Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

இந்த திரியில் நமக்கு தான் படித்த கேட்ட சுவரசியசமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் செல்வி பாண்டியன். அவர்களிடம் இருந்து நிறைய சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்வோம்.
 
  • Like
Reactions: selvipandiyan

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
உலகிலேயே முதல் முறை: செய்தி வாசிப்பாளர் ஆன ரோபோக்கள்; சீனா அறிமுகம்
1542195315672.png

உலகத்திலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் வாசிக்கும் ஏஐ (artificial intelligence) ரோபாக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ ரோபோக்கள், திரையில் ஓடும் எழுத்துகளைப் படிக்கும். செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.
''இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும்'' என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ.

நவ.7 அன்று சீனா நடத்திய உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோக்கள் எப்போது தினசரிப் பயன்பாட்டுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பங்களில் உலகளாவிய அளவில் முதலிடத்தைப் பிடிக்கத் துடிக்கிறது சீனா. அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கத் தொழில்நுட்பங்களைச் சீனா திருடுவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
 
Last edited by a moderator:

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
உலகைச் சுற்றிவரப்போகும் டைட்டானிக்- 2
1542195499543.png

டைட்டானிக்-2 கப்பல் தனது பயணத்தை எப்போது தொடங்கும் என்று உலகமெங்கும் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் இயங்கத் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய நிறுவனமான ப்ளூ ஸ்டார் லைன்.
1912-ல் இரண்டாயிரம் பயணிகளோடு சவுத்தாம்ப்டனிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியே நியூயார்க் செல்லும் வழியில் பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது டைட்டானிக். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே வடிவத்தில் அந்தக் கப்பலைக் கட்டும் முயற்சியில் இறங்கியது ப்ளூ ஸ்டார் லைன். ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களோடு 2,435 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இந்தக் கப்பல் தயாராகிவருகிறது. முதல் பயணம்: சவுத்தாம்ப்டன் டு நியூயார்க் தான்!
டைட்டானிக்-1-க்கு ஏற்பட்ட கதியைத் தவிர்க்கும் வகையில், ரேடார் உள்ளிட்ட சகலவிதமான நவீன வசதிகளோடு அதிகளவில் உயிர் காக்கும் படகுகளும் இணைக்கப்பட்டுள்ளன!
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஏமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமி: உலகத்தின் கவனத்தை ஈர்த்து கண்கலங்க வைத்த புகைப்படம்
1542195578925.png
ஏமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் புகைப்படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏமனில் உள் நாட்டுப் போர் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். 5,000க்கும் மேற்பட்டோர் இந்த போர் காலங்களில் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம். ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் என்று ஐ.நா. வேதனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அகதிகள் முகாமில் இருந்த அமல் ஹுசேன் என்னும் 7 வயது சிறுமி பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, எலும்பும் தோலுமாய் ஒட்டிக்கிடக்கும் சருமத்தோடு இருக்கும் அமலின் புகைப்படத்தை வெளியிட்டது. அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஏமனில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
இந்நிலையில் அமல் ஹுசேன் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். சத்துக் குறைபாட்டின் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தாய் மரியம் அலி, ''என் இதயத்தைக் கூறுபோட்டதைப் போல் உணர்கிறேன். அமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். இப்போது என்னுடைய மற்ற குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது'' என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு ரூ. 20 கோடி பரிசு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் பிரிட்டி மார்க்கோஸ். துபாயில் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் இரு மகன்கள் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர். இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரசித்தி பெற்ற ‘அபுதாபி பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
இந்த லாட்டரி குலுக்கல் நடந்த நிலையில் அதில் மார்க்கோஸுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டி மார்கோஸ் கூறுகையில் ‘‘இந்த பரிசுத்தொகை மூலம் எனது கடன்களை அடைப்பேன். எனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்ட முடிவு செய்துள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.
‘பிக் டிக்கெட் அபுதாபி’ லாட்டரி குலுக்கலில் கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் பலமுறை பரிசுத்தொகையை வென்றது குறிப்பிடத்தக்கது.
1542195679574.png