அத்தியாயம் 7:
மாலை நான்கு மணிக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு வந்திருந்த ஏதோ ஒரு துறைச் சார்ந்த விருந்தினருடன் பேசி சிரித்து, கலாய்த்து, தானும் ப்ல்ப் வாங்கி, நிசப்தமான அந்த அறையையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தவன், ஸ்டேஷன் ஹெட் கருணாகரன் உள்ளே வந்து நின்றதும் நிமிர்ந்துப் பார்த்து சைகையாலே என்னவென்று இயம்பினான்.
அவர் தலையசைத்து விரலை மட்டும் உயர்த்தினார். ஆனால் அவர் முகம் சரியில்லை என்பதைக் கண்டுக் கொண்டவன் அந்த நிகழ்ச்சி முடியும் வரை அமைதிக் காத்தான். பின் விருந்தினரின் கைக்குலுக்கி விடைப் பெற்றவன், அவசரமாக வெளியேற, அங்கே அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருந்த ஓவியாவிடம்,
“ஹே ஓவியா!!! பேச்சுக்கு நடுவுல கொஞ்சம் மூச்சும் விட்டுக்கோ” என்க, மற்ற நேரமாக இருந்தால், அவனை தலையில் கொட்டியோ, திட்டி விட்டோ செல்பவள், அமைதியாகவே உள்ளே நுழைய, ஏதோ சரியில்லையே என்றபடியே வரவேற்பறையைப் பார்த்தவன், அங்கே ஒட்டு மொத்த அலுவலகத்தினரும் கூட்டமாக நிற்க, வேகமாக நடந்தான்.
பள்ளி சீருடையில் இருந்த மாணவி, கையில் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தாள். அவள் அருகே செல்லவே பயந்தபடி அனைவரும் நிற்க, கார்த்திக் கதவை திறக்கவும் அனைவரது பார்வையும் இவன் மேல் விழுந்தது.
கருணாகரன் தான் அவன் கையைப் பிடித்து தன்னருகே இழுத்து, அவன் காதில்,
“இந்த பொண்ணு டெய்லி உன் ப்ரோக்ராம் கேட்பாளாம். உன் வாய்ஸ் கேட்டே லவ் பண்றாளாம். உன்னைப் பார்க்க வந்துருக்கா” என்று இது வழக்கம் தான் என்பது போல் சர்வ சாதாரணமாகச் சொல்ல, கார்த்திக் தான் அதிர்ந்தான்
“வாட்?” என்று சொல்லி விட்டு, முன்னே செல்ல முற்பட, கையைப் பிடித்து
“இப்போ என்ன லவ் பண்ண போறியா? நல்ல வாய்ஸ்க்கு இதுப்போல் ஃபேன்ஸ் இருப்பது நம்ம சேனல்க்கு தான் பெருமை. எல்லார்க்கிட்டேயும் போய் நம்ம லெவல் விட்டு இறங்கி பேசிட்டு இருக்க முடியாது. ஆப்போசிட்ல இருக்க அப்பார்ட்மென்ட்ல டாக்டர்ஸ் யாராவது ஸ்டே பண்ணியிருந்தால் வர சொல்லியிருக்கேன். கவலைப் படாதே. ப்ரஸ் வர வரை கொஞ்சம் அமைதியா இரு” என்றும் சொன்னார். அவரைப் பார்த்து முறைத்தவன்,
“சின்னப் பொண்ணு சார்” என்று சொல்லி விட்டு, அவளை நோக்கி வந்தான்.
“பக்கத்தில் வராதீங்க. கையை கிழிச்சிடுவேன்” என்று கத்தியை நாடிக்கு நேராகப் பிடித்தப்படி அவள் நிற்க,
“உனக்கு என்னை தானே பார்க்கணும். நீ முதலில் கத்தியை கீழே போடு”
“எனக்கு ஆர்ஜே கார்த்திக்கை பார்க்கணும்”
“நான் தான் கார்த்திக்” என்றதும், அவள் முகத்தில் சின்னதாய் ஒரு ஏமாற்றம் பரவ, அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, அவளருகே சென்று சட்டென்று அவள் கையில் இருக்கும் கத்தியைப் பறித்து நொடிக்குள் கத்தியை அடுத்த கைக்கு மாற்றி தூக்கிப் பிடிக்கும் போது, அது அப்போது தான் உள்ளே வந்த தீபக்கின் மேல் பட்டு விட,
“சாரி சாரி” என்றான் வினாடிக்குள் ஏற்பட்ட பதட்டத்தில்.
“நத்திங்” என்று சொன்ன தீபக், அமைதியாகக் கூட்டத்தைப் பார்த்தபடி நிற்க, ஆஃபீஸ் பாய் கருணாகரனிடம் சென்று,
“இவர் டாக்டர்” என்றான்.
“ஹோ” என்றவரிடம் தீபக்கிடம் வந்து, “சாரி டு டிஸ்டர்ப் யு. இந்த பொண்ணு இப்படி பண்ணவும் சேஃப்டிக்காக” என்றார்.
“நோ ப்ராப்ளம்” என்றவன், அந்த பெண்ணையும், கார்த்திக்கையும் பார்த்தான்.
அவளையும் சோஃபாவில் அமரவைத்து தானும் அமர்ந்தவன்,
“என்ன படிக்கிற” என்றான்.
“10த்” என்றதும், கோபம் தலைக்கேற, கருணாகரனை ஒரு பார்வைப் பார்க்க, பார்வையை புரிந்தவர், அங்கிருந்த அனைவரையும் சைகையாலே உள்ளே செல்ல சொன்னார். அனைவரும் திரும்பி திரும்பிப் பார்த்தப்படியே உள்ளே செல்ல, இப்போது தீபக், கருணாகரன் மட்டும் இருந்தனர்.
“பாப்பா 10த் படிக்கிறீங்க. நிறைய படிக்க இருக்குமே. எப்படி உங்களுக்கு டைம் கிடைக்குது”
“வீட்டில் தனியாதானே இருக்கேன்” என்றான் சட்டென.
“ஏன் அம்மா அப்பா?”
“இரண்டு பேரும் வொர்க்கிங். வீட்டுக்கு வரவே 10 ஆகும். 9 மணி வரை பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. அப்புறம் ரொம்ப பயமா இருக்கும். அப்போதான் டிவி, ரேடியோ கேட்க பழகினேன். அப்போதான் உங்க ப்ரோக்ராம் கேட்பேன். ஒரு வருஷமா கேட்காமல் தூங்க மாட்டேன். அப்படியே கேட்டு உங்களை எனக்கு பிடித்து போச்சு. ஒவ்வொரு பாட்டும் எப்போ முடியும்ன்னு காத்திருப்பேன். ஒவ்வொரு பாட்டுக்கு இடையிலும் நீங்கள் பேசும் வரிகள் மெஸ்மரைஸிங்” என்று அவள் உருகி பேச அமைதியாகவே இருந்தனர்.
“நிறைய தடவை கால் பண்ணினேன். யாரும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல. மூன்று தடவை ஸ்கூல் விட்டதும் இங்கே வந்து உங்களை பார்க்க ட்ரை பண்ணேன். அந்த அக்கா உள்ளே விட மாட்டாங்க” என்று ரிஷப்ஷினிஸ்டை சுட்டிக் காட்டியவள், “அதான் சாரி” என்று தெளிவாகச் சொல்லி கத்தியை பேக் ஜிப்பில் போட,
‘இவ்வளவு தெளிவா இருக்கிற பெண்ணை எப்படி கன்வீன்ஸ் செய்வது?’ என்று முற்றிலும் குழம்பினான் கார்த்திக்.
“ஓகே பாப்பா. இனிமேல் என்னைப் பார்க்கணும்ன்னா இங்கே வராதீங்க. வீட்டுக்கு வாங்க. நானும் வீட்டுக்கு வரேன். உங்க அம்மா அப்பா சன்டே வீட்டில் இருப்பாங்க தானே” என்றான். தன் மனதிற்கு பிடித்த ஆர்.ஜே தன் வீட்டிற்கு வருகிறாரா? என்ற ஆர்வத்தில், வேகமாக தலையசைத்தாள்.
“இது என் நம்பர். எப்பொழுது வேண்டுமானாலும் பேசுங்க” என்று தன் விசிட்டிங்க் கார்டை தந்தவன், அவளுடனே வந்து ஆட்டோவில் ஏற்றி விட்டான்.
பின்னால் இருந்து பார்த்தப்படியே வந்த தீபக், கார்த்திக் அருகே வந்ததும், “ஐ அம் தீபக்” என்று கைக்குலுக்க, கார்த்திக்கும் பதிலுக்கு கைக்குலுக்கி, தன்னை அறிமுகப்பட்டுத்திக் கொள்ள,
“ரொம்ப தெளிவான பொண்ணா இருக்கேங்க. எனக்கு தெரிந்த டாக்டரிடம் சஜெஸ்ட் பண்றேன். கவுன்சிலிங் வர சொல்றீங்களா” என்றான்.
மாலை நான்கு மணிக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு வந்திருந்த ஏதோ ஒரு துறைச் சார்ந்த விருந்தினருடன் பேசி சிரித்து, கலாய்த்து, தானும் ப்ல்ப் வாங்கி, நிசப்தமான அந்த அறையையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தவன், ஸ்டேஷன் ஹெட் கருணாகரன் உள்ளே வந்து நின்றதும் நிமிர்ந்துப் பார்த்து சைகையாலே என்னவென்று இயம்பினான்.
அவர் தலையசைத்து விரலை மட்டும் உயர்த்தினார். ஆனால் அவர் முகம் சரியில்லை என்பதைக் கண்டுக் கொண்டவன் அந்த நிகழ்ச்சி முடியும் வரை அமைதிக் காத்தான். பின் விருந்தினரின் கைக்குலுக்கி விடைப் பெற்றவன், அவசரமாக வெளியேற, அங்கே அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருந்த ஓவியாவிடம்,
“ஹே ஓவியா!!! பேச்சுக்கு நடுவுல கொஞ்சம் மூச்சும் விட்டுக்கோ” என்க, மற்ற நேரமாக இருந்தால், அவனை தலையில் கொட்டியோ, திட்டி விட்டோ செல்பவள், அமைதியாகவே உள்ளே நுழைய, ஏதோ சரியில்லையே என்றபடியே வரவேற்பறையைப் பார்த்தவன், அங்கே ஒட்டு மொத்த அலுவலகத்தினரும் கூட்டமாக நிற்க, வேகமாக நடந்தான்.
பள்ளி சீருடையில் இருந்த மாணவி, கையில் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தாள். அவள் அருகே செல்லவே பயந்தபடி அனைவரும் நிற்க, கார்த்திக் கதவை திறக்கவும் அனைவரது பார்வையும் இவன் மேல் விழுந்தது.
கருணாகரன் தான் அவன் கையைப் பிடித்து தன்னருகே இழுத்து, அவன் காதில்,
“இந்த பொண்ணு டெய்லி உன் ப்ரோக்ராம் கேட்பாளாம். உன் வாய்ஸ் கேட்டே லவ் பண்றாளாம். உன்னைப் பார்க்க வந்துருக்கா” என்று இது வழக்கம் தான் என்பது போல் சர்வ சாதாரணமாகச் சொல்ல, கார்த்திக் தான் அதிர்ந்தான்
“வாட்?” என்று சொல்லி விட்டு, முன்னே செல்ல முற்பட, கையைப் பிடித்து
“இப்போ என்ன லவ் பண்ண போறியா? நல்ல வாய்ஸ்க்கு இதுப்போல் ஃபேன்ஸ் இருப்பது நம்ம சேனல்க்கு தான் பெருமை. எல்லார்க்கிட்டேயும் போய் நம்ம லெவல் விட்டு இறங்கி பேசிட்டு இருக்க முடியாது. ஆப்போசிட்ல இருக்க அப்பார்ட்மென்ட்ல டாக்டர்ஸ் யாராவது ஸ்டே பண்ணியிருந்தால் வர சொல்லியிருக்கேன். கவலைப் படாதே. ப்ரஸ் வர வரை கொஞ்சம் அமைதியா இரு” என்றும் சொன்னார். அவரைப் பார்த்து முறைத்தவன்,
“சின்னப் பொண்ணு சார்” என்று சொல்லி விட்டு, அவளை நோக்கி வந்தான்.
“பக்கத்தில் வராதீங்க. கையை கிழிச்சிடுவேன்” என்று கத்தியை நாடிக்கு நேராகப் பிடித்தப்படி அவள் நிற்க,
“உனக்கு என்னை தானே பார்க்கணும். நீ முதலில் கத்தியை கீழே போடு”
“எனக்கு ஆர்ஜே கார்த்திக்கை பார்க்கணும்”
“நான் தான் கார்த்திக்” என்றதும், அவள் முகத்தில் சின்னதாய் ஒரு ஏமாற்றம் பரவ, அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, அவளருகே சென்று சட்டென்று அவள் கையில் இருக்கும் கத்தியைப் பறித்து நொடிக்குள் கத்தியை அடுத்த கைக்கு மாற்றி தூக்கிப் பிடிக்கும் போது, அது அப்போது தான் உள்ளே வந்த தீபக்கின் மேல் பட்டு விட,
“சாரி சாரி” என்றான் வினாடிக்குள் ஏற்பட்ட பதட்டத்தில்.
“நத்திங்” என்று சொன்ன தீபக், அமைதியாகக் கூட்டத்தைப் பார்த்தபடி நிற்க, ஆஃபீஸ் பாய் கருணாகரனிடம் சென்று,
“இவர் டாக்டர்” என்றான்.
“ஹோ” என்றவரிடம் தீபக்கிடம் வந்து, “சாரி டு டிஸ்டர்ப் யு. இந்த பொண்ணு இப்படி பண்ணவும் சேஃப்டிக்காக” என்றார்.
“நோ ப்ராப்ளம்” என்றவன், அந்த பெண்ணையும், கார்த்திக்கையும் பார்த்தான்.
அவளையும் சோஃபாவில் அமரவைத்து தானும் அமர்ந்தவன்,
“என்ன படிக்கிற” என்றான்.
“10த்” என்றதும், கோபம் தலைக்கேற, கருணாகரனை ஒரு பார்வைப் பார்க்க, பார்வையை புரிந்தவர், அங்கிருந்த அனைவரையும் சைகையாலே உள்ளே செல்ல சொன்னார். அனைவரும் திரும்பி திரும்பிப் பார்த்தப்படியே உள்ளே செல்ல, இப்போது தீபக், கருணாகரன் மட்டும் இருந்தனர்.
“பாப்பா 10த் படிக்கிறீங்க. நிறைய படிக்க இருக்குமே. எப்படி உங்களுக்கு டைம் கிடைக்குது”
“வீட்டில் தனியாதானே இருக்கேன்” என்றான் சட்டென.
“ஏன் அம்மா அப்பா?”
“இரண்டு பேரும் வொர்க்கிங். வீட்டுக்கு வரவே 10 ஆகும். 9 மணி வரை பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. அப்புறம் ரொம்ப பயமா இருக்கும். அப்போதான் டிவி, ரேடியோ கேட்க பழகினேன். அப்போதான் உங்க ப்ரோக்ராம் கேட்பேன். ஒரு வருஷமா கேட்காமல் தூங்க மாட்டேன். அப்படியே கேட்டு உங்களை எனக்கு பிடித்து போச்சு. ஒவ்வொரு பாட்டும் எப்போ முடியும்ன்னு காத்திருப்பேன். ஒவ்வொரு பாட்டுக்கு இடையிலும் நீங்கள் பேசும் வரிகள் மெஸ்மரைஸிங்” என்று அவள் உருகி பேச அமைதியாகவே இருந்தனர்.
“நிறைய தடவை கால் பண்ணினேன். யாரும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல. மூன்று தடவை ஸ்கூல் விட்டதும் இங்கே வந்து உங்களை பார்க்க ட்ரை பண்ணேன். அந்த அக்கா உள்ளே விட மாட்டாங்க” என்று ரிஷப்ஷினிஸ்டை சுட்டிக் காட்டியவள், “அதான் சாரி” என்று தெளிவாகச் சொல்லி கத்தியை பேக் ஜிப்பில் போட,
‘இவ்வளவு தெளிவா இருக்கிற பெண்ணை எப்படி கன்வீன்ஸ் செய்வது?’ என்று முற்றிலும் குழம்பினான் கார்த்திக்.
“ஓகே பாப்பா. இனிமேல் என்னைப் பார்க்கணும்ன்னா இங்கே வராதீங்க. வீட்டுக்கு வாங்க. நானும் வீட்டுக்கு வரேன். உங்க அம்மா அப்பா சன்டே வீட்டில் இருப்பாங்க தானே” என்றான். தன் மனதிற்கு பிடித்த ஆர்.ஜே தன் வீட்டிற்கு வருகிறாரா? என்ற ஆர்வத்தில், வேகமாக தலையசைத்தாள்.
“இது என் நம்பர். எப்பொழுது வேண்டுமானாலும் பேசுங்க” என்று தன் விசிட்டிங்க் கார்டை தந்தவன், அவளுடனே வந்து ஆட்டோவில் ஏற்றி விட்டான்.
பின்னால் இருந்து பார்த்தப்படியே வந்த தீபக், கார்த்திக் அருகே வந்ததும், “ஐ அம் தீபக்” என்று கைக்குலுக்க, கார்த்திக்கும் பதிலுக்கு கைக்குலுக்கி, தன்னை அறிமுகப்பட்டுத்திக் கொள்ள,
“ரொம்ப தெளிவான பொண்ணா இருக்கேங்க. எனக்கு தெரிந்த டாக்டரிடம் சஜெஸ்ட் பண்றேன். கவுன்சிலிங் வர சொல்றீங்களா” என்றான்.