அத்தியாயம் – 9
சித்தார்த்தின் நேரம் களவாடப்பட்டுக் கொண்டிருந்தது. அவனால் தனது சொந்த வேலைகளை சிந்திக்க கூட இயலாமல் ஓடிக் கொண்டே இருந்தான். அதே சமயம் தந்தை கோமாவில் விழும் முன் சொன்ன வார்த்தைகள் யாவும் மனதில் சுழன்று கொண்டே இருந்தது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
தனது நண்பர்களுக்கோ, வர்ஷிணிக்கோ அழைத்து பேச முயற்சிக்கவில்லை. தன் முதுகின் மீது எப்போதும் ஒரு பார்வை இருந்து கொண்டே இருப்பதை உணர்ந்து அவற்றை எல்லாம் தவிர்த்தான். அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியவில்லை எந்த தகவலும் வரவில்லை. தானாக முயற்ச்சித்து பெற முடியாமல் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை. தனது செயலால் அவளுக்கும் அவளை சேர்ந்தவர்களுக்கும் ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தான்.
ஏற்கனவே எல்லாம் நடந்து முடித்து அவளுக்கு தான் வில்லனாக இருக்கிறோம் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை. அவனது சூழ்நிலை அவனை சுற்றி உள்ளவர்களே தவறாக எண்ணும் நிலையிலேயே இருந்தான். தனது சூழ்நிலையை உணர்ந்திருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான்.
தந்தையின் மூலம் ஓரளவிற்கு விஷயம் புரிந்திருந்தாலும், தன் பின்னே இருக்கும் எதிரி யார் என்று புரியாமல் இருந்தான். ஒவ்வொரு நாளின் முடிவிலும் வர்ஷினி அவன் முன்னே வந்து நின்று என்னை கை விட்டு விட்டாயே என்று கேட்டு நிற்பாள். உறக்கம் மறந்து ஒருவித தவிப்புடனே நாட்களை கடத்தினான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சோதனை. இன்று அவளைத் தேடிச் சென்று விடலாம் நாளை சென்று விடலாம் என்று நினைப்பான். ஆனால் அது நடக்காமலே போய் கொண்டிருந்தது.
வர்ஷினியும் மிகவும் கஷ்டப்பட்டு அவனது நினைவுகளை மறந்து தனது அன்றாடங்களை செய்து கொண்டிருந்தாள். தான்யாவும் இயல்புக்கு வந்திருந்தாள். சகோதரிகள் இருவருக்கும் தாய் தந்தையின் இழப்பும், சித்தார்த்தின் வரவால் குடும்பத்தின் நடந்த அனர்த்தங்களை இருவரும் மறக்க முடியவில்லை. வர்ஷினி அவனை முற்றிலுமாக வெறுத்தாள். இனி, எக்காலத்திலும் அவனை சந்திக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
அவள் என்னதான் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவளது கல்லூரியிலும் அவர்களது காதலைப் பற்றிய பேச்சு அவ்வப்போது எழுந்து கொண்டு தான் இருந்தது. அவளை பார்த்ததும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறவர்களும் இருந்தார்கள். அதே சமயம் முகத்திற்கு நேராகவும் கேட்கவும் செய்கிறவர்கள் இருந்தார்கள்.
அதிலும் லோகேஷ்சிறகு சித்தார்த்தின் மீது பகை இருந்த காரணத்தினால் அவளை அடிக்கடி சீண்டிக் கொண்டிருந்தான். அதிலும் செயற்கை கால் அவளுக்கு பலவிதமான சோதனைகளை கொடுத்தது. ஒவ்வொரு நாளும் நரகம் தான். அன்றும் அப்படிப்பட்ட ஒரு நாள்.
தங்கையுடன் கல்லூரிக்கு வந்து இறங்கியவளை புண்படுத்தவென்று காத்திருந்தது விதி. பெற்றவர்களை இழந்து நான்கு மாதங்கள் கடந்திருந்த நிலையில், கல்லூரி ஒன்றே அவளுக்கு இளைப்பாறும் இடமாக இருந்தது. நல்லபடியாக படிப்பை முடித்து வேலையில் அமர்ந்து விடவேண்டும் என்கிற எண்ணத்துடன் படிப்பு ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதும் சரவணன் அவசரமாக பேசுவதற்கு வந்து நின்றான். சித்தார்த்தின் நண்பனான அவனைக் காணக் கூட பிடிப்பதில்லை அவளுக்கு. ஆனால் அன்று உதவியது முழுவதும் அவர்கள் தான் என்பதால் மௌனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஒருவித தயக்கத்துடன் “எப்படி இருக்க வர்ஷினி?” என்றான்.
“நல்லா இருக்கேன்...நீங்க?”
“உன்கிட்ட ஒருவிஷயம் பேசனும்” என்றான் தயக்கத்துடன்.
அதுவரை இயல்பாக நின்று கொண்டிருந்தவளின் உடல் விரைக்க “உங்க பிரெண்ட் பத்தி பேசுவதாக இருந்தா வேண்டாம்” என்று கூறிவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தவன் “உன் மனசுல உள்ள காதல் உண்மையாக இருந்தா எது நடந்தாலும் அவனை தவறாக நினைக்காதே வர்ஷினி. நிச்சயம் அவனுக்கு ஒரு காரணம் இருக்கும்” என்றான்.
சடாரென்று நின்று அவனை உறுத்து விழித்தவள் “எது? நான் எல்லாத்தையும் இழந்து இன்னைக்கு அனாதையா நிற்கவும் அவன் கிட்ட காரணம் இருக்குமா?”.
“நடந்தது நிச்சயம் பெரிய இழப்பு தான். ஆனால் அவனுடைய மனசை தெரிந்ததனால தான் சொல்றேன் வர்ஷினி”.
அவனை முறைத்து “நான் ஒன்று கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே? நாலு மாசம் ஆச்சு. அன்னைக்கு என்னை அம்போன்னு விட்டுட்டு போனவன் நான் இருக்கேன்னா செத்தேனான்னு கூட விசாரிக்கல. அவனுக்கு என்னவேனா சூழ்நிலை இருக்கட்டும். ஒரு போன் பண்ண கூட முடியாத சூழ்நிலைன்னு சொல்றதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு. வேண்டாம்! தயவு செய்து இதைப் பற்றி என்கிட்டே பேசாதீங்க” என்று அவள் நகரும் முன் அங்கு வந்து சேர்ந்தான் லோகேஷ்.
இருவரையும் கிண்டலாகப் பார்த்து “அட்ரா! அட்ரா! அவன் போனவுடனே இவனை பிடிச்சிட்டியா? அதுவும் லவ் பண்ணினவனோட பிரெண்ட்டையே” என்று கேட்டு முடிக்கும் முன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.
அதற்குள் ஆங்காங்கே கடந்து போய் கொண்டிருந்தவர்கள் அங்கு குழுமிவிட சரவணனுக்கு கோபமும், ஆத்திரமும் ஒருங்கே எழ தன்னால் தானே அவள் அவமானப்பட நேர்ந்தது என்கிற எண்ணத்தில் அவனை போட்டு புரட்டி எடுத்தான்.
அதற்குள் பிரின்சிபால் அறையிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வர, முகக் கன்றலுடன் சரவணனை முறைத்து விட்டு பிரின்சிபால் அறைக்குச் சென்றாள்.
சித்தார்த்தின் நேரம் களவாடப்பட்டுக் கொண்டிருந்தது. அவனால் தனது சொந்த வேலைகளை சிந்திக்க கூட இயலாமல் ஓடிக் கொண்டே இருந்தான். அதே சமயம் தந்தை கோமாவில் விழும் முன் சொன்ன வார்த்தைகள் யாவும் மனதில் சுழன்று கொண்டே இருந்தது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
தனது நண்பர்களுக்கோ, வர்ஷிணிக்கோ அழைத்து பேச முயற்சிக்கவில்லை. தன் முதுகின் மீது எப்போதும் ஒரு பார்வை இருந்து கொண்டே இருப்பதை உணர்ந்து அவற்றை எல்லாம் தவிர்த்தான். அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியவில்லை எந்த தகவலும் வரவில்லை. தானாக முயற்ச்சித்து பெற முடியாமல் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை. தனது செயலால் அவளுக்கும் அவளை சேர்ந்தவர்களுக்கும் ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தான்.
ஏற்கனவே எல்லாம் நடந்து முடித்து அவளுக்கு தான் வில்லனாக இருக்கிறோம் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை. அவனது சூழ்நிலை அவனை சுற்றி உள்ளவர்களே தவறாக எண்ணும் நிலையிலேயே இருந்தான். தனது சூழ்நிலையை உணர்ந்திருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான்.
தந்தையின் மூலம் ஓரளவிற்கு விஷயம் புரிந்திருந்தாலும், தன் பின்னே இருக்கும் எதிரி யார் என்று புரியாமல் இருந்தான். ஒவ்வொரு நாளின் முடிவிலும் வர்ஷினி அவன் முன்னே வந்து நின்று என்னை கை விட்டு விட்டாயே என்று கேட்டு நிற்பாள். உறக்கம் மறந்து ஒருவித தவிப்புடனே நாட்களை கடத்தினான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சோதனை. இன்று அவளைத் தேடிச் சென்று விடலாம் நாளை சென்று விடலாம் என்று நினைப்பான். ஆனால் அது நடக்காமலே போய் கொண்டிருந்தது.
வர்ஷினியும் மிகவும் கஷ்டப்பட்டு அவனது நினைவுகளை மறந்து தனது அன்றாடங்களை செய்து கொண்டிருந்தாள். தான்யாவும் இயல்புக்கு வந்திருந்தாள். சகோதரிகள் இருவருக்கும் தாய் தந்தையின் இழப்பும், சித்தார்த்தின் வரவால் குடும்பத்தின் நடந்த அனர்த்தங்களை இருவரும் மறக்க முடியவில்லை. வர்ஷினி அவனை முற்றிலுமாக வெறுத்தாள். இனி, எக்காலத்திலும் அவனை சந்திக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
அவள் என்னதான் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவளது கல்லூரியிலும் அவர்களது காதலைப் பற்றிய பேச்சு அவ்வப்போது எழுந்து கொண்டு தான் இருந்தது. அவளை பார்த்ததும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறவர்களும் இருந்தார்கள். அதே சமயம் முகத்திற்கு நேராகவும் கேட்கவும் செய்கிறவர்கள் இருந்தார்கள்.
அதிலும் லோகேஷ்சிறகு சித்தார்த்தின் மீது பகை இருந்த காரணத்தினால் அவளை அடிக்கடி சீண்டிக் கொண்டிருந்தான். அதிலும் செயற்கை கால் அவளுக்கு பலவிதமான சோதனைகளை கொடுத்தது. ஒவ்வொரு நாளும் நரகம் தான். அன்றும் அப்படிப்பட்ட ஒரு நாள்.
தங்கையுடன் கல்லூரிக்கு வந்து இறங்கியவளை புண்படுத்தவென்று காத்திருந்தது விதி. பெற்றவர்களை இழந்து நான்கு மாதங்கள் கடந்திருந்த நிலையில், கல்லூரி ஒன்றே அவளுக்கு இளைப்பாறும் இடமாக இருந்தது. நல்லபடியாக படிப்பை முடித்து வேலையில் அமர்ந்து விடவேண்டும் என்கிற எண்ணத்துடன் படிப்பு ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதும் சரவணன் அவசரமாக பேசுவதற்கு வந்து நின்றான். சித்தார்த்தின் நண்பனான அவனைக் காணக் கூட பிடிப்பதில்லை அவளுக்கு. ஆனால் அன்று உதவியது முழுவதும் அவர்கள் தான் என்பதால் மௌனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஒருவித தயக்கத்துடன் “எப்படி இருக்க வர்ஷினி?” என்றான்.
“நல்லா இருக்கேன்...நீங்க?”
“உன்கிட்ட ஒருவிஷயம் பேசனும்” என்றான் தயக்கத்துடன்.
அதுவரை இயல்பாக நின்று கொண்டிருந்தவளின் உடல் விரைக்க “உங்க பிரெண்ட் பத்தி பேசுவதாக இருந்தா வேண்டாம்” என்று கூறிவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தவன் “உன் மனசுல உள்ள காதல் உண்மையாக இருந்தா எது நடந்தாலும் அவனை தவறாக நினைக்காதே வர்ஷினி. நிச்சயம் அவனுக்கு ஒரு காரணம் இருக்கும்” என்றான்.
சடாரென்று நின்று அவனை உறுத்து விழித்தவள் “எது? நான் எல்லாத்தையும் இழந்து இன்னைக்கு அனாதையா நிற்கவும் அவன் கிட்ட காரணம் இருக்குமா?”.
“நடந்தது நிச்சயம் பெரிய இழப்பு தான். ஆனால் அவனுடைய மனசை தெரிந்ததனால தான் சொல்றேன் வர்ஷினி”.
அவனை முறைத்து “நான் ஒன்று கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே? நாலு மாசம் ஆச்சு. அன்னைக்கு என்னை அம்போன்னு விட்டுட்டு போனவன் நான் இருக்கேன்னா செத்தேனான்னு கூட விசாரிக்கல. அவனுக்கு என்னவேனா சூழ்நிலை இருக்கட்டும். ஒரு போன் பண்ண கூட முடியாத சூழ்நிலைன்னு சொல்றதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு. வேண்டாம்! தயவு செய்து இதைப் பற்றி என்கிட்டே பேசாதீங்க” என்று அவள் நகரும் முன் அங்கு வந்து சேர்ந்தான் லோகேஷ்.
இருவரையும் கிண்டலாகப் பார்த்து “அட்ரா! அட்ரா! அவன் போனவுடனே இவனை பிடிச்சிட்டியா? அதுவும் லவ் பண்ணினவனோட பிரெண்ட்டையே” என்று கேட்டு முடிக்கும் முன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.
அதற்குள் ஆங்காங்கே கடந்து போய் கொண்டிருந்தவர்கள் அங்கு குழுமிவிட சரவணனுக்கு கோபமும், ஆத்திரமும் ஒருங்கே எழ தன்னால் தானே அவள் அவமானப்பட நேர்ந்தது என்கிற எண்ணத்தில் அவனை போட்டு புரட்டி எடுத்தான்.
அதற்குள் பிரின்சிபால் அறையிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வர, முகக் கன்றலுடன் சரவணனை முறைத்து விட்டு பிரின்சிபால் அறைக்குச் சென்றாள்.