'எவ்வளவு அழகாக காதலை சொல்லி விட்டான். நான் எப்படி சொல்ல போகிறேன். அதுவும்.... இது நடக்குமா?' என்ற எண்ணத்தில் அவளுக்கு தூக்கமே வரவில்லை. குழப்பம் ஒருபுறம் இருந்தாலும், அவனே மனம் திறந்து விட்டபோது, நிச்சயமாக இணைவோம் என்ற நம்பிக்கையும் வந்தது.
மறுநாள் காலையில் எழுந்தவள், முதலில் தேடியது தன் அம்மாவைதான். கிச்சனில் வேலை செய்துக் கொண்டிருந்த வைதேகியை பின்னாலிருந்து கட்டிக் கொண்டவள்,
"சாரி மை டியர்" என்றாள். அவர் எதுவும் பேசாமல் உணவு தயாரிப்பதிலேயே மும்முரமாக இருக்க,
"பேச மாட்டியா?" என்று அவர் முதுகில் சாய்ந்து கொண்டாள். அவர் அமைதியாகவே இருக்கவும்,
"நீயும் என் வயசை தாண்டிதானே வந்திருக்க. உனக்கும் அப்பாவை பார்த்த போது இப்படி தானே இருந்திருக்கும்" என்றதும் ஹர்ஷிதாவை திரும்பி பார்த்து புன்னகைத்தவர்,
"நீயும் அந்த பையனை லவ் பண்றியா?" என்றார்.
"அப்படி தான் நினைக்கிறேன். ரொம்ப டிஸ்டர்ப் பண்றாரே" என்று அவள் தலைகுனிந்து கொண்டு சொல்லவும்,
"என் பொண்ணுக்கு வெட்கபட தெரியும்கிற விஷயமே எனக்கு இப்போதானே தெரியுது" என்றதும், மேலும் வெட்கப்பட்டு, அவர் தோளிலேயே புதைந்துக் கொண்டு,
"என் மம்மி குட்டிக்கு கோபம் போயிச்சா?" என்றாள்.
"கோபம்ன்னு சொல்ல முடியாது. நான் சொல்ற பையனை கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணியிருந்தால் எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்திருக்கும். அதோட நம்ம பொண்ணு நம்ம மேல் வைத்த பாசத்தில் தான் ஒத்துக்கிட்டாங்கிற ஒரு சந்தோஷம் வருமே" என்று நிறுத்தியவர், "ஓகே அதை விடு. என் மருமகனை எப்போ கண்ணுல காட்ட போற?" என்றதும்,
"அம்மா! தேங்க்ஸ்ம்மா! தேங்க்ஸ்!" என்று துள்ளிக் குதித்து, அவர் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்தவள்,
"இதோ!! நேர்லயே போறேன். சனிக்கிழமை லஞ்ச் க்கு வர சொல்றேன். ஒரு ஹாஃப் டே லீவு கொடுங்க கரஸ் மேடம்" என்றாள் பணிவுடன்.
"என்னது ஹாஃப் டே லீவா? அதுவும் லவ் பண்றதுக்கு என்கிட்டேயே கேட்கிற? வீக்-என்ட் பார்த்துக்கலாம். ஒழுங்கா ஸ்கூலுக்கு கிளம்பு"
"அம்மா! அம்மா! ப்ளீஸ் அம்மா. நான் என்ன பதில் சொல்வேனோன்னு நைட் ஃபுல்லா தூங்கியிருக்க மாட்டார். பாவம்ம்மா"
"இருந்தாலும் ஹாஃப் டே அதிகம் ஹர்ஷி"
"உன் மருமகன் ஒண்ணும் வெட்டி ஆபீசர் இல்ல. கொம்பு முளைத்த பெரிய ஆபீசர். ஓவர் டைம் பார்த்து அஜெஸ்ட் பண்ணிக்கிறேன் ம்மா" என்று தாயின் பதிலுக்காக காத்திராமல் கிளம்பினாள்.
மறுநாள் காலையில் எழுந்தவள், முதலில் தேடியது தன் அம்மாவைதான். கிச்சனில் வேலை செய்துக் கொண்டிருந்த வைதேகியை பின்னாலிருந்து கட்டிக் கொண்டவள்,
"சாரி மை டியர்" என்றாள். அவர் எதுவும் பேசாமல் உணவு தயாரிப்பதிலேயே மும்முரமாக இருக்க,
"பேச மாட்டியா?" என்று அவர் முதுகில் சாய்ந்து கொண்டாள். அவர் அமைதியாகவே இருக்கவும்,
"நீயும் என் வயசை தாண்டிதானே வந்திருக்க. உனக்கும் அப்பாவை பார்த்த போது இப்படி தானே இருந்திருக்கும்" என்றதும் ஹர்ஷிதாவை திரும்பி பார்த்து புன்னகைத்தவர்,
"நீயும் அந்த பையனை லவ் பண்றியா?" என்றார்.
"அப்படி தான் நினைக்கிறேன். ரொம்ப டிஸ்டர்ப் பண்றாரே" என்று அவள் தலைகுனிந்து கொண்டு சொல்லவும்,
"என் பொண்ணுக்கு வெட்கபட தெரியும்கிற விஷயமே எனக்கு இப்போதானே தெரியுது" என்றதும், மேலும் வெட்கப்பட்டு, அவர் தோளிலேயே புதைந்துக் கொண்டு,
"என் மம்மி குட்டிக்கு கோபம் போயிச்சா?" என்றாள்.
"கோபம்ன்னு சொல்ல முடியாது. நான் சொல்ற பையனை கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணியிருந்தால் எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்திருக்கும். அதோட நம்ம பொண்ணு நம்ம மேல் வைத்த பாசத்தில் தான் ஒத்துக்கிட்டாங்கிற ஒரு சந்தோஷம் வருமே" என்று நிறுத்தியவர், "ஓகே அதை விடு. என் மருமகனை எப்போ கண்ணுல காட்ட போற?" என்றதும்,
"அம்மா! தேங்க்ஸ்ம்மா! தேங்க்ஸ்!" என்று துள்ளிக் குதித்து, அவர் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்தவள்,
"இதோ!! நேர்லயே போறேன். சனிக்கிழமை லஞ்ச் க்கு வர சொல்றேன். ஒரு ஹாஃப் டே லீவு கொடுங்க கரஸ் மேடம்" என்றாள் பணிவுடன்.
"என்னது ஹாஃப் டே லீவா? அதுவும் லவ் பண்றதுக்கு என்கிட்டேயே கேட்கிற? வீக்-என்ட் பார்த்துக்கலாம். ஒழுங்கா ஸ்கூலுக்கு கிளம்பு"
"அம்மா! அம்மா! ப்ளீஸ் அம்மா. நான் என்ன பதில் சொல்வேனோன்னு நைட் ஃபுல்லா தூங்கியிருக்க மாட்டார். பாவம்ம்மா"
"இருந்தாலும் ஹாஃப் டே அதிகம் ஹர்ஷி"
"உன் மருமகன் ஒண்ணும் வெட்டி ஆபீசர் இல்ல. கொம்பு முளைத்த பெரிய ஆபீசர். ஓவர் டைம் பார்த்து அஜெஸ்ட் பண்ணிக்கிறேன் ம்மா" என்று தாயின் பதிலுக்காக காத்திராமல் கிளம்பினாள்.