அத்தியாயம் – 11
கோயம்பத்தூர் ஏர்போர்ட்டில் இறங்கிய பஜ்ரங் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டான். அதற்குள் அவன் கேட்ட தகவல்கள் அனைத்தும் அவன் கைக்கு வந்து சேர்ந்திருந்தது. அவற்றை அறிந்து கொண்டவனுக்கு அதிர்ச்சி. உடனே தாதிக்கு அழைத்து அனைத்தையும் கூறி விட்டான்.
“என்ன சொல்ற? இதெல்லாம் எப்போ நடந்தது?’
அவன் நடந்தவற்றை எல்லாம் கூறியதும் கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார். தான் முன்னமே சுதாரித்து இருக்க வேண்டுமோ என்கிற எண்ணம் எழாமல் இல்லை. நிலைமை இந்தளவிற்கு விபரீதமாக போயிருக்கும் என்று சற்றும் எண்ணவில்லை.
“சித்தார்த்துக்கு தெரியுமா?”
“இல்ல மேம்! அவருக்கு எதுவும் தெரியாது. அவரை இங்கே இருந்து தூக்கிட்டு வந்த பின்னர் யாரிடமும் காண்டக்டில் இல்லை”.
“ம்...ஒ..மை காட்! நாம் இன்னும் சுதாரிப்பாக இருந்திருக்கலாம் பஜ்ரங். அந்தப் பேய் இந்தளவிற்கு ஆடும் என்று தெரியாமல் விட்டு விட்டோமே” என்று புலம்பினார்.
“மேம்! சித்தார்த் சாபிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும்”.
“ம்ம்...நிச்சயமா அவன் தாங்க மாட்டான் பஜ்ரங். அவனுக்கு தெரிய வேண்டாம். இப்போ நிறைய முடிக்க வேண்டிய காரியங்கள் இருக்கு. அது முடிந்ததும் அவனுக்கு தெரிந்தால் போதும். நீ எக்காரணம் கொண்டும் என் பேத்திகளை விட்டு நகர கூடாது. என்னால் முடிந்த அளவிற்கு என் பேரன் மனைவிக்கு நான் ஞாயம் செய்ய வேண்டும்” என்றார் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.
“ஓகே மேம்! நான் சற்று நேரத்தில் அவங்க இருக்கும் இடத்திற்கு கிளம்பி விடுவேன். இனி, என்னை மீறி தான் அவர்களை யாரும் நெருங்க முடியும்” என்றான்.
“நீ எனக்கு ஒன்று செய்யணுமே பஜ்ரங்”.
“சொல்லுங்க மேம்”.
“அங்கே போனதும் என் பேரன் மனைவியை பார்த்ததும் அவளுக்கு தெரியாமல் எனக்கு அவளை காண்பிக்க வேண்டும்”.
“ஓகே மேம்!”
“சரி நீ கிளம்பு” என்றவர் போனை அணைத்து விட்டு கண் மூடி சாய்ந்து விட்டார்.
அவரது மனம் வர்ஷினிக்கு நேரந்ததை எண்ணி துடித்துக் கொண்டிருந்தது. சின்னப் பெண் தவித்து போயிருப்பாளே. திருமணம் செய்தவனும் மாயமாய் மறைந்திருக்க, பெற்றவர்களும் விபத்தில் இறந்து போயிருக்க, விபத்தில் காலையும் இழந்து நிர்கதியாய் நின்றிருப்பாளே. எத்தனை பாவங்களை தான் சேர்ப்பார்கள் இவர்கள்? எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் இவர்கள் அடங்கப் போவதில்லை என்றெண்ணி துயரத்தோடு அமர்ந்து விட்டார்.
அதே நேரம் பஜ்ரங் வர்ஷிணியின் வீட்டின் அருகே இருந்தான். அவனது கார் ஒரு மரத்தடியில் பார்க் செய்யபட்டிருக்க, அதிலேயே அமர்ந்து அந்த வீட்டை கவனித்துக் கொண்டிருந்தான்.
வர்ஷினியும், தான்யாவும் கல்லூரிக்கும் பள்ளிக்கும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். பாட்டி வசந்தா அவர்களுக்காக உணவை தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருந்தார். வர்ஷினி செயற்கை காலை பொருத்துவதற்கு உதவி செய்து விட்டு இருவரும் சேர்ந்து ஹாலிற்கு வந்தனர்.
அவர்களுக்காக மதிய உணவை கூட லஞ்ச் பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு அமர்ந்திருந்த பாட்டியை “என்ன பாட்டி இது! இதை கூட நாங்க செஞ்சுக்க மாட்டோமா?” என்று கடிந்து கொண்டே சென்றமர்ந்தாள் வர்ஷு.
அவளை பார்த்து பெருமூச்சு விட்ட வசந்தா “என் பேத்திகளுக்கு இதை கூட செய்ய முடியாதா என்ன? உங்கம்மா இருந்திருந்தா செய்திருப்பா தானே?” என்றார் கலங்கிய கண்களுடன்.
சட்டென்று வர்ஷுவின் கண்களும் கலங்கி விட, அவசரமாக தங்கையைப் பார்க்க அவளின் முகமும் கசங்கி இருந்தது.
“பாட்டி! ப்ளீஸ்! சாப்பாடு எடுத்து வைங்க. நாம பேசி பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை. போனவங்க திரும்பி வரப் போறதில்லை. அட்லீஸ்ட் நாங்க ரெண்டு பேரும் படிச்சு நல்லவேலையில் அமர்ந்து அவங்க ரெண்டு பேருடைய ஆத்மாவிற்கும் நிம்மதியை கொடுக்கிறோம்”.
“ஆமாம் பாட்டி. அக்கா சொல்றது போல தான் செய்யணும்” என்றாள் தான்யா.
“ம்ம்..சரி சாப்பிடுங்க நேரமாச்சு. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. உங்க ரெண்டு பேர் பொறுப்பும் என் கிட்ட தான்” என்றார் கவலையுடன்.
இருவரும் எதுவும் பேசாமல் உணவை உண்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். வாசலில் நிறுத்தி வைத்திருந்த டூ வீலரை ஸ்டார்ட் செய்த வர்ஷு, தங்கை பின்னே அமர்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவள் வாசலுக்கு வந்ததில் இருந்து வெளியேறும் வரை தாதிக்கு வீடியோ காலில் அனைத்தையும் காண்பித்தான் பஜ்ரங். அவளது நிமிர்வையும் காலை இழந்த போதும் மனம் சோர்ந்து போகாமல் தைரியமாக இருப்பதைக் கண்டு மனம் குளிர்ந்து போனார்.
“நல்ல நிமிர்வான பெண்ணாக இருக்கிறாளே பஜ்ரங். அவளைப் பார்த்தாள் சமீபத்தில் துயரம் நடந்த மாதிரி தெரியவில்லை. தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்ணாக இருக்கிறாள். என் பேரனுடைய தேர்வு அற்புதம்” என்று பாராட்டிக் கொண்டார்.
“ஆமாம் மேம்”
கோயம்பத்தூர் ஏர்போர்ட்டில் இறங்கிய பஜ்ரங் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டான். அதற்குள் அவன் கேட்ட தகவல்கள் அனைத்தும் அவன் கைக்கு வந்து சேர்ந்திருந்தது. அவற்றை அறிந்து கொண்டவனுக்கு அதிர்ச்சி. உடனே தாதிக்கு அழைத்து அனைத்தையும் கூறி விட்டான்.
“என்ன சொல்ற? இதெல்லாம் எப்போ நடந்தது?’
அவன் நடந்தவற்றை எல்லாம் கூறியதும் கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார். தான் முன்னமே சுதாரித்து இருக்க வேண்டுமோ என்கிற எண்ணம் எழாமல் இல்லை. நிலைமை இந்தளவிற்கு விபரீதமாக போயிருக்கும் என்று சற்றும் எண்ணவில்லை.
“சித்தார்த்துக்கு தெரியுமா?”
“இல்ல மேம்! அவருக்கு எதுவும் தெரியாது. அவரை இங்கே இருந்து தூக்கிட்டு வந்த பின்னர் யாரிடமும் காண்டக்டில் இல்லை”.
“ம்...ஒ..மை காட்! நாம் இன்னும் சுதாரிப்பாக இருந்திருக்கலாம் பஜ்ரங். அந்தப் பேய் இந்தளவிற்கு ஆடும் என்று தெரியாமல் விட்டு விட்டோமே” என்று புலம்பினார்.
“மேம்! சித்தார்த் சாபிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும்”.
“ம்ம்...நிச்சயமா அவன் தாங்க மாட்டான் பஜ்ரங். அவனுக்கு தெரிய வேண்டாம். இப்போ நிறைய முடிக்க வேண்டிய காரியங்கள் இருக்கு. அது முடிந்ததும் அவனுக்கு தெரிந்தால் போதும். நீ எக்காரணம் கொண்டும் என் பேத்திகளை விட்டு நகர கூடாது. என்னால் முடிந்த அளவிற்கு என் பேரன் மனைவிக்கு நான் ஞாயம் செய்ய வேண்டும்” என்றார் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.
“ஓகே மேம்! நான் சற்று நேரத்தில் அவங்க இருக்கும் இடத்திற்கு கிளம்பி விடுவேன். இனி, என்னை மீறி தான் அவர்களை யாரும் நெருங்க முடியும்” என்றான்.
“நீ எனக்கு ஒன்று செய்யணுமே பஜ்ரங்”.
“சொல்லுங்க மேம்”.
“அங்கே போனதும் என் பேரன் மனைவியை பார்த்ததும் அவளுக்கு தெரியாமல் எனக்கு அவளை காண்பிக்க வேண்டும்”.
“ஓகே மேம்!”
“சரி நீ கிளம்பு” என்றவர் போனை அணைத்து விட்டு கண் மூடி சாய்ந்து விட்டார்.
அவரது மனம் வர்ஷினிக்கு நேரந்ததை எண்ணி துடித்துக் கொண்டிருந்தது. சின்னப் பெண் தவித்து போயிருப்பாளே. திருமணம் செய்தவனும் மாயமாய் மறைந்திருக்க, பெற்றவர்களும் விபத்தில் இறந்து போயிருக்க, விபத்தில் காலையும் இழந்து நிர்கதியாய் நின்றிருப்பாளே. எத்தனை பாவங்களை தான் சேர்ப்பார்கள் இவர்கள்? எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் இவர்கள் அடங்கப் போவதில்லை என்றெண்ணி துயரத்தோடு அமர்ந்து விட்டார்.
அதே நேரம் பஜ்ரங் வர்ஷிணியின் வீட்டின் அருகே இருந்தான். அவனது கார் ஒரு மரத்தடியில் பார்க் செய்யபட்டிருக்க, அதிலேயே அமர்ந்து அந்த வீட்டை கவனித்துக் கொண்டிருந்தான்.
வர்ஷினியும், தான்யாவும் கல்லூரிக்கும் பள்ளிக்கும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். பாட்டி வசந்தா அவர்களுக்காக உணவை தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருந்தார். வர்ஷினி செயற்கை காலை பொருத்துவதற்கு உதவி செய்து விட்டு இருவரும் சேர்ந்து ஹாலிற்கு வந்தனர்.
அவர்களுக்காக மதிய உணவை கூட லஞ்ச் பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு அமர்ந்திருந்த பாட்டியை “என்ன பாட்டி இது! இதை கூட நாங்க செஞ்சுக்க மாட்டோமா?” என்று கடிந்து கொண்டே சென்றமர்ந்தாள் வர்ஷு.
அவளை பார்த்து பெருமூச்சு விட்ட வசந்தா “என் பேத்திகளுக்கு இதை கூட செய்ய முடியாதா என்ன? உங்கம்மா இருந்திருந்தா செய்திருப்பா தானே?” என்றார் கலங்கிய கண்களுடன்.
சட்டென்று வர்ஷுவின் கண்களும் கலங்கி விட, அவசரமாக தங்கையைப் பார்க்க அவளின் முகமும் கசங்கி இருந்தது.
“பாட்டி! ப்ளீஸ்! சாப்பாடு எடுத்து வைங்க. நாம பேசி பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை. போனவங்க திரும்பி வரப் போறதில்லை. அட்லீஸ்ட் நாங்க ரெண்டு பேரும் படிச்சு நல்லவேலையில் அமர்ந்து அவங்க ரெண்டு பேருடைய ஆத்மாவிற்கும் நிம்மதியை கொடுக்கிறோம்”.
“ஆமாம் பாட்டி. அக்கா சொல்றது போல தான் செய்யணும்” என்றாள் தான்யா.
“ம்ம்..சரி சாப்பிடுங்க நேரமாச்சு. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. உங்க ரெண்டு பேர் பொறுப்பும் என் கிட்ட தான்” என்றார் கவலையுடன்.
இருவரும் எதுவும் பேசாமல் உணவை உண்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். வாசலில் நிறுத்தி வைத்திருந்த டூ வீலரை ஸ்டார்ட் செய்த வர்ஷு, தங்கை பின்னே அமர்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவள் வாசலுக்கு வந்ததில் இருந்து வெளியேறும் வரை தாதிக்கு வீடியோ காலில் அனைத்தையும் காண்பித்தான் பஜ்ரங். அவளது நிமிர்வையும் காலை இழந்த போதும் மனம் சோர்ந்து போகாமல் தைரியமாக இருப்பதைக் கண்டு மனம் குளிர்ந்து போனார்.
“நல்ல நிமிர்வான பெண்ணாக இருக்கிறாளே பஜ்ரங். அவளைப் பார்த்தாள் சமீபத்தில் துயரம் நடந்த மாதிரி தெரியவில்லை. தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்ணாக இருக்கிறாள். என் பேரனுடைய தேர்வு அற்புதம்” என்று பாராட்டிக் கொண்டார்.
“ஆமாம் மேம்”