அத்தியாயம் – 3
அவனது அழுத்தமான பதிலைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்து போனார் நீரஜ். அவனை எளிதாக பேசி மடக்கி விடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தவருக்கு அவனது பேச்சு பயத்தை கொடுத்தது.
நீரஜ் வீட்டு திருமணங்கள் எப்போதும் தங்களின் குடும்ப தொழிலை முன்னிறுத்தியே நிச்சயிக்கப்படும். தொழில் முறை ஒப்பந்தம் போன்று தான் அவர்களுக்கு திருமணமும். தங்களின் குடும்ப தொழிலுக்கு ஆதாயம் இருக்கும் வழிமுறைகளை தான் பின்பற்றுவார்கள். அவர்களின் பரம்பரையில் இந்த காதல் கல்யாணத்திற்கு எல்லாம் இடமில்லை.
மகனின் இந்த செயலால் குடும்பத்தில் பெரிய குழப்பம் உண்டாக வாய்ப்பிருப்பதை எண்ணி குழம்பி போனார். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மகனை எப்படி சமாதானப்படுத்தி இந்த விஷயத்தை கையாள்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்திற்கு அவரின் மனநிலை நன்றாகவே புரிந்தது என்றாலும், எதற்காகவும் தனது காதலை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. யார் எதிர்த்தாலும் வர்ஷினியை கைப் பிடித்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தான்.
தந்தையை கூர்ந்து பார்த்தவன் “இதற்காகவா என்னை உடனே வரவழைச்சீங்க?”
“ம்ம்...நீ செய்கிற வேலையினால எத்தனை பிரச்சனைகள் வரும்னு தெரியுமா சித்து?”
“பப்பா! ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. உங்களைப் போல தாத்தாவை போல எல்லாம் என்னால பிசினெஸ்க்காக கல்யாணம் செய்துக்க முடியாது. என் வாழ்நாள் முழுக்க வரப் போகும் உறவு. என் மனசுக்குப் பிடித்தவளோட வாழ்வதில் தான் என் இஷ்டம்”.
“சித்து! இது நடக்காத விஷயம். நீ அவளை மறந்திட்டு உன் படிப்பை பார்க்கிறதாக இருந்தால் நீ போகலாம். அப்படி உன்னால மறக்க முடியாது என்றால் உன் படிப்பையே நிறுத்துவதை தவிர எனக்கு வேறுவழி கிடையாது”.
அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்தவன் தந்தையின் மிரட்ட்டளைக் கேட்டு நாற்காலியை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்தவன் “என்ன பப்பா மிரட்டி பார்க்குறீங்களா?”.
அந்நேரம் நீரஜின் அறைக் கதவை திறந்து கொண்டு இருவர் உள்ளே நுழைந்தனர். ஆஜானுபாகுவாக இருந்த இருவரை பார்த்ததுமே அவர்கள் யாரென்று புரிந்து போனது. தந்தையின் கையாட்களைப் பார்த்ததுமே கோபத்துடன் “தைரியம் இருந்தா மேல கை வச்சு பாருங்க” என்றான் கோபமாக.
மகனை ஆழ்ந்த பார்வை பார்த்து “சித்து! நான் சொல்வதை கேட்டு புத்திசாலித்தனமா இருக்கப் பாரு. என்னை மீறி உன்னால எதுவும் செய்ய முடியாது. நீ இவங்களோட போ. நான் சொல்கிற வரை நீ அங்கே தான் இருக்கணும். எந்த காலத்திலும் நீ அந்த பெண்ணோட சேர முடியாது. உனக்காக கேஷ்வி படேலை பேசப் போறோம். அவளும் இன்னும் படிப்பை முடிக்கல. முடிச்சதும் உங்க ரெண்டு பேருக்கும் திருமணம். இந்த திருமணம் மூலம் நம்ம பிசினெஸ்க்கு பெரிய ஆதாயம். இங்கே நம்மள அசைத்துப் பார்க்க எவனாலயும் முடியாது”.
முகத்தை அருவெறுப்பாக வைத்துக் கொண்டு “சோ உங்களுடைய வியாபாரத்திற்காக என்னையும் என் காதலையும் பணயம் வைக்கப் போறீங்க?”.
“இங்கே பார் சித்து! கல்யாணம் செய்து சிறிது நாட்கள் வரை நீ அவளுடனான வாழ்க்கையைப் பார். அதன் பின்னர் அந்த பொண்ணு யாரு வர்...வர்ஷினியா? அவளை இங்கே கூட்டிட்டு வந்துடு. கேஷ்வி அதெல்லாம் கண்டுக்க மாட்டா. நம்ம குடும்பங்களில் மனைவியை தவிர இன்னொருத்திக்கு எப்பவும் அனுமதி உண்டு”.
“பப்பா!...வேண்டாம்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க. வர்ஷினியைப் பற்றி பேச உங்களுக்கு அனுமதி இல்லை. என்னை என்னன்னு நினைச்சீங்க? நான் மிஸ்டர் நீரஜ் மல்ஹோத்ரா இல்ல. எங்கம்மாவுக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி என்னையும் பண்ண சொல்றீங்கலா?”
குறுநகை தவழ “மிடில் கிளாஸ் புத்தி உனக்குள்ள வர துவங்கியாச்சு சித்து. நீ பிஸ்னெஸ் குடும்பத்தில் பிறந்தவன். அவளோட பழகிய சிறிது நாட்களுக்குள்ளாகவே உனக்குள்ள இப்படியொரு எண்ணம். வேண்டாம்! நீ இவங்களோட போ! மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்று முடித்து விட்டார்.
அவனும் முடிவெடுத்து விட்டான். இவரிடம் பேசி சாதிப்பதை விட, வேறுவழியில் தான் முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவர்களுடன் கிளம்பினான். மகனைப் பற்றி அறிந்தவருக்கு நிச்சயம் அவனை அடக்குவது சுலபமில்லை என்பது புரிந்து போனது. அதனால் தனது ஆட்களை அழைத்து அவனை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறினார். அவர்களிடமிருந்து எளிதாக தப்பிச் சென்று விடுவான் என்று கூறினார்.
அதன்பின்னர் அவனது கல்லூரியிலிருந்து விலகுவதற்கான அனைத்து வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தார்.
இது எதையுமே அறியாத வர்ஷினி அவன் ஊருக்கு சென்றதிலேயே துயரத்தில் இருந்தாள். அவன் எப்போது திரும்ப வருவான் என்கிற ஆவல் அதிகம் இருந்தது. ஆனால் அவனோ ஊருக்கு சென்ற பின் எந்த தகவலும் கொடுக்கவில்லை. போனை எடுத்து பலமுறை பார்த்த பின்பும் அவனிடமிருந்து எந்த செய்தியும் வந்திருக்கவில்லை.
ஹாஸ்டலுக்கு சென்றால் கூட அத்தனை செய்தி அனுப்புவான். ஆனால் இன்றோ ஒரு செய்திக்கு கூட பஞ்சமாகி போனது. சித்தார்த்தும் அங்கே தவித்துக் கொண்டு தான் இருந்தான். அவனது அலைபேசியை கூட அவனுடன் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கவில்லை.
அவனது அழுத்தமான பதிலைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்து போனார் நீரஜ். அவனை எளிதாக பேசி மடக்கி விடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தவருக்கு அவனது பேச்சு பயத்தை கொடுத்தது.
நீரஜ் வீட்டு திருமணங்கள் எப்போதும் தங்களின் குடும்ப தொழிலை முன்னிறுத்தியே நிச்சயிக்கப்படும். தொழில் முறை ஒப்பந்தம் போன்று தான் அவர்களுக்கு திருமணமும். தங்களின் குடும்ப தொழிலுக்கு ஆதாயம் இருக்கும் வழிமுறைகளை தான் பின்பற்றுவார்கள். அவர்களின் பரம்பரையில் இந்த காதல் கல்யாணத்திற்கு எல்லாம் இடமில்லை.
மகனின் இந்த செயலால் குடும்பத்தில் பெரிய குழப்பம் உண்டாக வாய்ப்பிருப்பதை எண்ணி குழம்பி போனார். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மகனை எப்படி சமாதானப்படுத்தி இந்த விஷயத்தை கையாள்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்திற்கு அவரின் மனநிலை நன்றாகவே புரிந்தது என்றாலும், எதற்காகவும் தனது காதலை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. யார் எதிர்த்தாலும் வர்ஷினியை கைப் பிடித்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தான்.
தந்தையை கூர்ந்து பார்த்தவன் “இதற்காகவா என்னை உடனே வரவழைச்சீங்க?”
“ம்ம்...நீ செய்கிற வேலையினால எத்தனை பிரச்சனைகள் வரும்னு தெரியுமா சித்து?”
“பப்பா! ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. உங்களைப் போல தாத்தாவை போல எல்லாம் என்னால பிசினெஸ்க்காக கல்யாணம் செய்துக்க முடியாது. என் வாழ்நாள் முழுக்க வரப் போகும் உறவு. என் மனசுக்குப் பிடித்தவளோட வாழ்வதில் தான் என் இஷ்டம்”.
“சித்து! இது நடக்காத விஷயம். நீ அவளை மறந்திட்டு உன் படிப்பை பார்க்கிறதாக இருந்தால் நீ போகலாம். அப்படி உன்னால மறக்க முடியாது என்றால் உன் படிப்பையே நிறுத்துவதை தவிர எனக்கு வேறுவழி கிடையாது”.
அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்தவன் தந்தையின் மிரட்ட்டளைக் கேட்டு நாற்காலியை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்தவன் “என்ன பப்பா மிரட்டி பார்க்குறீங்களா?”.
அந்நேரம் நீரஜின் அறைக் கதவை திறந்து கொண்டு இருவர் உள்ளே நுழைந்தனர். ஆஜானுபாகுவாக இருந்த இருவரை பார்த்ததுமே அவர்கள் யாரென்று புரிந்து போனது. தந்தையின் கையாட்களைப் பார்த்ததுமே கோபத்துடன் “தைரியம் இருந்தா மேல கை வச்சு பாருங்க” என்றான் கோபமாக.
மகனை ஆழ்ந்த பார்வை பார்த்து “சித்து! நான் சொல்வதை கேட்டு புத்திசாலித்தனமா இருக்கப் பாரு. என்னை மீறி உன்னால எதுவும் செய்ய முடியாது. நீ இவங்களோட போ. நான் சொல்கிற வரை நீ அங்கே தான் இருக்கணும். எந்த காலத்திலும் நீ அந்த பெண்ணோட சேர முடியாது. உனக்காக கேஷ்வி படேலை பேசப் போறோம். அவளும் இன்னும் படிப்பை முடிக்கல. முடிச்சதும் உங்க ரெண்டு பேருக்கும் திருமணம். இந்த திருமணம் மூலம் நம்ம பிசினெஸ்க்கு பெரிய ஆதாயம். இங்கே நம்மள அசைத்துப் பார்க்க எவனாலயும் முடியாது”.
முகத்தை அருவெறுப்பாக வைத்துக் கொண்டு “சோ உங்களுடைய வியாபாரத்திற்காக என்னையும் என் காதலையும் பணயம் வைக்கப் போறீங்க?”.
“இங்கே பார் சித்து! கல்யாணம் செய்து சிறிது நாட்கள் வரை நீ அவளுடனான வாழ்க்கையைப் பார். அதன் பின்னர் அந்த பொண்ணு யாரு வர்...வர்ஷினியா? அவளை இங்கே கூட்டிட்டு வந்துடு. கேஷ்வி அதெல்லாம் கண்டுக்க மாட்டா. நம்ம குடும்பங்களில் மனைவியை தவிர இன்னொருத்திக்கு எப்பவும் அனுமதி உண்டு”.
“பப்பா!...வேண்டாம்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க. வர்ஷினியைப் பற்றி பேச உங்களுக்கு அனுமதி இல்லை. என்னை என்னன்னு நினைச்சீங்க? நான் மிஸ்டர் நீரஜ் மல்ஹோத்ரா இல்ல. எங்கம்மாவுக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி என்னையும் பண்ண சொல்றீங்கலா?”
குறுநகை தவழ “மிடில் கிளாஸ் புத்தி உனக்குள்ள வர துவங்கியாச்சு சித்து. நீ பிஸ்னெஸ் குடும்பத்தில் பிறந்தவன். அவளோட பழகிய சிறிது நாட்களுக்குள்ளாகவே உனக்குள்ள இப்படியொரு எண்ணம். வேண்டாம்! நீ இவங்களோட போ! மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்று முடித்து விட்டார்.
அவனும் முடிவெடுத்து விட்டான். இவரிடம் பேசி சாதிப்பதை விட, வேறுவழியில் தான் முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவர்களுடன் கிளம்பினான். மகனைப் பற்றி அறிந்தவருக்கு நிச்சயம் அவனை அடக்குவது சுலபமில்லை என்பது புரிந்து போனது. அதனால் தனது ஆட்களை அழைத்து அவனை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறினார். அவர்களிடமிருந்து எளிதாக தப்பிச் சென்று விடுவான் என்று கூறினார்.
அதன்பின்னர் அவனது கல்லூரியிலிருந்து விலகுவதற்கான அனைத்து வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தார்.
இது எதையுமே அறியாத வர்ஷினி அவன் ஊருக்கு சென்றதிலேயே துயரத்தில் இருந்தாள். அவன் எப்போது திரும்ப வருவான் என்கிற ஆவல் அதிகம் இருந்தது. ஆனால் அவனோ ஊருக்கு சென்ற பின் எந்த தகவலும் கொடுக்கவில்லை. போனை எடுத்து பலமுறை பார்த்த பின்பும் அவனிடமிருந்து எந்த செய்தியும் வந்திருக்கவில்லை.
ஹாஸ்டலுக்கு சென்றால் கூட அத்தனை செய்தி அனுப்புவான். ஆனால் இன்றோ ஒரு செய்திக்கு கூட பஞ்சமாகி போனது. சித்தார்த்தும் அங்கே தவித்துக் கொண்டு தான் இருந்தான். அவனது அலைபேசியை கூட அவனுடன் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கவில்லை.