Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 5 | SudhaRaviNovels

அத்தியாயம் - 5

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
அத்தியாயம் – 5

இரு நாட்கள் கழித்து குணா வசந்தி வீட்டிற்கு வந்திருந்தான். பரதன் மாப்பிள்ளையுடன் பேசிக் கொண்டிருந்தார். மங்களமும் வசந்தியும் அறைக்குள் நின்று தாங்கள் சாதித்து விட்ட பெருமையை எண்ணி பூரித்து போயிருந்தனர்.

“எப்படிம்மா நான் போட்ட போடுல தானா வந்து நிற்கிறார் பாரு. இப்படியே இந்த கெத்தை மெயிண்டேன் பண்ணி மாமியார்காரியை ஆப் பண்ணனும்”.

“இங்கே பாரு வசந்தி இப்போ அவர் கூப்பிட்டாலும் நீ கிளம்பி போயிடாதே. நானும் அப்பாவும் கொண்டு போய் விடுறோம். அப்போ தான் உன் மாமியாரை சரியான இடத்தில் வைக்க முடியும்”.
“அப்படியா சொல்ற? நான் அவர் கூட கிளம்பிடலாம்னு நினைச்சேன்”.

“வேண்டாம்டி! நாங்க கொண்டு போய் விட்டா தான் அந்த பொம்பளைக்கு பயம் இருக்கும்”.
“சரிம்மா! நான் பார்த்துக்கிறேன்”.

மகளிடம் பேசிவிட்டு வெளியே வந்தவர் “என்ன சமைக்கட்டும் மாப்பிள்ளை?” என்று கேட்டார்.
“எதுவும் வேண்டாம் அத்தை. நான் வசந்தியை கூட்டிகிட்டு கிளம்புறேன்”.

“அப்படி எல்லாம் அனுப்ப முடியாது மாப்பிள்ளை. நானும் மாமாவும் கொண்டு வந்து விடுறோம். அது தான் முறை”.

“உங்களுக்கு அந்த சிரமம் எல்லாம் வேண்டாம் அத்தை. நான் கூட்டிட்டு போறேன்”.

“நாள் பார்த்து தான் கூட்டிட்டுப் போகணும் மாப்பிள்ளை” என்று முடிக்கும் முன்னே “இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு பார்த்து தான் அம்மா அனுப்பினாங்க அத்தை” என்று விட்டான்.

பல்லைக் கடித்துக் கொண்ட மங்களம் “இருந்தாலும் மாப்பிள்ளை..” என்றவரை “இப்போ என் கூட வரதா இருந்தால் அவ வரட்டும் இல்லேன்னா மெதுவா பார்த்துக்கலாம்”.

அவனுடைய பேச்சு அதிர்ச்சியைக் கொடுக்க உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கியபடியே வசந்தியைப் பார்க்க, அவளும் கடுப்புடனே “உங்க கூடவே வரேன்” என்றாள்.

அன்னையிடம் மெல்லிய குரலில் “நான் உள்ளே போனால் தான் இதுகளை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும். நீ எதுக்கும் கவலைப்படாதே” என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்று விட்டாள்.

சற்று நேரத்தில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். அவளிடமிருந்த பையை வாங்கிக் கொண்டவன் பெரியவர்கள் இருவரிடமும் சொல்லிக் கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அலுவலகத்துக்குச் சென்றிருந்த அர்ஜுன் டீ குடிக்க வெளியே வந்து நின்று சுடருக்கு அழைத்தான். முதல் இரண்டு அழைப்புகளை அவள் எடுக்கவே இல்லை. அவனும் விடாது அழைத்தான்.

ஒரு ஐந்து கால்கள் போன பின்பு பட்டென்று எடுத்து விட்டாள்.

“என்ன? எதுக்கு போன் பண்றீங்க? அன்னைக்கு அவ்வளவு சொன்னப் பிறகும் எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று பொரிந்தாள்.

காதிலிருந்து போனை தள்ளிப் பிடித்தவன் சற்று நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு அவள் கத்தி முடித்த பின் காதருகே வைத்தான்.

“சூடா இருக்க போல?”

“எதுக்கு கூப்பிட்டீங்க? தேவையில்லாம பேசினா ப்ளாக் பண்ணிட்டுப் போயிடுவேன்”

“உன் அக்கா வீட்டுக்கு வந்தாச்சு”.

“அதுக்கு!”

“ஓவரா பண்ணாதடி. உன் பின்னாடியே சுத்துறேன்னு படுத்துற இல்ல நீ”.

“எனக்கு புரியல. உங்க அண்ணி உங்க வீட்டுக்கு வந்ததை எனக்கு எதுக்கு சொல்லணும்?”

உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு “எல்லாம் சரியாகும் என்று சொல்ல வரேன்”.

“கயல் பற்றி எதுவும் தெரிந்ததா? அவள் எங்கே இருக்கா? எப்போ வருவா? இதெல்லாம் தெரிந்தால் தான் மற்றதைப் பற்றி யோசிக்கவே முடியும்”.

“அது என் கவலை. என் தங்கச்சியை கண்டுபிடிக்க வேண்டியது எங்க வேலை. நீ கயலைப் பற்றி அனாவசியமா பேசாதே”.

“நானா போன் பண்ணினேன். இதெல்லாம் சரியா இல்ல. நமக்குள்ள எதுவும் சரி வராது. விட்டுடுங்க”.

“சும்மா இதையே சொன்னா என்ன அர்த்தம்? விட்டுடு விட்டுடுன்னு சொன்னா எப்படி சுடர்? அப்படி சட்டுன்னு விடக் கூடிய உறவா?”

“வேறென்ன பண்ண சொல்றீங்க? நடந்த எதையும் மாற்ற முடியாது. மறக்கவும் முடியாது. காலம் முழுக்க நம்மைச் சுற்றி வந்துகிட்டே தான் இருக்கும். நாம சேருவதால யாருக்காவது சந்தோஷம் இருக்குமா? நம்மையும் சேர்த்து தான் சொல்றேன். ஒவ்வொரு நாளும் நரகம் தான். யாருக்குமே சந்தோஷம் இல்லாத ஒன்றை எதுக்கு செய்யணும்?”

அவளின் பேச்சு அவனிடத்தில் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க “உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக் கொள்வதில் சந்தோஷமே இல்லையா?” என்றவனது குரல் கலங்கி இருந்தது.
 
  • Love
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
அந்தப் பக்கம் மௌனம் மட்டுமே. அவனுடைய கேள்வி பலமாய் அவளை தாக்கியது. அவனை பார்த்த அந்த நிமிடத்திலிருந்து மனதிற்குள் வளர்ந்த அந்தக் காதலை எப்படி மறுக்க முடியும். விட்டு விலகி விடு என்று எளிதாகச் சொன்னாலும் அவளாலேயே அது முடியாது. ஆனால் சூழ்நிலை அப்படி இருக்கும் போது வேறு என்ன தான் செய்ய முடியும். பிரிவு ஒன்றே நல்ல மருந்து.

“சொல்லு சுடர். என்னை விட்டு நீ இருந்துடுவியா? உன்னால சந்தோஷமா இருக்க முடியுமா?”
அவனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நெஞ்சம் பந்தாய் உருண்டு அடைக்க, லேசான விசும்பலுடன் போனை வைத்து விட்டாள்.

அவளின் அந்த விசும்பலே மனதை உறைக்க, பெருமூச்சுடன் டீக்கப்பை வைத்துவிட்டு அலுவலகம் நோக்கி நடந்தான். அடுத்து என்ன என்று தெரியாத ஒரு வெற்றுப் பாதையாக இருந்தது வாழ்க்கை. கயலை எப்படி கண்டுபிடிப்பது என்றும் புரியவில்லை. அவள் யாரை விரும்பினாள் என்பதே கேள்வியாக இருந்தது.

பலத்த சிந்தனையுடன் தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அங்கே வசந்தியை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு கிளம்பி விட்டான். மகனுடன் தன் அறையில் சென்று புகுந்து கொண்டாள். கல்யாணியோ மருமகளை கண்டு கொள்ளாமல் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

குணாவிற்கு அவர்கள் இருவரையும் தனியே விட்டுச் செல்வதற்கு பயமாக தான் இருந்தது. எத்தனை நாளைக்கு பயந்து வீட்டிலேயே அவர்களை காவல் காப்பது என்றெண்ணி கிளம்பி விட்டான்.

தம்பிக்கு அழைத்து சொல்லியும் விட்டான்.

“ரெண்டு பேரும் தனியா இருக்காங்கடா. என்ன நடக்குமோன்னு எனக்கு தான் பயமா இருக்கு”.
ஏற்கனவே சுடரிடம் பேசிய மனக்காயத்தில் இருந்தவன் “சும்மா எல்லாத்துக்கும் பயப்படாத குணா. நீ தான் இதை சாமர்த்தியமா கையாளனும்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

அவன் பேசியதை எண்ணி சுடருக்கு அழுகை வந்தது. தனது இருக்கையிலிருந்து எழுந்து சென்று வாஷ்ரூமில் கதவடைத்துக் கொண்டவளின் கண்ணீர் கன்னங்களைத் தொட்டது.

அவளின் மனம் அவனுக்காக தவித்தது தான். ஆனால் கயல் வராத வரை எதுவும் மாறப் போவதில்லை. வசந்தியை விட கயலுக்கு சுடரை தான் அதிகம் பிடிக்கும். சம வயது தோழிகளாக மாறி போயிருந்தனர்.

அவள் வசந்தியை அதிகம் நம்பினாள். சுடரைப் போலவே அவளும் தன்னுடைய நல்லதிற்காக தான் பேசுகிறாள் என்று நினைத்துக் கொள்வாள். வசந்தியின் மனதிலிருந்ததை அறிந்திருந்தால் இந்த அனர்த்தங்கள் நிகழ்ந்ததை தடுத்திருக்கலாம்.

தன் வாழ்க்கையை விட கயலை பற்றிய கவலை தான் சுடரின் மனதை அதிகம் படுத்தியது. கயல் மிக அன்பானவள். சட்டென்று யாரிடமும் அன்பு காட்டக் கூடியவள்.

வசந்தியை முழுமையாக நம்பியது தான் அவள் தவறே. எந்த ரகசியமும் இன்றி அனைத்தையும் பகிர்ந்து கொண்டது தான் பிரச்சனைக்கு காரணமே.

பழைய நினைவுகளில் முகம் குழைந்து போய் இருந்தது. பெண் பார்க்க வந்த அன்றே அவளை மிகவும் பிடித்து விட்டது. எந்தவித பந்தாவும் இல்லாமல் தானே வந்து பேசினாள். அத்தனை இயல்பாக வசந்தியையும் அண்ணி என்று உடனே அழைத்து விட்டாள்.

“உங்க அண்ணனுக்குப் பிடிக்க வேண்டாமா? நீங்க பாட்டுக்கு அண்ணின்னு கூப்பிட்டுடீங்க?”

“போட்டோவைப் பார்த்தே அண்ணன் மயங்கிடுச்சு. கண்டிப்பா இவங்களைத் தவிர வேற யாரையும் கட்டாது சுடர். உங்களை சுடர்ன்னு கூப்பிடலாமா?”

“தாரளாமா! நீங்க ரொம்ப பிரெண்ட்லியா இருக்கீங்க கயல். உங்க கிட்ட படிக்கிற பிள்ளைகள் கிட்டேயும் இப்படித்தான் இருப்பீங்களா?”

“ஆமாம் சுடர். அப்போ தான் அவங்களுக்கு என்னிடம் எல்லாவற்றையும் சொல்ல தைரியம் வரும்”.

“சூப்பருங்க நீங்க” என்று இவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வசந்தி கடுப்பாகி
“போதும் சுடர் நிறுத்து. நீ பாட்டுக்கு பேசிட்டே போகாதே” என்றாள்.

அக்காவைப் பார்த்து கேலியாக சிரித்துவிட்டு “டென்சன் ஆகிட்டான்னு நினைக்கிறேன். நீங்க வாங்க நாம வெளியே போய் வெயிட் பண்ணுவோம்” என்று கயலின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று விட்டாள்.

அந்நேரம் உள்ளே வந்த மங்களத்திடம் “உன் சின்னப் பெண்ணை அடங்கி இருக்க சொல்லும்மா”.
“ஏன் வசந்தி? என்னாச்சு?”

“இவ அந்த பொண்ணுகிட்ட ஓவரா பேசுறா. எனக்கு அது பிடிக்கல”.

“விடு! கல்யாணம் முடிஞ்சு நீ தானே அவங்க வீட்டுக்குப் போக போற. இவளை நான் பார்த்துக்கிறேன்”.

“ம்ம்...”

அடுத்து பெண்ணை அழைத்துச் சென்று மாப்பிள்ளை வீட்டினரின் முன் நிற்க வைக்க, குணாவுக்கும், கல்யாணிக்கும் அவளை பிடித்து விட்டது. பார்மாலிட்டி பார்க்காமல் தங்கள் முடிவை உடனே சொன்னார்கள்.

அடுத்து திருமணம் எப்போது வைப்பது என்கிற பேச்செல்லாம் எழ, அரை மணி நேரத்தில் அனைத்தும் முடிவெடுக்கப்பட்டு விட்டது.

அவர்கள் கிளம்பிச் சென்றதும் வசந்தி சுடரை அழைத்து புத்திமதி சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
“சுடர்! அந்த பொண்ணுட்ட அதிகம் பேசாதே! நாத்தனாரை நான் எங்கே வைக்கனுமோ அங்கே வைக்கணும்.நீ நடுவில் புகுந்து கெடுக்காதே!”

அவளின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போன சுடரோ “அம்மா! இங்கே பாருங்க உங்க பெரிய பொண்ணு தப்பா பேசுது”.

பரதனும் அங்கே வந்துவிட “என்ன சொல்றா?”

“நாத்தனாரை எங்கே வைக்கனுமோ அங்கே வைக்கனும்னு சொல்றா மா”.

“சரியா தான் சொல்லி இருக்கா. ஓவரா ஈஷிகிட்டு இருக்க கூடாது. அண்ணி என்கிற ஒரு கெத்தொட இருக்கணும்”.

தலையில் அடித்துக் கொண்ட பரதன் “நல்ல குடும்பமா தெரியுது மங்களம். உன் பெண்ணுக்கு அங்கே நல்ல வாழ்க்கை இருக்கு. ஆரம்பிக்கும் முன்னே கெடுத்து விடாதே”.

“நீங்க கொஞ்சம் வாயை மூடுறீங்களா? இதெல்லாம் பொம்பளைங்க அரசியல். உங்களுக்கு இது புரியாது”.

“அம்மா! அப்பா சொல்றது சரி தான்” என்றவளை எரிச்சலுடன் நிறுத்தியவர் “சுடர்! நீ எதுவும் பேசக் கூடாது. நாங்க சொல்கிற மாதிரி தான் நீ நடந்துக்கணும் சொல்லிட்டேன்” என்றார் மிரட்டலாக.

அதில் கடுப்பானவள் “என்னகென்னவோ நீங்க ரெண்டு பேரும் தப்பா யோசிக்கிறீங்க” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

“அவளை விடும்மா! ஆரம்பத்துலையே சரியா இருந்தா தான் நம்மால அவங்களை கண்ட்ரோல் பண்ண முடியும்”.

“நீ தாண்டி என்னைப் போல இருக்கே” என்று பெரிய மகளைக் கொஞ்சிக் கொண்டார்.

“மாமியார் எப்படின்னு நினைக்கிற? சமாளிக்க முடியுமா?”

“அது வாயில்லாப் பூச்சி மாதிரி தெரியுது”.

“அப்போ அங்கே என் ராஜ்ஜியம் தான் சொல்லுங்க”.

“கல்யாணம் பண்ணி போ வசந்தி. அந்த வீட்டில் உன் பேச்சை மட்டும் கேட்கிற மாதிரி செய்றது உன் சாமர்த்தியம்”.

“இன்னொரு பையன் இருக்கானே அம்மா”.

“மாமியாரை உன் கைக்கு கொண்டு வந்துடு. அடுத்தவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கட்டி வச்சு வீட்டை விட்டு அனுப்பு”.

“அப்போ நாத்தனார்? அவளுக்கு நாங்க தான் செலவு பண்ணனும் போல இருக்கே”.

மங்களத்தின் முகத்தில் மெல்லிய புன்னகை.

“நீ கல்யாணம் பண்ணி போ அதுக்கும் வழி சொல்றேன். ஆனா நீ அந்த பெண்ணோட நம்பிக்கைக்கு பாத்திரமா இருக்கணும். மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்”.
 
  • Like
Reactions: Kothai suresh