அத்தியாயம்- 1
சில கனவுகள் நனவாகின்றன
பல கனவுகள் கனவாகவே செல்கின்றது!
கோயம்புத்தூரின் நடுத்தர மக்கள் வாழும் பகுதியான ஜெயந்தி நகரில் ஒரு சிறிய வீட்டில் காலை பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது.
கல்லூரிக்கு செல்லும் மகள் ஒருபுறமும், பள்ளிக்குச் செல்லும் மகள் ஒருபுறம் அன்னையின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்க, மோட்டரை நிறுத்தச் சென்ற கணவரோ பக்கத்து வீட்டுக்காரருடன் நின்று கதை பேசி கனன்று கொண்டிருந்த எரிமலையை வெடிக்க வைக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார்.
புதிய சல்வாரை அணிந்து கழுத்தைச் சுற்றி துப்பட்டாவை போட்டுக் கொண்டு அன்னையின் முன்பு வந்து நின்ற வர்ஷினி “மா! இது நல்லாயிருக்காம்மா?” என்றாள் அன்னையின் முகத்தில் தெரிந்த கோபச் சாயலை கவனிக்காமலே.
“ம்ம்...கடுப்பேத்தாம முதல்ல போய் உங்கப்பாவை வர சொல்லு வர்ஷு. பொண்ணுங்க ரெண்டும் காலேஜ், ஸ்கூலுக்குப் போகணுமேன்னு பொறுப்பிருக்கா பாரு. வெளியே நின்னு கதையடிசிட்டு இருக்காங்க”.
அன்னையின் தோள்களில் கையைப் போட்டு “டென்ஷன் ஆகாதீங்கம்மா! அப்பா கிளம்பிடுவாங்க” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள்.
அதன்பின்னர் பரபரப்புடன் அனைவரும் தயாராகிவிட, தேவேந்திரன் காரை எடுத்து கேட்டிற்கு வெளியே விட்டு மகள்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அன்னை கையைசைத்து வழியனுப்ப, வர்ஷிணியும், தான்யாவும் தந்தையுடன் சென்றனர்.
இரெண்டாவது வருடம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் வர்ஷினிக்கு கல்லூரியை நெருங்க நெருங்க மனம் படபடக்க ஆரம்பித்தது. விடுமுறைக்குப் பிறகு முதல்நாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் அவளது மனது அவனைக் காண வேண்டும் என்று ஏங்கியது.
அவளது முகத்தில் தெரிந்த பதட்டத்தை வேறுவிதமாக உணர்ந்து கொண்ட தேவேந்திரன் “என்னடா டென்ஷனா இருக்க? இந்த வருஷம் உனக்கு ராகிங் இருக்காதே” என்றார் பரிவுடன்.
தந்தையின் கேள்வியை கண்டு மென்மையாக சிரித்தவள் “அதில்லைப்பா ரெண்டு மாசம் கழிச்சு பிரெண்ட்ஸ் எல்லாம் பார்க்க போறேன் இல்லையா அது தான்” என்றாள்.
அவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை நிறைவுடன் பார்த்துக் கொண்டவர் எல்லா தகப்பனைப் போல பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டார்.
கல்லூரி வந்துவிட தந்தையிடம் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வை அவனை மட்டுமே தேடியது. கல்லூரி வாயிலில் இருந்து வகுப்புகள் இருக்கும் கட்டிடம் வரை நடந்து வந்தவளின் பார்வையில் எங்குமே அவன் விழவில்லை. ஒருவேளை அவன் இன்னும் வரவில்லையோ என்றெண்ணி மனம் சோர்ந்து போனது.
எதிரே வந்து அவளை சேர்த்தணைத்துக் கொண்ட தோழிகளிடம் மனம் செல்லாமல் இல்லாதவனிடமே சரணடைந்தது. அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளில் இருந்தே காரணத்தைப் புரிந்து கொண்ட தோழிகள் “ம்ம்...கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்று பாடி கேலி செய்தனர்.
அவளது மனமோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. அவன் ஏன் முதல்நாளே வரவில்லை? எதுவும் பிரச்சனையோ? உடல்நலம் சரியில்லையோ? என்று பல்வேறு சிந்தனைகளோடு தோழிகளுடன் வகுப்பை நோக்கி நடந்தாள்.
அவளது சிந்தனைக்கு காரணமானவனோ மறைந்திருந்து அவளது முகத்தில் தெரிந்த உணர்வு போராட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தான். தன்னை அவள் தேடுகிறான் என்பதில், அவள் மனதில் தன் மீதிருக்கும் காதலை எண்ணி பெருமிதம் அடைந்தான்.
“டேய் சித்! இதெல்லாம் நல்லாயில்ல. பாவம் வர்ஷினி. உன்னை பார்க்க முடியாம ரொம்ப தவிக்கிறா. நீ எதுக்குடா இப்படி பண்ற?”
சரவணன் தோளில் ஒரு தட்டுதட்டி “உனக்கு இதெல்லாம் புரியாது-டா. காதலிக்கும் போது தான் இந்த உணர்வுகளின் பாஷை புரியும்”.
அவனை திரும்பி பார்த்து முறைத்த சரவணன் “எங்கூர் பெண்ணை டைம்பாசுக்கு காதலிச்சு விட்டுட்டு போயிடலாம்னு மட்டும் நினைக்காதடா. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மனசில சுமந்துகிட்டு வாழ ஆரம்பிச்சிடுச்சு. அதனால நாங்களே விட மாட்டோம்” என்றான் மிரட்டலாக.
தோழனின் தோளில் அடித்து “என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு? எந்த காலத்திலும் அவளை நான் விட மாட்டேன் சரவணா. இப்போ வா அவளை போய் பார்த்திட்டு வருவோம்”.
அவனது கைகளை தட்டிவிட்டு “நான் எதுக்கு? நீ போய் பார்த்திட்டு கிளாசுக்கு வந்து சேரு. ரெண்டு பேரும் படிக்கனும்டா. இந்த காதலை ஓரம்கட்டி வைங்க” என்று மிரட்டிவிட்டு நகர்ந்தான்.
சித்தார்த் மல்ஹோத்ரா பாரம்பரிய மிக்க ஜமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். குஜராத்தை சேர்ந்த பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன். வெளிநாட்டில் படிக்க சொல்லி வற்புறுத்திய தாய், தந்தையிடம் போராடி அனுமதி பெற்று தமிழ்நாட்டில் படிக்கிறான். அவனது குடும்பத்தைப் பற்றியோ, பாரம்பரியத்தைப் பற்றியோ அறியாதவர்கள் அவனது நண்பர்கள். வடஇந்தியாவிலிருந்து ஒருவன் என்கிற எண்ணத்தில் மட்டுமே இருந்தனர். வர்ஷினிக்கும் அவனது முழு விபரங்கள் தெரியாது.
அவனது பாரம்பரியத்தை அறிந்திருந்தால் அவனிடம் பழக பயந்து ஒதுங்கி இருப்பாள். அதை அறிந்தே அவன் எவரிடமும் தனது செல்வநிலையை கூட கூறாமல் இருந்தான். அப்படி இருந்துமே வர்ஷினிக்கு தங்கள் காதல் ஜெயிக்குமா என்பதில் ஆயிரம் சந்தேகங்கள் உண்டு.
சில கனவுகள் நனவாகின்றன
பல கனவுகள் கனவாகவே செல்கின்றது!
கோயம்புத்தூரின் நடுத்தர மக்கள் வாழும் பகுதியான ஜெயந்தி நகரில் ஒரு சிறிய வீட்டில் காலை பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது.
கல்லூரிக்கு செல்லும் மகள் ஒருபுறமும், பள்ளிக்குச் செல்லும் மகள் ஒருபுறம் அன்னையின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்க, மோட்டரை நிறுத்தச் சென்ற கணவரோ பக்கத்து வீட்டுக்காரருடன் நின்று கதை பேசி கனன்று கொண்டிருந்த எரிமலையை வெடிக்க வைக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார்.
புதிய சல்வாரை அணிந்து கழுத்தைச் சுற்றி துப்பட்டாவை போட்டுக் கொண்டு அன்னையின் முன்பு வந்து நின்ற வர்ஷினி “மா! இது நல்லாயிருக்காம்மா?” என்றாள் அன்னையின் முகத்தில் தெரிந்த கோபச் சாயலை கவனிக்காமலே.
“ம்ம்...கடுப்பேத்தாம முதல்ல போய் உங்கப்பாவை வர சொல்லு வர்ஷு. பொண்ணுங்க ரெண்டும் காலேஜ், ஸ்கூலுக்குப் போகணுமேன்னு பொறுப்பிருக்கா பாரு. வெளியே நின்னு கதையடிசிட்டு இருக்காங்க”.
அன்னையின் தோள்களில் கையைப் போட்டு “டென்ஷன் ஆகாதீங்கம்மா! அப்பா கிளம்பிடுவாங்க” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள்.
அதன்பின்னர் பரபரப்புடன் அனைவரும் தயாராகிவிட, தேவேந்திரன் காரை எடுத்து கேட்டிற்கு வெளியே விட்டு மகள்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அன்னை கையைசைத்து வழியனுப்ப, வர்ஷிணியும், தான்யாவும் தந்தையுடன் சென்றனர்.
இரெண்டாவது வருடம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் வர்ஷினிக்கு கல்லூரியை நெருங்க நெருங்க மனம் படபடக்க ஆரம்பித்தது. விடுமுறைக்குப் பிறகு முதல்நாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் அவளது மனது அவனைக் காண வேண்டும் என்று ஏங்கியது.
அவளது முகத்தில் தெரிந்த பதட்டத்தை வேறுவிதமாக உணர்ந்து கொண்ட தேவேந்திரன் “என்னடா டென்ஷனா இருக்க? இந்த வருஷம் உனக்கு ராகிங் இருக்காதே” என்றார் பரிவுடன்.
தந்தையின் கேள்வியை கண்டு மென்மையாக சிரித்தவள் “அதில்லைப்பா ரெண்டு மாசம் கழிச்சு பிரெண்ட்ஸ் எல்லாம் பார்க்க போறேன் இல்லையா அது தான்” என்றாள்.
அவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை நிறைவுடன் பார்த்துக் கொண்டவர் எல்லா தகப்பனைப் போல பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டார்.
கல்லூரி வந்துவிட தந்தையிடம் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வை அவனை மட்டுமே தேடியது. கல்லூரி வாயிலில் இருந்து வகுப்புகள் இருக்கும் கட்டிடம் வரை நடந்து வந்தவளின் பார்வையில் எங்குமே அவன் விழவில்லை. ஒருவேளை அவன் இன்னும் வரவில்லையோ என்றெண்ணி மனம் சோர்ந்து போனது.
எதிரே வந்து அவளை சேர்த்தணைத்துக் கொண்ட தோழிகளிடம் மனம் செல்லாமல் இல்லாதவனிடமே சரணடைந்தது. அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளில் இருந்தே காரணத்தைப் புரிந்து கொண்ட தோழிகள் “ம்ம்...கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்று பாடி கேலி செய்தனர்.
அவளது மனமோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. அவன் ஏன் முதல்நாளே வரவில்லை? எதுவும் பிரச்சனையோ? உடல்நலம் சரியில்லையோ? என்று பல்வேறு சிந்தனைகளோடு தோழிகளுடன் வகுப்பை நோக்கி நடந்தாள்.
அவளது சிந்தனைக்கு காரணமானவனோ மறைந்திருந்து அவளது முகத்தில் தெரிந்த உணர்வு போராட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தான். தன்னை அவள் தேடுகிறான் என்பதில், அவள் மனதில் தன் மீதிருக்கும் காதலை எண்ணி பெருமிதம் அடைந்தான்.
“டேய் சித்! இதெல்லாம் நல்லாயில்ல. பாவம் வர்ஷினி. உன்னை பார்க்க முடியாம ரொம்ப தவிக்கிறா. நீ எதுக்குடா இப்படி பண்ற?”
சரவணன் தோளில் ஒரு தட்டுதட்டி “உனக்கு இதெல்லாம் புரியாது-டா. காதலிக்கும் போது தான் இந்த உணர்வுகளின் பாஷை புரியும்”.
அவனை திரும்பி பார்த்து முறைத்த சரவணன் “எங்கூர் பெண்ணை டைம்பாசுக்கு காதலிச்சு விட்டுட்டு போயிடலாம்னு மட்டும் நினைக்காதடா. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மனசில சுமந்துகிட்டு வாழ ஆரம்பிச்சிடுச்சு. அதனால நாங்களே விட மாட்டோம்” என்றான் மிரட்டலாக.
தோழனின் தோளில் அடித்து “என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு? எந்த காலத்திலும் அவளை நான் விட மாட்டேன் சரவணா. இப்போ வா அவளை போய் பார்த்திட்டு வருவோம்”.
அவனது கைகளை தட்டிவிட்டு “நான் எதுக்கு? நீ போய் பார்த்திட்டு கிளாசுக்கு வந்து சேரு. ரெண்டு பேரும் படிக்கனும்டா. இந்த காதலை ஓரம்கட்டி வைங்க” என்று மிரட்டிவிட்டு நகர்ந்தான்.
சித்தார்த் மல்ஹோத்ரா பாரம்பரிய மிக்க ஜமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். குஜராத்தை சேர்ந்த பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன். வெளிநாட்டில் படிக்க சொல்லி வற்புறுத்திய தாய், தந்தையிடம் போராடி அனுமதி பெற்று தமிழ்நாட்டில் படிக்கிறான். அவனது குடும்பத்தைப் பற்றியோ, பாரம்பரியத்தைப் பற்றியோ அறியாதவர்கள் அவனது நண்பர்கள். வடஇந்தியாவிலிருந்து ஒருவன் என்கிற எண்ணத்தில் மட்டுமே இருந்தனர். வர்ஷினிக்கும் அவனது முழு விபரங்கள் தெரியாது.
அவனது பாரம்பரியத்தை அறிந்திருந்தால் அவனிடம் பழக பயந்து ஒதுங்கி இருப்பாள். அதை அறிந்தே அவன் எவரிடமும் தனது செல்வநிலையை கூட கூறாமல் இருந்தான். அப்படி இருந்துமே வர்ஷினிக்கு தங்கள் காதல் ஜெயிக்குமா என்பதில் ஆயிரம் சந்தேகங்கள் உண்டு.