கண்களை மூடி கடவுளின் முன் நின்றவரின் மனம் மகனுக்காக வேண்டுதலை முன் வைத்துக் கொண்டிருந்தது. எப்படியாவது இந்த வருடமாவது தன் மகனுக்கு திருமணம் முடிந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார்.
படத்திலிருந்த முருகனோ “வாய்ப்பில்லை கனகா வாய்ப்பில்லை! உன் பையனுக்கு கல்யாணம் பண்றதுக்கு நான் மறுபடியும் ஆண்டியா போயிடலாம்” என்று சொல்லிக் கொண்டார்.
அப்போது டைனிங் டேபிளில் வந்தமர்ந்த அறிவழகன் “மா! எனக்கு ஆஸ்பிட்டல் போக நேரமாச்சு” என்றான் சத்தமாக.
அவனது குரல் கேட்டதும் அவசரமாக முருகனிடம் ஒரு கும்பிடை போட்டு விட்டு திரும்பியவர் “வந்துட்டியா? இரு வரேன்” என்றவர் வேகமாக சமையலறைக்குள் சென்றார்.
மருத்துவனான அறிவழகன் அமைதியாக அவர் வரும் வரை அமர்ந்திருந்தான். உணவை எடுத்து அவன் தட்டில் பரிமாறியவர் “அறிவு! கலா சித்தி உனக்கு ஒரு வரன் கொண்டு வந்திருக்கா. என்ன சொல்ற? பார்க்கலாமா?” என்றார் தயங்கி தயங்கி.
அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் “வேண்டாம்மா! என்னை இப்படியே விட்டுடுங்களேன். நீங்களும் நிம்மதியா இருக்கலாம் நானும் நிம்மதியா இருப்பேன்” என்றான்.
அதுவரை அமைதியாக பேசிக் கொண்டிருந்தவர் “உனக்கே வெட்கமா இல்லையா அறிவு? எந்த வீட்டில் பிரச்சனை இல்ல? நானும் உங்கப்பாவும் எவ்வளவு சண்டை போட்டிருப்போம் அதுக்காக நாங்க நல்லாயில்லாமையா போயிட்டோம்?” என்றார் கோபமாக.
அவரை நிமிர்ந்து பார்த்தவன் “கல்யாண பேச்சை எடுத்த உடனேயே உங்களுக்கு எப்படி கோபம் வருது பாருங்க. இதுக்கு தான் சொல்றேன்” என்றான் அசராமல்.
“டேய்! கல்யாணம் பண்ண இப்படி பயப்படலாமா?”
“நான் பயப்படலையே! நீங்களும் நானும் பேசினா நமக்குள்ள சண்டை வராது. ஆனா புதுசா வரவளுக்கும் எனக்கும் நிச்சயமா பேசினா சண்டை வர வாய்ப்பிருக்கு. நாமலே தேடி போய் ஒரு ஆளை கூட்டிட்டு வந்து சண்டை போடலாமா?” என்றவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவர் “அப்போ நம்ம பரம்பரை உன்னோட முடியட்டும்னு சொல்றியா?” என்றார் கோவமாக.
அவரை நிமிர்ந்து பார்த்தவன் “பெரிய இந்த பரம்பரை. அது முடியப் போகுதுன்னு கவலை வேற. விடும்மா!”.
“ஏண்டா! நீ அவ்வளவு ஒன்னும் அமைதியானவன் கிடையாது. அப்புறம் என்ன சண்டைக்கு பயந்தவன் மாதிரி பேசுற?”
கையை கழுவிக் கொண்டு எழுந்தவன் “வெளில ஒரு வாக்குவாதம் வந்தா அது அங்கேயே முடிஞ்சு போயிடும். ஆனா வீட்டில் சண்டை போட்டுக்கிட்டு நிம்மதியை இழந்து நிற்கிறது எனக்குப் பிடிக்காது”.
“சரி உன் வழிக்கே வரேன். நான் பார்க்கிற பொண்ணு கூட தான் உனக்கு பிரச்சனை வரும். நீயா பேசி பழகி கல்யாணம் பண்ணிக்கோ”.
“வெளில பழகுகிற கொஞ்ச நேரத்தில் எல்லாம் நல்லா தான் இருக்கும். கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு பிரச்சனை வரும்”.
மகனை பார்த்து நொந்து போனவர் “ஒரு பிரச்சனையையே பிள்ளையா பெத்து வச்சிருக்கேன்னு இப்போ தாண்டா தெரிஞ்சுகிட்டேன்” என்றார் அலுப்பாக.
அவனோ கண்டு கொள்ளாமல் வாசலை நோக்கி நடந்தவன் “ரொம்ப யோசிக்காம மாத்திரையை போட்டுக்கிட்டு நிம்மதியா படுங்க” என்று விட்டு வெளியேறினான்.
கனகாவின் பார்வை பூஜை அறையை நோக்க, அங்கே முருகன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
“என்னை சிக்க வைக்க முயற்சி பண்ணின இல்ல. இப்போ தெரியுதா உன் பிள்ளையோட பவுசு. நான் உஷாராகிட்டேன்” என்று கை கொட்டி சிரித்தார்.
தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார் கனகா.
அறிவோ அன்னையுடன் நடந்த பேச்சு வார்த்தையை மறந்து விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டான். ஓபி நோயாளிகளை பார்ப்பதற்காக தன்னரைக்குச் சென்றமர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.
அன்று நிறைய பேர் வந்திருந்தனர். அவன் ஒரு ஆர்த்தோ டாக்டர் என்பதால் வயதானவர்கள் வந்து காத்திருந்தனர். ஒவ்வொருவரையும் பொறுமையாக பார்த்து அவர்களுக்கு வேண்டிய தீர்வை அளித்துக் கொண்டிருந்தான்.
அதுவொரு தனியார் மருத்துவமனை. அங்கு அவனைப் போன்று நிறைய மருத்துவர்கள் பல துறையை சார்ந்தவர்கள் வந்து நோயாளிகளை பார்ப்பார்கள். காலை நேரமாதலால் மிக பிசியாக இருந்தது. அப்போது மருத்துவமனை வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து நிர்மலா நொண்டிக் கொண்டே இறங்கினார். அவரின் பின்னே பர்சை கையில் எடுத்தபடி இறங்கினாள் மாயா.
இருநூறு ரூபாயை எடுத்து ஆட்டோக்காரரிடம் கொடுக்க “இன்னா கொடுக்கிற? மேல ஒரு நூறு குடு”.
அவ்வளவு தான் காலையில் வண்டியை பிடித்ததில் இருந்து அவன் சொன்னவை தான் பேசியவை என்று ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து பேச ஆரம்பித்தாள். அவனும் விடாது கத்த, கால் வலியுடன் நின்று கொண்டிருந்த நிர்மலா “நான் போறேன் நீ முடிச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மருத்துவமனைக்குள் சென்றார்.
ரிஷப்நிஷ்டிடம் “மூட்டு வலி டாக்டரை பார்க்கணும்?” என்றார்.
“புரியல மேடம்”
“அதான் மா மூட்டு வலிக்கு பார்க்கிறவர். அவரை பார்க்கணும்”.
“ஒ...அறிவு சாரை பார்க்கனுமா? அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கீங்களா?”
“ஏன்மா அறிவு இருக்கான்னு பார்க்கிறதுக்கு எல்லாம் அப்பாயின்மென்ட் வாங்கனுமா என்ன? நானே சொல்லிடுவேனே?”
“மேடம்!” என்று பல்லைக் கடித்தவள் “நான் டாக்டர் அறிவை சொன்னேன்? நீங்க அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தா பேரை சொல்லுங்க”.
அந்த பெண்ணை ஒரு மாதிரியாக பார்த்து “நான் எதுக்கு சொல்லணும்? அது தான் நீயே அவர் பேரு அறிவுன்னு சொல்லிட்டியே”.
ஓய்ந்து போனவள் “உங்க பேர் என்னன்னு கேட்டேன் மேடம்” என்றாள்.
“ஒ...சரியான மந்தமான பொண்ணா இருக்கம்மா. இதை முதலிலேயே சொல்றதுக்கென்ன.என் பேரு நிர்மலா”.
அவசரமாக தேடி அவரின் டோக்கன் நம்பரை கொடுத்து “இங்கே இருந்து நேரா போய் வலது பக்கம் திரும்பினா ரெண்டாவது ரூம். உங்க நம்பர் முப்பத்து ஒன்பது”.
“வழி சரியா தானே சொல்லி இருக்க? அப்புறம் இந்த முப்பத்து ஒன்பது நம்பர் எனக்கு ராசியில்லை. வேற நம்பர் கொடும்மா”.
மனதுக்குள் ‘ஆத்தாடி! என்ன இப்படி ஒரு கேசுகிட்ட சிக்கி இருக்க’ என்றெண்ணிக் கொண்டு “மேடம்! நம்பரெல்லாம் மாத்த முடியாது. சீக்கிரம் போங்க டாக்டர் பேஷண்டை பார்த்திட்டு கிளம்பிடுவார்” என்று விரட்டினாள்.
அவள் அப்படி சொன்னதும் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு வாசலை ஒரு பார்வை பார்க்க, அங்கே மாயாவோ இன்னமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அதை பார்த்து தலையசைத்துக் கொண்டே “இவ இப்போதைக்கு வர மாட்டா” என்று சொல்லியபடி டாக்டரை பார்க்க அவரின் அறையை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.
அங்கே சென்று பார்த்ததும் அவருக்கு முன்னே பத்து பேர் அமர்ந்திருந்தனர். எரிச்சலுடன் வரிசையில் சென்றமர்ந்து கொண்டார். ஒவ்வொருவராக உள்ளே சென்று வரவும் வாசலை பார்ப்பதும், டாக்டரின் அறையை பார்ப்பதுமாக இருந்தார்.
சற்று நேரத்திற்கு பிறகு மாயா அவர் அருகே வந்தமர்ந்தாள்.
“என்னடி ஆச்சு?”
“உன் காசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டான் மா”.
அவளை பார்த்து முறைத்தவர் “எப்படித்தான் இப்படியொரு வாயோ?” என்றவர் மனதிற்குள் ‘இவளை கட்டிக்கப் போறவன் சாதுவா இருக்கணும். இல்லேன்னா அவன் பாடு திண்டாட்டம் தான்’ என்றெண்ணிக் கொண்டார்.
படத்திலிருந்த முருகனோ “வாய்ப்பில்லை கனகா வாய்ப்பில்லை! உன் பையனுக்கு கல்யாணம் பண்றதுக்கு நான் மறுபடியும் ஆண்டியா போயிடலாம்” என்று சொல்லிக் கொண்டார்.
அப்போது டைனிங் டேபிளில் வந்தமர்ந்த அறிவழகன் “மா! எனக்கு ஆஸ்பிட்டல் போக நேரமாச்சு” என்றான் சத்தமாக.
அவனது குரல் கேட்டதும் அவசரமாக முருகனிடம் ஒரு கும்பிடை போட்டு விட்டு திரும்பியவர் “வந்துட்டியா? இரு வரேன்” என்றவர் வேகமாக சமையலறைக்குள் சென்றார்.
மருத்துவனான அறிவழகன் அமைதியாக அவர் வரும் வரை அமர்ந்திருந்தான். உணவை எடுத்து அவன் தட்டில் பரிமாறியவர் “அறிவு! கலா சித்தி உனக்கு ஒரு வரன் கொண்டு வந்திருக்கா. என்ன சொல்ற? பார்க்கலாமா?” என்றார் தயங்கி தயங்கி.
அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் “வேண்டாம்மா! என்னை இப்படியே விட்டுடுங்களேன். நீங்களும் நிம்மதியா இருக்கலாம் நானும் நிம்மதியா இருப்பேன்” என்றான்.
அதுவரை அமைதியாக பேசிக் கொண்டிருந்தவர் “உனக்கே வெட்கமா இல்லையா அறிவு? எந்த வீட்டில் பிரச்சனை இல்ல? நானும் உங்கப்பாவும் எவ்வளவு சண்டை போட்டிருப்போம் அதுக்காக நாங்க நல்லாயில்லாமையா போயிட்டோம்?” என்றார் கோபமாக.
அவரை நிமிர்ந்து பார்த்தவன் “கல்யாண பேச்சை எடுத்த உடனேயே உங்களுக்கு எப்படி கோபம் வருது பாருங்க. இதுக்கு தான் சொல்றேன்” என்றான் அசராமல்.
“டேய்! கல்யாணம் பண்ண இப்படி பயப்படலாமா?”
“நான் பயப்படலையே! நீங்களும் நானும் பேசினா நமக்குள்ள சண்டை வராது. ஆனா புதுசா வரவளுக்கும் எனக்கும் நிச்சயமா பேசினா சண்டை வர வாய்ப்பிருக்கு. நாமலே தேடி போய் ஒரு ஆளை கூட்டிட்டு வந்து சண்டை போடலாமா?” என்றவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவர் “அப்போ நம்ம பரம்பரை உன்னோட முடியட்டும்னு சொல்றியா?” என்றார் கோவமாக.
அவரை நிமிர்ந்து பார்த்தவன் “பெரிய இந்த பரம்பரை. அது முடியப் போகுதுன்னு கவலை வேற. விடும்மா!”.
“ஏண்டா! நீ அவ்வளவு ஒன்னும் அமைதியானவன் கிடையாது. அப்புறம் என்ன சண்டைக்கு பயந்தவன் மாதிரி பேசுற?”
கையை கழுவிக் கொண்டு எழுந்தவன் “வெளில ஒரு வாக்குவாதம் வந்தா அது அங்கேயே முடிஞ்சு போயிடும். ஆனா வீட்டில் சண்டை போட்டுக்கிட்டு நிம்மதியை இழந்து நிற்கிறது எனக்குப் பிடிக்காது”.
“சரி உன் வழிக்கே வரேன். நான் பார்க்கிற பொண்ணு கூட தான் உனக்கு பிரச்சனை வரும். நீயா பேசி பழகி கல்யாணம் பண்ணிக்கோ”.
“வெளில பழகுகிற கொஞ்ச நேரத்தில் எல்லாம் நல்லா தான் இருக்கும். கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு பிரச்சனை வரும்”.
மகனை பார்த்து நொந்து போனவர் “ஒரு பிரச்சனையையே பிள்ளையா பெத்து வச்சிருக்கேன்னு இப்போ தாண்டா தெரிஞ்சுகிட்டேன்” என்றார் அலுப்பாக.
அவனோ கண்டு கொள்ளாமல் வாசலை நோக்கி நடந்தவன் “ரொம்ப யோசிக்காம மாத்திரையை போட்டுக்கிட்டு நிம்மதியா படுங்க” என்று விட்டு வெளியேறினான்.
கனகாவின் பார்வை பூஜை அறையை நோக்க, அங்கே முருகன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
“என்னை சிக்க வைக்க முயற்சி பண்ணின இல்ல. இப்போ தெரியுதா உன் பிள்ளையோட பவுசு. நான் உஷாராகிட்டேன்” என்று கை கொட்டி சிரித்தார்.
தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார் கனகா.
அறிவோ அன்னையுடன் நடந்த பேச்சு வார்த்தையை மறந்து விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டான். ஓபி நோயாளிகளை பார்ப்பதற்காக தன்னரைக்குச் சென்றமர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.
அன்று நிறைய பேர் வந்திருந்தனர். அவன் ஒரு ஆர்த்தோ டாக்டர் என்பதால் வயதானவர்கள் வந்து காத்திருந்தனர். ஒவ்வொருவரையும் பொறுமையாக பார்த்து அவர்களுக்கு வேண்டிய தீர்வை அளித்துக் கொண்டிருந்தான்.
அதுவொரு தனியார் மருத்துவமனை. அங்கு அவனைப் போன்று நிறைய மருத்துவர்கள் பல துறையை சார்ந்தவர்கள் வந்து நோயாளிகளை பார்ப்பார்கள். காலை நேரமாதலால் மிக பிசியாக இருந்தது. அப்போது மருத்துவமனை வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து நிர்மலா நொண்டிக் கொண்டே இறங்கினார். அவரின் பின்னே பர்சை கையில் எடுத்தபடி இறங்கினாள் மாயா.
இருநூறு ரூபாயை எடுத்து ஆட்டோக்காரரிடம் கொடுக்க “இன்னா கொடுக்கிற? மேல ஒரு நூறு குடு”.
அவ்வளவு தான் காலையில் வண்டியை பிடித்ததில் இருந்து அவன் சொன்னவை தான் பேசியவை என்று ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து பேச ஆரம்பித்தாள். அவனும் விடாது கத்த, கால் வலியுடன் நின்று கொண்டிருந்த நிர்மலா “நான் போறேன் நீ முடிச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மருத்துவமனைக்குள் சென்றார்.
ரிஷப்நிஷ்டிடம் “மூட்டு வலி டாக்டரை பார்க்கணும்?” என்றார்.
“புரியல மேடம்”
“அதான் மா மூட்டு வலிக்கு பார்க்கிறவர். அவரை பார்க்கணும்”.
“ஒ...அறிவு சாரை பார்க்கனுமா? அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கீங்களா?”
“ஏன்மா அறிவு இருக்கான்னு பார்க்கிறதுக்கு எல்லாம் அப்பாயின்மென்ட் வாங்கனுமா என்ன? நானே சொல்லிடுவேனே?”
“மேடம்!” என்று பல்லைக் கடித்தவள் “நான் டாக்டர் அறிவை சொன்னேன்? நீங்க அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தா பேரை சொல்லுங்க”.
அந்த பெண்ணை ஒரு மாதிரியாக பார்த்து “நான் எதுக்கு சொல்லணும்? அது தான் நீயே அவர் பேரு அறிவுன்னு சொல்லிட்டியே”.
ஓய்ந்து போனவள் “உங்க பேர் என்னன்னு கேட்டேன் மேடம்” என்றாள்.
“ஒ...சரியான மந்தமான பொண்ணா இருக்கம்மா. இதை முதலிலேயே சொல்றதுக்கென்ன.என் பேரு நிர்மலா”.
அவசரமாக தேடி அவரின் டோக்கன் நம்பரை கொடுத்து “இங்கே இருந்து நேரா போய் வலது பக்கம் திரும்பினா ரெண்டாவது ரூம். உங்க நம்பர் முப்பத்து ஒன்பது”.
“வழி சரியா தானே சொல்லி இருக்க? அப்புறம் இந்த முப்பத்து ஒன்பது நம்பர் எனக்கு ராசியில்லை. வேற நம்பர் கொடும்மா”.
மனதுக்குள் ‘ஆத்தாடி! என்ன இப்படி ஒரு கேசுகிட்ட சிக்கி இருக்க’ என்றெண்ணிக் கொண்டு “மேடம்! நம்பரெல்லாம் மாத்த முடியாது. சீக்கிரம் போங்க டாக்டர் பேஷண்டை பார்த்திட்டு கிளம்பிடுவார்” என்று விரட்டினாள்.
அவள் அப்படி சொன்னதும் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு வாசலை ஒரு பார்வை பார்க்க, அங்கே மாயாவோ இன்னமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அதை பார்த்து தலையசைத்துக் கொண்டே “இவ இப்போதைக்கு வர மாட்டா” என்று சொல்லியபடி டாக்டரை பார்க்க அவரின் அறையை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.
அங்கே சென்று பார்த்ததும் அவருக்கு முன்னே பத்து பேர் அமர்ந்திருந்தனர். எரிச்சலுடன் வரிசையில் சென்றமர்ந்து கொண்டார். ஒவ்வொருவராக உள்ளே சென்று வரவும் வாசலை பார்ப்பதும், டாக்டரின் அறையை பார்ப்பதுமாக இருந்தார்.
சற்று நேரத்திற்கு பிறகு மாயா அவர் அருகே வந்தமர்ந்தாள்.
“என்னடி ஆச்சு?”
“உன் காசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டான் மா”.
அவளை பார்த்து முறைத்தவர் “எப்படித்தான் இப்படியொரு வாயோ?” என்றவர் மனதிற்குள் ‘இவளை கட்டிக்கப் போறவன் சாதுவா இருக்கணும். இல்லேன்னா அவன் பாடு திண்டாட்டம் தான்’ என்றெண்ணிக் கொண்டார்.