அன்று வழக்கம் போல் கோயிலுக்கு சென்ற போது, அரசு அதிகாரிகள் சிலர் பரப்பரப்பாக ஓடுவதும் வருவதுமாக இருக்க, வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசாங்க வாகனத்தை பார்த்த அவள் கண்களோ ஆரிஃபை தேடியது.
சாமி தரிசனம் முடிந்து பிரகாரத்தை சுற்றி வரும் போது, இரும்புக் கம்பிகளால் ஆன கதவைத் தாண்டி, ஒரு கையை பேன்ட் பாக்கெட்டிலும், மறுக்கையின் விரல்களால் செல்ஃபோனில் ஏதோ டைப் பண்ணியபடியும், தூணில் சாய்ந்து நின்றவனை பார்த்ததும், உடலெங்கும் சிலிர்ப்பு ஓடி மறைய, தனக்குள் ஏற்படும் மாற்றத்தை எண்ணி வியந்தவாறு, அவன் கண்களில் இருந்து மறைவதற்காக சட்டென்று ஒரு தூணில் சாய்ந்து நின்றாள்.
‘இவ்வளவு நேரமும் அவனை தேடிய மனது ஏன் இப்படி?’ என்று புரியவில்லை அவளுக்கு. தன்னை மீறி அரும்பிய புன்னகையுடன் சுய சிந்தனையில் இருந்தவளை அவள் கைபேசியின் அதிர்வு நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
ஆரிஃப் குறுஞ்செய்தி அனுப்பியதாக பேசியின் திரைச் சொல்ல, அதை படிப்பதற்குள், அவளுக்குள் படபடப்பு.
“ஹோய்! இங்கே வா” இவ்வளவு தான். தமிழில் தான் இருந்தது.
இவன் எப்போது என்னைப் பார்த்தான்? ஏனோ அவன் அருகில் செல்ல தயக்கமாக இருந்தது.
பிரம்மன் திருக்கோயிலில் இருபது வருடங்களுக்கு பின், பல தடைகளை மீறி, இன்று கலெக்டர், தாசில்தார், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் உண்டியலை திறந்தனர்.
ஹர்ஷிதா அந்த தூணின் மறைவிலிருந்து வெளியே வந்து அவனைப் பார்த்தாள். அவன் இவளைப் பார்க்க வில்லை. கைபேசியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஹர்ஷி!!!! இது உனக்கு பழக்கமான கோயில். சுற்றி நிற்பவர்களில் பாதிபேர் உனக்கு சொந்தகாரர்களாகக் கூட இருக்கலாம். பயப்படாமல் வா” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, நிமிர்ந்து அவளைப் பார்த்து சிறு புன்னகையை சிந்திவிட்டு, தன் அருகில் நின்ற அதிகாரியிடம் பேச ஆரம்பித்தான்.
‘சொந்தகாரங்களை பார்த்து தான் பயமே!’ என்று முணுமுணுத்தவள், பயத்தை மீறி அவனோடு பேச வேண்டும் என்ற ஆவல் அதிகமாக, அவனை நோக்கிச் சென்றாள். அவன் அருகில் நின்றிருந்த அதிகாரியே இவளுக்காக வந்து கதவை திறந்து விட்டார்.
சல்லடை வைத்தும், ஒருபுறம் நோட்டுக்களை எண்ணிக் கொண்டும், ஃபாரீன் கரன்ஸிகளை சரிப் பார்த்துக் கொண்டும் இருந்தவர்கள் மேல் இருவர் கண்களும் இருந்தாலும், அருகருகே நின்றிருந்த இருவர் எண்ணங்களும் மற்றவர்களை சுற்றியே வந்தது. முதலில் அந்த மௌனத்தை கலைத்தது ஹர்ஷிதா தான்.
சாமி தரிசனம் முடிந்து பிரகாரத்தை சுற்றி வரும் போது, இரும்புக் கம்பிகளால் ஆன கதவைத் தாண்டி, ஒரு கையை பேன்ட் பாக்கெட்டிலும், மறுக்கையின் விரல்களால் செல்ஃபோனில் ஏதோ டைப் பண்ணியபடியும், தூணில் சாய்ந்து நின்றவனை பார்த்ததும், உடலெங்கும் சிலிர்ப்பு ஓடி மறைய, தனக்குள் ஏற்படும் மாற்றத்தை எண்ணி வியந்தவாறு, அவன் கண்களில் இருந்து மறைவதற்காக சட்டென்று ஒரு தூணில் சாய்ந்து நின்றாள்.
‘இவ்வளவு நேரமும் அவனை தேடிய மனது ஏன் இப்படி?’ என்று புரியவில்லை அவளுக்கு. தன்னை மீறி அரும்பிய புன்னகையுடன் சுய சிந்தனையில் இருந்தவளை அவள் கைபேசியின் அதிர்வு நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
ஆரிஃப் குறுஞ்செய்தி அனுப்பியதாக பேசியின் திரைச் சொல்ல, அதை படிப்பதற்குள், அவளுக்குள் படபடப்பு.
“ஹோய்! இங்கே வா” இவ்வளவு தான். தமிழில் தான் இருந்தது.
இவன் எப்போது என்னைப் பார்த்தான்? ஏனோ அவன் அருகில் செல்ல தயக்கமாக இருந்தது.
பிரம்மன் திருக்கோயிலில் இருபது வருடங்களுக்கு பின், பல தடைகளை மீறி, இன்று கலெக்டர், தாசில்தார், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் உண்டியலை திறந்தனர்.
ஹர்ஷிதா அந்த தூணின் மறைவிலிருந்து வெளியே வந்து அவனைப் பார்த்தாள். அவன் இவளைப் பார்க்க வில்லை. கைபேசியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஹர்ஷி!!!! இது உனக்கு பழக்கமான கோயில். சுற்றி நிற்பவர்களில் பாதிபேர் உனக்கு சொந்தகாரர்களாகக் கூட இருக்கலாம். பயப்படாமல் வா” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, நிமிர்ந்து அவளைப் பார்த்து சிறு புன்னகையை சிந்திவிட்டு, தன் அருகில் நின்ற அதிகாரியிடம் பேச ஆரம்பித்தான்.
‘சொந்தகாரங்களை பார்த்து தான் பயமே!’ என்று முணுமுணுத்தவள், பயத்தை மீறி அவனோடு பேச வேண்டும் என்ற ஆவல் அதிகமாக, அவனை நோக்கிச் சென்றாள். அவன் அருகில் நின்றிருந்த அதிகாரியே இவளுக்காக வந்து கதவை திறந்து விட்டார்.
சல்லடை வைத்தும், ஒருபுறம் நோட்டுக்களை எண்ணிக் கொண்டும், ஃபாரீன் கரன்ஸிகளை சரிப் பார்த்துக் கொண்டும் இருந்தவர்கள் மேல் இருவர் கண்களும் இருந்தாலும், அருகருகே நின்றிருந்த இருவர் எண்ணங்களும் மற்றவர்களை சுற்றியே வந்தது. முதலில் அந்த மௌனத்தை கலைத்தது ஹர்ஷிதா தான்.