அத்தியாயம் – 8
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை – நடந்தைதையே
நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...
நீதிபதியின் முன்பு அமர்ந்திருந்த இருவரும் இருவேறு மனநிலையில் இருந்தனர். நிகிலோ எப்படியாவது அவள் மனதை மாற்றி, தான் இழைத்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பை பெற்று அவளுடன் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தான்.
அவளோ இன்றுடன் அனைத்தும் முடிந்துவிட்டால் நிம்மதி என்ற நிலையிலிருந்தாள்.
இருவரின் முகங்களையும் ஆராய்ந்த நீதிபதி அவளிடம் “இன்னைக்குத் தீர்ப்பு கொடுக்க முடியாத நிலையிலிருக்கிறேன். அதுக்குக் காரணம் இவர். உங்களோட சேர்ந்து வாழணும்ன்னு நினைக்கிறார்.தீர்ப்பை கொஞ்ச நாள் தள்ளி போடுங்கன்னு கேட்கிறார்.”என்றவர் ஸ்ருதியின் முகத்தை ஆராய்ந்தார்.
அதுவரை இன்று முடிவுக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு, நீதிபதியின் வார்த்தைகள் அதிகக் கோபத்தை வரவழைத்தது. கண்களில் உக்கிரத்துடன் அவனைத் திரும்பி பார்த்துவிட்டு “ஆறுமாதம் சேர்ந்து வாழ்ந்த போது தோன்றாதது. இந்த ஒருவருடப் பிரிவில் தோன்றாதது, இப்போ எப்படித் தீர்ப்புக்கு முதல்நாள் இந்த எண்ணம் வந்திருக்கும்?.அதுமட்டுமில்ல துபாய்க்கு அழைச்சிட்டு போய் ஆறுமாதம் ஜெயிலில் வச்சிருந்த மாதிரி வீட்டிலேயே அடைச்சு வச்சிருந்தார். இப்போ இவரை எப்படி நான் நம்புறது சார்?”.
நிகிலின் பக்கம் திரும்பிய நீதிபதி “அவங்க கேட்கிற நியாயமான கேள்விக்குப் பதில் சொல்லுங்க. நீங்க இவங்களோட வாழணும்னு நினைக்கிறது உண்மை தானா?ஆனா, அவங்க உங்க கூட வாழ விருப்படலையே?என்ன செய்யலாம் சொல்லுங்க?”
அவர் சொன்னதைக் கேட்ட நிகில் “ப்ளீஸ் சார்..ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுக்க முடியுமா?நான் பேசி கன்வின்ஸ் பண்ணி பார்க்கிறேன்.”
அவளோ “வேண்டாம் சார்! நான் இவர் கிட்ட பேச விரும்பல.நீங்க முடிச்சு வச்சிடுங்க” என்றாள்.
இருவரையும் பார்த்தவர் நிகிலிடம் தெரிந்த தவிப்பில் சற்று யோசனை செய்தவர், “நீங்க பேசிப் பாருங்க” என்றார் முடிவாக.
அதைக் கேட்டதும் மேலும் கோபமாக நாற்காலியிலிருந்து எழுந்தவள் நிகிலை திரும்பி முறைத்துவிட்டு “நன்றி சார்” என்றுரைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.
அவளின் பின்னே வேகமாகச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி நீரஜிடம் “பார்த்தியா நீரஜ்! செஞ்ச தப்புக்கு அவ பின்னாடி நாய் குட்டி மாதிரி ஓடுறான் பாரு. இன்னைக்குத் தர்ம சாத்து இருக்கு அவனுக்கு.”
“அம்மா! இருந்தாலும் நீங்க அவனை ரொம்பவே படுத்துறீங்க” என்றான் நீரஜ்.
“நான் படுத்தலடா அவனே தான் கஷ்டப்படுத்திக்கிறான்.அழகா போயிருக்க வேண்டியதை தானே கெடுத்துகிட்டான். இப்போ அதுக்குத் தண்டனையை அனுபவிக்கிறான்.”
அறையிலிருந்து வெளியே சென்றவள் நேரே கோர்ட் வளாகத்திலிருந்த மரத்தடியில் சென்று நின்றாள்.மனதின் ஒருபக்கம் இன்று தீர்ப்பில்லை என்று நினைத்து மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதேசமயம் அவன் பேசிய வார்த்தைகளை நினைத்து மீண்டும் இறுகி போனது.
அவளின் முகத்தில் வந்து உணர்வுகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்ன டாலி இது? எதுக்கு இந்த டென்ஷன்?”என்றான்.
அவனது டாலி என்ற அழைப்பில் கடுப்பாகி “முதல்ல இந்த டாலின்னு கூப்பிடுறதை நிறுத்துங்க.என்னை பார்த்தா கேணச்சி மாதிரி தெரியுதா? என்னமோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசுறீங்க?”
அவளின் கோபம் கண்டு சற்று அயர்ந்து போய் “சரி! நான் கூப்பிடல?நான் பண்ணினது தப்புதான்.உனக்கு என்னை மன்னிக்க முடியாதுன்னு தெரியும்.இப்பவும் நான் செஞ்சதை நியாப்படுத்த முயற்சி பண்ண மாட்டேன்.ஆனா,ஒரே ஒரு சான்ஸ் எனக்குக் கொடுக்கலாமில்லை” என்றான் கெஞ்சலாக.
அவனைக் கூர்மையாகப் பார்த்தவள் “இங்கே பாருங்க, எனக்கு உங்களோட வாழ்ந்த அந்த ஆறுமாத வாழ்க்கையே ஜென்மத்துக்கும் போதும்.உங்க தப்புக்கான விளக்கம் எனக்குத் தேவையில்லை.நாம ரெண்டு பேரும் பிரியிறது தான் சரியான முடிவு.”
அவளின் பதிலில் நொந்து போனவன் மனதிற்குள் ‘நாம நினைச்ச மாதிரி சீக்கிரம் இறங்கி வர மாட்டா போலருக்கேடா! இப்போவே கண்ணைக் கட்டுதே!’ ஒருவேளை அம்மா இவளை ஏத்தி விட்டு இருப்பாங்களோ?’ என்றெண்ணி அவசரமாகத் திரும்பி காயத்ரியைப் பார்த்தான்.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவர் அவன் திரும்பி தன்னைப் பார்த்ததும் அவசரமாகத் திரும்பி அகல்யாவிடம் பேச ஆரம்பித்தார்.அதை பார்த்ததும் ‘இது நிச்சயமா
அம்மா வேலைதான்’ என்று நினைத்துக் கொண்டான்.
மெல்லிய சிரிப்புடன் அவளைப் பார்த்தவன் “உனக்குப் பயமாயிருக்குன்னு நினைக்கிறேன்.எங்கே டைம் குடுத்தா என்னைக் கண்டு மயங்கி போயிடுவோம்னு”என்றான்.
கேவலமானதொரு பார்வையை அவனுக்குப் பரிசாகத் தந்தவள் “நிறையப் படம் பார்ப்பீங்களோ?இல்ல கதைகள் படிப்பீங்களா? நான் தான் முடிவு பண்ணனும். என் மனசுக்குள்ள யார் எப்போ வரணும் என்பதை.நீங்க என்ன குட்டிகரணம் அடிச்சாலும் நடக்காது. முதலில் அதைப் புரிஞ்சுக்கோங்க.”
அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் இரு கைகளையும் உயரத் தூக்கி “சரண்டர்! கொலை குற்றவாளிக்கு கூட ஒரு வாய்ப்பு கொடுப்பாங்க தன்னை நிரூபிக்க.நான் என்ன செய்தா உன் மனசுக்குள்ள வர முடியும்னு சொல்லு? அதைச் செய்யத் தயாரா இருக்கேன்”என்றான்.
அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது பேச்சில் நெற்றி சுருங்க யோசித்து அங்குமிங்கும் நடந்தாள், பலத்த யோசனைக்குப் பிறகு “ஓகே..நான் ஒத்துகிறேன்” என்றவள் “பட் ஒன் கண்டிஷன்.இந்த டாலி, வாளின்னு எல்லாம் கொஞ்சிகிட்டு என் பின்னாடி வரக் கூடாது.நீங்க என் கண் முன்னாடியே வரக் கூடாது.நானா கூப்பிட்டு பேசும் வரை” என்றாள்.
“ஊப்ஸ்..என்றவன் ‘இதெல்லாம் பண்ணாம உன்னை எப்படி நான் கன்வின்ஸ் பண்றது?’ என்று தனக்குள்ளேயே முனகிக் கொண்டான். ‘சரி எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்துடுவோம்’ என்றெண்ணியவன் அவளின் முன்னே குனிந்து காதோரம் “தேங்க்ஸ்” என்றான்.
அவனது செய்கையில் தடுமாறி பின்னே நகர்ந்தவள் “என்ன இது!இப்போ தானே சொன்னேன்.இந்த மாதிரியெல்லாம் செஞ்சீங்கன்னா நான் வேண்டாம்னு சொல்லிட்டு போய்டுவேன்” என்றாள் ஆத்திரமாக.
“தேங்க்ஸ் தானே சொன்னேன்.அதுக்குப் போய்”
‘இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறது’ என்று முணுமுணுத்தவள் “நேரமாகலையா? சார் சொன்னதுக்கு மேல டைம் ஆச்சு” என்றவள் திரும்பி நீதிபதி அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவளுடன் இணைந்து கொண்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி “இப்போவே என்னவோ சாதிச்ச மாதிரி வரான் பாரு நீரஜ்.”
“சும்மாயிருங்கம்மா”
இருவரும் நீதிபதியிடம் அனுமதி வாங்கி உள்ளே சென்றமர்ந்தனர்.அவர்களிருவரையும் நிமிர்ந்து பார்த்தவர் “சொல்லுங்க என்ன முடிவு பண்ணுனீங்க?தீர்ப்பை கொடுக்கலாமா? இல்ல இன்னும் ஒரு மூணு மாசம் ஒத்திப் போடலாமா?” என்று கேட்டார்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை – நடந்தைதையே
நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...
நீதிபதியின் முன்பு அமர்ந்திருந்த இருவரும் இருவேறு மனநிலையில் இருந்தனர். நிகிலோ எப்படியாவது அவள் மனதை மாற்றி, தான் இழைத்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பை பெற்று அவளுடன் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தான்.
அவளோ இன்றுடன் அனைத்தும் முடிந்துவிட்டால் நிம்மதி என்ற நிலையிலிருந்தாள்.
இருவரின் முகங்களையும் ஆராய்ந்த நீதிபதி அவளிடம் “இன்னைக்குத் தீர்ப்பு கொடுக்க முடியாத நிலையிலிருக்கிறேன். அதுக்குக் காரணம் இவர். உங்களோட சேர்ந்து வாழணும்ன்னு நினைக்கிறார்.தீர்ப்பை கொஞ்ச நாள் தள்ளி போடுங்கன்னு கேட்கிறார்.”என்றவர் ஸ்ருதியின் முகத்தை ஆராய்ந்தார்.
அதுவரை இன்று முடிவுக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு, நீதிபதியின் வார்த்தைகள் அதிகக் கோபத்தை வரவழைத்தது. கண்களில் உக்கிரத்துடன் அவனைத் திரும்பி பார்த்துவிட்டு “ஆறுமாதம் சேர்ந்து வாழ்ந்த போது தோன்றாதது. இந்த ஒருவருடப் பிரிவில் தோன்றாதது, இப்போ எப்படித் தீர்ப்புக்கு முதல்நாள் இந்த எண்ணம் வந்திருக்கும்?.அதுமட்டுமில்ல துபாய்க்கு அழைச்சிட்டு போய் ஆறுமாதம் ஜெயிலில் வச்சிருந்த மாதிரி வீட்டிலேயே அடைச்சு வச்சிருந்தார். இப்போ இவரை எப்படி நான் நம்புறது சார்?”.
நிகிலின் பக்கம் திரும்பிய நீதிபதி “அவங்க கேட்கிற நியாயமான கேள்விக்குப் பதில் சொல்லுங்க. நீங்க இவங்களோட வாழணும்னு நினைக்கிறது உண்மை தானா?ஆனா, அவங்க உங்க கூட வாழ விருப்படலையே?என்ன செய்யலாம் சொல்லுங்க?”
அவர் சொன்னதைக் கேட்ட நிகில் “ப்ளீஸ் சார்..ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுக்க முடியுமா?நான் பேசி கன்வின்ஸ் பண்ணி பார்க்கிறேன்.”
அவளோ “வேண்டாம் சார்! நான் இவர் கிட்ட பேச விரும்பல.நீங்க முடிச்சு வச்சிடுங்க” என்றாள்.
இருவரையும் பார்த்தவர் நிகிலிடம் தெரிந்த தவிப்பில் சற்று யோசனை செய்தவர், “நீங்க பேசிப் பாருங்க” என்றார் முடிவாக.
அதைக் கேட்டதும் மேலும் கோபமாக நாற்காலியிலிருந்து எழுந்தவள் நிகிலை திரும்பி முறைத்துவிட்டு “நன்றி சார்” என்றுரைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.
அவளின் பின்னே வேகமாகச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி நீரஜிடம் “பார்த்தியா நீரஜ்! செஞ்ச தப்புக்கு அவ பின்னாடி நாய் குட்டி மாதிரி ஓடுறான் பாரு. இன்னைக்குத் தர்ம சாத்து இருக்கு அவனுக்கு.”
“அம்மா! இருந்தாலும் நீங்க அவனை ரொம்பவே படுத்துறீங்க” என்றான் நீரஜ்.
“நான் படுத்தலடா அவனே தான் கஷ்டப்படுத்திக்கிறான்.அழகா போயிருக்க வேண்டியதை தானே கெடுத்துகிட்டான். இப்போ அதுக்குத் தண்டனையை அனுபவிக்கிறான்.”
அறையிலிருந்து வெளியே சென்றவள் நேரே கோர்ட் வளாகத்திலிருந்த மரத்தடியில் சென்று நின்றாள்.மனதின் ஒருபக்கம் இன்று தீர்ப்பில்லை என்று நினைத்து மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதேசமயம் அவன் பேசிய வார்த்தைகளை நினைத்து மீண்டும் இறுகி போனது.
அவளின் முகத்தில் வந்து உணர்வுகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்ன டாலி இது? எதுக்கு இந்த டென்ஷன்?”என்றான்.
அவனது டாலி என்ற அழைப்பில் கடுப்பாகி “முதல்ல இந்த டாலின்னு கூப்பிடுறதை நிறுத்துங்க.என்னை பார்த்தா கேணச்சி மாதிரி தெரியுதா? என்னமோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசுறீங்க?”
அவளின் கோபம் கண்டு சற்று அயர்ந்து போய் “சரி! நான் கூப்பிடல?நான் பண்ணினது தப்புதான்.உனக்கு என்னை மன்னிக்க முடியாதுன்னு தெரியும்.இப்பவும் நான் செஞ்சதை நியாப்படுத்த முயற்சி பண்ண மாட்டேன்.ஆனா,ஒரே ஒரு சான்ஸ் எனக்குக் கொடுக்கலாமில்லை” என்றான் கெஞ்சலாக.
அவனைக் கூர்மையாகப் பார்த்தவள் “இங்கே பாருங்க, எனக்கு உங்களோட வாழ்ந்த அந்த ஆறுமாத வாழ்க்கையே ஜென்மத்துக்கும் போதும்.உங்க தப்புக்கான விளக்கம் எனக்குத் தேவையில்லை.நாம ரெண்டு பேரும் பிரியிறது தான் சரியான முடிவு.”
அவளின் பதிலில் நொந்து போனவன் மனதிற்குள் ‘நாம நினைச்ச மாதிரி சீக்கிரம் இறங்கி வர மாட்டா போலருக்கேடா! இப்போவே கண்ணைக் கட்டுதே!’ ஒருவேளை அம்மா இவளை ஏத்தி விட்டு இருப்பாங்களோ?’ என்றெண்ணி அவசரமாகத் திரும்பி காயத்ரியைப் பார்த்தான்.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவர் அவன் திரும்பி தன்னைப் பார்த்ததும் அவசரமாகத் திரும்பி அகல்யாவிடம் பேச ஆரம்பித்தார்.அதை பார்த்ததும் ‘இது நிச்சயமா
அம்மா வேலைதான்’ என்று நினைத்துக் கொண்டான்.
மெல்லிய சிரிப்புடன் அவளைப் பார்த்தவன் “உனக்குப் பயமாயிருக்குன்னு நினைக்கிறேன்.எங்கே டைம் குடுத்தா என்னைக் கண்டு மயங்கி போயிடுவோம்னு”என்றான்.
கேவலமானதொரு பார்வையை அவனுக்குப் பரிசாகத் தந்தவள் “நிறையப் படம் பார்ப்பீங்களோ?இல்ல கதைகள் படிப்பீங்களா? நான் தான் முடிவு பண்ணனும். என் மனசுக்குள்ள யார் எப்போ வரணும் என்பதை.நீங்க என்ன குட்டிகரணம் அடிச்சாலும் நடக்காது. முதலில் அதைப் புரிஞ்சுக்கோங்க.”
அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் இரு கைகளையும் உயரத் தூக்கி “சரண்டர்! கொலை குற்றவாளிக்கு கூட ஒரு வாய்ப்பு கொடுப்பாங்க தன்னை நிரூபிக்க.நான் என்ன செய்தா உன் மனசுக்குள்ள வர முடியும்னு சொல்லு? அதைச் செய்யத் தயாரா இருக்கேன்”என்றான்.
அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது பேச்சில் நெற்றி சுருங்க யோசித்து அங்குமிங்கும் நடந்தாள், பலத்த யோசனைக்குப் பிறகு “ஓகே..நான் ஒத்துகிறேன்” என்றவள் “பட் ஒன் கண்டிஷன்.இந்த டாலி, வாளின்னு எல்லாம் கொஞ்சிகிட்டு என் பின்னாடி வரக் கூடாது.நீங்க என் கண் முன்னாடியே வரக் கூடாது.நானா கூப்பிட்டு பேசும் வரை” என்றாள்.
“ஊப்ஸ்..என்றவன் ‘இதெல்லாம் பண்ணாம உன்னை எப்படி நான் கன்வின்ஸ் பண்றது?’ என்று தனக்குள்ளேயே முனகிக் கொண்டான். ‘சரி எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்துடுவோம்’ என்றெண்ணியவன் அவளின் முன்னே குனிந்து காதோரம் “தேங்க்ஸ்” என்றான்.
அவனது செய்கையில் தடுமாறி பின்னே நகர்ந்தவள் “என்ன இது!இப்போ தானே சொன்னேன்.இந்த மாதிரியெல்லாம் செஞ்சீங்கன்னா நான் வேண்டாம்னு சொல்லிட்டு போய்டுவேன்” என்றாள் ஆத்திரமாக.
“தேங்க்ஸ் தானே சொன்னேன்.அதுக்குப் போய்”
‘இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறது’ என்று முணுமுணுத்தவள் “நேரமாகலையா? சார் சொன்னதுக்கு மேல டைம் ஆச்சு” என்றவள் திரும்பி நீதிபதி அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவளுடன் இணைந்து கொண்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி “இப்போவே என்னவோ சாதிச்ச மாதிரி வரான் பாரு நீரஜ்.”
“சும்மாயிருங்கம்மா”
இருவரும் நீதிபதியிடம் அனுமதி வாங்கி உள்ளே சென்றமர்ந்தனர்.அவர்களிருவரையும் நிமிர்ந்து பார்த்தவர் “சொல்லுங்க என்ன முடிவு பண்ணுனீங்க?தீர்ப்பை கொடுக்கலாமா? இல்ல இன்னும் ஒரு மூணு மாசம் ஒத்திப் போடலாமா?” என்று கேட்டார்.