீட்டுக்காரர்கிட்டக் கூடச் சொல்லிட்டு இருந்தேன். கடைசில இதுங்க ரெண்டும் சேர்ந்து எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்தாங்க” என்று அலுப்பும் சலிப்புமாகச் சொன்னாள் ஜனனி.
அவளது வார்தைகள் வைஷ்ணவிக்குச் சிறு சங்கடத்தை உண்டாக்கினாலும், சட்டெனச் சமாளித்துக் கொண்டாள். “ம்ம், இவ அண்ணியா வந்தா இங்கேயே டேரா போட்டு வேலை வாங்கலாம்ன்னு நினைச்சிருப்ப. அதுக்கு நாங்க இடம் கொடுக்கல இல்ல” என்று கிண்டலாகச் சொன்னாள்.
“ஆமாமாம். நீ அப்படியே வேலை செய்துட்டாலும்… எங்களுக்குத் தெரியாதா உன்னை? நீ வேணா பாரு, ரெண்டு மாமியார். நாலு நாத்தனார் இருக்க வீட்ல தான் உனக்கு மாப்பிள்ளை அமையப் போகுது” என்றாள் ஜனனி.
“அது சரி. நான் பார்த்து ஓகே சொன்னா தான் எங்க அப்பா கல்யாணத்துக்கு ஒத்துப்பார்” என்றாள் அவளும் விடாமல்.
“ஏற்கெனவே, என் ராஜகுமாரிக்கு ஏத்த ராஜகுமாரன் எங்கிருந்தாலும் வருவான்னு சொல்லிட்டு இருக்கார் மாமா. ஆக மொத்தத்தில் இவங்க ராஜ குமாரன் இல்ல, இவளுக்கு கூஜா தூக்கற ஆளைத் தான் பார்ப்பாங்க” என்றாள் ஹரிணி கிண்டலாக.
“நியாயமான விஷயத்துக்கு கூஜா தூக்கினா தப்பில்ல” என்றாள் வைஷ்ணவி வீராப்புடன்.
“எல்லோருக்கும் ஒரே விஷயம் நியாயமா படுமா என்ன?” என்ற ஜனனியை முறைத்தாள்.
“முறைக்காதே. உண்மையைச் சொல்றேன்” என்றாள் ஜனனி. சில நொடிகள் அமைதியாக இருந்த வைஷு, “உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கல்யாணம் செய்துக்கறதுல இப்போதைக்கு விருப்பம் இல்ல” என்றாள்.
“ஏண்டி! இன்னும் எவ்வளவு நாளைக்கு இதையே சொல்வ? எல்லாமே நம்ம விருப்பத்துக்கு நடக்கும்ன்னு எதிர்பார்க்க முடியாதில்ல” என்றாள் ஹரிணி.
“அதனால தான் நான் எந்த எதிர்பார்ப்பும் வச்சிக்கல” என்றாள் மென்குரலில்.
“மனசு இருக்கில்ல… அது நிலையா எப்பவும் இருக்காது. உனக்குப் பிடிக்கறது போல ஒரு ஆளைப் பார்க்கற வரை, நீ இப்படித் தான் பேசிட்டு இருப்ப. சீக்கிரமே அப்படி ஒருத்தன் உன் கண் முன்னால வந்து நிற்கட்டும்” என்றாள் ஹரிணி சிரிப்புடன்.
“நீ வாழ்த்து சொல்றியா? இல்ல…” என்று இழுத்தாள்.
“தேவதைகள் ததாஸ்து சொன்னது உனக்குக் கேட்கலாயா வைஷு” என்ற ஜனனியைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.