அத்தியாயம் - 17
நடப்பவைகள் அனைத்தும் அவளை குழப்பி இருக்க, அவளால் அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மாமாவுக்கு எப்படி தெரிந்தது? அவர் இவனுக்கு உதவுவதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று பல கேள்விகள் அவள் சிந்தனையில் எழுந்தது.
அவனோ பரபரப்புடன் இருந்தான். அவர்களை அங்கிருந்து உடனடியாக அழைத்துச் சென்று விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தான். கேஷ்வியின் ஆட்கள் வர்ஷூவை கடத்துவதற்காக வெளியில் காத்திருப்பதை அறிந்தவன், பஜ்ரங்கை அழைத்து அவர்களை அப்புறபடுத்தும்படி கூறினான்.
அவன் போனில் பேசிக் கொண்டிருக்கும் நேரம் வர்ஷினி மாமாவின் முன் சென்று நின்றாள். அவளது முகத்தில் பதட்டமும் கவலையும் இருந்தது.
“உங்களுக்கு எப்படி மாமா இந்த விஷயம் தெரியும்? நீங்க ஏன் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க?”
அவளை முறைத்தவர் “வேற என்ன செய்யணும்னு நினைக்கிற வர்ஷோ? உன் அம்மா அப்பா இருந்திருந்தாலும் இதை தான் செய்திருப்பாங்க”.
“இல்ல மாமா! அம்மாவும் அப்பாவும் நிச்சயம் இதுக்கு ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டாங்க”.
அவளை மேலும் முறைத்து “எதையும் ஏற்றுக் கொள்ளவோ மறுக்கவோ எங்களுக்கு வாய்ப்பை கொடுக்கவே இல்லையே நீ. இந்த வயதில் செய்யக் கூடாத ஒன்றை செய்திட்டு எங்கள் முடிவை நீ கேள்வி கேட்கிற? உனக்கு பின்னாடி உன் தங்கையோட எதிர்காலம் இருக்கு என்று எந்த இடத்திலேயாவது யோசிச்சியா? எத்தனை நாளைக்கு நானும் உன் பாட்டியும் உங்களுக்கு காவலாக இருக்க முடியும் சொல்லு? உங்க அப்பா அம்மா வாழ்க்கையையும் சேர்த்து முடிவிற்கு கொண்டு வந்துட்டு இன்னமும் நீ அடங்கல. எல்லா தப்பையும் நீ செஞ்சிட்டு என்னை கேள்வி கேட்கிற” என்றார் கோபமாக.
“மாமா!”
“பேசாதே! மாப்பிள்ளை போன் பண்ணி சொன்னதுனால தான் எனக்கு எல்லாம் தெரிஞ்சுது. என்னெனவோ நடந்து போச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு இனியாவது ஒழுங்கா அவரோட வாழற வழியைப் பாரு. தான்யாவோட வாழ்க்கையும் உன் கையில் தான் இருக்கு” என்று சொல்லி விட்டு தள்ளிச் சென்று விட்டார்.
அவர் பேசிச் சென்ற வார்த்தைகள் ஓவ்வொன்றும் ஈட்டியாய் குத்த அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள். போன் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் மீது படிந்து விலக, அவசரமாக போனை அணைத்து வைத்துவிட்டு அவள் அருகே சென்று அமர்ந்தான்.
“என்ன செய்யுது சோட்டி?”
அவனது குரலில் கலைந்தவளின் விழிகள் கண்ணீரை சுமந்திருக்க “எல்லா தப்பையும் நீங்க செய்திட்டு இப்படியொரு கல்யாணத்தை செஞ்சு என்னை குற்றவாளியா ஆக்கிட்டீங்க இல்ல” என்றாள் வெறுப்பாக.
அவளது கரங்களைப் பற்றியவன் “உனக்கு நான் எல்லாவற்றையும் விளக்கமா ஊருக்கு போனதும் சொல்றேன் சோட்டி. தயவு செய்து என்னை வெறுக்காதே” என்றான்.
அவனது கரங்களில் இருந்து தனது கைகளை விடுவித்துக் கொண்டவள் “தயவு செய்து என்கிட்டே பேசவோ, தொடவோ முயற்சிக்காதீங்க” என்று வெறுப்புடன் எழுந்து சென்று தங்கையுடன் நின்று கொண்டாள்.
தான்யாவிற்கு தான் என்ன நடக்கிறது என்று புரியவே இல்லை. திடீரென்று எதிர்பாராமல் அக்காவின் திருமணம். இப்போது தானும் அவர்களுடன் செல்ல வேண்டிய நிலைமை. ஒரே நாளில் தங்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்திருந்தாள்.
அந்நேரம் வரிசையாக மூன்று கார்கள் வந்து நிற்க, முதல் காரின் முன் சீட்டிலிருந்து ஆஜானுபாகுவாக ஒருவன் இறங்கி காரின் பின் கதவை திறக்க சித்தார்த் வேக நடையுடன் வர்ஷிணியின் கைகளைப் பற்றிக் கொண்டு தான்யாவைப் பார்த்து “வாம்மா” என்றழைத்து விட்டு காருக்குள் சென்றமர்ந்தான். முதலில் அவனும் அடுத்து வர்ஷினி அமர, அடுத்து தான்யா அமர்ந்தாள்.
அவர்கள் ஏறியதும் கார் கிளம்ப அவர்களின் முன்னே ஒரு கார் செல்ல, பின்னே ஒரு கார் பாதுகாப்பிற்காக தொடர்ந்தது. அதை பார்த்ததும் ஏதோ ஒரு பெரிய அரசியல்வாதியின் பாதுகாப்பு படை பட்டாளத்துடன் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
தான்யா பொறுக்க முடியாமல் “மாமா குஜராத் வரை இப்படித்தான் போக போறோமா?” என்று கேட்டு விட்டாள்.
அதைக் கேட்டதும் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “இல்லம்மா! ஏர்போர்ட் வரை தான் இப்படி”.
அந்நேரம் அவனுக்கு அழைப்பு வர எடுத்து காதில் வைத்ததும் “மிஸ்டர் சித்தார்த்! திஸ் இஸ் சிவதாஸ்” என்றான் அந்தப் பக்கம் இருந்தவன்.
“ஹலோ மிஸ்டர் சிவதாஸ்! ஷ்யாம் உங்க கிட்ட பேசி இருப்பான். உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?”
“எதுவும் சரியா இருந்தா தான் என்னால பண்ண முடியும். எனக்கு எல்லா டீடைல்சம் அனுப்பிடுங்க நான் பார்த்துக்கிறேன்”.
“ஓகே...நான் அனுப்பிடுறேன்”.
அவன் அங்கு பேசிக் கொண்டிருக்கும் நேரம் வர்ஷினியின் அருகே குனிந்தவள் “என்னக்கா மாமா இவ்வளவு அப்பாட்டக்கரா?” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.
வெறுமை படிந்த கண்களுடன் அவளை திரும்பி பார்த்துவிட்டு இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள். அவளது நிலையை உணர்ந்த தான்யா, கரத்தை அழுந்தப் பற்றி “அக்கா! இப்போ எதையும் யோசிக்காதே. மனசை விட்டுடாதே. அமைதியா இரு” என்றாள்.
நடப்பவைகள் அனைத்தும் அவளை குழப்பி இருக்க, அவளால் அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மாமாவுக்கு எப்படி தெரிந்தது? அவர் இவனுக்கு உதவுவதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று பல கேள்விகள் அவள் சிந்தனையில் எழுந்தது.
அவனோ பரபரப்புடன் இருந்தான். அவர்களை அங்கிருந்து உடனடியாக அழைத்துச் சென்று விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தான். கேஷ்வியின் ஆட்கள் வர்ஷூவை கடத்துவதற்காக வெளியில் காத்திருப்பதை அறிந்தவன், பஜ்ரங்கை அழைத்து அவர்களை அப்புறபடுத்தும்படி கூறினான்.
அவன் போனில் பேசிக் கொண்டிருக்கும் நேரம் வர்ஷினி மாமாவின் முன் சென்று நின்றாள். அவளது முகத்தில் பதட்டமும் கவலையும் இருந்தது.
“உங்களுக்கு எப்படி மாமா இந்த விஷயம் தெரியும்? நீங்க ஏன் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க?”
அவளை முறைத்தவர் “வேற என்ன செய்யணும்னு நினைக்கிற வர்ஷோ? உன் அம்மா அப்பா இருந்திருந்தாலும் இதை தான் செய்திருப்பாங்க”.
“இல்ல மாமா! அம்மாவும் அப்பாவும் நிச்சயம் இதுக்கு ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டாங்க”.
அவளை மேலும் முறைத்து “எதையும் ஏற்றுக் கொள்ளவோ மறுக்கவோ எங்களுக்கு வாய்ப்பை கொடுக்கவே இல்லையே நீ. இந்த வயதில் செய்யக் கூடாத ஒன்றை செய்திட்டு எங்கள் முடிவை நீ கேள்வி கேட்கிற? உனக்கு பின்னாடி உன் தங்கையோட எதிர்காலம் இருக்கு என்று எந்த இடத்திலேயாவது யோசிச்சியா? எத்தனை நாளைக்கு நானும் உன் பாட்டியும் உங்களுக்கு காவலாக இருக்க முடியும் சொல்லு? உங்க அப்பா அம்மா வாழ்க்கையையும் சேர்த்து முடிவிற்கு கொண்டு வந்துட்டு இன்னமும் நீ அடங்கல. எல்லா தப்பையும் நீ செஞ்சிட்டு என்னை கேள்வி கேட்கிற” என்றார் கோபமாக.
“மாமா!”
“பேசாதே! மாப்பிள்ளை போன் பண்ணி சொன்னதுனால தான் எனக்கு எல்லாம் தெரிஞ்சுது. என்னெனவோ நடந்து போச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு இனியாவது ஒழுங்கா அவரோட வாழற வழியைப் பாரு. தான்யாவோட வாழ்க்கையும் உன் கையில் தான் இருக்கு” என்று சொல்லி விட்டு தள்ளிச் சென்று விட்டார்.
அவர் பேசிச் சென்ற வார்த்தைகள் ஓவ்வொன்றும் ஈட்டியாய் குத்த அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள். போன் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் மீது படிந்து விலக, அவசரமாக போனை அணைத்து வைத்துவிட்டு அவள் அருகே சென்று அமர்ந்தான்.
“என்ன செய்யுது சோட்டி?”
அவனது குரலில் கலைந்தவளின் விழிகள் கண்ணீரை சுமந்திருக்க “எல்லா தப்பையும் நீங்க செய்திட்டு இப்படியொரு கல்யாணத்தை செஞ்சு என்னை குற்றவாளியா ஆக்கிட்டீங்க இல்ல” என்றாள் வெறுப்பாக.
அவளது கரங்களைப் பற்றியவன் “உனக்கு நான் எல்லாவற்றையும் விளக்கமா ஊருக்கு போனதும் சொல்றேன் சோட்டி. தயவு செய்து என்னை வெறுக்காதே” என்றான்.
அவனது கரங்களில் இருந்து தனது கைகளை விடுவித்துக் கொண்டவள் “தயவு செய்து என்கிட்டே பேசவோ, தொடவோ முயற்சிக்காதீங்க” என்று வெறுப்புடன் எழுந்து சென்று தங்கையுடன் நின்று கொண்டாள்.
தான்யாவிற்கு தான் என்ன நடக்கிறது என்று புரியவே இல்லை. திடீரென்று எதிர்பாராமல் அக்காவின் திருமணம். இப்போது தானும் அவர்களுடன் செல்ல வேண்டிய நிலைமை. ஒரே நாளில் தங்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்திருந்தாள்.
அந்நேரம் வரிசையாக மூன்று கார்கள் வந்து நிற்க, முதல் காரின் முன் சீட்டிலிருந்து ஆஜானுபாகுவாக ஒருவன் இறங்கி காரின் பின் கதவை திறக்க சித்தார்த் வேக நடையுடன் வர்ஷிணியின் கைகளைப் பற்றிக் கொண்டு தான்யாவைப் பார்த்து “வாம்மா” என்றழைத்து விட்டு காருக்குள் சென்றமர்ந்தான். முதலில் அவனும் அடுத்து வர்ஷினி அமர, அடுத்து தான்யா அமர்ந்தாள்.
அவர்கள் ஏறியதும் கார் கிளம்ப அவர்களின் முன்னே ஒரு கார் செல்ல, பின்னே ஒரு கார் பாதுகாப்பிற்காக தொடர்ந்தது. அதை பார்த்ததும் ஏதோ ஒரு பெரிய அரசியல்வாதியின் பாதுகாப்பு படை பட்டாளத்துடன் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
தான்யா பொறுக்க முடியாமல் “மாமா குஜராத் வரை இப்படித்தான் போக போறோமா?” என்று கேட்டு விட்டாள்.
அதைக் கேட்டதும் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “இல்லம்மா! ஏர்போர்ட் வரை தான் இப்படி”.
அந்நேரம் அவனுக்கு அழைப்பு வர எடுத்து காதில் வைத்ததும் “மிஸ்டர் சித்தார்த்! திஸ் இஸ் சிவதாஸ்” என்றான் அந்தப் பக்கம் இருந்தவன்.
“ஹலோ மிஸ்டர் சிவதாஸ்! ஷ்யாம் உங்க கிட்ட பேசி இருப்பான். உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?”
“எதுவும் சரியா இருந்தா தான் என்னால பண்ண முடியும். எனக்கு எல்லா டீடைல்சம் அனுப்பிடுங்க நான் பார்த்துக்கிறேன்”.
“ஓகே...நான் அனுப்பிடுறேன்”.
அவன் அங்கு பேசிக் கொண்டிருக்கும் நேரம் வர்ஷினியின் அருகே குனிந்தவள் “என்னக்கா மாமா இவ்வளவு அப்பாட்டக்கரா?” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.
வெறுமை படிந்த கண்களுடன் அவளை திரும்பி பார்த்துவிட்டு இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள். அவளது நிலையை உணர்ந்த தான்யா, கரத்தை அழுந்தப் பற்றி “அக்கா! இப்போ எதையும் யோசிக்காதே. மனசை விட்டுடாதே. அமைதியா இரு” என்றாள்.