உலகம் அன்று பேசும்
பொங்கி வரும் சோகத்தை
கண்களில் தாங்கி நிற்கும்
கன்னியே நீ யார்
எல்லையிலே இரவும் பகலும்
எமக்காகப் போராடி
உயிர் நீத்து மறைந்தாரே
அந்த உத்தமரின் மகளா
ஏழ்மையால் எல்லைத் தாண்ட
இரக்கமற்ற ஆந்திரத்து காவலர்தம்
குண்டு தாங்கி சரிந்தாரே
அவரது செல்லக் குழந்தையா
ஈழத்து தமிழ் மண்ணில்
இனம் காக்க மடிந்த
வீரம் செறிந்த வேர்கள்
விளைவித்த விழுதா
கடலுக்குள் எல்லை காட்டி
கருணை இல்லா கயவர்களால்
சுடப்பட்டு செந்நீரில் கரைந்தாரே
எம்மீனவரின் இரத்த உறவா
இனியொரு கவலை உனக்கு வேண்டாம்
இழந்த தமிழினம் ஒருநாள் எழும்
வழிகின்ற விழிநீரைத் துடைத்தங்கு
வாழுகின்ற வழிதேடி வீரம் காட்டும்
உலகம் நமக்காய் அன்றுதான் பேசும்!
பொங்கி வரும் சோகத்தை
கண்களில் தாங்கி நிற்கும்
கன்னியே நீ யார்
எல்லையிலே இரவும் பகலும்
எமக்காகப் போராடி
உயிர் நீத்து மறைந்தாரே
அந்த உத்தமரின் மகளா
ஏழ்மையால் எல்லைத் தாண்ட
இரக்கமற்ற ஆந்திரத்து காவலர்தம்
குண்டு தாங்கி சரிந்தாரே
அவரது செல்லக் குழந்தையா
ஈழத்து தமிழ் மண்ணில்
இனம் காக்க மடிந்த
வீரம் செறிந்த வேர்கள்
விளைவித்த விழுதா
கடலுக்குள் எல்லை காட்டி
கருணை இல்லா கயவர்களால்
சுடப்பட்டு செந்நீரில் கரைந்தாரே
எம்மீனவரின் இரத்த உறவா
இனியொரு கவலை உனக்கு வேண்டாம்
இழந்த தமிழினம் ஒருநாள் எழும்
வழிகின்ற விழிநீரைத் துடைத்தங்கு
வாழுகின்ற வழிதேடி வீரம் காட்டும்
உலகம் நமக்காய் அன்றுதான் பேசும்!