அத்தியாயம் – 8
மறுநாள் காலை சென்னை வந்து இறங்கியவளை வரவேற்க அண்ணன், தம்பி இருவரும் ஆவலாக நின்றனர். அவளுடன் கயல் வந்திருக்கிறாளா என்று பார்த்துவிட்டு சற்றே ஏமாற்றத்துடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றனர்.
வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் “என்ன ரெண்டு பேரும் நைட் தூங்கவே இல்லையா? பஸ் ஸ்டாண்டிலேயே உட்கார்ந்திருக்கீங்களா?”
“உண்மை தான் சுடர். கயல் என்ன சொல்லுவளோ எப்படி இருக்காளோன்னு கவலையா இருந்துச்சு. உன் முகத்தை பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு” -குணா.
அர்ஜுனோ அவளை கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தான்.
அவளுக்கு உள்ளுக்குள் உதறலாக இருக்க “இங்கேயே வச்சு எல்லாவற்றையும் பேச வேண்டாம். எதாவது ஹோட்டலுக்குப் போயிட்டு அங்கே உட்கார்ந்து பேசுவோம்” என்றாள்.
குணா உடனே ஒத்துக் கொள்ள, அர்ஜுன் இதுவரை ஒற்றை வார்த்தை பேசவில்லை. அமைதியாக அவர்களுடன் நடந்தான்.
அருகே இருந்த ஹோட்டலுக்குள் மூவரும் நுழைந்து அங்கிருந்த மேஜையில் அமர்ந்தனர். சுடர் எழுந்து சென்று முகம் கழவி விட்டு வந்து அமர்ந்தாள். காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்ததும் இருவரின் பார்வையும் அவள் மீது தான்.
மனதிற்குள் சொல்லித்தானே ஆக வேண்டும் என்கிற எண்ணம் எழ, இங்கிருந்து போனதில் இருந்து அவள் வர மாட்டேன் என்று சொன்னவரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அங்கே இருவரும் பேச மறந்து அமர்ந்திருந்தார்கள். அர்ஜுனின் முகம் வருத்தத்தில் சுருங்கி போயிருந்தது.
இருவரின் உணர்வுகளையும் பார்த்துக் கொண்டிருந்தவள் “இதை அவள் சொல்லக் கூடாது என்று சொன்னாள். சொல்லாம இருக்க என் மனசாட்சி இடம் கொடுக்கல மாமா” என்றவள் அன்று நடந்தவைகளை எல்லாம் கயல் சொன்னவற்றை ஒன்று விடாது சொல்லி முடித்தாள்.
குணாவின் முகம் உள்ளுக்குள் எழுந்த கொந்தளிப்பிலும், கோபத்திலும் ரத்தச் சிவப்பாக மாறி இருந்தது என்றால் அர்ஜுனின் முகமோ தாடை இறுக கல்லாக மாறிப் போய் அமர்ந்திருந்தான்.
“நேரே போய் அவளை வெட்டிப் போடுறேன். பொம்பளையா அவ” என்றான் குணா ஆத்திரமாக.
“வெட்டி போட்டுட்டா போன மானம் மரியாதை எல்லாம் திரும்பி வந்துடுமா? நம்ம கயலுக்கு நடந்த கேவலம் மாறி விடுமா?” என்றான் அர்ஜுன் இறுகிய குரலில்.
“என்னடா பண்ண சொல்ற? எனக்கு உடம்பெல்லாம் எரியுதுடா! இவளோட குடும்பம் நடத்தி ஒரு புள்ளையும் பெத்திருக்கேன்னு நினைச்சா கூசிப் போகுது” என்று சொல்லவும் சுடரின் முகம் கசங்கிப் போனது.
அவனோ விடாது “என்ன குடும்பம்டா அது? ஒரு பொம்பளை புள்ளேன்னு பார்க்க மாட்டாளா என் மாமியா? அவ பொண்ணுக்கு நடந்தா சும்மா இருப்பாளா?” என்று குதித்தான்.
அவர்கள் தன் குடும்பத்தைப் பேசப்பேச உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தாள். அக்காவும் அம்மாவும் செய்து வைத்த வேலையில் தன் எதிர்காலமே மொத்தமாக குழி தோண்டி புதைக்க வேண்டிய கட்டாயம்.
அவளின் சிந்தனையை கலைக்க “அவளை கூப்பிட நாம போகலாம் குணா. யார் என்ன சொன்னாலும் நம்ம வீட்டுக்கு ராணி அவ தான். அவளுக்கு அடங்கி இருக்கிறதா இருந்தா அவங்களை வீட்டில் இருக்க சொல்லு. இல்லேன்னா அவங்க வீட்டுக்கேப் போக சொல்லு” என்றான் அர்ஜுன் கடுமையாக.
அந்த இடத்தில் சூழ்நிலையில் அவளால் உட்காரவே முடியவில்லை. அதிலும் அர்ஜுன் அவளின் பக்கமே திரும்பவில்லை. காதலித்தவன் வாயாலேயே அவளின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக கேட்பது என்பது கொடுமையான விஷயம்.
“ஆமாம்டா! அவளை முதலில் அடிச்சு துரத்தி விடனும். குழந்தையை நம்ம கிட்ட வச்சுக்கிட்டு அந்த நாயை அவள் வீட்டுக்கே விரட்டனும்” என்றான் குணா.
இருவரும் அங்கே ஒருத்தி உணர்வுகள் எல்லாம் செத்து ஜடமாக அமர்ந்திருக்கிறாள் என்பதை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“குணா இது மட்டும் அம்மாவுக்கு தெரியவே கூடாது. நான் எப்படியாவது கயலை சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வந்துடுறேன்”.
“அம்மாவுக்கு தெரிஞ்சா செத்துடும்டா. பாவம் எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. இந்த நாய் குடும்பத்துக்குள்ள வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா”.
கண்கள் கண்ணீரைப் பொழிய இருவரையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்த இருவரும் மெல்ல நிதானத்திற்கு வர, அப்போது தான் எதிரே ஒருத்தி உள்ளுக்குள் துடித்தபடி அமர்ந்திருக்கிறாள் என்பதையே உணர்ந்தனர்.
குணாவுக்கு நாக்கு வறண்டு போக “சுடர்..” என்றான் இறங்கிய குரலில்.
மறுநாள் காலை சென்னை வந்து இறங்கியவளை வரவேற்க அண்ணன், தம்பி இருவரும் ஆவலாக நின்றனர். அவளுடன் கயல் வந்திருக்கிறாளா என்று பார்த்துவிட்டு சற்றே ஏமாற்றத்துடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றனர்.
வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் “என்ன ரெண்டு பேரும் நைட் தூங்கவே இல்லையா? பஸ் ஸ்டாண்டிலேயே உட்கார்ந்திருக்கீங்களா?”
“உண்மை தான் சுடர். கயல் என்ன சொல்லுவளோ எப்படி இருக்காளோன்னு கவலையா இருந்துச்சு. உன் முகத்தை பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு” -குணா.
அர்ஜுனோ அவளை கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தான்.
அவளுக்கு உள்ளுக்குள் உதறலாக இருக்க “இங்கேயே வச்சு எல்லாவற்றையும் பேச வேண்டாம். எதாவது ஹோட்டலுக்குப் போயிட்டு அங்கே உட்கார்ந்து பேசுவோம்” என்றாள்.
குணா உடனே ஒத்துக் கொள்ள, அர்ஜுன் இதுவரை ஒற்றை வார்த்தை பேசவில்லை. அமைதியாக அவர்களுடன் நடந்தான்.
அருகே இருந்த ஹோட்டலுக்குள் மூவரும் நுழைந்து அங்கிருந்த மேஜையில் அமர்ந்தனர். சுடர் எழுந்து சென்று முகம் கழவி விட்டு வந்து அமர்ந்தாள். காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்ததும் இருவரின் பார்வையும் அவள் மீது தான்.
மனதிற்குள் சொல்லித்தானே ஆக வேண்டும் என்கிற எண்ணம் எழ, இங்கிருந்து போனதில் இருந்து அவள் வர மாட்டேன் என்று சொன்னவரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அங்கே இருவரும் பேச மறந்து அமர்ந்திருந்தார்கள். அர்ஜுனின் முகம் வருத்தத்தில் சுருங்கி போயிருந்தது.
இருவரின் உணர்வுகளையும் பார்த்துக் கொண்டிருந்தவள் “இதை அவள் சொல்லக் கூடாது என்று சொன்னாள். சொல்லாம இருக்க என் மனசாட்சி இடம் கொடுக்கல மாமா” என்றவள் அன்று நடந்தவைகளை எல்லாம் கயல் சொன்னவற்றை ஒன்று விடாது சொல்லி முடித்தாள்.
குணாவின் முகம் உள்ளுக்குள் எழுந்த கொந்தளிப்பிலும், கோபத்திலும் ரத்தச் சிவப்பாக மாறி இருந்தது என்றால் அர்ஜுனின் முகமோ தாடை இறுக கல்லாக மாறிப் போய் அமர்ந்திருந்தான்.
“நேரே போய் அவளை வெட்டிப் போடுறேன். பொம்பளையா அவ” என்றான் குணா ஆத்திரமாக.
“வெட்டி போட்டுட்டா போன மானம் மரியாதை எல்லாம் திரும்பி வந்துடுமா? நம்ம கயலுக்கு நடந்த கேவலம் மாறி விடுமா?” என்றான் அர்ஜுன் இறுகிய குரலில்.
“என்னடா பண்ண சொல்ற? எனக்கு உடம்பெல்லாம் எரியுதுடா! இவளோட குடும்பம் நடத்தி ஒரு புள்ளையும் பெத்திருக்கேன்னு நினைச்சா கூசிப் போகுது” என்று சொல்லவும் சுடரின் முகம் கசங்கிப் போனது.
அவனோ விடாது “என்ன குடும்பம்டா அது? ஒரு பொம்பளை புள்ளேன்னு பார்க்க மாட்டாளா என் மாமியா? அவ பொண்ணுக்கு நடந்தா சும்மா இருப்பாளா?” என்று குதித்தான்.
அவர்கள் தன் குடும்பத்தைப் பேசப்பேச உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தாள். அக்காவும் அம்மாவும் செய்து வைத்த வேலையில் தன் எதிர்காலமே மொத்தமாக குழி தோண்டி புதைக்க வேண்டிய கட்டாயம்.
அவளின் சிந்தனையை கலைக்க “அவளை கூப்பிட நாம போகலாம் குணா. யார் என்ன சொன்னாலும் நம்ம வீட்டுக்கு ராணி அவ தான். அவளுக்கு அடங்கி இருக்கிறதா இருந்தா அவங்களை வீட்டில் இருக்க சொல்லு. இல்லேன்னா அவங்க வீட்டுக்கேப் போக சொல்லு” என்றான் அர்ஜுன் கடுமையாக.
அந்த இடத்தில் சூழ்நிலையில் அவளால் உட்காரவே முடியவில்லை. அதிலும் அர்ஜுன் அவளின் பக்கமே திரும்பவில்லை. காதலித்தவன் வாயாலேயே அவளின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக கேட்பது என்பது கொடுமையான விஷயம்.
“ஆமாம்டா! அவளை முதலில் அடிச்சு துரத்தி விடனும். குழந்தையை நம்ம கிட்ட வச்சுக்கிட்டு அந்த நாயை அவள் வீட்டுக்கே விரட்டனும்” என்றான் குணா.
இருவரும் அங்கே ஒருத்தி உணர்வுகள் எல்லாம் செத்து ஜடமாக அமர்ந்திருக்கிறாள் என்பதை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“குணா இது மட்டும் அம்மாவுக்கு தெரியவே கூடாது. நான் எப்படியாவது கயலை சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வந்துடுறேன்”.
“அம்மாவுக்கு தெரிஞ்சா செத்துடும்டா. பாவம் எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. இந்த நாய் குடும்பத்துக்குள்ள வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா”.
கண்கள் கண்ணீரைப் பொழிய இருவரையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்த இருவரும் மெல்ல நிதானத்திற்கு வர, அப்போது தான் எதிரே ஒருத்தி உள்ளுக்குள் துடித்தபடி அமர்ந்திருக்கிறாள் என்பதையே உணர்ந்தனர்.
குணாவுக்கு நாக்கு வறண்டு போக “சுடர்..” என்றான் இறங்கிய குரலில்.