திருகுறுங்குடிக்கு மேற்க்கே மகேந்திரகிரி என்ற மலையடிவாரத்தில் நம்பாடுவான் என்னும் பாணன், எம்பெருமான் மீது பரமபக்தி கொண்டவராய் வாழ்ந்து வந்தார். சதாநேரமும் இறைவனை தொழுது கொண்டும் கைசிகம் என்ற பண்ணை இசைத்துக் கொண்டும் பாடிப் பரவசமாய் வாழ்ந்தார்.
அவரது பக்தியை உலகிற்க்கு உணர்த்த குறுங்குடி நம்பி ஆசைப்பட்டார். ஒருநாள் நம்பாடுவான் மலையடிக்காட்டில் சஞ்சாரம் செய்து வந்தபோது திடீரென்று ஒரு பிரம்ம ராட்சசன் மரத்திலிருந்து குதித்தான். நம்பாடுவான் கழுத்தைப் பிடித்து, இப்பொழுதே நீ எனக்கு உணவாக வேண்டுமென்று கர்ஜித்தான்.
அந்நிலையிலும் நம்பாடுவான் புன்னகைத்துக் கொண்டே "இந்த உடல் எதற்கும் பிரயோஜனமில்லை என்று நினைத்தேன். ஆனால், உனக்கிது உதவும் என்றால் எடுத்துக்கொள். ஆனால், நான் எம்பெருமாள் நம்பியின் பொருட்டு ஏகாதசி விரதம் பூண்டுள்ளேன். விரதத்தை முடித்தப் பிறகு நீ என்னை புசிக்கலாம். கொஞ்சம் வழிவிட்டால் நான் பூஜைமுடித்து உடனே திரும்புவேன்" என்று கூற, அந்த ராட்சசன் சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தான்.
"இதோ பாரப்பா, நான் திருமாலின் திவ்ய பக்தன். ஒருநாளும், போய் சொல்லேன். என் திருமண் மீது ஆணை" என கைப்பிடித்து சத்தியம் செய்தார் நம்பாடுவான்.
ராட்சசன் வழிவிட, நம்பாடுவான் தன் வழியில் தொடர்ந்து நடந்தார்.
குறுங்குடி கோவிலுக்குள் நுழைய முடியாத துக்கத்துடன் வழக்கம் போல் கோயிலுக்கு எதிரே இருந்த கொடிமரம் அருகில் போய் நின்றார்.
"அனைத்து உலகங்களிலும் ஒலி வீசும் திகழ் சக்கரமே, இதுவே என் கடைசி வாய்ப்போ? இனி உனை காண்பது இயலாதோ? நீயே முடிவு செய்து கொள்" என்று நெக்குருகி நின்றார்.
அவரது பக்தியை உலகிற்க்கு உணர்த்த குறுங்குடி நம்பி ஆசைப்பட்டார். ஒருநாள் நம்பாடுவான் மலையடிக்காட்டில் சஞ்சாரம் செய்து வந்தபோது திடீரென்று ஒரு பிரம்ம ராட்சசன் மரத்திலிருந்து குதித்தான். நம்பாடுவான் கழுத்தைப் பிடித்து, இப்பொழுதே நீ எனக்கு உணவாக வேண்டுமென்று கர்ஜித்தான்.
அந்நிலையிலும் நம்பாடுவான் புன்னகைத்துக் கொண்டே "இந்த உடல் எதற்கும் பிரயோஜனமில்லை என்று நினைத்தேன். ஆனால், உனக்கிது உதவும் என்றால் எடுத்துக்கொள். ஆனால், நான் எம்பெருமாள் நம்பியின் பொருட்டு ஏகாதசி விரதம் பூண்டுள்ளேன். விரதத்தை முடித்தப் பிறகு நீ என்னை புசிக்கலாம். கொஞ்சம் வழிவிட்டால் நான் பூஜைமுடித்து உடனே திரும்புவேன்" என்று கூற, அந்த ராட்சசன் சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தான்.
"இதோ பாரப்பா, நான் திருமாலின் திவ்ய பக்தன். ஒருநாளும், போய் சொல்லேன். என் திருமண் மீது ஆணை" என கைப்பிடித்து சத்தியம் செய்தார் நம்பாடுவான்.
ராட்சசன் வழிவிட, நம்பாடுவான் தன் வழியில் தொடர்ந்து நடந்தார்.
குறுங்குடி கோவிலுக்குள் நுழைய முடியாத துக்கத்துடன் வழக்கம் போல் கோயிலுக்கு எதிரே இருந்த கொடிமரம் அருகில் போய் நின்றார்.
"அனைத்து உலகங்களிலும் ஒலி வீசும் திகழ் சக்கரமே, இதுவே என் கடைசி வாய்ப்போ? இனி உனை காண்பது இயலாதோ? நீயே முடிவு செய்து கொள்" என்று நெக்குருகி நின்றார்.
Last edited: