அத்தியாயம் – 5
அவளை எப்படியாவது தன்னை திரும்பி பார்க்க வைத்து விட வேண்டும் என்கிற வலுவான எண்ணத்துடனும், உற்சாகத்துடனும் பைக்கை செலுத்த ஆரம்பித்தான்.
தன்னை சுற்றிலும் நடந்து கொண்டிருந்தவைகளை கண்டு கொள்ளாது வழக்கம் போல காதில் மாட்டி இருந்த ஹெட் போனில் இருந்து துள்ளலான பாடல் ஒலிக்க, அவனை அறியாமலே அந்த பாடலை பாடிக் கொண்டு அவளது மருத்துவமனை முன் சென்று நின்றான்.
பைக்கை நிறுத்திவிட்டு, உயரமான கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே சென்றவன் படியில் ஏறும் போது எதிரே வருபவரை கவனியாது நேரே சென்று மோதினான்.
தீபக்கிடம் இருந்து அழைப்பு வந்ததால் அவசரமாக லிப்டில் இருந்து வெளியேறியவள், வேகமாக படியிறங்க, எதிரே வந்தவன் வழியை கொடுக்காது மோதி வைத்தான்.
மோதிய அதிர்வில் கீழே விழப் போனவளின் இடையை பற்றி நிறுத்த முயற்சிதான். அவனது கரம் இடையில் பதிந்ததும் கொதித்து போனவள் “எருமை மாடு மாதிரி வந்து மோதுரீங்களே வெட்கமா இல்ல?” என்று சீறிக் கொண்டே அவனிடமிருந்து விலகினாள்.
அவளது கோபத்தில் சற்று ஜெர்கானவன் “இனம் இனத்தோடு தான் மோதும் மேடம்” என்றான் குறுநகையோடு.
அவளோ அவனிடம் பேச விரும்பாமல் “காது தான் செவிடுனா கண்ணும் குருடு போல இருக்கு” என்று கடித்து துப்பிவிட்டு நகர்ந்தாள்.
சிறிதும் அலட்டிக் கொள்ளாது அவள் வழியை மறித்து “உங்களை தான் பார்க்க வந்திருக்கேன் மிஸ். மௌ..னி..கா” என்றான் கேலியாக.
கண்களில் சீற்றத்துடன் திரும்பியவள் “என்னை எதுக்கு பார்க்கணும்? நீங்க பேஷண்ட்டா?” என்றாள் கடுமையாக.
அவளது கோபத்தை ரசித்தபடி “பேஷண்ட்டா இருந்தா நல்லா தான் இருக்கும். அடிக்கடி பார்க்க வரலாமில்ல” என்றான் .
ஏனோ அவனை பார்த்தாலே அத்தனை எரிச்சலாக இருந்தது அவளுக்கு.
‘ச்சே..சரியான வழிசல் கேஸ்’ என்று முணுமுணுத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.
அதை கேட்டவன் லேசாக முகத்தை சுருக்கிக் கொண்டு கார் கண்ணாடியின் அருகே குனிந்து லேசாக தட்டி அவள் திறந்ததும் “ஹலோ தொமுக மேடம்! ரொம்ப பந்தா பண்ணாதீங்க. முன்ன பின்ன வழிசல் கேசை நீங்க பார்த்ததே இல்ல போல” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு காட்பரி சாகலேட்டை எடுத்து நீட்டினான்.
அவனை முறைத்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தவள் ஜன்னலை மூடத் தொடங்கினாள்.
“நல்ல விஷயம் பேசும் போது ஸ்வீட் கொடுக்கணும்னு டிவியில சொல்லி இருக்காங்க. ஆனா நான் இப்போ எதுவும் நல்ல விஷயம் பேச போறதில்லை என்றாலும் ” என்று மேலும் பேச போனவனை கை நீட்டி தடுத்தவள் “கதவிலிருந்து கையை எடுங்க” என்றாள் கடுப்பாக.
அவளது கடுகடு முகத்தை பார்த்ததும் கையை எடுத்தான். அவசரமாக கதவை மூடிவிட்டு காரை வேகமாக கிளப்பிக் கொண்டு சென்றாள். அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் தாடையை தேய்த்தபடி ‘ஓவரா சீண்டிட்டோமோ’ என்று எண்ணிக் கொண்டே பைக்கில் ஏறி அமர்ந்தான்.
காரில் சென்று கொண்டிருந்தவளுக்கோ சொல்ல முடியாத எரிச்சல் மண்டியது. சிறுவயதில் இருந்து தனித்தே வாழ்ந்து பழகியவளுக்கு நிறைய பேசுபவர்களை கண்டால் அலர்ஜி. அவர்கள் இருக்கும் திசை பக்கமே செல்ல மாட்டாள். ஆனால் இந்த இரண்டு நாளாக இவனிடம் சிக்கிக் கொண்டு தலைவலியே வந்துவிட்டது. எங்கிருந்து வந்தான் இந்த இம்சை என்று அவனை அர்ச்சித்துக் கொண்டே தீபக் தனக்காக காத்திருந்த ஹோட்டலுக்கு சென்றாள்.
ஹோட்டல் பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை மெல்லிய இசை வரவேற்றது. தீபக்கை கண்களால் தேடிக் கொண்டே மெல்ல நடந்தாள். அவனிருந்த மேஜையை கண்டு கொண்டதும் நேரே சென்றமர்ந்தாள். எதிரே இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அவளது செயலை பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிற்கு ஏதோ டென்ஷனில் வந்திருக்கிறாள் என்று புரிந்தது.
அவளை எப்படியாவது தன்னை திரும்பி பார்க்க வைத்து விட வேண்டும் என்கிற வலுவான எண்ணத்துடனும், உற்சாகத்துடனும் பைக்கை செலுத்த ஆரம்பித்தான்.
தன்னை சுற்றிலும் நடந்து கொண்டிருந்தவைகளை கண்டு கொள்ளாது வழக்கம் போல காதில் மாட்டி இருந்த ஹெட் போனில் இருந்து துள்ளலான பாடல் ஒலிக்க, அவனை அறியாமலே அந்த பாடலை பாடிக் கொண்டு அவளது மருத்துவமனை முன் சென்று நின்றான்.
பைக்கை நிறுத்திவிட்டு, உயரமான கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே சென்றவன் படியில் ஏறும் போது எதிரே வருபவரை கவனியாது நேரே சென்று மோதினான்.
தீபக்கிடம் இருந்து அழைப்பு வந்ததால் அவசரமாக லிப்டில் இருந்து வெளியேறியவள், வேகமாக படியிறங்க, எதிரே வந்தவன் வழியை கொடுக்காது மோதி வைத்தான்.
மோதிய அதிர்வில் கீழே விழப் போனவளின் இடையை பற்றி நிறுத்த முயற்சிதான். அவனது கரம் இடையில் பதிந்ததும் கொதித்து போனவள் “எருமை மாடு மாதிரி வந்து மோதுரீங்களே வெட்கமா இல்ல?” என்று சீறிக் கொண்டே அவனிடமிருந்து விலகினாள்.
அவளது கோபத்தில் சற்று ஜெர்கானவன் “இனம் இனத்தோடு தான் மோதும் மேடம்” என்றான் குறுநகையோடு.
அவளோ அவனிடம் பேச விரும்பாமல் “காது தான் செவிடுனா கண்ணும் குருடு போல இருக்கு” என்று கடித்து துப்பிவிட்டு நகர்ந்தாள்.
சிறிதும் அலட்டிக் கொள்ளாது அவள் வழியை மறித்து “உங்களை தான் பார்க்க வந்திருக்கேன் மிஸ். மௌ..னி..கா” என்றான் கேலியாக.
கண்களில் சீற்றத்துடன் திரும்பியவள் “என்னை எதுக்கு பார்க்கணும்? நீங்க பேஷண்ட்டா?” என்றாள் கடுமையாக.
அவளது கோபத்தை ரசித்தபடி “பேஷண்ட்டா இருந்தா நல்லா தான் இருக்கும். அடிக்கடி பார்க்க வரலாமில்ல” என்றான் .
ஏனோ அவனை பார்த்தாலே அத்தனை எரிச்சலாக இருந்தது அவளுக்கு.
‘ச்சே..சரியான வழிசல் கேஸ்’ என்று முணுமுணுத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.
அதை கேட்டவன் லேசாக முகத்தை சுருக்கிக் கொண்டு கார் கண்ணாடியின் அருகே குனிந்து லேசாக தட்டி அவள் திறந்ததும் “ஹலோ தொமுக மேடம்! ரொம்ப பந்தா பண்ணாதீங்க. முன்ன பின்ன வழிசல் கேசை நீங்க பார்த்ததே இல்ல போல” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு காட்பரி சாகலேட்டை எடுத்து நீட்டினான்.
அவனை முறைத்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தவள் ஜன்னலை மூடத் தொடங்கினாள்.
“நல்ல விஷயம் பேசும் போது ஸ்வீட் கொடுக்கணும்னு டிவியில சொல்லி இருக்காங்க. ஆனா நான் இப்போ எதுவும் நல்ல விஷயம் பேச போறதில்லை என்றாலும் ” என்று மேலும் பேச போனவனை கை நீட்டி தடுத்தவள் “கதவிலிருந்து கையை எடுங்க” என்றாள் கடுப்பாக.
அவளது கடுகடு முகத்தை பார்த்ததும் கையை எடுத்தான். அவசரமாக கதவை மூடிவிட்டு காரை வேகமாக கிளப்பிக் கொண்டு சென்றாள். அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் தாடையை தேய்த்தபடி ‘ஓவரா சீண்டிட்டோமோ’ என்று எண்ணிக் கொண்டே பைக்கில் ஏறி அமர்ந்தான்.
காரில் சென்று கொண்டிருந்தவளுக்கோ சொல்ல முடியாத எரிச்சல் மண்டியது. சிறுவயதில் இருந்து தனித்தே வாழ்ந்து பழகியவளுக்கு நிறைய பேசுபவர்களை கண்டால் அலர்ஜி. அவர்கள் இருக்கும் திசை பக்கமே செல்ல மாட்டாள். ஆனால் இந்த இரண்டு நாளாக இவனிடம் சிக்கிக் கொண்டு தலைவலியே வந்துவிட்டது. எங்கிருந்து வந்தான் இந்த இம்சை என்று அவனை அர்ச்சித்துக் கொண்டே தீபக் தனக்காக காத்திருந்த ஹோட்டலுக்கு சென்றாள்.
ஹோட்டல் பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை மெல்லிய இசை வரவேற்றது. தீபக்கை கண்களால் தேடிக் கொண்டே மெல்ல நடந்தாள். அவனிருந்த மேஜையை கண்டு கொண்டதும் நேரே சென்றமர்ந்தாள். எதிரே இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அவளது செயலை பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிற்கு ஏதோ டென்ஷனில் வந்திருக்கிறாள் என்று புரிந்தது.