அத்தியாயம் – 6
திருமணம் முடிந்து மகிழ்வானதொரு மனதோடு அனைவரும் அவர்கள் இருவரையும் வாழத்த, சித்துவிற்கு தந்தையின் கண்களிலிருந்து மறைத்து நடத்தி முடித்து விட்டோம் என்கிற திருப்தி எழுந்தது. வர்ஷுவோ பெற்றவர்களுக்கு தெரியாமல் வாழ்க்கையின் மிகப் பெரிய முடிவை எடுத்திருக்கிரோமே என்கிற நெருடல் எழுந்தாலும் அதையும் மீறி சித்து என் கணவன் என்கிற உரிமையும் சந்தோஷமும் உண்டானது.
கோவிலில் இருந்து கிளம்பி கெஸ்ட் ஹவுசிற்கு வந்த பின்னர் சரவணன் அனைவருக்குமான உணவை தருவிக்க, உற்சாகமான மனதுடன் அனைவரும் கல்யாண விருந்தை ரசித்தனர். தங்களுக்கு இருந்த எதிர்ப்பை மீறி திருமணம் முடிந்ததை எண்ணி இருவரும் மெல்ல இயல்பிற்கு திரும்பி இருந்தனர். சித்துவின் பார்வை அடிக்கடி வர்ஷூவை தொட்டு மீண்டது.
உரிமையுடன் அவளிடம் நெருங்க மனம் தவித்தது. அவனது பார்வைகளை உணர்ந்த வர்ஷூவிற்கோ உள்ளுக்குள் நடுக்கம் எழ ஆரம்பித்தது. நண்பர்கள் அனைவரும் இருவருக்கும் தங்களது வாழத்தை சொல்லிவிட்டு அடுத்து சித்துவின் ப்ளான் என்ன? எங்கே செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் தான் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த கொண்ட வர்ஷுவின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. நண்பர்கள் இருந்த போதே அவனது பார்வை தன்னை தீண்டிச் செல்வதை உணர்ந்தவள், இப்போது அவன் உரிமையுடன் நெருங்கி விடுவானோ என்று பயந்தாள்.
அந்தக் குளிர் பிரதேசத்திலும் உடல் வியர்த்து வழிய ஆரம்பித்திருந்தது. நண்பர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்தவனோ அவளை தேட, தனதறையில் ஒருவித நடுக்கத்துடன் உறைந்த நிலையில் நின்றிருந்தவளை கண்டதும் உதட்டில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி அருகே நெருங்கினான்.
அவன் வந்தது நின்றது எல்லாவற்றையும் உணர்ந்திருந்தாலும் திரும்பாமலே உடல் இறுக நின்றிருந்தாள். பின்னிருந்து இரு கரங்கள் அவளது இடையை வளைக்க குனிந்து அவள் காதோரம் “என்ன மிஸ்ஸஸ் சித்தார்த்? எப்படி இருக்கு இந்த பீல்?” என்றான் காதோரம் கிசுகிசுப்பாக.
அவனது கரங்கள் வெற்றிடையில் பதிந்தது ஒருபுறம் காதோரம் அவனது இதழ்கள் உரசி செல்வது ஒருபுறம் என்று அவளது மேனி சிலிர்க்க “ம்ம்..” என்று மெல்லிய முனகல் மட்டுமே வந்தது.
மெல்ல அவளை தன் பக்கம் திருப்பியவன் “நான் எதிர்பார்க்கவே இல்லை சோட்டி. இத்தனை சீக்கிரம் நம்ம திருமணம் நடக்கும் என்று” என்றவனது விரல்கள் அவளது கன்னத்தில் கோலமிட்டது.
அவனது தீண்டல் உள்ளுக்குள் ஒருவித நடுக்கத்தை கொடுத்தது. உதட்டின் மீது பொட்டு பொட்டாய் வியர்வை துளிகள் பூத்திருக்க, உதடுகளை அழுந்தக் கடித்து தனது உணர்வினை மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.
மெல்லிய அரை வெளிச்சத்தில் அந்த வியர்வை துளிகள் வைரமென மின்ன, மேலும் நெருங்கியவன் குனிந்து அந்த வைரத் துளிகளின் மீது முதல் முத்தத்தை வைத்தான். அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் வீச, உதடுகள் லேசாக துடிக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அந்த ஒற்றை முத்தம் அவனுக்கு போதாது என்று தோன்ற, துடித்த உதடுகளின் மீது தனது இதழ்களை அழுத்தமாக பதித்தான். கரங்களோ வெற்றிடையில் பட்டு, மெல்ல தனது ஆராய்ச்சியை துவங்க, அவனது அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்து போனவள் அப்படியே அவன் கைகளில் உருகி நின்றாள்.
அந்நேரம் எங்கோ மெல்லிய இசையாக பாடல் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ?
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ?
மலர்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ?
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமோ?
உணர்வுகளின் பிடியில் நின்றவர்கள் எப்போது இடம் மாறினார்கள் எப்போது பஞ்சணையில் வீழ்ந்தார்கள் என்று அறியாது அவர்களை மன்மதனின் அம்புகள் உணர்வுகளை தூண்டி இருக்க, தங்களின் எல்லையை கடந்திருந்தார்கள்.
சங்கமத்தில் கலைத்து களைந்திருந்த இருவரும் ஒருவித நிறைவான மனநிலைக்கு வந்திருந்தார்கள். இந்தக் காதல் தங்களை பிரித்து விடுமோ என்கிற பயத்தில் இருந்தவர்களுக்கு அனைத்தையும் தாண்டி ஒன்று சேர்ந்த நிம்மதி இருந்தது.
அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த வர்ஷோ மெல்ல நிமிர்ந்து பார்த்து “நாம எங்கே போக போறோம் சித்து? அடுத்து என்ன செய்யப் போகிறோம்?” என்றாள் யோசனையுடன்.
அவளது முகத்தையே பார்த்திருந்தவனின் விழிகளில் மெல்லிய புன்னகை, அவள் மூக்கைப் பிடித்து லேசாக ஆட்டி “எங்க ஊருக்குத் தான் போக போறோம் சோட்டி. பிளைட் டிக்கெட்ஸ் போட்டாச்சு” என்றான் கண்களை சிமிட்டி.
மேலும் நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் உரச படுத்துக் கொண்டவள் “அங்கே உங்க பேரெண்ட்ஸ் நம்மை ஏத்துப்பாங்களா? காதலுக்கே எதிர்ப்பை தெரிவிச்சவங்க நம்ம கல்யாணத்தை எப்படி ஏத்துப்பாங்க?”
திருமணம் முடிந்து மகிழ்வானதொரு மனதோடு அனைவரும் அவர்கள் இருவரையும் வாழத்த, சித்துவிற்கு தந்தையின் கண்களிலிருந்து மறைத்து நடத்தி முடித்து விட்டோம் என்கிற திருப்தி எழுந்தது. வர்ஷுவோ பெற்றவர்களுக்கு தெரியாமல் வாழ்க்கையின் மிகப் பெரிய முடிவை எடுத்திருக்கிரோமே என்கிற நெருடல் எழுந்தாலும் அதையும் மீறி சித்து என் கணவன் என்கிற உரிமையும் சந்தோஷமும் உண்டானது.
கோவிலில் இருந்து கிளம்பி கெஸ்ட் ஹவுசிற்கு வந்த பின்னர் சரவணன் அனைவருக்குமான உணவை தருவிக்க, உற்சாகமான மனதுடன் அனைவரும் கல்யாண விருந்தை ரசித்தனர். தங்களுக்கு இருந்த எதிர்ப்பை மீறி திருமணம் முடிந்ததை எண்ணி இருவரும் மெல்ல இயல்பிற்கு திரும்பி இருந்தனர். சித்துவின் பார்வை அடிக்கடி வர்ஷூவை தொட்டு மீண்டது.
உரிமையுடன் அவளிடம் நெருங்க மனம் தவித்தது. அவனது பார்வைகளை உணர்ந்த வர்ஷூவிற்கோ உள்ளுக்குள் நடுக்கம் எழ ஆரம்பித்தது. நண்பர்கள் அனைவரும் இருவருக்கும் தங்களது வாழத்தை சொல்லிவிட்டு அடுத்து சித்துவின் ப்ளான் என்ன? எங்கே செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் தான் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த கொண்ட வர்ஷுவின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. நண்பர்கள் இருந்த போதே அவனது பார்வை தன்னை தீண்டிச் செல்வதை உணர்ந்தவள், இப்போது அவன் உரிமையுடன் நெருங்கி விடுவானோ என்று பயந்தாள்.
அந்தக் குளிர் பிரதேசத்திலும் உடல் வியர்த்து வழிய ஆரம்பித்திருந்தது. நண்பர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்தவனோ அவளை தேட, தனதறையில் ஒருவித நடுக்கத்துடன் உறைந்த நிலையில் நின்றிருந்தவளை கண்டதும் உதட்டில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி அருகே நெருங்கினான்.
அவன் வந்தது நின்றது எல்லாவற்றையும் உணர்ந்திருந்தாலும் திரும்பாமலே உடல் இறுக நின்றிருந்தாள். பின்னிருந்து இரு கரங்கள் அவளது இடையை வளைக்க குனிந்து அவள் காதோரம் “என்ன மிஸ்ஸஸ் சித்தார்த்? எப்படி இருக்கு இந்த பீல்?” என்றான் காதோரம் கிசுகிசுப்பாக.
அவனது கரங்கள் வெற்றிடையில் பதிந்தது ஒருபுறம் காதோரம் அவனது இதழ்கள் உரசி செல்வது ஒருபுறம் என்று அவளது மேனி சிலிர்க்க “ம்ம்..” என்று மெல்லிய முனகல் மட்டுமே வந்தது.
மெல்ல அவளை தன் பக்கம் திருப்பியவன் “நான் எதிர்பார்க்கவே இல்லை சோட்டி. இத்தனை சீக்கிரம் நம்ம திருமணம் நடக்கும் என்று” என்றவனது விரல்கள் அவளது கன்னத்தில் கோலமிட்டது.
அவனது தீண்டல் உள்ளுக்குள் ஒருவித நடுக்கத்தை கொடுத்தது. உதட்டின் மீது பொட்டு பொட்டாய் வியர்வை துளிகள் பூத்திருக்க, உதடுகளை அழுந்தக் கடித்து தனது உணர்வினை மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.
மெல்லிய அரை வெளிச்சத்தில் அந்த வியர்வை துளிகள் வைரமென மின்ன, மேலும் நெருங்கியவன் குனிந்து அந்த வைரத் துளிகளின் மீது முதல் முத்தத்தை வைத்தான். அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் வீச, உதடுகள் லேசாக துடிக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அந்த ஒற்றை முத்தம் அவனுக்கு போதாது என்று தோன்ற, துடித்த உதடுகளின் மீது தனது இதழ்களை அழுத்தமாக பதித்தான். கரங்களோ வெற்றிடையில் பட்டு, மெல்ல தனது ஆராய்ச்சியை துவங்க, அவனது அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்து போனவள் அப்படியே அவன் கைகளில் உருகி நின்றாள்.
அந்நேரம் எங்கோ மெல்லிய இசையாக பாடல் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ?
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ?
மலர்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ?
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமோ?
உணர்வுகளின் பிடியில் நின்றவர்கள் எப்போது இடம் மாறினார்கள் எப்போது பஞ்சணையில் வீழ்ந்தார்கள் என்று அறியாது அவர்களை மன்மதனின் அம்புகள் உணர்வுகளை தூண்டி இருக்க, தங்களின் எல்லையை கடந்திருந்தார்கள்.
சங்கமத்தில் கலைத்து களைந்திருந்த இருவரும் ஒருவித நிறைவான மனநிலைக்கு வந்திருந்தார்கள். இந்தக் காதல் தங்களை பிரித்து விடுமோ என்கிற பயத்தில் இருந்தவர்களுக்கு அனைத்தையும் தாண்டி ஒன்று சேர்ந்த நிம்மதி இருந்தது.
அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த வர்ஷோ மெல்ல நிமிர்ந்து பார்த்து “நாம எங்கே போக போறோம் சித்து? அடுத்து என்ன செய்யப் போகிறோம்?” என்றாள் யோசனையுடன்.
அவளது முகத்தையே பார்த்திருந்தவனின் விழிகளில் மெல்லிய புன்னகை, அவள் மூக்கைப் பிடித்து லேசாக ஆட்டி “எங்க ஊருக்குத் தான் போக போறோம் சோட்டி. பிளைட் டிக்கெட்ஸ் போட்டாச்சு” என்றான் கண்களை சிமிட்டி.
மேலும் நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் உரச படுத்துக் கொண்டவள் “அங்கே உங்க பேரெண்ட்ஸ் நம்மை ஏத்துப்பாங்களா? காதலுக்கே எதிர்ப்பை தெரிவிச்சவங்க நம்ம கல்யாணத்தை எப்படி ஏத்துப்பாங்க?”