அத்தியாயம்- 22
அன்று அவளோடு பேசிச் சென்றவன் தான். அதன்பின்னர் வந்த இரு நாட்களும் அவனை பார்க்க முடியவில்லை. தான்யா பாட்டியோடு தங்கிக் கொள்ள, வர்ஷினியை அந்த அறையில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் தாதி. அவளிடம் யாரையும் நெருங்க விடாது பார்த்துக் கொண்டார். தான்யாவை தவிர அவளருகே யாராலும் செல்ல முடியவில்லை.
அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. அதிலும் கடைசியாக அவன் பேசிச் சென்றது அவளது மனதை வெகுவாக தாக்கி இருந்தது. தாதியை தவிர அவனைச் சுற்றி இருக்கும் அனைவருமே ஏதோ ஒன்றிற்காக அவனை துரத்துகிறார்கள் என்பதை அவளால் இந்த இரு நாட்களில் புரிந்து கொள்ள முடிந்தது.
அவனது காதல் பொய்யில்லை என்பதை உணர முடிந்தது. ஆனாலும் நடந்து முடிந்து விட்ட நிகழ்வுகளில் இழப்புகளை யார் சரி செய்வது? அது காலம் முழுவதும் தங்களை துரத்துமே என்று யோசித்தாள். அதே சமயம் அவனுக்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக தாதி சொன்னவை எல்லாம் நினைவிற்கு வந்தது.
இருநாட்களும் அறையை விட்டு வெளியே வராமல் அங்கிருந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தவளை கலைத்தது தான்யாவின் குரல்.
“அக்கா! இன்னும் எத்தனை நாளைக்கு அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தது யோசிக்கப் போற? என்னைப் பொறுத்தவரை மாமா மேல எந்த தப்பும் இல்லேன்னு புரியுது. தாதி சொன்னதை வைத்தும் பார்த்தா நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்காங்கன்னு தெரியுது. அதனால நடந்தவற்றை எல்லாம் மறந்திட்டு மாமாவுக்கு ஆதரவா நின்னு உன் வாழ்க்கையை காப்பற்றிக்கோ”.
தங்கையை நிமிர்ந்து பார்த்தவள் “நீ சொல்றது எல்லாம் சரி தான். என் மனசுக்கும் நல்லாவே புரியுது. ஆனா நம்ம அம்மா அப்பாவை எப்படி மறக்க சொல்ற? அவங்களுக்கு நடந்தது எல்லாம் இல்லேன்னு ஆகிடுமா? என்னதான் நான் எல்லாம் சரியாகி சித்து கூட வாழ்ந்தாலும் கடைசி வரை என்னுடைய இந்த காதலால தான் அவங்க இழப்புன்னு மனசு உறுத்துமே?”
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அக்காவை கூர்மையாக பார்த்து “நான் உன்னை விட சின்னவ தான். என்னடா இப்படி பேசுறாலேன்னு நீ நினைச்சாலும் பரவாயில்லை. உன்னுடைய இந்த நினைப்பு எல்லாம் காலம் கடந்த ஒன்று. இதெல்லாம் காதலிக்க ஆரம்பிக்கும் போது யோசிச்சிருக்கணும். எல்லாமே கைமீறி போன பிறகு நடந்தவற்றை நினைத்து மறுபடியும் உன் வாழ்கையை கெடுத்துக்கப் போறியா?”.
“அப்போ சித்துவோட காதலை ஏத்துகிட்டா அம்மா அப்பாவுக்கு துரோகம் பண்ணினதா ஆகாதா?” என்றாள் கண்ணீருடன்.
“நிச்சயமா ஆகாதும்மா! எந்த தாயும், தந்தையும் தன மகள் கெட்டுப் போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீ நல்லா வாழ்ந்தா அவங்க ஆத்மா சாந்தியடையும்” என்றார் சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே அறைக்குள் நுழைந்தார்.
அவரைக் கண்டதும் எழுந்து நின்றவளை “உட்காரும்மா! நீ நிறைய குழப்பங்களோட இருக்க அது சித்துவோட நிலைக்கு நல்லதில்லை. நீ தைரியமா உறுதியா இருந்தா தான் அவனால எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்”.
“எ...எனக்கு நடந்ததை நினைத்து அவர் மேல அவரின் காதல் மேல நம்பிக்கை குறைஞ்சிருச்சு பாட்டி”.
அவளை ஆழ்ந்து பார்த்தவர் “இப்பவுமா வர்ஷினி? இங்கே வந்த பிறகு நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டு இருப்ப. அதன் பிறகும் அவன் மேல நம்பிக்கை இல்லேன்னு சொன்னா நானே உன்னையும், தான்யாவையும் ஊருக்கு அனுப்பி வச்சிடுறேன்” என்றார்.
அவரின் இந்த பதிலில் சற்றே அதிர்ந்து நோக்கி “எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல பாட்டி”.
அவள் அருகே நெருங்கி சென்று “உனக்கு அவன் மேல இன்னமும் காதல் இருக்கா?”
தலையை குனிந்தபடி “ம்ம்...” என்றவளின் கைகளை அழுந்த பற்றி “அவனை நம்பும்மா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார்.
கன்னங்களில் கண்ணீர் வழிய லேசான செருமலுடன் குனிந்து தாதியின் தோள்களில் முகம் பதிந்து விட்டாள். அவளுக்கு அவரின் பதில் வேண்டியதை தந்துவிட, இத்தனை நாள் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் குறைய அழுது தீர்த்தாள். அவரும் தன் மனதிலிருந்த பாரம் நீங்கும் வரை அழுது ஓயட்டும் என்று விட்டு விட்டார். சற்று நேரம் கழித்து மீண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டு “சொல்லுங்க தாதி நான் என்ன செய்யணும்?” என்றால்.
இருவரையும் கட்டிலில் அமர வைத்தவர் வர்ஷினியிடம் “முதல்ல நீ அவனோட அன்பை புரிஞ்சுக்கணும். அடுத்து அவன் இப்போ எடுக்கிற முயற்சிகளுக்கு தடை செய்யாம அவனுக்கு உறுதுணையா நிற்கணும். முக்கியமா உரிமையான மனைவியா நிமிர்ந்து நிற்கணும். நீ தான் இந்த வம்சத்தோட வாரிசை சுமக்கப் போகிறவள். அதனால இத்தனை நாள் எப்படி இருந்தாலும் இனி எதையும் எதிர்கொள்கிற பெண்ணா இருக்கணும். அவன் மேல எந்த குற்றச்சாட்டுகள் வந்தாலும் நீ அவனை நம்பனும். அது போதும் அவன் எல்லாவற்றையும் முறியடிச்சிடுவான்” என்றார்.
“நிச்சயாமா தாதி!” என்றாள் மெல்லிய குரலில்.
“அந்த கேஷ்விக்கும் உன் கணவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீ தான் அவனுடைய சட்டபூர்வமான மனைவி. அதனால அவள் உன்கிட்ட பிரச்சனை செய்தால் தைரியமாக திருப்பிக் கொடு. உனக்காக நானும் என் பேரனும் இருக்கிறோம்”.
அதுவரை இருந்த மனக் குழப்பங்கள் எல்லாம் தீர சற்றே தெளிந்து அவள் முகத்தில் தெளிவு பிறந்திருந்தது. அந்நேரம் கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தார் பிமலா தேவி. அவரை பார்த்ததும் எழ இருந்தவளின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டார் தாதி.
அவரை பார்த்து லேசாக கண்களை சுருக்கி விட்டு வர்ஷினியின் பக்கம் திரும்பியவர் சொடக்கு போட்டு அவளை அழைத்து “நீ இங்கே இருக்க கூடாது. கிச்சனில் வேலை செய்றவங்களுக்காக ஒரு இடம் இருக்கு அங்கே தான் இருக்கணும். அவுட்” என்று அறையின் வாயிலை நோக்கி கையை காட்டினார்.
அன்று அவளோடு பேசிச் சென்றவன் தான். அதன்பின்னர் வந்த இரு நாட்களும் அவனை பார்க்க முடியவில்லை. தான்யா பாட்டியோடு தங்கிக் கொள்ள, வர்ஷினியை அந்த அறையில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் தாதி. அவளிடம் யாரையும் நெருங்க விடாது பார்த்துக் கொண்டார். தான்யாவை தவிர அவளருகே யாராலும் செல்ல முடியவில்லை.
அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. அதிலும் கடைசியாக அவன் பேசிச் சென்றது அவளது மனதை வெகுவாக தாக்கி இருந்தது. தாதியை தவிர அவனைச் சுற்றி இருக்கும் அனைவருமே ஏதோ ஒன்றிற்காக அவனை துரத்துகிறார்கள் என்பதை அவளால் இந்த இரு நாட்களில் புரிந்து கொள்ள முடிந்தது.
அவனது காதல் பொய்யில்லை என்பதை உணர முடிந்தது. ஆனாலும் நடந்து முடிந்து விட்ட நிகழ்வுகளில் இழப்புகளை யார் சரி செய்வது? அது காலம் முழுவதும் தங்களை துரத்துமே என்று யோசித்தாள். அதே சமயம் அவனுக்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக தாதி சொன்னவை எல்லாம் நினைவிற்கு வந்தது.
இருநாட்களும் அறையை விட்டு வெளியே வராமல் அங்கிருந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தவளை கலைத்தது தான்யாவின் குரல்.
“அக்கா! இன்னும் எத்தனை நாளைக்கு அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தது யோசிக்கப் போற? என்னைப் பொறுத்தவரை மாமா மேல எந்த தப்பும் இல்லேன்னு புரியுது. தாதி சொன்னதை வைத்தும் பார்த்தா நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்காங்கன்னு தெரியுது. அதனால நடந்தவற்றை எல்லாம் மறந்திட்டு மாமாவுக்கு ஆதரவா நின்னு உன் வாழ்க்கையை காப்பற்றிக்கோ”.
தங்கையை நிமிர்ந்து பார்த்தவள் “நீ சொல்றது எல்லாம் சரி தான். என் மனசுக்கும் நல்லாவே புரியுது. ஆனா நம்ம அம்மா அப்பாவை எப்படி மறக்க சொல்ற? அவங்களுக்கு நடந்தது எல்லாம் இல்லேன்னு ஆகிடுமா? என்னதான் நான் எல்லாம் சரியாகி சித்து கூட வாழ்ந்தாலும் கடைசி வரை என்னுடைய இந்த காதலால தான் அவங்க இழப்புன்னு மனசு உறுத்துமே?”
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அக்காவை கூர்மையாக பார்த்து “நான் உன்னை விட சின்னவ தான். என்னடா இப்படி பேசுறாலேன்னு நீ நினைச்சாலும் பரவாயில்லை. உன்னுடைய இந்த நினைப்பு எல்லாம் காலம் கடந்த ஒன்று. இதெல்லாம் காதலிக்க ஆரம்பிக்கும் போது யோசிச்சிருக்கணும். எல்லாமே கைமீறி போன பிறகு நடந்தவற்றை நினைத்து மறுபடியும் உன் வாழ்கையை கெடுத்துக்கப் போறியா?”.
“அப்போ சித்துவோட காதலை ஏத்துகிட்டா அம்மா அப்பாவுக்கு துரோகம் பண்ணினதா ஆகாதா?” என்றாள் கண்ணீருடன்.
“நிச்சயமா ஆகாதும்மா! எந்த தாயும், தந்தையும் தன மகள் கெட்டுப் போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீ நல்லா வாழ்ந்தா அவங்க ஆத்மா சாந்தியடையும்” என்றார் சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே அறைக்குள் நுழைந்தார்.
அவரைக் கண்டதும் எழுந்து நின்றவளை “உட்காரும்மா! நீ நிறைய குழப்பங்களோட இருக்க அது சித்துவோட நிலைக்கு நல்லதில்லை. நீ தைரியமா உறுதியா இருந்தா தான் அவனால எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்”.
“எ...எனக்கு நடந்ததை நினைத்து அவர் மேல அவரின் காதல் மேல நம்பிக்கை குறைஞ்சிருச்சு பாட்டி”.
அவளை ஆழ்ந்து பார்த்தவர் “இப்பவுமா வர்ஷினி? இங்கே வந்த பிறகு நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டு இருப்ப. அதன் பிறகும் அவன் மேல நம்பிக்கை இல்லேன்னு சொன்னா நானே உன்னையும், தான்யாவையும் ஊருக்கு அனுப்பி வச்சிடுறேன்” என்றார்.
அவரின் இந்த பதிலில் சற்றே அதிர்ந்து நோக்கி “எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல பாட்டி”.
அவள் அருகே நெருங்கி சென்று “உனக்கு அவன் மேல இன்னமும் காதல் இருக்கா?”
தலையை குனிந்தபடி “ம்ம்...” என்றவளின் கைகளை அழுந்த பற்றி “அவனை நம்பும்மா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார்.
கன்னங்களில் கண்ணீர் வழிய லேசான செருமலுடன் குனிந்து தாதியின் தோள்களில் முகம் பதிந்து விட்டாள். அவளுக்கு அவரின் பதில் வேண்டியதை தந்துவிட, இத்தனை நாள் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் குறைய அழுது தீர்த்தாள். அவரும் தன் மனதிலிருந்த பாரம் நீங்கும் வரை அழுது ஓயட்டும் என்று விட்டு விட்டார். சற்று நேரம் கழித்து மீண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டு “சொல்லுங்க தாதி நான் என்ன செய்யணும்?” என்றால்.
இருவரையும் கட்டிலில் அமர வைத்தவர் வர்ஷினியிடம் “முதல்ல நீ அவனோட அன்பை புரிஞ்சுக்கணும். அடுத்து அவன் இப்போ எடுக்கிற முயற்சிகளுக்கு தடை செய்யாம அவனுக்கு உறுதுணையா நிற்கணும். முக்கியமா உரிமையான மனைவியா நிமிர்ந்து நிற்கணும். நீ தான் இந்த வம்சத்தோட வாரிசை சுமக்கப் போகிறவள். அதனால இத்தனை நாள் எப்படி இருந்தாலும் இனி எதையும் எதிர்கொள்கிற பெண்ணா இருக்கணும். அவன் மேல எந்த குற்றச்சாட்டுகள் வந்தாலும் நீ அவனை நம்பனும். அது போதும் அவன் எல்லாவற்றையும் முறியடிச்சிடுவான்” என்றார்.
“நிச்சயாமா தாதி!” என்றாள் மெல்லிய குரலில்.
“அந்த கேஷ்விக்கும் உன் கணவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீ தான் அவனுடைய சட்டபூர்வமான மனைவி. அதனால அவள் உன்கிட்ட பிரச்சனை செய்தால் தைரியமாக திருப்பிக் கொடு. உனக்காக நானும் என் பேரனும் இருக்கிறோம்”.
அதுவரை இருந்த மனக் குழப்பங்கள் எல்லாம் தீர சற்றே தெளிந்து அவள் முகத்தில் தெளிவு பிறந்திருந்தது. அந்நேரம் கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தார் பிமலா தேவி. அவரை பார்த்ததும் எழ இருந்தவளின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டார் தாதி.
அவரை பார்த்து லேசாக கண்களை சுருக்கி விட்டு வர்ஷினியின் பக்கம் திரும்பியவர் சொடக்கு போட்டு அவளை அழைத்து “நீ இங்கே இருக்க கூடாது. கிச்சனில் வேலை செய்றவங்களுக்காக ஒரு இடம் இருக்கு அங்கே தான் இருக்கணும். அவுட்” என்று அறையின் வாயிலை நோக்கி கையை காட்டினார்.