அத்தியாயம் – 5
சஞ்சலாவை காணாமல் குணாளனும், பார்த்தியும் மற்றவர்களுடன் தங்களின் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். அவளால் தங்களின் மொத்த கூட்டமும் சிக்கலில் இருக்கிறது என்று எண்ணி ஒருவித பதட்டத்திலேயே இருந்தனர்.
அவர்களின் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் காரணமானவளோ பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அவளது மனம் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. அத்தனை பேரையும் எளிதாக சமாளித்து வந்தது நெருடலாக இருந்தது.
“ம்ம்...என்னை வெளியே விட்டு பிடிக்க பார்க்கிறானா?” என்று கேட்டுக் கொண்டவள் “சிவதாஸ் மச்சான்! இந்த சஞ்சலாவை அவ்வளவு ஈசியா எடை போட்ட இல்ல?” என்றவள் தலையை லேசாக சரித்து “நீயா நானா? பார்த்திடுவோம்” என்று கூறிக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
அவளது உடலில் வைக்கப்பட்டிருந்த சிப் வேலை செய்ய அவளது நடமாட்டம் கண்காணிக்கப்பட ஆரம்பித்தது. சிவதாஸ் திரையில் தெரிந்து கொண்டிருந்த நகர்வை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். அவள் எந்தெந்த வழியில் செல்கிறாள் என்று. அதை வைத்து அந்த கூட்டத்தின் இருப்பிடத்தை பிடித்து விடலாம் என்கிற எண்ணம்.
இவர்கள் இங்கே ஒருவரை ஒருவர் குறி வைத்து ஓடிக் கொண்டிருக்க, ரத்னா தாம்பரத்தை தாண்டி பயணித்துக் கொண்டிருந்தாள். அவளை தொடர்ந்து பிரபுவும் அவனது கூட்டமும் சென்று கொண்டிருந்தது.
அதே நேரம் சென்னையின் உயர்தர ஹோட்டல் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்தான் ஜாக் வெஸ்லி. அவனது பழுப்பு நிற கண்கள் கோபத்தை சுமந்து கொண்டிருந்தது. போனில் பேசிக் கொண்டிருந்த அவனது முகம் இறுக்கத்தை காட்டியது.
கைகளை அருகே இருந்த குஷன் மீது குத்தியவன் “நோ வே! எவன் வந்தாலும் எனக்கு எல்லாம் சரியா நடக்கணும். நம்ம ஆட்கள் இங்கே உள்ளவங்களுக்கு வேண்டியவற்றை தயார் செய்துட்டாங்க. இன்னும் ஆறு மாதங்களில் கணிசமான அளவு ஆட்கள் நம்ம வழிபாட்டில் சேர்ந்திருக்கணும்” என்றான் அழுத்தமாக.
அந்தப் பக்கம் பேசிய குரலோ “ரொம்ப கஷ்டமான நேரம் ஜாக். இப்போ வந்திருக்கிற போலீஸ் ஆபிசர் மற்றவங்க மாதிரி இல்ல. கொஞ்ச நாள் நாம வெயிட் பண்ணி தான் ஆகணும்”.
“என்ன வேணும்னாலும் கேளு தரேன். நாங்க நினைப்பது நடந்தாகணும். அவர் பல வருஷமா காத்துகிட்டு இருக்கார். போதை, பெண்கள் என்று எதை எல்லாம் கொடுக்க முடியுமோ கொடுத்து ஆட்களை கொண்டு வா”.
“லுக் ஜாக்! நம்மள மாதிரி ஒரு கூட்டம் இருக்கிறதே இதுவரை வெளியில் யாருக்கும் தெரியாது. நீ அவசரபட்டா பெரிய பிரச்னையை கொண்டு வரும்”.
“வருண்! டோன்ட் கைட் மீ! நான் சொல்றதை கேட்க தான் நீ. அந்த அரசியல்வாதி பையன் அவன் பேர் என்ன? அவனை வச்சு எல்லா வேலையையும் ப்ளான் பண்ணு”.
தான் சொல்வதை அவன் கேட்க மாட்டான் என்பதை உணர்ந்து கொண்ட வருண் ‘ஓகே ஜாக்! நம்ம தேவனின் பானம் வந்து கொண்டிருக்கிறது. அதை முடிச்சிட்டு கால் பண்றேன்”.
“ம்ம்...ஐ வான்ட் டு டேஸ்ட்”.
“வாட்!”
“எஸ்!”
“நோ ஜாக்! இப்போ அதற்கான நேரமில்லை”.
“உன் கைக்கு வந்து சேர்ந்ததும் நான் வரேன்” என்று கூறி போனை வைத்துவிட்டான்.
சற்றே எரிச்சலுடன் “இந்த வெள்ளைக்கார நாயி சொன்னதை கேட்க மாட்டேன்றான்-டா. நாமலே செம ரிஸ்க்ல இருக்கோம். இவன் வேற தாலி அறுக்கிறான்”.
“என்னன்னே சொல்றீங்க?”
“கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தலாம்னு சொன்னா கேட்க மாட்டேன்றான். இதுல அந்த ரத்னா பொண்ணு வேணுமாம் இவனுக்கு”.
“அண்ணே! வேண்டாம்! இவன் சொல்றது எதுவும் நமக்கு புரியவும் இல்ல. இவன் கொடுக்கிற அந்த பொருளுக்காக தான் நாம இப்போ இவனுக்கு வேலை பார்க்கிறோம். புதுசா வந்திருக்கிறவன் கிட்ட சிக்கினா சிக்ஸ்டி பைவ் போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான்”.
சற்று நேரம் சோர்வான முகத்தோடு நின்றவன் “பொருளு மட்டும் இல்லடா பணமும் அதிகம் தான். இதை செஞ்சு விட்டுட்டா நம்ம தலைமுறையே அடுத்தவனை நம்பி இருக்க வேண்டாம்”.
“அதுக்காக ரிஸ்க் எடுக்க போறீங்களா?”
“வேறென்ன செய்ய சொல்ற? மாசமான்னா பொண்டாட்டி கேட்கிற காசை கொடுக்க முடியாம கடன் வாங்கியே செத்திருவோம் போல இருக்கு. அதுக்கு இதை சிக்காம செஞ்சிட்டா நமக்கு அதிர்ஷ்டம் தானே-டா”.
“அப்போ சரி! வாங்க போவோம்”
பார்த்தியும், குணாளனும் பல இடங்களில் தேடி ஓய்ந்து போயினர். அவள் எதற்காக சென்றிருப்பாள் என்று கூட யூகிக்க முடியாமல் படுகடுப்பில் இருந்தனர். சஞ்சலாவோ தான் சுற்றிக் கொண்டிருந்த பகுதியில் பூட்டிய ஒரு வீட்டினுள் நுழைந்தவள் அங்கிருந்து எங்கும் செல்லாது அங்கேயே இருந்தாள்.
அவளை கண்காணித்துக் கொண்டிருந்த சிவதாஸின் டீம் அதை அவனுக்கு தெரிவிக்க, தானும் திரை முன்பு சென்றமர்ந்து கொண்டான்.
சஞ்சலாவை காணாமல் குணாளனும், பார்த்தியும் மற்றவர்களுடன் தங்களின் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். அவளால் தங்களின் மொத்த கூட்டமும் சிக்கலில் இருக்கிறது என்று எண்ணி ஒருவித பதட்டத்திலேயே இருந்தனர்.
அவர்களின் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் காரணமானவளோ பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அவளது மனம் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. அத்தனை பேரையும் எளிதாக சமாளித்து வந்தது நெருடலாக இருந்தது.
“ம்ம்...என்னை வெளியே விட்டு பிடிக்க பார்க்கிறானா?” என்று கேட்டுக் கொண்டவள் “சிவதாஸ் மச்சான்! இந்த சஞ்சலாவை அவ்வளவு ஈசியா எடை போட்ட இல்ல?” என்றவள் தலையை லேசாக சரித்து “நீயா நானா? பார்த்திடுவோம்” என்று கூறிக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
அவளது உடலில் வைக்கப்பட்டிருந்த சிப் வேலை செய்ய அவளது நடமாட்டம் கண்காணிக்கப்பட ஆரம்பித்தது. சிவதாஸ் திரையில் தெரிந்து கொண்டிருந்த நகர்வை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். அவள் எந்தெந்த வழியில் செல்கிறாள் என்று. அதை வைத்து அந்த கூட்டத்தின் இருப்பிடத்தை பிடித்து விடலாம் என்கிற எண்ணம்.
இவர்கள் இங்கே ஒருவரை ஒருவர் குறி வைத்து ஓடிக் கொண்டிருக்க, ரத்னா தாம்பரத்தை தாண்டி பயணித்துக் கொண்டிருந்தாள். அவளை தொடர்ந்து பிரபுவும் அவனது கூட்டமும் சென்று கொண்டிருந்தது.
அதே நேரம் சென்னையின் உயர்தர ஹோட்டல் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்தான் ஜாக் வெஸ்லி. அவனது பழுப்பு நிற கண்கள் கோபத்தை சுமந்து கொண்டிருந்தது. போனில் பேசிக் கொண்டிருந்த அவனது முகம் இறுக்கத்தை காட்டியது.
கைகளை அருகே இருந்த குஷன் மீது குத்தியவன் “நோ வே! எவன் வந்தாலும் எனக்கு எல்லாம் சரியா நடக்கணும். நம்ம ஆட்கள் இங்கே உள்ளவங்களுக்கு வேண்டியவற்றை தயார் செய்துட்டாங்க. இன்னும் ஆறு மாதங்களில் கணிசமான அளவு ஆட்கள் நம்ம வழிபாட்டில் சேர்ந்திருக்கணும்” என்றான் அழுத்தமாக.
அந்தப் பக்கம் பேசிய குரலோ “ரொம்ப கஷ்டமான நேரம் ஜாக். இப்போ வந்திருக்கிற போலீஸ் ஆபிசர் மற்றவங்க மாதிரி இல்ல. கொஞ்ச நாள் நாம வெயிட் பண்ணி தான் ஆகணும்”.
“என்ன வேணும்னாலும் கேளு தரேன். நாங்க நினைப்பது நடந்தாகணும். அவர் பல வருஷமா காத்துகிட்டு இருக்கார். போதை, பெண்கள் என்று எதை எல்லாம் கொடுக்க முடியுமோ கொடுத்து ஆட்களை கொண்டு வா”.
“லுக் ஜாக்! நம்மள மாதிரி ஒரு கூட்டம் இருக்கிறதே இதுவரை வெளியில் யாருக்கும் தெரியாது. நீ அவசரபட்டா பெரிய பிரச்னையை கொண்டு வரும்”.
“வருண்! டோன்ட் கைட் மீ! நான் சொல்றதை கேட்க தான் நீ. அந்த அரசியல்வாதி பையன் அவன் பேர் என்ன? அவனை வச்சு எல்லா வேலையையும் ப்ளான் பண்ணு”.
தான் சொல்வதை அவன் கேட்க மாட்டான் என்பதை உணர்ந்து கொண்ட வருண் ‘ஓகே ஜாக்! நம்ம தேவனின் பானம் வந்து கொண்டிருக்கிறது. அதை முடிச்சிட்டு கால் பண்றேன்”.
“ம்ம்...ஐ வான்ட் டு டேஸ்ட்”.
“வாட்!”
“எஸ்!”
“நோ ஜாக்! இப்போ அதற்கான நேரமில்லை”.
“உன் கைக்கு வந்து சேர்ந்ததும் நான் வரேன்” என்று கூறி போனை வைத்துவிட்டான்.
சற்றே எரிச்சலுடன் “இந்த வெள்ளைக்கார நாயி சொன்னதை கேட்க மாட்டேன்றான்-டா. நாமலே செம ரிஸ்க்ல இருக்கோம். இவன் வேற தாலி அறுக்கிறான்”.
“என்னன்னே சொல்றீங்க?”
“கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தலாம்னு சொன்னா கேட்க மாட்டேன்றான். இதுல அந்த ரத்னா பொண்ணு வேணுமாம் இவனுக்கு”.
“அண்ணே! வேண்டாம்! இவன் சொல்றது எதுவும் நமக்கு புரியவும் இல்ல. இவன் கொடுக்கிற அந்த பொருளுக்காக தான் நாம இப்போ இவனுக்கு வேலை பார்க்கிறோம். புதுசா வந்திருக்கிறவன் கிட்ட சிக்கினா சிக்ஸ்டி பைவ் போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான்”.
சற்று நேரம் சோர்வான முகத்தோடு நின்றவன் “பொருளு மட்டும் இல்லடா பணமும் அதிகம் தான். இதை செஞ்சு விட்டுட்டா நம்ம தலைமுறையே அடுத்தவனை நம்பி இருக்க வேண்டாம்”.
“அதுக்காக ரிஸ்க் எடுக்க போறீங்களா?”
“வேறென்ன செய்ய சொல்ற? மாசமான்னா பொண்டாட்டி கேட்கிற காசை கொடுக்க முடியாம கடன் வாங்கியே செத்திருவோம் போல இருக்கு. அதுக்கு இதை சிக்காம செஞ்சிட்டா நமக்கு அதிர்ஷ்டம் தானே-டா”.
“அப்போ சரி! வாங்க போவோம்”
பார்த்தியும், குணாளனும் பல இடங்களில் தேடி ஓய்ந்து போயினர். அவள் எதற்காக சென்றிருப்பாள் என்று கூட யூகிக்க முடியாமல் படுகடுப்பில் இருந்தனர். சஞ்சலாவோ தான் சுற்றிக் கொண்டிருந்த பகுதியில் பூட்டிய ஒரு வீட்டினுள் நுழைந்தவள் அங்கிருந்து எங்கும் செல்லாது அங்கேயே இருந்தாள்.
அவளை கண்காணித்துக் கொண்டிருந்த சிவதாஸின் டீம் அதை அவனுக்கு தெரிவிக்க, தானும் திரை முன்பு சென்றமர்ந்து கொண்டான்.