அத்தியாயம் - 7
தேவேந்திரன் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டார். என்ன காரியத்தை செய்து வைத்திருக்கிறாள் மகள் என்று எண்ணி நொந்து போனார். இது அனைவருக்கும் தெரியும் போது எத்தனை தலைகுனிவு. தனக்கு அடுத்து தங்கை ஒருத்தி இருக்கிறாளே என்று கூட எண்ணாமல் குடும்ப மானத்தை குழி தோண்டி புதைத்திருக்கிறாளே. தன் மகள் இப்படியொரு காரியத்தை செய்வாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வர்ஷுவின் அன்னையோ தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். தான்யாவிற்கு அவர்களிடம் பேசவே பயமாக இருந்தது. இப்போது தான் எது பேசினாலும் தவறாக தெரியும் என்பதால் கண்ணீருடன் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள்.
தேவேந்திரனோ முகமும் உடலும் இறுகிப் போய் அமர்ந்திருந்தார். அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மூச்சுக்கு போராடுபவரை போல தவித்தபடி இருந்தார். தான்யா தான் மெல்ல “அப்பா! அக்காவை கூட்டிட்டு வந்துடுவோம்” என்றாள்.
சட்டென்று நிமிர்ந்து அவளை முறைத்தவர் “வேண்டாம்! போனவ போனவளாவே இருக்கட்டும். சாந்தி! போய் வெந்நீர் போடு. எல்லோரும் தலைமுழுகுவோம்” என்றார் அதட்டலாக.
அதைக் கேட்டு அதிர்ந்து போன தான்யா அன்னையைப் பார்க்க அவருக்குமே கணவரின் பேச்சில் அதிர்ச்சி தான்.
“என்னங்க!”
உதட்டருகே விரலை வைத்து “ஷ்! ஒரு வார்த்தை பேசாதே! எப்போ படி தாண்டி வீட்டை விட்டுப் போனாளோ இனி அவளுக்கு இங்கே இடமில்லை” என்றார் அழுத்தமாக.
தான்யாவோ மனதிற்குள் ‘ஐயோ! அக்கா!’ என்று அலறிக் கொண்டிருந்தாள்.
சாந்தியோ கண்ணீரை மறந்து “என்னங்க! இது சரியில்லைங்க! அவ கஷ்டத்தில் இருக்காங்க. நாம போய் கூட்டிட்டு வந்துட்டு எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம்” என்றார் கெஞ்சலாக.
அவரை கடுமையாக முறைத்து “பொத்தி-பொத்தி வளர்த்த நம்மள தூக்கி போட்டுட்டு போனவளை நாம எதுக்கு பாதுக்காக்கனும்?”.
“வேண்டாங்க! என்ன இருந்தாலும் வயசு பொண்ணுங்க. அந்த பையனும் இல்லேன்னு சொல்றா. எனக்கு பயமா இருக்குங்க. நாடு இருக்கிற நிலைமைக்கு சின்ன பெண்ணை தெரிஞ்சே விடக் கூடாதுங்க” என்றார் கெஞ்சலாக.
ஆங்காரத்துடன் “சீரழிஞ்சு போகட்டும். பெத்தவங்களோட அன்பு, பாதுக்காப்பு எதுக்குன்னே புரியாம அப்படி என்ன காதல் வேண்டி இருக்கு. அவனை நம்பி போனாளே, ஒரு நாள் கூட இல்லாம விட்டுட்டு ஓடி போயிட்டான். இது தான் நிதர்சனம். வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கட்டும்”.
அவரின் பதிலில் அரண்டு போனவர் “என்னங்க! என்ன இருந்தாலும் அவ நம்ம பொண்ணுங்க. தயவு செய்து வாங்க போய் கூட்டிட்டு வந்துடுவோம்” என்றார் கெஞ்சலாக.
மனைவியை அடிக்க ஓங்கிக் கொண்டு சென்றவர் ‘சை’ என்று விட்டு நாற்காலியில் அமர்ந்து விட்டார். அதுவரை அமைதியாக இருந்த தான்யாவும் தந்தையின் அருகே சென்று “அப்பா! ப்ளீஸ்! பா” என்றாள் கெஞ்சலாக.
மகள் தங்களை ஏமாற்றி விட்டாள் என்கிற கோபத்தில் இருந்தவருக்கு அவளின் கெஞ்சலான குரலும் மீண்டும்- மீண்டும் காதில் ஒலித்தது. தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்த மகளின் குரலில் இருந்த பயம் அவரை அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு கிளம்ப செய்தது.
“சரி கிளம்பு” என்று எழுந்து கொண்டார்.
அவசரமாக இருவரும் கண்களைத் துடைத்துக் கொண்டு கிளம்ப “அந்த சனியன் எங்கே இருக்குன்னு கேளு?” என்றார் தான்யாவிடம்.
“எனக்கு லொகேஷன் அனுப்பி இருக்காப்பா” என்றாள் மெல்லிய குரலில்.
அதுவரை அடங்கி இருந்த கோபம் மீண்டும் எழ அவளை முறைத்து “உனக்கு இது முன்னமே தெரியுமா? நீயும் சேர்ந்து தான் என்கிட்டே மறைச்சியா?” என்றார் அவளை மிரட்டும் வகையில்.
அதைக் கண்டு நடுக்கத்துடன் “இல்ல...இல்லப்பா! எனக்கு எதுவும் தெரியாது” என்றாள் பயத்துடன்.
“ம்ம்..”என்று உறுமலாக சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார். தாயும், மகளும் எதுவும் பேசாமல் அவசரமாக ஓடிச் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டனர். அவர்களின் கார் வீட்டை விட்டு வெளியேறும் நேரம், அதை படமெடுத்து அனுப்பினான் ஒருவன். அவர்களை பின்தொடர ஆரம்பித்தது மற்றொரு கார். இது எதையுமே அறியாமல் மகள் மீது இருந்த எரிச்சலில் காரை ஒட்டிக் கொண்டிருந்தார் தேவேந்திரன்.
பின்தொடர்ந்து சென்ற காரில் இருந்தவர்களுக்கு சில பல செய்திகள் வந்து கொண்டே இருந்தது. சுமார் இரேண்டரை மணி நேரம் பயணித்து வர்ஷினி இருக்கும் இடத்திற்கு சென்றடைந்தார்கள்.
அவளோ வீட்டின் கதவடைத்துக் கொண்டு இருளில் பயந்தவண்ணம் அமர்ந்திருந்தாள். அவர்கள் வந்து கதவை தட்டவும் பயந்து போனவள் “யா...யாரு” என்றாள்.
மகளின் மீது இருந்த கடுப்பில் “உங்கப்பன்” என்றார்.
தந்தையின் குரல் கேட்டதும் படாரென்று கதவை திறந்து கொண்டு வந்தவள் பாய்ந்து சென்று தந்தையின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“என்னை மன்னிச்சிடுங்க அப்பா! நான் தப்பு பண்ணிட்டேன் அப்பா” என்று கதற ஆரம்பித்தாள்.
தேவேந்திரன் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டார். என்ன காரியத்தை செய்து வைத்திருக்கிறாள் மகள் என்று எண்ணி நொந்து போனார். இது அனைவருக்கும் தெரியும் போது எத்தனை தலைகுனிவு. தனக்கு அடுத்து தங்கை ஒருத்தி இருக்கிறாளே என்று கூட எண்ணாமல் குடும்ப மானத்தை குழி தோண்டி புதைத்திருக்கிறாளே. தன் மகள் இப்படியொரு காரியத்தை செய்வாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வர்ஷுவின் அன்னையோ தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். தான்யாவிற்கு அவர்களிடம் பேசவே பயமாக இருந்தது. இப்போது தான் எது பேசினாலும் தவறாக தெரியும் என்பதால் கண்ணீருடன் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள்.
தேவேந்திரனோ முகமும் உடலும் இறுகிப் போய் அமர்ந்திருந்தார். அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மூச்சுக்கு போராடுபவரை போல தவித்தபடி இருந்தார். தான்யா தான் மெல்ல “அப்பா! அக்காவை கூட்டிட்டு வந்துடுவோம்” என்றாள்.
சட்டென்று நிமிர்ந்து அவளை முறைத்தவர் “வேண்டாம்! போனவ போனவளாவே இருக்கட்டும். சாந்தி! போய் வெந்நீர் போடு. எல்லோரும் தலைமுழுகுவோம்” என்றார் அதட்டலாக.
அதைக் கேட்டு அதிர்ந்து போன தான்யா அன்னையைப் பார்க்க அவருக்குமே கணவரின் பேச்சில் அதிர்ச்சி தான்.
“என்னங்க!”
உதட்டருகே விரலை வைத்து “ஷ்! ஒரு வார்த்தை பேசாதே! எப்போ படி தாண்டி வீட்டை விட்டுப் போனாளோ இனி அவளுக்கு இங்கே இடமில்லை” என்றார் அழுத்தமாக.
தான்யாவோ மனதிற்குள் ‘ஐயோ! அக்கா!’ என்று அலறிக் கொண்டிருந்தாள்.
சாந்தியோ கண்ணீரை மறந்து “என்னங்க! இது சரியில்லைங்க! அவ கஷ்டத்தில் இருக்காங்க. நாம போய் கூட்டிட்டு வந்துட்டு எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம்” என்றார் கெஞ்சலாக.
அவரை கடுமையாக முறைத்து “பொத்தி-பொத்தி வளர்த்த நம்மள தூக்கி போட்டுட்டு போனவளை நாம எதுக்கு பாதுக்காக்கனும்?”.
“வேண்டாங்க! என்ன இருந்தாலும் வயசு பொண்ணுங்க. அந்த பையனும் இல்லேன்னு சொல்றா. எனக்கு பயமா இருக்குங்க. நாடு இருக்கிற நிலைமைக்கு சின்ன பெண்ணை தெரிஞ்சே விடக் கூடாதுங்க” என்றார் கெஞ்சலாக.
ஆங்காரத்துடன் “சீரழிஞ்சு போகட்டும். பெத்தவங்களோட அன்பு, பாதுக்காப்பு எதுக்குன்னே புரியாம அப்படி என்ன காதல் வேண்டி இருக்கு. அவனை நம்பி போனாளே, ஒரு நாள் கூட இல்லாம விட்டுட்டு ஓடி போயிட்டான். இது தான் நிதர்சனம். வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கட்டும்”.
அவரின் பதிலில் அரண்டு போனவர் “என்னங்க! என்ன இருந்தாலும் அவ நம்ம பொண்ணுங்க. தயவு செய்து வாங்க போய் கூட்டிட்டு வந்துடுவோம்” என்றார் கெஞ்சலாக.
மனைவியை அடிக்க ஓங்கிக் கொண்டு சென்றவர் ‘சை’ என்று விட்டு நாற்காலியில் அமர்ந்து விட்டார். அதுவரை அமைதியாக இருந்த தான்யாவும் தந்தையின் அருகே சென்று “அப்பா! ப்ளீஸ்! பா” என்றாள் கெஞ்சலாக.
மகள் தங்களை ஏமாற்றி விட்டாள் என்கிற கோபத்தில் இருந்தவருக்கு அவளின் கெஞ்சலான குரலும் மீண்டும்- மீண்டும் காதில் ஒலித்தது. தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்த மகளின் குரலில் இருந்த பயம் அவரை அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு கிளம்ப செய்தது.
“சரி கிளம்பு” என்று எழுந்து கொண்டார்.
அவசரமாக இருவரும் கண்களைத் துடைத்துக் கொண்டு கிளம்ப “அந்த சனியன் எங்கே இருக்குன்னு கேளு?” என்றார் தான்யாவிடம்.
“எனக்கு லொகேஷன் அனுப்பி இருக்காப்பா” என்றாள் மெல்லிய குரலில்.
அதுவரை அடங்கி இருந்த கோபம் மீண்டும் எழ அவளை முறைத்து “உனக்கு இது முன்னமே தெரியுமா? நீயும் சேர்ந்து தான் என்கிட்டே மறைச்சியா?” என்றார் அவளை மிரட்டும் வகையில்.
அதைக் கண்டு நடுக்கத்துடன் “இல்ல...இல்லப்பா! எனக்கு எதுவும் தெரியாது” என்றாள் பயத்துடன்.
“ம்ம்..”என்று உறுமலாக சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார். தாயும், மகளும் எதுவும் பேசாமல் அவசரமாக ஓடிச் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டனர். அவர்களின் கார் வீட்டை விட்டு வெளியேறும் நேரம், அதை படமெடுத்து அனுப்பினான் ஒருவன். அவர்களை பின்தொடர ஆரம்பித்தது மற்றொரு கார். இது எதையுமே அறியாமல் மகள் மீது இருந்த எரிச்சலில் காரை ஒட்டிக் கொண்டிருந்தார் தேவேந்திரன்.
பின்தொடர்ந்து சென்ற காரில் இருந்தவர்களுக்கு சில பல செய்திகள் வந்து கொண்டே இருந்தது. சுமார் இரேண்டரை மணி நேரம் பயணித்து வர்ஷினி இருக்கும் இடத்திற்கு சென்றடைந்தார்கள்.
அவளோ வீட்டின் கதவடைத்துக் கொண்டு இருளில் பயந்தவண்ணம் அமர்ந்திருந்தாள். அவர்கள் வந்து கதவை தட்டவும் பயந்து போனவள் “யா...யாரு” என்றாள்.
மகளின் மீது இருந்த கடுப்பில் “உங்கப்பன்” என்றார்.
தந்தையின் குரல் கேட்டதும் படாரென்று கதவை திறந்து கொண்டு வந்தவள் பாய்ந்து சென்று தந்தையின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“என்னை மன்னிச்சிடுங்க அப்பா! நான் தப்பு பண்ணிட்டேன் அப்பா” என்று கதற ஆரம்பித்தாள்.