ஏனோ எத்தனை பெண்களிலும் கண்டுக்கொள்ளாத ஒரு உணர்வை அவளறியாமல் அவனுக்கு அளித்துக் கொண்டிருப்பவள், இன்றும் அதேப் போல் அவன் கண்களுக்கு அழகிய சுடிதாரில் ஒப்பனையற்ற முகத்துடன் காட்சியளிக்க, அவனுக்கு ஏதோ ஒன்று வித்தியாசமாகப்பட அவளையே உற்று நோக்கினான்.
அவனின் பார்வை அவளையே சுற்றி வருவதைக் கண்டுக் கொண்டவள், ஒருவித எரிச்சலை முகத்தில் காட்டி, அவன்புறம் திரும்பாமல் அவனை கடந்து சென்றாள்.
கார்த்திக், அவளின் முதுகுபுறம் பரந்து விரிந்திருந்த கூந்தல், அவள் நடைக்கேற்ப அசைந்தாட, அவளை மட்டுமே பார்த்திருந்தான். அப்போது அவள் எதிரே ஒருவன் வர, அவனிடம் தன் கையிலிருந்த சாவியை நீட்டி, உரிய இடத்தில் காரை நிறுத்துமாறு சொல்லிவிட்டு, மேலும் நடந்து அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையை அடைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்ததும் வெளியே இருந்த ஒரு சோஃபாவில் அமர்ந்தவன், தனக்குள் சிரித்து, தன் வாலட்டில் இருந்த ஐபாடை எடுத்துப் பார்த்தான்.
ஒரு சிலருக்கு சிறு வயது பழக்கம் விடாமல் இருப்பது போல், இவளுக்கு கைக்கு அடக்கமான எந்த பொருளையும், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து சுழற்றும் பழக்கம் போலும்.
லிஃப்ட்டில் வரும்போதே கார் சாவியை இரு விரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றியதை தான் கார்த்திக் இமைக் கொட்டாமல் ஆச்சரியமாகப் பார்த்தான். பின் நடக்கும் போதும் அவள் அப்படியே செய்துக் கொண்டிருக்க, அவளின் கூந்தலையும், துப்பட்டாவிற்கு பின் பண்ணிய ஸ்டைலையும் வைத்து, சைட் அடிப்பதில் பி.எச்.டி படிப்பவன், அவள் தான் அன்று இரயிலில் பார்த்தவள் என்றும் கண்டுக் கொண்டான்.
இப்போது ஐபாடை எடுத்து,
‘உன் ஐபாட் என்னிடம் வந்தது மாதிரியே, நீயும் என்னிடம் வருவ. வர வைப்பேன்’ என்று தனக்குள் சொல்லிய போது, இன்னொருவன் அவளுடன் வந்தது சரியான நேரத்திற்கு ஞாபகத்திற்கு வந்து ஒரு இனம் புரியா வலியை தந்தது.
‘என் செல்லத்துடன் வந்தவன் யாராக இருக்கும்’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தப் போது,
“ஏப்பா கார்த்திக்!” என்று காந்திமதி அழைத்தது, அவன் காதை சென்றடையவே இல்லை.
“ஏங்க! எப்பவும் ரேடியோவில் பேசி, பேசி இந்த வயசிலேயே அவனுக்கும் காது கேட்கலேயேங்க. எப்படீங்க பொண்ணு வீட்ல கேட்கிறது?” என்று கவலையாக, மாறனிடம் கேட்க,
“என்ன பொண்ணு வீட்லயா?” என்று அடித்து பிடித்து அவர்கள் புறம் திரும்பினான்.
“காது கேட்குதாப்பா? உனக்கும் சேர்த்து அப்பாயின்ட்மென்ட் கேட்கலாம் நினைச்சேன்” என்று காந்திமதி கேட்க, மாறன் நமட்டு சிரிப்பை வெளிப்படுத்த, இருவரையும் முறைத்தான்.
“என்னை டேமேஜ் பண்ண வெளியிலிருந்து யாரும் வர வேணாம்” என்று கார்த்திக் புலம்ப,
“நம்மதான் முதலில் போகணும்டா” என்று மாறன் மௌனிகாவின் அறையைக் காட்ட,
‘அவ்வளவு தானா’ என்பது போல் பார்த்தவன்,
“நான் வரல. நீங்க எல்லாம் கரெக்டா கேட்டுட்டு வந்துடுங்க” என்று மாறனுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்க, அவனை பெற்றவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அங்கிருந்த நர்ஸ் மீண்டும் காந்திமதி பெயர் சொல்லி அழைக்கவும்,
“கூப்பிடுறாங்க இல்ல போங்க” என்று ஒரு அதட்டலுடன் அவர்களை உள்ளே அனுப்பினான்.
‘என்னவாயிற்று இவனுக்கு?’ ஏனென்றால் காலையில் நிமிடத்திற்கு ஒரு சட்டையை, அவன் மாற்றி, மாற்றி துவைக்கும் கூடையில் தூக்கி எறிந்ததைப் பார்த்து, வேலை செய்யும் பெண்ணே சண்டைக்கு வந்து விட்டாள்.
பின் கடைசியாக இந்த சட்டையை தேர்வு செய்து, இவர்களையும் ஒரு வழி ஆக்கி அழைத்து வந்திருந்தான். இப்போது வரவில்லையென்றால்? கடைசி நொடி கூட திரும்பிப் பார்த்து ஒரு வித பயத்துடன், அவன் ஒப்புதலைப் பெற்று தான் உள்ளே சென்றனர்.
ஒரு சிறு தலையசைப்புடன் கூடிய புன்னகையுடன் மௌனிகா அவர்களை அழைக்க, தன் மகன் விரும்பும் பெண் என்பதாலோ என்னவோ, காந்திமதியும் முதல்முறையாக அவளை ரசனையுடன் பார்த்தார்.
அவரைப் பரிசோதித்துக் கொண்டே, ‘இவ்வளவு தூரம் வந்தவன் ஏன் உள்ளே வரவில்லை’ என்றெண்ணியபடியே, இருமுறை வாயிலைப் பார்த்து விட்டாள். அது பெரியவர்கள் கண்களுக்கும் தப்பவில்லை. தங்களுக்குள் அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.
கோகிலா
அவனின் பார்வை அவளையே சுற்றி வருவதைக் கண்டுக் கொண்டவள், ஒருவித எரிச்சலை முகத்தில் காட்டி, அவன்புறம் திரும்பாமல் அவனை கடந்து சென்றாள்.
கார்த்திக், அவளின் முதுகுபுறம் பரந்து விரிந்திருந்த கூந்தல், அவள் நடைக்கேற்ப அசைந்தாட, அவளை மட்டுமே பார்த்திருந்தான். அப்போது அவள் எதிரே ஒருவன் வர, அவனிடம் தன் கையிலிருந்த சாவியை நீட்டி, உரிய இடத்தில் காரை நிறுத்துமாறு சொல்லிவிட்டு, மேலும் நடந்து அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையை அடைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்ததும் வெளியே இருந்த ஒரு சோஃபாவில் அமர்ந்தவன், தனக்குள் சிரித்து, தன் வாலட்டில் இருந்த ஐபாடை எடுத்துப் பார்த்தான்.
ஒரு சிலருக்கு சிறு வயது பழக்கம் விடாமல் இருப்பது போல், இவளுக்கு கைக்கு அடக்கமான எந்த பொருளையும், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து சுழற்றும் பழக்கம் போலும்.
லிஃப்ட்டில் வரும்போதே கார் சாவியை இரு விரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றியதை தான் கார்த்திக் இமைக் கொட்டாமல் ஆச்சரியமாகப் பார்த்தான். பின் நடக்கும் போதும் அவள் அப்படியே செய்துக் கொண்டிருக்க, அவளின் கூந்தலையும், துப்பட்டாவிற்கு பின் பண்ணிய ஸ்டைலையும் வைத்து, சைட் அடிப்பதில் பி.எச்.டி படிப்பவன், அவள் தான் அன்று இரயிலில் பார்த்தவள் என்றும் கண்டுக் கொண்டான்.
இப்போது ஐபாடை எடுத்து,
‘உன் ஐபாட் என்னிடம் வந்தது மாதிரியே, நீயும் என்னிடம் வருவ. வர வைப்பேன்’ என்று தனக்குள் சொல்லிய போது, இன்னொருவன் அவளுடன் வந்தது சரியான நேரத்திற்கு ஞாபகத்திற்கு வந்து ஒரு இனம் புரியா வலியை தந்தது.
‘என் செல்லத்துடன் வந்தவன் யாராக இருக்கும்’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தப் போது,
“ஏப்பா கார்த்திக்!” என்று காந்திமதி அழைத்தது, அவன் காதை சென்றடையவே இல்லை.
“ஏங்க! எப்பவும் ரேடியோவில் பேசி, பேசி இந்த வயசிலேயே அவனுக்கும் காது கேட்கலேயேங்க. எப்படீங்க பொண்ணு வீட்ல கேட்கிறது?” என்று கவலையாக, மாறனிடம் கேட்க,
“என்ன பொண்ணு வீட்லயா?” என்று அடித்து பிடித்து அவர்கள் புறம் திரும்பினான்.
“காது கேட்குதாப்பா? உனக்கும் சேர்த்து அப்பாயின்ட்மென்ட் கேட்கலாம் நினைச்சேன்” என்று காந்திமதி கேட்க, மாறன் நமட்டு சிரிப்பை வெளிப்படுத்த, இருவரையும் முறைத்தான்.
“என்னை டேமேஜ் பண்ண வெளியிலிருந்து யாரும் வர வேணாம்” என்று கார்த்திக் புலம்ப,
“நம்மதான் முதலில் போகணும்டா” என்று மாறன் மௌனிகாவின் அறையைக் காட்ட,
‘அவ்வளவு தானா’ என்பது போல் பார்த்தவன்,
“நான் வரல. நீங்க எல்லாம் கரெக்டா கேட்டுட்டு வந்துடுங்க” என்று மாறனுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்க, அவனை பெற்றவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அங்கிருந்த நர்ஸ் மீண்டும் காந்திமதி பெயர் சொல்லி அழைக்கவும்,
“கூப்பிடுறாங்க இல்ல போங்க” என்று ஒரு அதட்டலுடன் அவர்களை உள்ளே அனுப்பினான்.
‘என்னவாயிற்று இவனுக்கு?’ ஏனென்றால் காலையில் நிமிடத்திற்கு ஒரு சட்டையை, அவன் மாற்றி, மாற்றி துவைக்கும் கூடையில் தூக்கி எறிந்ததைப் பார்த்து, வேலை செய்யும் பெண்ணே சண்டைக்கு வந்து விட்டாள்.
பின் கடைசியாக இந்த சட்டையை தேர்வு செய்து, இவர்களையும் ஒரு வழி ஆக்கி அழைத்து வந்திருந்தான். இப்போது வரவில்லையென்றால்? கடைசி நொடி கூட திரும்பிப் பார்த்து ஒரு வித பயத்துடன், அவன் ஒப்புதலைப் பெற்று தான் உள்ளே சென்றனர்.
ஒரு சிறு தலையசைப்புடன் கூடிய புன்னகையுடன் மௌனிகா அவர்களை அழைக்க, தன் மகன் விரும்பும் பெண் என்பதாலோ என்னவோ, காந்திமதியும் முதல்முறையாக அவளை ரசனையுடன் பார்த்தார்.
அவரைப் பரிசோதித்துக் கொண்டே, ‘இவ்வளவு தூரம் வந்தவன் ஏன் உள்ளே வரவில்லை’ என்றெண்ணியபடியே, இருமுறை வாயிலைப் பார்த்து விட்டாள். அது பெரியவர்கள் கண்களுக்கும் தப்பவில்லை. தங்களுக்குள் அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.
கோகிலா