யாயும் ஞாயும் – ஷெண்பா
“என்ன…?” என்று விழிகள் தெறித்து விடுவதைப் போலப் பார்த்தாள் நந்தினி.
“இந்தக் குழந்தையைக் கலைச்சிடலாம் நந்து” என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்ன மாதேஷை தயக்கமும், அச்சமுமாக நோக்கினாள்.
அவளது உடல் மெலிதாக நடுக்கியது. கண்ணோரங்களில் நீர் கோர்க்க அமர்ந்திருந்தவளை, மாதேஷ் இமைக்காமல் பார்த்தான்.
‘பொது இடம் என்பதை மறந்து, தன்னை மீறி அழுதுவிடுவோம்’ என்று அவளுக்குத் தோன்ற கண்களைச் சிமிட்டி, மூக்கை உறிஞ்சி தன்னைச் சமாளித்தாள். ஹோட்டலின் பணியாளன் பில்லைக் கொண்டுவந்து வைக்கும் வரை, இருவருக்கிடையிலும் கனத்த மௌனம் நிலவியது.
“நந்து! கிளம்பலாம்” என்று அவன் உரைக்க, இயந்திரப் பாவையாக அவனைத் தொடர்ந்தாள். செல்லும் வழியிலும், இருவரிடமும் ஆழ்ந்த அமைதி. காலையில் இருந்த சந்தோஷமெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. ‘மாதேஷ் சொன்னதை அறிந்தால், இரு குடும்பத்தினரின் சந்தோஷமும் என்னவாகும்? தங்களது வாழ்க்கையைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கும் அவர்களது நிம்மதியையும், ஆசைகளையும் சுக்கு நூறாக உடைத்துப் போடுமல்லவா!’ என்று எண்ணியவளுக்கு தலை வலித்தது. வீட்டு வாசலில் அவன் பைக்கை நிறுத்த, சாவி கொடுத்த பொம்மையைப் போல கைப்பையிலிருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறந்தாள். வீடு வெறிச்சென்றிருந்தது.
பெரியவர்கள் இருவரும் ஒரு திருமணத்திற்காக ஊருக்குச் சென்றிருந்தனர். கஷ்டத்திலும் ஒரு நல்லதாக, அவர்கள் இல்லாததே இந்த நேரத்திற்குச் சற்று ஆறுதலாக இருந்தது அவளுக்கு. உடையை மாற்றிக் கொண்டு வந்தவள் சோஃபாவில் அமர, மாதேஷ் குளியலறைக்குள் நுழைந்தான். அவன் திரும்பி வந்தபோது அவள் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.
அவளருகில் அமர்ந்து தலையை வருடிக் கொடுத்தவன், “குழம்பிக்காதே நந்து! லைஃப்ல நல்ல சான்ஸ் எப்போதும் கிடைக்காது” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, “எதையும் யோசிக்காம தூங்கு. காலைல பேசிக்குவோம்” என்று மென்மையாக உரைத்தவன், தனது லேப்டாப்புடன் சோஃபாவில் சென்று அமர்ந்தான்.
மாதேஷ் தனது முடிவில் உறுதியாக இருந்தானென்றால்; ‘இது சரியா?’ என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள் நந்தினி.
நந்தினி, மாதேஷ் இருவருமே வீட்டிற்கு ஒரே வாரிசு. இரண்டு குடும்பங்களுமே வசதியிலும் குறைவில்லை. இளையவர்களும் படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்று அனைத்திலுமே சமமாகவே இருந்தனர். நந்தினியின் தூரத்து உறவினர் ஒருவரின் மூலமாகத் தான், மாதேஷின் ஜாதகம் அவர்கள் கைக்கு வந்தது. ஒன்பது பொருத்தங்கள் இருந்தன. அவர்களது குடும்பத்தைப் பற்றிய தகவல்களும் உவப்பானதாகவே இருக்க, அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திருமண நாள் நிச்சயமானதுமே, “திருமணத்தை ஆடம்பரமில்லாமல் எளிமையாக கோவிலில் நடத்திக் கொள்ளலாம். அந்தச் செலவும் மிச்சம். ஏதேனும் முதியோர் இல்லத்தில் விருந்து கொடுக்கலாம்” என்று மாதேஷ் கூற, பெரியவர்கள் யோசனையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“நந்தினியோட கல்யாணத்தை கிராண்டா நடத்தணும்ன்னு நீங்க நினைச்சிருக்கலாம். பட், வீண் ஆடம்பரம் எதுக்கு? இந்த மாதிரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடத்தினா அவங்களுக்கு ஒரு சேஞ்சா இருக்கும்” என்றான் இதமான குரலில்.
சற்று யோசித்த நந்தினியின் தந்தை, “எங்களுக்கு ஒரே குழந்தை. அவளோட கல்யாணத்தை விமர்சையாக நடத்தணும்ன்னு ஆசை இருக்கு. நீங்க சொல்றது நல்ல விஷயம்னாலும், இந்த ஒரு முறை இப்படிச் செய்றதால என்ன ஆகிடப் போகுது?” என்று கேட்டார்.
“இது மட்டும் இல்லங்க. என் பையன் ரெண்டு ஏழைக் குழந்தைகளோட முழு படிப்புச் செலவையும் ஏத்துட்டு இருக்கான்” என்று பெருமிதத்துடன் சொன்ன அவனது தந்தை, “எங்க பையனோட முடிவுதான் எங்க முடிவும். நீங்க யோசித்துச் சொல்றதுனாலும் சொல்லுங்க” என்றார் இறங்கிய குரலில்.
சட்டென இடைபுகுந்த நந்தினியின் அன்னை, “இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லங்க சம்மந்தி! நந்தினியும் பிளைண்ட் ஸ்கூல்க்கு எக்ஸாம் டைம்ல ஸ்க்ரைபரா போய் வருவா” என்று அவர்கள் அறியாத மகளின் குணத்தைப் பெருமிதத்துடன் சொன்னவர், “மாப்பிள்ளையோட விருப்பப்படியே கல்யாணத்தைப் பண்ணிடலாம். எல்லோரையும் கூப்பிட்டு ரிசப்ஷன் வச்சிடலாம். கல்யாணம் வொர்க்கிங் டேல வர்றதால, நெருங்கின சொந்தம் தவிர மத்தவங்க ரிசப்ஷனுக்குத் தான் வருவாங்க” என்றார் சமாளிப்பாக.
புன்னகைத்த மாதேஷின் பெற்றோர், “சரிங்க. அப்படியே பண்ணிடலாம்” என்றனர். திருமண நாளை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் மாதேஷின் பெற்றோர் நந்தினிக்கு நகை வாங்க வேண்டும் என்று அவளையும் அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.
“அத்தை! ஏற்கெனவே அம்மா எனக்காக ஏகப்பட்ட நகை சேர்த்து வச்சிருக்காங்க. மேலும், இப்போ எதுக்குத் தங்கத்துல இன்வெஸ்ட் பண்றது? அதுக்குப் பதிலா, ஓ.எம்.ஆர்ல நிறைய வில்லாஸ் சேல்ஸ்க்கு ரெடியா இருக்கு. உங்களுக்கு ஓகேன்னா, அந்தப் பணத்தை வீட்டுக்கு இன்வெஸ்ட் பண்ணலாமே. மீதி அமௌண்டை நானும், மாதேஷும் ஷேர் பண்ணிக்கிறோம்” என்றாள்.
மாதேஷின் அன்னைக்கு, மருமகளின் சாமர்த்தியத்தை எண்ணி உள்ளம் பூரித்தது. தன் மகனிடம் சொல்லிச் சொல்லிப் பெருமைபட்டுக் கொண்டார். இப்படியாக ஆரம்பம் முதலே இருவரும், தனது மாமியார் வீட்டின் செல்லப் பிள்ளைகளாகவே ஆகிவிட்டனர்.
பெரியோர்கள் ஆசியுடன், சீரும் சிறப்புமாக உறவற்ற அம்மூத்தோர்களின் ஆசியுடனும், அன்பான சுற்றங்களின் கலகலப்புடனும் அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. அழகான இல்லறமும், அன்பான உறவுகளுமாக தங்கள் வாழ்க்கையைத் துவங்கினர். மறுவீடு, உறவினர்களின் விருந்து, உபசாரம் என்று முதல் பத்து நாட்கள் சென்றன. தனது வாழ்க்கையின் தேன்பாகாகத் தித்திக்கச் செய்தவளை, தேன்நிலவு கொண்டாட மாலத் தீவிற்கு அழைத்துச் சென்றான் மாதேஷ்.
பெரியோர்களால் நிச்சயித்த திருமணமாக இருந்தபோதும், இருவருக்கும் மனப் பொருத்தத்துடன், குணப் பொருத்தமும் இணைந்திருந்ததில் வாழ்க்கை அமுதமாக இருந்தது. ஒரு மாதத்திற்குப் பின்னர், வேலை, குடும்பம் என்று இருவரும் இயல்பு வாழ்க்கையில் தங்களைப் பொருத்திக் கொண்டனர். பிறந்த வீட்டின் சீராட்டலும், புகுந்த வீட்டின் அரவணைப்புமாக அவர்களது வாழ்க்கை மெல்லிய நீரோடையாகவே ததும்பிச் சென்றது.
“என்ன…?” என்று விழிகள் தெறித்து விடுவதைப் போலப் பார்த்தாள் நந்தினி.
“இந்தக் குழந்தையைக் கலைச்சிடலாம் நந்து” என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்ன மாதேஷை தயக்கமும், அச்சமுமாக நோக்கினாள்.
அவளது உடல் மெலிதாக நடுக்கியது. கண்ணோரங்களில் நீர் கோர்க்க அமர்ந்திருந்தவளை, மாதேஷ் இமைக்காமல் பார்த்தான்.
‘பொது இடம் என்பதை மறந்து, தன்னை மீறி அழுதுவிடுவோம்’ என்று அவளுக்குத் தோன்ற கண்களைச் சிமிட்டி, மூக்கை உறிஞ்சி தன்னைச் சமாளித்தாள். ஹோட்டலின் பணியாளன் பில்லைக் கொண்டுவந்து வைக்கும் வரை, இருவருக்கிடையிலும் கனத்த மௌனம் நிலவியது.
“நந்து! கிளம்பலாம்” என்று அவன் உரைக்க, இயந்திரப் பாவையாக அவனைத் தொடர்ந்தாள். செல்லும் வழியிலும், இருவரிடமும் ஆழ்ந்த அமைதி. காலையில் இருந்த சந்தோஷமெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. ‘மாதேஷ் சொன்னதை அறிந்தால், இரு குடும்பத்தினரின் சந்தோஷமும் என்னவாகும்? தங்களது வாழ்க்கையைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கும் அவர்களது நிம்மதியையும், ஆசைகளையும் சுக்கு நூறாக உடைத்துப் போடுமல்லவா!’ என்று எண்ணியவளுக்கு தலை வலித்தது. வீட்டு வாசலில் அவன் பைக்கை நிறுத்த, சாவி கொடுத்த பொம்மையைப் போல கைப்பையிலிருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறந்தாள். வீடு வெறிச்சென்றிருந்தது.
பெரியவர்கள் இருவரும் ஒரு திருமணத்திற்காக ஊருக்குச் சென்றிருந்தனர். கஷ்டத்திலும் ஒரு நல்லதாக, அவர்கள் இல்லாததே இந்த நேரத்திற்குச் சற்று ஆறுதலாக இருந்தது அவளுக்கு. உடையை மாற்றிக் கொண்டு வந்தவள் சோஃபாவில் அமர, மாதேஷ் குளியலறைக்குள் நுழைந்தான். அவன் திரும்பி வந்தபோது அவள் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.
அவளருகில் அமர்ந்து தலையை வருடிக் கொடுத்தவன், “குழம்பிக்காதே நந்து! லைஃப்ல நல்ல சான்ஸ் எப்போதும் கிடைக்காது” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, “எதையும் யோசிக்காம தூங்கு. காலைல பேசிக்குவோம்” என்று மென்மையாக உரைத்தவன், தனது லேப்டாப்புடன் சோஃபாவில் சென்று அமர்ந்தான்.
மாதேஷ் தனது முடிவில் உறுதியாக இருந்தானென்றால்; ‘இது சரியா?’ என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள் நந்தினி.
நந்தினி, மாதேஷ் இருவருமே வீட்டிற்கு ஒரே வாரிசு. இரண்டு குடும்பங்களுமே வசதியிலும் குறைவில்லை. இளையவர்களும் படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்று அனைத்திலுமே சமமாகவே இருந்தனர். நந்தினியின் தூரத்து உறவினர் ஒருவரின் மூலமாகத் தான், மாதேஷின் ஜாதகம் அவர்கள் கைக்கு வந்தது. ஒன்பது பொருத்தங்கள் இருந்தன. அவர்களது குடும்பத்தைப் பற்றிய தகவல்களும் உவப்பானதாகவே இருக்க, அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திருமண நாள் நிச்சயமானதுமே, “திருமணத்தை ஆடம்பரமில்லாமல் எளிமையாக கோவிலில் நடத்திக் கொள்ளலாம். அந்தச் செலவும் மிச்சம். ஏதேனும் முதியோர் இல்லத்தில் விருந்து கொடுக்கலாம்” என்று மாதேஷ் கூற, பெரியவர்கள் யோசனையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“நந்தினியோட கல்யாணத்தை கிராண்டா நடத்தணும்ன்னு நீங்க நினைச்சிருக்கலாம். பட், வீண் ஆடம்பரம் எதுக்கு? இந்த மாதிரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடத்தினா அவங்களுக்கு ஒரு சேஞ்சா இருக்கும்” என்றான் இதமான குரலில்.
சற்று யோசித்த நந்தினியின் தந்தை, “எங்களுக்கு ஒரே குழந்தை. அவளோட கல்யாணத்தை விமர்சையாக நடத்தணும்ன்னு ஆசை இருக்கு. நீங்க சொல்றது நல்ல விஷயம்னாலும், இந்த ஒரு முறை இப்படிச் செய்றதால என்ன ஆகிடப் போகுது?” என்று கேட்டார்.
“இது மட்டும் இல்லங்க. என் பையன் ரெண்டு ஏழைக் குழந்தைகளோட முழு படிப்புச் செலவையும் ஏத்துட்டு இருக்கான்” என்று பெருமிதத்துடன் சொன்ன அவனது தந்தை, “எங்க பையனோட முடிவுதான் எங்க முடிவும். நீங்க யோசித்துச் சொல்றதுனாலும் சொல்லுங்க” என்றார் இறங்கிய குரலில்.
சட்டென இடைபுகுந்த நந்தினியின் அன்னை, “இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லங்க சம்மந்தி! நந்தினியும் பிளைண்ட் ஸ்கூல்க்கு எக்ஸாம் டைம்ல ஸ்க்ரைபரா போய் வருவா” என்று அவர்கள் அறியாத மகளின் குணத்தைப் பெருமிதத்துடன் சொன்னவர், “மாப்பிள்ளையோட விருப்பப்படியே கல்யாணத்தைப் பண்ணிடலாம். எல்லோரையும் கூப்பிட்டு ரிசப்ஷன் வச்சிடலாம். கல்யாணம் வொர்க்கிங் டேல வர்றதால, நெருங்கின சொந்தம் தவிர மத்தவங்க ரிசப்ஷனுக்குத் தான் வருவாங்க” என்றார் சமாளிப்பாக.
புன்னகைத்த மாதேஷின் பெற்றோர், “சரிங்க. அப்படியே பண்ணிடலாம்” என்றனர். திருமண நாளை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் மாதேஷின் பெற்றோர் நந்தினிக்கு நகை வாங்க வேண்டும் என்று அவளையும் அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.
“அத்தை! ஏற்கெனவே அம்மா எனக்காக ஏகப்பட்ட நகை சேர்த்து வச்சிருக்காங்க. மேலும், இப்போ எதுக்குத் தங்கத்துல இன்வெஸ்ட் பண்றது? அதுக்குப் பதிலா, ஓ.எம்.ஆர்ல நிறைய வில்லாஸ் சேல்ஸ்க்கு ரெடியா இருக்கு. உங்களுக்கு ஓகேன்னா, அந்தப் பணத்தை வீட்டுக்கு இன்வெஸ்ட் பண்ணலாமே. மீதி அமௌண்டை நானும், மாதேஷும் ஷேர் பண்ணிக்கிறோம்” என்றாள்.
மாதேஷின் அன்னைக்கு, மருமகளின் சாமர்த்தியத்தை எண்ணி உள்ளம் பூரித்தது. தன் மகனிடம் சொல்லிச் சொல்லிப் பெருமைபட்டுக் கொண்டார். இப்படியாக ஆரம்பம் முதலே இருவரும், தனது மாமியார் வீட்டின் செல்லப் பிள்ளைகளாகவே ஆகிவிட்டனர்.
பெரியோர்கள் ஆசியுடன், சீரும் சிறப்புமாக உறவற்ற அம்மூத்தோர்களின் ஆசியுடனும், அன்பான சுற்றங்களின் கலகலப்புடனும் அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. அழகான இல்லறமும், அன்பான உறவுகளுமாக தங்கள் வாழ்க்கையைத் துவங்கினர். மறுவீடு, உறவினர்களின் விருந்து, உபசாரம் என்று முதல் பத்து நாட்கள் சென்றன. தனது வாழ்க்கையின் தேன்பாகாகத் தித்திக்கச் செய்தவளை, தேன்நிலவு கொண்டாட மாலத் தீவிற்கு அழைத்துச் சென்றான் மாதேஷ்.
பெரியோர்களால் நிச்சயித்த திருமணமாக இருந்தபோதும், இருவருக்கும் மனப் பொருத்தத்துடன், குணப் பொருத்தமும் இணைந்திருந்ததில் வாழ்க்கை அமுதமாக இருந்தது. ஒரு மாதத்திற்குப் பின்னர், வேலை, குடும்பம் என்று இருவரும் இயல்பு வாழ்க்கையில் தங்களைப் பொருத்திக் கொண்டனர். பிறந்த வீட்டின் சீராட்டலும், புகுந்த வீட்டின் அரவணைப்புமாக அவர்களது வாழ்க்கை மெல்லிய நீரோடையாகவே ததும்பிச் சென்றது.
Last edited: