அத்தியாயம் – 6
அன்று குணா, அர்ஜுன் இருவருமாக ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கு வந்திருந்தனர். அர்ஜுனின் நண்பர் ஒருவர் இந்த நிறுவனத்தின் முகவரி கொடுத்து சென்று பார்க்கும்படி கூறி இருந்தார்.
கயலுடைய புகைப்படம் மற்றும் அவள் சம்மந்தப்பட்ட விபரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். இவர்கள் தந்த விபரங்களை எல்லாம் சரி பார்த்துக் கொண்டவர்கள் ஒரு பத்து நாளில் சொல்கிறோம் என்று சொல்லி அனுப்பினார்கள்.
வெளியில் வந்த இருவருக்கும் அவர் பேசியதை வைத்து சற்றே நம்பிக்கை பிறந்திருந்தது. ஒரு சிறு துப்பாவது கிடைத்து அவள் இருக்குமிடம் தெரிந்து விட்டாள் போதும் என்று பேசியபடி அருகே இருத்த ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.
காப்பி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தவர்களுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த மூன்று மாதங்களுக்குள் என்னவெல்லாம் நடந்து விட்டது. சிறுவயதில் பட்ட கஷ்டத்திற்கு படித்து முடித்து மூவருக்கும் வேலை கிடைத்த பின் வாழ்க்கை அத்தனை கொண்டாட்டமாக மாறி இருந்தது.யாரெல்லாம் அவமானப்படுதினார்களோ அவர்கள் எல்லாம் மரியாதையாகப் பார்த்தார்கள்.
இன்றோ எல்லோரும் மீண்டும் கேலியாகவும், பரிதாபமாகவும் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருகிறார்கள். அதிலும் வீட்டில் வசந்தியின் அராஜகத்தை தாங்கவே முடியவில்லை.
இன்று கூட காலை அர்ஜுன் ஒருபுறம் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, குணாவும் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். கல்யாணி வழக்கம் போல காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருக்க, இவளோ பிள்ளையை ஹாலில் கொண்டு வந்து படுக்கப் போட்டுக் கொண்டவள் டிவியை சத்தமாக வைத்துக் கொண்டாள்.
கல்யாணி அவளின் செயலைக் கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த மூவருக்கும் அத்தனை எரிச்சலாக தான் இருந்தது. ஏதாவது பேசி சண்டையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது டிவியில் அந்தப் பாடல் ஒலித்தது.
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா
இல்ல ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா? என்று பாடவும் சமையலறைக்குள் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு ரத்தம் அழுத்தம் ஏற ஆரம்பித்தது.
அறைக்குள் குளித்து தயாராகிக் கொண்டிருந்த குணா வேகமாக ஓடி வந்தான். அர்ஜுனுக்கும் அந்தப் பாடலைக் கேட்டதும் திடுக்கிட்டு அவசரமாக வசந்தியை முறைத்துக் கொண்டே சமயலறைக்குச் சென்றான்.
அதற்குள் குணா “டிவியை ஆப் பண்ணு முதல்ல” என்று கத்தி இருந்தான்.
அவன் கத்தியதில் குழந்தை பயந்து போய் வீல் வீல் என்று அழ ஆரம்பித்தது. அவனுடைய கோப முகத்தைப் பார்த்து எரிச்சலுடன் டிவியை ஆப் செய்யாமலே “இப்போ எதுக்கு கத்துறீங்க? குழந்தை அழறான் பாருங்க” என்று அவளும் சத்தமாகப் பேசினாள்.
அங்கே சமயலறையில் நின்றிருந்த கல்யாணியின் கண்களில் இருந்த கண்ணீர் ஊற்ற, அவரின் உடலில் மெல்லிய நடுக்கம். அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டவன் “ஒண்ணுமில்லம்மா” என்றான் காதோரம்.
டிவியை ஆப் செய்யாது வார்த்தையாடிக் கொண்டிருந்தவளின் மீது கடுங்கோபம் எழ , அவள் கையிலிருந்த ரிமோட்டை வாங்கி ஆப் செய்து விட்டு சுவற்றை நோக்கி வீசி அடித்திருந்தான்.
“எங்களை எல்லாம் படுத்தனும்னே கிளம்பி வந்தியாடி?”
ரிமோட் தூள் தூளாக உடைந்து போயிருக்க, அழும் குழந்தையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டவள் “உங்க வீட்டுப் பொண்ணு ஓடிப் போனதுக்கு நானும் என் குழந்தையும் என்ன பண்ணினோம். ஆண்டவா இந்த கொடுமையிலிருந்து எங்களை காப்பாற்றக் கூடாதா?” என்று புலம்பினாள்.
“உனக்கு அடுத்தவங்க உணர்வுகளை மதிக்கவே தெரியாதா? அம்மா இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா அதிலிருந்து வெளியே வராங்க. மறுபடியும்..ம்ச்..” என்றவன் தலையில் அடித்துக் கொண்டான்.
அவ்வளவு தான் ஓவென்று சப்தமாக அழத் தொடங்கியவள் “எப்போ பாரு அம்மா தங்கச்சி இவங்களை மட்டும் தான் நினைப்பீங்க. நானும் என் குழந்தையும் இந்த வீட்டில் எதுக்கு இருக்கோம்?”
குணாவிற்கு என்னடா இது சோதனையாக இருக்கிறதே என்று எண்ணியபடி “சீ! சும்மா டிராமா போடாதே. குழந்தை அழறான். அவனை கவனி” என்று சத்தம் போட்டான்.
அதற்குள் சமயலறையில் நின்றிருந்த கல்யாணிக்கு மயக்கம் வரும் போல இருக்க, அவரை கைத்தாங்கலாக பிடித்து அழைத்துக் கொண்டு வந்து டைனிங்கில் அமர வைத்தான். கண்ணீருடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தி “டிராமான்னா என்னன்னு இதோ உங்கம்மாவை கேளுங்க. என்னை பேச்சு வாங்க வைக்கனும்ன்னே ஒரு நடிப்பு” என்று விட்டாள்.
அவள் சொல்லியதைக் கேட்டு குணாவிற்கு அத்தனை கோபம். பட்டென்று பாய்ந்து அவளது கன்னத்தில் அறைந்திருந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு நன்றாக வேண்டும் என்று தோன்றியது. கல்யாணிக்கோ எதெல்லாம் தன் குடும்பத்தில் நடக்க கூடாது என்று நினைத்தாரோ அதெல்லாம் நடந்து கொண்டிருப்பதை எண்ணி மனம் வலித்தது.
அன்று குணா, அர்ஜுன் இருவருமாக ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கு வந்திருந்தனர். அர்ஜுனின் நண்பர் ஒருவர் இந்த நிறுவனத்தின் முகவரி கொடுத்து சென்று பார்க்கும்படி கூறி இருந்தார்.
கயலுடைய புகைப்படம் மற்றும் அவள் சம்மந்தப்பட்ட விபரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். இவர்கள் தந்த விபரங்களை எல்லாம் சரி பார்த்துக் கொண்டவர்கள் ஒரு பத்து நாளில் சொல்கிறோம் என்று சொல்லி அனுப்பினார்கள்.
வெளியில் வந்த இருவருக்கும் அவர் பேசியதை வைத்து சற்றே நம்பிக்கை பிறந்திருந்தது. ஒரு சிறு துப்பாவது கிடைத்து அவள் இருக்குமிடம் தெரிந்து விட்டாள் போதும் என்று பேசியபடி அருகே இருத்த ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.
காப்பி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தவர்களுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த மூன்று மாதங்களுக்குள் என்னவெல்லாம் நடந்து விட்டது. சிறுவயதில் பட்ட கஷ்டத்திற்கு படித்து முடித்து மூவருக்கும் வேலை கிடைத்த பின் வாழ்க்கை அத்தனை கொண்டாட்டமாக மாறி இருந்தது.யாரெல்லாம் அவமானப்படுதினார்களோ அவர்கள் எல்லாம் மரியாதையாகப் பார்த்தார்கள்.
இன்றோ எல்லோரும் மீண்டும் கேலியாகவும், பரிதாபமாகவும் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருகிறார்கள். அதிலும் வீட்டில் வசந்தியின் அராஜகத்தை தாங்கவே முடியவில்லை.
இன்று கூட காலை அர்ஜுன் ஒருபுறம் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, குணாவும் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். கல்யாணி வழக்கம் போல காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருக்க, இவளோ பிள்ளையை ஹாலில் கொண்டு வந்து படுக்கப் போட்டுக் கொண்டவள் டிவியை சத்தமாக வைத்துக் கொண்டாள்.
கல்யாணி அவளின் செயலைக் கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த மூவருக்கும் அத்தனை எரிச்சலாக தான் இருந்தது. ஏதாவது பேசி சண்டையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது டிவியில் அந்தப் பாடல் ஒலித்தது.
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா
இல்ல ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா? என்று பாடவும் சமையலறைக்குள் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு ரத்தம் அழுத்தம் ஏற ஆரம்பித்தது.
அறைக்குள் குளித்து தயாராகிக் கொண்டிருந்த குணா வேகமாக ஓடி வந்தான். அர்ஜுனுக்கும் அந்தப் பாடலைக் கேட்டதும் திடுக்கிட்டு அவசரமாக வசந்தியை முறைத்துக் கொண்டே சமயலறைக்குச் சென்றான்.
அதற்குள் குணா “டிவியை ஆப் பண்ணு முதல்ல” என்று கத்தி இருந்தான்.
அவன் கத்தியதில் குழந்தை பயந்து போய் வீல் வீல் என்று அழ ஆரம்பித்தது. அவனுடைய கோப முகத்தைப் பார்த்து எரிச்சலுடன் டிவியை ஆப் செய்யாமலே “இப்போ எதுக்கு கத்துறீங்க? குழந்தை அழறான் பாருங்க” என்று அவளும் சத்தமாகப் பேசினாள்.
அங்கே சமயலறையில் நின்றிருந்த கல்யாணியின் கண்களில் இருந்த கண்ணீர் ஊற்ற, அவரின் உடலில் மெல்லிய நடுக்கம். அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டவன் “ஒண்ணுமில்லம்மா” என்றான் காதோரம்.
டிவியை ஆப் செய்யாது வார்த்தையாடிக் கொண்டிருந்தவளின் மீது கடுங்கோபம் எழ , அவள் கையிலிருந்த ரிமோட்டை வாங்கி ஆப் செய்து விட்டு சுவற்றை நோக்கி வீசி அடித்திருந்தான்.
“எங்களை எல்லாம் படுத்தனும்னே கிளம்பி வந்தியாடி?”
ரிமோட் தூள் தூளாக உடைந்து போயிருக்க, அழும் குழந்தையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டவள் “உங்க வீட்டுப் பொண்ணு ஓடிப் போனதுக்கு நானும் என் குழந்தையும் என்ன பண்ணினோம். ஆண்டவா இந்த கொடுமையிலிருந்து எங்களை காப்பாற்றக் கூடாதா?” என்று புலம்பினாள்.
“உனக்கு அடுத்தவங்க உணர்வுகளை மதிக்கவே தெரியாதா? அம்மா இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா அதிலிருந்து வெளியே வராங்க. மறுபடியும்..ம்ச்..” என்றவன் தலையில் அடித்துக் கொண்டான்.
அவ்வளவு தான் ஓவென்று சப்தமாக அழத் தொடங்கியவள் “எப்போ பாரு அம்மா தங்கச்சி இவங்களை மட்டும் தான் நினைப்பீங்க. நானும் என் குழந்தையும் இந்த வீட்டில் எதுக்கு இருக்கோம்?”
குணாவிற்கு என்னடா இது சோதனையாக இருக்கிறதே என்று எண்ணியபடி “சீ! சும்மா டிராமா போடாதே. குழந்தை அழறான். அவனை கவனி” என்று சத்தம் போட்டான்.
அதற்குள் சமயலறையில் நின்றிருந்த கல்யாணிக்கு மயக்கம் வரும் போல இருக்க, அவரை கைத்தாங்கலாக பிடித்து அழைத்துக் கொண்டு வந்து டைனிங்கில் அமர வைத்தான். கண்ணீருடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தி “டிராமான்னா என்னன்னு இதோ உங்கம்மாவை கேளுங்க. என்னை பேச்சு வாங்க வைக்கனும்ன்னே ஒரு நடிப்பு” என்று விட்டாள்.
அவள் சொல்லியதைக் கேட்டு குணாவிற்கு அத்தனை கோபம். பட்டென்று பாய்ந்து அவளது கன்னத்தில் அறைந்திருந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு நன்றாக வேண்டும் என்று தோன்றியது. கல்யாணிக்கோ எதெல்லாம் தன் குடும்பத்தில் நடக்க கூடாது என்று நினைத்தாரோ அதெல்லாம் நடந்து கொண்டிருப்பதை எண்ணி மனம் வலித்தது.