அத்தியாயம் – 7
அடுத்து வந்த நாட்கள் குணாவிற்கு வீட்டில் பெரும் போராட்டமாக இருந்தது. வசந்தி ஏடாகூடமாகவே எல்லாம் செய்து கொண்டிருந்தாள். கல்யாணி ஒதுங்கிப் போனாலும் தானாகவே சென்று அவரிடம் வம்பு வளர்த்தாள்.
இந்தக் கொடுமை எல்லாம் பார்க்க முடியாமல் அர்ஜுன் வீட்டில் இருப்பதையே குறைத்துக் கொண்டான், என்ன பேசினாலும் எது பேசினாலும் அது சண்டையில் தான் முடிந்தது.
அவளை ஏன் அழைத்து வந்தோம் என்று எண்ணும் அளவிற்கு மனம் நொந்து போனான். குழந்தை மட்டுமே ஆசுவாசத்தைக் கொடுத்தது. துப்பறியும் நிர்வாணம் கொடுத்த பத்து நாட்களும் இப்படியே சென்றது.
அன்று கடையில் இருக்கும் நேரம் அங்கிருந்து குணாவிற்கு போன் வந்தது. உடனே வந்து தங்களை பார்க்கும்படியும், அவர்களுக்கு கொடுத்திருந்த வேலையை முடித்து விட்டதாகவும் கூறினார்கள். அதைக் கேட்டதும் குணாவிற்கு உள்ளுக்குள் படபடப்பும் பதற்றமும் எழுந்தது. தன்னை மெல்ல சுதாரித்துக் கொண்டவன் அர்ஜுனை அழைத்து விஷயத்தைச் சொல்லி, உடனே கிளம்பி வரும்படி சொல்லிவிட்டு வைத்து விட்டான்.
அர்ஜுனுக்கும் கயலின் இருப்பிடம் தெரியப் போகிறது என்று தெரிந்ததும் டென்ஷன் ஆகிவிட்டது. உடனே சுடரை அழைத்து செய்தியை பகிர்ந்து கொண்டான். தானும் வருவதாக அவள் சொல்லிவிட, பலத்த சிந்தனையுடன் மூவரும் அங்கு கிளம்பிச் சென்றார்கள்.
ஒரு பத்து நிமிடங்கள் வித்தியாசத்தில் வந்து சேர்ந்திருக்க, அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர். உள்ளுக்குள் இருந்த பதற்றத்தை மறைத்துக் கொண்டு அர்ஜுன் தான் கேட்டான்.
“கயல் இருக்கும் இடம் தெரிஞ்சிடுச்சா சார்?”
எதிரே இருந்தவர்களின் உணர்வுகளைப் படித்தபடி “ம்ம்...தஞ்சாவூரில் இருக்காங்க” என்று தலையசைத்தார்.
அதைக் கேட்டதும் சந்தோஷப்படுவதா அடுத்து என்ன கேட்பது என்கிற சிந்தனைகள் தான் ஓடியது.
அவர்களின் நிலையை உணர்ந்தவர் தன்னிடம் இருந்த பைலை அவர்களின் முன்னே தள்ளி வைத்தார்.
“இதுல எல்லா தகவல்களும் இருக்கு. பாருங்க!”
குணாவிற்கு கைகள் நடுங்கியது அதை எடுத்துப் பார்க்க. அதை கவனித்த அர்ஜுன் வேகமாக எடுத்து திறந்துப் பார்த்து படிக்க ஆரம்பித்தான்.
கையிலிருந்த பைலை படிக்க-படிக்க அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் தான் ஓடியது. தாங்கள் ஒன்று நினைத்திருக்க, அங்கே அவர்களின் கேள்விகளுக்கான எந்த விடையும் அதில் இல்லை.
சற்றே தைரியத்துடன் அர்ஜுனின் கைகளில் இருந்த பைலை வாங்கி குணாவும் படிக்க, அவனுக்கும் எதுவும் புரியவில்லை. கயலும் படித்து முடித்திருக்க அவள் மனதிலும் ஆயிரம் கேள்விகள்.
எதிரே இருந்தவர் “அவங்க எங்கே போனாங்க என்ன என்று எல்லாமே கண்டுபிடிச்சிட்டோம். ஆனால் அதற்க்கான காரணங்களை அவங்க தான் சொல்லணும். நீங்க எங்களுக்கு கொடுத்த வேலையை சரியா செஞ்சு முடிச்சிட்டோம். இப்போ அவங்க பாதுகாப்பா தஞ்சாவூரில் இருக்காங்க. அந்த அட்ரஸ் கூட கொடுத்திருக்கோம்”.
மூவருக்கும் உணர்ச்சிகளின் வெள்ளத்தில் இருந்தனர். கண்ணை கட்டி காட்டில் விட்டது போல அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வழித்தடம் கிடைத்திருக்கிறது. கயல் இருக்குமிடம் தெரிந்து விட்டது. இனி, மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் எழுந்தது.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்தனர். கீழே வந்து நின்றவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி செய்தது.
சுடர் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
“லவ் பண்ணி தானே போனான்னு சொன்னாங்க. ஆனா யார் வீட்டிலேயோ இருக்காளே. அது ஏன்? என்ன நடந்திருக்கும்?”
“ஒருவேளை அவன் விட்டுட்டுப் போயிட்டானோ?” என்று சொன்னவனின் குரலில் நடுக்கம் இருந்தது.
“இருக்காதுடா! அப்படி எல்லாம் இருக்காது” என்றான் வேகமாக குணா.
“அப்புறம் ஏன் யார் வீட்டிலோ இருக்கா?”
“நம்ம கிட்ட ஏன் திரும்பி வரல? என்று மூவரும் மாறி மாறி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
“இப்படியே பேசிக் கொண்டிருந்தா சரி வராது. நான் போய் பார்த்து அவளை கூட்டிட்டு வரேன்” என்றான் அர்ஜுன்.
“அவள் வர விருப்பபடலேன்னா?” என்று கேட்டு அவன் பிபியை ஏற்றினாள் சுடர்.
“லூசு மாதிரி பேசாதே சுடர்”.
குணா சற்று நிதானமாக “எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு அர்ஜுன்”.
அடுத்து வந்த நாட்கள் குணாவிற்கு வீட்டில் பெரும் போராட்டமாக இருந்தது. வசந்தி ஏடாகூடமாகவே எல்லாம் செய்து கொண்டிருந்தாள். கல்யாணி ஒதுங்கிப் போனாலும் தானாகவே சென்று அவரிடம் வம்பு வளர்த்தாள்.
இந்தக் கொடுமை எல்லாம் பார்க்க முடியாமல் அர்ஜுன் வீட்டில் இருப்பதையே குறைத்துக் கொண்டான், என்ன பேசினாலும் எது பேசினாலும் அது சண்டையில் தான் முடிந்தது.
அவளை ஏன் அழைத்து வந்தோம் என்று எண்ணும் அளவிற்கு மனம் நொந்து போனான். குழந்தை மட்டுமே ஆசுவாசத்தைக் கொடுத்தது. துப்பறியும் நிர்வாணம் கொடுத்த பத்து நாட்களும் இப்படியே சென்றது.
அன்று கடையில் இருக்கும் நேரம் அங்கிருந்து குணாவிற்கு போன் வந்தது. உடனே வந்து தங்களை பார்க்கும்படியும், அவர்களுக்கு கொடுத்திருந்த வேலையை முடித்து விட்டதாகவும் கூறினார்கள். அதைக் கேட்டதும் குணாவிற்கு உள்ளுக்குள் படபடப்பும் பதற்றமும் எழுந்தது. தன்னை மெல்ல சுதாரித்துக் கொண்டவன் அர்ஜுனை அழைத்து விஷயத்தைச் சொல்லி, உடனே கிளம்பி வரும்படி சொல்லிவிட்டு வைத்து விட்டான்.
அர்ஜுனுக்கும் கயலின் இருப்பிடம் தெரியப் போகிறது என்று தெரிந்ததும் டென்ஷன் ஆகிவிட்டது. உடனே சுடரை அழைத்து செய்தியை பகிர்ந்து கொண்டான். தானும் வருவதாக அவள் சொல்லிவிட, பலத்த சிந்தனையுடன் மூவரும் அங்கு கிளம்பிச் சென்றார்கள்.
ஒரு பத்து நிமிடங்கள் வித்தியாசத்தில் வந்து சேர்ந்திருக்க, அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர். உள்ளுக்குள் இருந்த பதற்றத்தை மறைத்துக் கொண்டு அர்ஜுன் தான் கேட்டான்.
“கயல் இருக்கும் இடம் தெரிஞ்சிடுச்சா சார்?”
எதிரே இருந்தவர்களின் உணர்வுகளைப் படித்தபடி “ம்ம்...தஞ்சாவூரில் இருக்காங்க” என்று தலையசைத்தார்.
அதைக் கேட்டதும் சந்தோஷப்படுவதா அடுத்து என்ன கேட்பது என்கிற சிந்தனைகள் தான் ஓடியது.
அவர்களின் நிலையை உணர்ந்தவர் தன்னிடம் இருந்த பைலை அவர்களின் முன்னே தள்ளி வைத்தார்.
“இதுல எல்லா தகவல்களும் இருக்கு. பாருங்க!”
குணாவிற்கு கைகள் நடுங்கியது அதை எடுத்துப் பார்க்க. அதை கவனித்த அர்ஜுன் வேகமாக எடுத்து திறந்துப் பார்த்து படிக்க ஆரம்பித்தான்.
கையிலிருந்த பைலை படிக்க-படிக்க அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் தான் ஓடியது. தாங்கள் ஒன்று நினைத்திருக்க, அங்கே அவர்களின் கேள்விகளுக்கான எந்த விடையும் அதில் இல்லை.
சற்றே தைரியத்துடன் அர்ஜுனின் கைகளில் இருந்த பைலை வாங்கி குணாவும் படிக்க, அவனுக்கும் எதுவும் புரியவில்லை. கயலும் படித்து முடித்திருக்க அவள் மனதிலும் ஆயிரம் கேள்விகள்.
எதிரே இருந்தவர் “அவங்க எங்கே போனாங்க என்ன என்று எல்லாமே கண்டுபிடிச்சிட்டோம். ஆனால் அதற்க்கான காரணங்களை அவங்க தான் சொல்லணும். நீங்க எங்களுக்கு கொடுத்த வேலையை சரியா செஞ்சு முடிச்சிட்டோம். இப்போ அவங்க பாதுகாப்பா தஞ்சாவூரில் இருக்காங்க. அந்த அட்ரஸ் கூட கொடுத்திருக்கோம்”.
மூவருக்கும் உணர்ச்சிகளின் வெள்ளத்தில் இருந்தனர். கண்ணை கட்டி காட்டில் விட்டது போல அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வழித்தடம் கிடைத்திருக்கிறது. கயல் இருக்குமிடம் தெரிந்து விட்டது. இனி, மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் எழுந்தது.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்தனர். கீழே வந்து நின்றவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி செய்தது.
சுடர் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
“லவ் பண்ணி தானே போனான்னு சொன்னாங்க. ஆனா யார் வீட்டிலேயோ இருக்காளே. அது ஏன்? என்ன நடந்திருக்கும்?”
“ஒருவேளை அவன் விட்டுட்டுப் போயிட்டானோ?” என்று சொன்னவனின் குரலில் நடுக்கம் இருந்தது.
“இருக்காதுடா! அப்படி எல்லாம் இருக்காது” என்றான் வேகமாக குணா.
“அப்புறம் ஏன் யார் வீட்டிலோ இருக்கா?”
“நம்ம கிட்ட ஏன் திரும்பி வரல? என்று மூவரும் மாறி மாறி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
“இப்படியே பேசிக் கொண்டிருந்தா சரி வராது. நான் போய் பார்த்து அவளை கூட்டிட்டு வரேன்” என்றான் அர்ஜுன்.
“அவள் வர விருப்பபடலேன்னா?” என்று கேட்டு அவன் பிபியை ஏற்றினாள் சுடர்.
“லூசு மாதிரி பேசாதே சுடர்”.
குணா சற்று நிதானமாக “எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு அர்ஜுன்”.