Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript உலகம் அன்று பேசும் | SudhaRaviNovels

உலகம் அன்று பேசும்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
உலகம் அன்று பேசும்
பொங்கி வரும் சோகத்தை
கண்களில் தாங்கி நிற்கும்
கன்னியே நீ யார்

எல்லையிலே இரவும் பகலும்
எமக்காகப் போராடி
உயிர் நீத்து மறைந்தாரே
அந்த உத்தமரின் மகளா

ஏழ்மையால் எல்லைத் தாண்ட
இரக்கமற்ற ஆந்திரத்து காவலர்தம்
குண்டு தாங்கி சரிந்தாரே
அவரது செல்லக் குழந்தையா

ஈழத்து தமிழ் மண்ணில்
இனம் காக்க மடிந்த
வீரம் செறிந்த வேர்கள்
விளைவித்த விழுதா

கடலுக்குள் எல்லை காட்டி
கருணை இல்லா கயவர்களால்
சுடப்பட்டு செந்நீரில் கரைந்தாரே
எம்மீனவரின் இரத்த உறவா

இனியொரு கவலை உனக்கு வேண்டாம்
இழந்த தமிழினம் ஒருநாள் எழும்
வழிகின்ற விழிநீரைத் துடைத்தங்கு
வாழுகின்ற வழிதேடி வீரம் காட்டும்
உலகம் நமக்காய் அன்றுதான் பேசும்
!