காதலிக்க நேரமில்லையே
பதிவு 1
குளுமையான இளங்காலைப் பொழுதினிலே அடைமழையானது வெளுத்து வாங்கியது,,, ஏசியின் குளிர் வேறு சேர்ந்து அந்த அறையையே இன்னும் இன்னும் குளுமைப்படுத்த குளிருக்கு இதமாக போர்வையை இழுத்துப் போர்த்தி முகம் மட்டும் தெரியும்படி உறங்கிக்கொண்டிருந்தாள்
வர்ணிகா,,, திடுமென்று ஒழித்த சப்தத்தில் விழித்தவளின் புருவங்கள் வளைந்தது,,, கண்கள் சுருக்கி சட்டென்று அவள் திரும்பிப் பார்க்க மூடப்பட்ட சன்னலையும் தாண்டி அந்த சத்தம் கேட்டுக் கொண்டிருப்பது புரிந்தது,,,,
"""""சனியன் சனியன்,, காலையில இவன் தொல்ல பெருந்தொல்லையா போச்சு,,, மவனே இருடி உனக்கு"""" அவசரமாக எழுந்தவள் எழுந்து சென்று சன்னலைத் திறக்க சத்தம் பெரிதாகவே கேட்டது,,,,
"""" சில்லுன்னு சூடாகுறியே
நில்லுன்னு நீ ஓடுறியே
தள்ளுன்னு தள்ளாடுறியே ஓ....
குச்சுபிடி குச்சுப்புடியே உன் கண்ணு குச்சுப்புடியே நீயில்லையே நம்பும்படியே ஓ.. ஓ.. ஓ....""""" தளபதியின் பாடல் தான் பக்கத்து வீட்டிலே பெரிதாக ஒலித்தது,,, இவளுக்கு எதையாவது எடுத்து அந்த வீட்டின் சன்னலை நோக்கி வீசலாம் போல இருந்தது,,,, காரணம் வர்ணிகா தல ஃபேன்,,,, வந்த ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக வழக்கம் போலவே டீவியை ஆன் செய்து தல படப்பாடலை பாடவிட்டு சத்தத்தை அதிகமாக வைத்து ஒரு ஸ்பீக்கரை தூக்க முடியாமல் தூக்கி சென்று சன்னல் அருகினில் வைத்துவிட்டு கட்டில் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டாள்,,,,
ஏய்,,,அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும்
அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி
தடபுடலா வரும் தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது,,,
கெடைக்குமடா பல கேள்விக்கு
விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது....
டானே டர்ராவான்
தவுளது கிர்ராவான்
வந்தான்டா மதுரைக்காரன்....
அலேக்கா விளையாடு
அடிச்சா கேக்க யாரு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
டங்கு டங்கென்று இவள் குதித்த குதியிலும் போட்ட சப்தத்திலும் கதவை திறந்து கொண்டு அவசரமாக வந்து நின்ற அவளுடைய தாய் தெய்வானை அவள் போட்ட ஆட்டத்தை பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டு கதைப்பொத்தியபடியே போய் டிவியை ஆப் செய்ய இவள் ஆடுவதை நிறுத்திவிட்டு குதித்தோடி வந்து நின்றாள்,,,,
""""""ம்ம்மாஆஆஆ,,, எதுக்கும்மா இப்போ அமத்துன,,, அய்யோ அய்யோ,, அந்த பக்கம் இன்னும் பாட்டு சத்தம் கேக்குது,, ரிமோட்டை குடும்மா தல பாட்டை வைக்கணும்"""" ரிமோட்டை அவள் பிடுங்க வர வேகமாக சென்று சன்னலை சாத்திவிட்டு கத்தினார்,,,,
"""""ஏன்டி ஏன்டி,,, காலையிலே ஆரம்பிச்சுட்டியா,,, அவன் எந்த பாட்டை போட்டா உனக்கு என்னடி??? அப்பனுக்கு தப்பாம அப்படியே பொறந்திருக்கு,,, முதல்ல குதிக்குறதை நிறுத்துடி தடிமாடு""""
"""""ம்மாஆஆஆ,,, அப்பாவை இந்த விசயத்துல இழுக்காத,,, அவன் வேணும்னே தான் என்னை வெறுப்பேத்தணும்னு இவன் பாட்டா வைக்குறான்,,, துக்கத்துல இருந்து எழுப்பி விட்டுட்டான் பாரு"""""
"""""வாயிலயே போடப்போறேன் பாரு,, அவன் இவன்னு சொன்ன அப்புறம் அவ்வளவு தான்,, என்ன தான் இருந்தாலும் உனக்கு அவன் அண்ணன் முறை வேணும்"""""
""""'ம்மமாஆஆஆ,, தினம் தினம் ஒரே பாட்டை பாடாத,, அவன் என் எனிமி,,, எனக்கு மட்டும் இல்ல நம்ம வீட்டுக்கே எனிமி,,, """""
"""""உதவாங்கப்போற வர்ணி,,, சத்தம் போட்டு பேசாத,,, தாத்தா காதுல விழுந்தா அப்புறம் அவ்வளவு தான்,,, ஒருநாளாவது எங்களை நிம்மதியா இருக்க விடேன்டி,,, அவங்க தான் ஆகாதவங்கன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு காலங்கார்த்தால இப்படி சிலுத்துக்குனு நிக்குற,,, இந்த வீட்டுல பெருசுல இருந்து சிறுசு வரைக்கும் எல்லோர் கூடவும் இதே தொல்லையா போச்சு,,, வீட்டு ஆளுக தான் இப்படின்னா வேலக்காரங்களும் அந்த வீட்டு வேலக்காரங்க கூடவே சண்டையை இழுத்துட்டு வருதுங்க,,, அடியேய் வேலையத்தவளே,,, முதல்ல போய் பல்ல தேய்ச்சு குளிச்சுட்டு கீழ வா,,,, காலேஜுக்கு நேரமாகுதுல்ல,,,""""" வர்ணிகாவின் தலையில் தட்டி சொல்லிவிட்டு அவர் செல்ல வர்ணிகா ஒருவித உதட்டுச்சுழிப்போடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்,,,,
ஒருவழியாக குளித்துமுடித்து அடர்நீல நிற சுடிதாரை அணிந்து கொண்டு கீழே சென்றவளை மொத்த குடும்பமும் உணவு மேசையில் இருந்தபடியே வரவேற்றது,,, அளவான சிறிய குடும்பம் தான் அவளுடையது,,, தாத்தா தங்கவேலு பாட்டி விஜயலெட்சுமி,,, அப்பா ரங்கசாமி அம்மா தெய்வானை,,, ஒரேயொரு தம்பி அஷ்வந்த்,,,, இவ்வளவு பேரும் சாப்பிடாமல் அவளுக்காக காத்திருக்க அவளோ ஆடி அசைந்து துள்ளித் துள்ளி கீழே வந்து அமர வேலையாட்கள் பரிமாற ஆரம்பித்துவிட்டார்கள்,,,, அப்பா ரங்கசாமி தட்டில் வைத்த இட்லியை முறைத்து முறைத்து பார்த்தபடியே சாப்பிடாமல் இருக்க தங்கவேலுவோ ஒரு வாய் எடுத்து வைத்துவிட்டு ரங்கசாமியை பார்த்தார்,,,
"""""கோபத்தை சாப்பாட்டுல காட்டுறதால என்ன ஆகப்போகுது??? நான் அப்பவே சொன்னேன்,, அந்தப்பய சரியான கேடின்னு,,,"""""
"""""கேடியா இருந்தா இருந்துட்டு போகட்டும்ப்பா,,, நான் அவனை விட கேடிக்கெல்லாம் கேடி,,,, """"" இப்படி இவர் சொல்ல வர்ணிகாவிற்கு புறையேறிவிட்டது,,,, இவரோ பதறியபடி தண்ணீரை எடுத்துக்கொடுக்க பாட்டி அவளுடைய தலையை தட்டினார்,,,
"""""பார்த்தியாடா,,, அவனுங்கள பத்தி பேசுனாலே இப்படி தான்,, பாரு புள்ளைக்கு புறையேறிடுச்சு,,, யம்மா மருமகளே புள்ளைகளுக்கு தெனமும் சுத்திப் போடுன்னு சொன்னேனே செய்யுறியா????""""" தாத்தா கேட்க மனதிற்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே சமத்து மறுமகளாக பதில் சொன்னாள்,,,
"""""அதெல்லாம் பண்ணுறேன் தான் மாமா"""""
"""""என்னத்த பண்ணுற போ,,, அந்த வீட்டு திருட்டுப்பய காலடி மண்ணை எடுத்து என் பேத்திக்கு சுத்திப்போடு,,, அவன் பேத்தி தொடுக்கான் தொடுக்கான்னு இருக்கு,,, அதுக்குன்னே கண்ணு வைப்பான்,,, அப்புறம் நம்ம வர்ணி கூட தானே அந்த வால்முளைக்காத குரங்கு பையன் படிக்கிறான்"""" தாத்தா சொல்ல வர்ணிகா வேகமாக சொன்னாள்,,,
"""""ஆமா தாத்தா,, அவன் கண்ணு தான் கொள்ளிக்கண்ணே,,, நான் வேணா இன்னைக்கு அவன் காலடி மண்ணை எடுத்துட்டு வாறேன்,,, நல்லா செய்வினையாவே செஞ்சுப்போடுவோம்,,, காலையிலேயே பாட்டை போட்டு எழுப்பி விட்டுட்டான்"""" அவள் அவள் பங்கிற்கு ஆதங்கத்தை கொட்ட அவள் பேச்சை கேட்டுவிட்டு உர்ரென்று இருந்த ரங்கசாமியே சிரித்துவிட்டார்,,,