அத்தியாயம் – 8
மறுநாள் மதிய வேளையில் குஜராத்தை அடைந்திருந்தனர். பக்கவாக ஒரு கொடோவுனை தயார் செய்து சித்தார்த்தை அதில் தங்க வைத்தனர். அவனுக்கு இன்னமும் விழிப்பு வந்திருக்கவில்லை. நீரஜ் அவன் வந்த செய்தியை கேட்டதும், நேராக கிளம்பி வந்து அவன் கண் விழிப்பதற்காக காத்திருந்தார்.
அவர் வந்து ஒரு பதினைந்து நிமிடத்தில் கண்களைத் திறந்தான். தலை மிகவும் பாரமாக இருக்க, இரு கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தவனுக்கு சற்று நேரம் எதுவும் புரியவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான்.
அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு முதல்நாள் நடந்தவைகள் எல்லாம் நினைவிற்கு வர, பதறி எழுந்தவனின் பார்வையில் நீரஜ் தெரிந்தார்.
கோபமாக அவரிடம் சென்றவன் “என்ன பண்ணி வச்சிருக்கீங்க? எதுக்கு என்னை இங்கே கொண்டு வந்தீங்க?’ என்றான் எரிச்சலுடன்.
அவனது கைகளைப் பற்றி அமர வைத்தவர் “கோபப்படாதே பேட்டா. உன்னுடைய நல்லதுக்கு தான் இதை செய்தேன்” என்றார்.
அவரது கரங்களைத் தட்டிவிட்டு எழுந்து நின்றவன் “எது? என்னையும் என் மனைவியையும் பிரிப்பதா?” என்று கேட்டவன் “ஐயோ! நேத்து அவ மட்டும் அங்கே தனியா பயந்து போயிருப்பாளே” என்று நெற்றியில் அடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல முயன்றான்.
அடுத்த நிமிடம் அவனை மறைத்தபடி இருவர் வந்து நின்றனர். அதைக் கண்டதும் திரும்பி தகப்பனைப் பார்க்க அவரோ மௌனமாக இரு கைகளையும் கட்டியபடி அமர்ந்திருந்தார்.
“என்ன மனுஷன் நீங்க? இத்தனை கோடிகளை சம்பாதிச்சு நமக்கு பிடித்தமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ எதுக்கு இந்த பணம்?”
“சித்தார்த்! இங்கே வந்து உட்கார்”.
“முடியாது! என் மனைவியை என்ன பண்ணுனீங்க? அவளுக்கு ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விட மாட்டேன்”.
அவன் வர மாட்டான் என்பதால் எழுந்து அவனருகே சென்றவர் “சும்மா-சும்மா மனைவின்னு சொல்லாதே சித்தார்த். அந்தப் பெண்ணை விட்டுடு. இது நடக்காத ஒன்று”.
அவரை கூர்ந்து பார்த்தவன் “இத்தனை நாள் உங்க பாசத்துக்கு கட்டுப்பட்டு நீங்க செய்ததுக்கு எல்லாம் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். எனக்கு உங்க சொத்து, இந்த தொழில் இதெல்லாம் வேண்டாம். என் சோட்டி இருந்தா போதும். உங்களால என்னை கட்டுப்படுத்த முடியாது” என்றான் பிடிவாதமாக.
அந்நேரம் நீரஜின் முகம் இறுக “தப்பு பண்ற சித்தார்த்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் சமயம் படபடவென்று கதவு உடைபடும் சப்தம் கேட்க, வெளியிலிருந்து ஆட்கள் வேகமாக ஓடி வருவது போல தெரிந்தது.
அதைக் கண்டு உடனே காவலுக்கு இருந்த ஆட்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொள்ள, வந்தவர்களோ அவர்களை அடித்து தள்ளிவிட்டு இருவரையும் தாக்க முயன்றனர். சித்தார்த் தந்தையை தன் பின்னே வைத்துக் கொண்டு அவர்களை தடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பாராத சமயம் நீரஜின் பின்பக்கம் சென்ற ஒருவன் அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்திருந்தான். அதில் தலை உடைந்து ரத்தம் குபுக்குபுவென்று ஊற்றத் தொடங்கியது.
அதைக் கண்டதும் பதறி போனவன் தந்தையைப் பார்க்க, வந்தவர்களோ அடித்து பிடித்துக் கொண்டு வெளியேறி இருந்தனர். வலியுடன் கீழே விழுந்த நீரஜின் கண்கள் எதையோ சொல்லத் துடித்தது. தந்தையை கைகளில் தூக்கிக் கொண்டவன் காரை நோக்கி ஓடினான். காப்பாளர்களில் ஒருவன் வண்டியை எடுக்க, சித்தார்த் அவரை தன் மடியில் வைத்துக் கொண்டான்.
அவரது விழிகள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, வாயை அசைத்து எதையோ சொல்ல முயன்றார். கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. தந்தை சொல்ல வருவதை கேட்க, குனிந்தான். அவர் கஷ்டப்பட்டு ஓரிரு வார்த்தைகளை அவனிடத்தில் கூறினார். அதில் அவனது முகம் அதிர்ச்சியடைய, தந்தையை அதிர்வுடன் பார்த்தான். மேலும் அவர் விடாது பேச முயற்ச்சித்தார்.
கார் மருத்துவமனை செல்வதற்குள் சில பல விஷயங்களை அவர் சொல்லி இருந்தார். தான் கேட்டவைகளை எண்ணி அதிர்ச்சி அடைந்து அமர்ந்திருந்தான். அந்நேரம் அவர் மயக்கத்திற்கு சென்று விட்டார். மருத்துவமனை சென்றதும் அவரை அனுமதித்து விட்டு தலையை கையில் தாங்கியபடி அமர்ந்து விட்டான். அவனால் வேறு எதையுமே யோசிக்க முடியவில்லை. நீரஜை அடித்தது அவர்களது தொழில் எதிரி லாலாஜி என்பதும் தெரிந்து போனது.
அதற்குள் வீட்டிற்கு விஷயம் தெரிந்து பிம்லா தேவியும், தாதியும் வந்து விட்டிருந்தார்கள். பிம்லா தேவி முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தது. மருத்துவர் வந்து நீரஜை பார்த்து விட்டு இருபத்தி நான்கு மணி நேரம் தாண்ட வேண்டும் என்று விட்டார்.
தாதியோ பேரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு மகனை எண்ணி கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தார். அப்போது அங்கே வந்த பிம்லா “சித்து! கிளம்பு! கம்பனி போர்ட் மீட்டிங் அரேஞ் பண்ணியாகணும்” என்றார்.
அதில் அதிர்ந்து அன்னையைப் பார்த்தவன் “மா! பப்பாவுக்கு நினைவு திரும்பியதும் அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றான் கோபமாக.
அவரோ அவனை முறைத்து “லுக் சித்து! அவருக்கு நினைவு திரும்புமா என்பது சந்தேகம். முதல்ல உயிர் இருக்குமா என்பதே சந்தேகம் என்பது போல சொல்றாங்க டாக்டர்ஸ். சோ நாம இப்போ கம்பனியில் முக்கிய முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்”.
மறுநாள் மதிய வேளையில் குஜராத்தை அடைந்திருந்தனர். பக்கவாக ஒரு கொடோவுனை தயார் செய்து சித்தார்த்தை அதில் தங்க வைத்தனர். அவனுக்கு இன்னமும் விழிப்பு வந்திருக்கவில்லை. நீரஜ் அவன் வந்த செய்தியை கேட்டதும், நேராக கிளம்பி வந்து அவன் கண் விழிப்பதற்காக காத்திருந்தார்.
அவர் வந்து ஒரு பதினைந்து நிமிடத்தில் கண்களைத் திறந்தான். தலை மிகவும் பாரமாக இருக்க, இரு கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தவனுக்கு சற்று நேரம் எதுவும் புரியவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான்.
அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு முதல்நாள் நடந்தவைகள் எல்லாம் நினைவிற்கு வர, பதறி எழுந்தவனின் பார்வையில் நீரஜ் தெரிந்தார்.
கோபமாக அவரிடம் சென்றவன் “என்ன பண்ணி வச்சிருக்கீங்க? எதுக்கு என்னை இங்கே கொண்டு வந்தீங்க?’ என்றான் எரிச்சலுடன்.
அவனது கைகளைப் பற்றி அமர வைத்தவர் “கோபப்படாதே பேட்டா. உன்னுடைய நல்லதுக்கு தான் இதை செய்தேன்” என்றார்.
அவரது கரங்களைத் தட்டிவிட்டு எழுந்து நின்றவன் “எது? என்னையும் என் மனைவியையும் பிரிப்பதா?” என்று கேட்டவன் “ஐயோ! நேத்து அவ மட்டும் அங்கே தனியா பயந்து போயிருப்பாளே” என்று நெற்றியில் அடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல முயன்றான்.
அடுத்த நிமிடம் அவனை மறைத்தபடி இருவர் வந்து நின்றனர். அதைக் கண்டதும் திரும்பி தகப்பனைப் பார்க்க அவரோ மௌனமாக இரு கைகளையும் கட்டியபடி அமர்ந்திருந்தார்.
“என்ன மனுஷன் நீங்க? இத்தனை கோடிகளை சம்பாதிச்சு நமக்கு பிடித்தமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ எதுக்கு இந்த பணம்?”
“சித்தார்த்! இங்கே வந்து உட்கார்”.
“முடியாது! என் மனைவியை என்ன பண்ணுனீங்க? அவளுக்கு ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விட மாட்டேன்”.
அவன் வர மாட்டான் என்பதால் எழுந்து அவனருகே சென்றவர் “சும்மா-சும்மா மனைவின்னு சொல்லாதே சித்தார்த். அந்தப் பெண்ணை விட்டுடு. இது நடக்காத ஒன்று”.
அவரை கூர்ந்து பார்த்தவன் “இத்தனை நாள் உங்க பாசத்துக்கு கட்டுப்பட்டு நீங்க செய்ததுக்கு எல்லாம் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். எனக்கு உங்க சொத்து, இந்த தொழில் இதெல்லாம் வேண்டாம். என் சோட்டி இருந்தா போதும். உங்களால என்னை கட்டுப்படுத்த முடியாது” என்றான் பிடிவாதமாக.
அந்நேரம் நீரஜின் முகம் இறுக “தப்பு பண்ற சித்தார்த்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் சமயம் படபடவென்று கதவு உடைபடும் சப்தம் கேட்க, வெளியிலிருந்து ஆட்கள் வேகமாக ஓடி வருவது போல தெரிந்தது.
அதைக் கண்டு உடனே காவலுக்கு இருந்த ஆட்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொள்ள, வந்தவர்களோ அவர்களை அடித்து தள்ளிவிட்டு இருவரையும் தாக்க முயன்றனர். சித்தார்த் தந்தையை தன் பின்னே வைத்துக் கொண்டு அவர்களை தடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பாராத சமயம் நீரஜின் பின்பக்கம் சென்ற ஒருவன் அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்திருந்தான். அதில் தலை உடைந்து ரத்தம் குபுக்குபுவென்று ஊற்றத் தொடங்கியது.
அதைக் கண்டதும் பதறி போனவன் தந்தையைப் பார்க்க, வந்தவர்களோ அடித்து பிடித்துக் கொண்டு வெளியேறி இருந்தனர். வலியுடன் கீழே விழுந்த நீரஜின் கண்கள் எதையோ சொல்லத் துடித்தது. தந்தையை கைகளில் தூக்கிக் கொண்டவன் காரை நோக்கி ஓடினான். காப்பாளர்களில் ஒருவன் வண்டியை எடுக்க, சித்தார்த் அவரை தன் மடியில் வைத்துக் கொண்டான்.
அவரது விழிகள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, வாயை அசைத்து எதையோ சொல்ல முயன்றார். கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. தந்தை சொல்ல வருவதை கேட்க, குனிந்தான். அவர் கஷ்டப்பட்டு ஓரிரு வார்த்தைகளை அவனிடத்தில் கூறினார். அதில் அவனது முகம் அதிர்ச்சியடைய, தந்தையை அதிர்வுடன் பார்த்தான். மேலும் அவர் விடாது பேச முயற்ச்சித்தார்.
கார் மருத்துவமனை செல்வதற்குள் சில பல விஷயங்களை அவர் சொல்லி இருந்தார். தான் கேட்டவைகளை எண்ணி அதிர்ச்சி அடைந்து அமர்ந்திருந்தான். அந்நேரம் அவர் மயக்கத்திற்கு சென்று விட்டார். மருத்துவமனை சென்றதும் அவரை அனுமதித்து விட்டு தலையை கையில் தாங்கியபடி அமர்ந்து விட்டான். அவனால் வேறு எதையுமே யோசிக்க முடியவில்லை. நீரஜை அடித்தது அவர்களது தொழில் எதிரி லாலாஜி என்பதும் தெரிந்து போனது.
அதற்குள் வீட்டிற்கு விஷயம் தெரிந்து பிம்லா தேவியும், தாதியும் வந்து விட்டிருந்தார்கள். பிம்லா தேவி முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தது. மருத்துவர் வந்து நீரஜை பார்த்து விட்டு இருபத்தி நான்கு மணி நேரம் தாண்ட வேண்டும் என்று விட்டார்.
தாதியோ பேரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு மகனை எண்ணி கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தார். அப்போது அங்கே வந்த பிம்லா “சித்து! கிளம்பு! கம்பனி போர்ட் மீட்டிங் அரேஞ் பண்ணியாகணும்” என்றார்.
அதில் அதிர்ந்து அன்னையைப் பார்த்தவன் “மா! பப்பாவுக்கு நினைவு திரும்பியதும் அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றான் கோபமாக.
அவரோ அவனை முறைத்து “லுக் சித்து! அவருக்கு நினைவு திரும்புமா என்பது சந்தேகம். முதல்ல உயிர் இருக்குமா என்பதே சந்தேகம் என்பது போல சொல்றாங்க டாக்டர்ஸ். சோ நாம இப்போ கம்பனியில் முக்கிய முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்”.