அவளிடம் சொல்லிவிட்டானே தவிர, அவளின் திகைப்பான பார்வையே மனதினில் ஓடியது. ‘நான் என்ன பேசப் போறேன்னு நினைப்பா? அவ நின்னதைப் பார்த்தா அதிர்ச்சி தெரிந்தது.
எப்படி அவளிடம் சொல்லப் போகிறோம் என்று யோசித்து யோசித்துத் தலை வேதனை அடைய இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வீட்டினில் சுற்றி வந்த குருமா வாசத்தில் அவன் வயிறு சப்தம் போட மெல்ல எழுந்தான். ‘குருமா பண்ணி யிருப்பா போலருக்கு.பசி வேற வயிற்றைப் பிடித்து இழுக்குது. இப்போவே போன் பண்ணினாதான் அரைமணி நேரத்திலேயாவது கொண்டு வருவான். அதுக்குள்ளே பசி கெண்டை ஏறிடும்’ என்று நினைத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போன் செய்தான்.
“ம்ம்..ஆமாங்க அந்தப் பிளாட்லே இருந்துதான் கூப்பிடுறேன்.ரெண்டு ரொட்டி ஒரு குருமா அனுப்பிடுங்க.”
வெளியில் அவன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் காதில் அவன் பேசியது விழ, ‘அடபாவி! நான் இவன் வருவான்னு காத்துகிட்டு இருந்தா, இவர் குருமா வாசனையில் ஹோட்டலில் ஆர்டர் பண்ணிட்டான் போல. எல்லாம் தலையெழுத்து ‘எம்ஸ்கொயர்’. பொண்டாட்டி வீட்டிலிருக்கிறப்ப வெளில சாப்பிடனும்னு உனக்குத் தலையெழுத்து’ என்று அவனைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் அவன் மனையாள்.
அவனும் அவசரமாக ரெப்ரெஷ் செய்து கொண்டு டிராக் பாண்டும், டீ-ர்ட்டும் அணிந்து கொண்டு அவள் எதிரில் அமர்ந்தான்.
தலைக்குக் குளித்திருப்பான் போல அலைஅலையான கூந்தலில் ஆங்காங்கே நீர் துளிகள் படிந்திருக்க, பிரெஷ்ஷாகத் தன் முன்னே அமர்ந்திருந்தவனை அவ்வளவு அருகே பார்த்ததும், தனக்கு அவன் செய்த அக்கிரமங்கள் எல்லாம் மறைந்து போய் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மெல்ல தொண்டையைக் கனைத்தவன் “அப்புறம் எப்போ கிளம்புறே?” என்றான்.
அவன் பேசியதில் சுயநினைவுக்கு வந்து ‘இதென்ன கேள்வி’ என்பது போல் பார்த்து வைத்தாள்.
“உன்னைத் தான் கேட்கிறேன்..எப்போ கிளம்புறதா உத்தேசம்?”
“எங்கே”
“அதை நீ தான் முடிவு செய்யனும்.”
“எனக்குப் புரியல. நீங்க என்ன சொல்ல வரீங்களோ அதைத் தெளிவா சொல்லுங்க.”
“நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற. எனக்கு இங்கே ப்ரைவசி இல்லாம போச்சு.நீ என் வீட்டில் இருக்கிறதால என்னோட தனிமையே பாதிக்கப்படுது.”
அவன் சொன்னதைக் கேட்டு அதுவரை இருந்த பொறுமை பறந்து போக “நீங்க என்ன லூசா?பொண்டாட்டி கிட்ட போய் ப்ரைவசி போச்சுன்னு சொல்றீங்க?”
“ஏய்!..என்ற அரட்டலுடன் கையை ஓங்கிக் கொண்டு அவளை அடிக்கச் சென்றான்.
“இந்தக் கையை ஓங்குற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். அது ஒன்னு தான் செய்யாம இருந்தீங்க. இப்போ அதையும் செஞ்சாச்சு” என்று ஆத்திரமாக மொழிந்தாள்.
“ஏய்! நீ அதிகமா பேசுற. உன்னை இங்க தங்க வச்சு, என் செலவுல சாப்பாடு போட்டு வசதியா உட்கார வச்சிருக்கிறேன் பாரு. இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ” என்றான்.
“என்ன! நீங்க இவ்வளோ சீப்பான ஆளா? நான் யார் சார் உங்களுக்கு. பொண்டாடிக்கு சாப்பாடு போட கூடக் கணக்கு பார்க்கும் நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?”
“நீ ரொம்ப ஓவரா பேசுற! நானென்ன உன்னை விரும்பியா கட்டிக்கிட்டு வந்தேன்.”
“ஒ..இதுவேறையா? பிடிக்கலேன்னு சொல்லவே தைரியமில்லாத ஆளெல்லாம் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்.”
“அறைஞ்சிடுவேன் ராஸ்கல்!இத்தனை நாள் என்னவோ ரொம்ப நல்லவ மாதிரி சீன் போட்ட, இப்போ வெளி வந்துடுச்சு இல்ல உன் சுயரூபம்.”
“ஆறுமாசத்தில் நீங்க பண்ணிய கொடுமைக்கு இதைக் கூடப் பேசலேன்னா நான் மனுஷியே இல்ல.”
“என்ன கொடுமை பண்ணினேன்.உன் கையைப் பிடிச்சு இழுத்தேனா, இல்ல அடிச்சேன்னா. சொல்ல வந்துட்டா? எனக்குத் தான் பிடிக்கலேன்னு தெரியுதில்ல போக வேண்டியது தானே.”
“இதெல்லாம் பண்ணினா தான் கொடுமையா? மனசை காயப்படுத்தினாலும் அதுவும் கொடுமை தான்” என்றவளுக்கு அவன் மீண்டும்மீண்டும் பிடிக்கல..பிடிக்கல என்று சொல்வதைக் கேட்டவளின் மனம் நொறுங்கிப் போனது. “உங்களுக்கு என்ன பிரச்சனை..எதுவா இருந்தாலும் சொல்லுங்க. நாம பேசி தீர்த்துக்கலாம்” என்றாள் கெஞ்சும் குரலில்.
“எனக்கு இந்தத் திருமணத்தைத் தொடருவதில் விருப்பமில்ல. நாம பிரிஞ்சிடலாம்” என்று ஒரே வரியில் அவள் தலையில் இடியை இறக்கினான்.
அந்த நிமிடம் அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நெஞ்சை அழித்திப் பிழிந்தது போல் ஒரு வலி. கண்களில் கண்ணீர் குளம் கட்ட ‘இதற்காகவா இந்த ஆறு மாதமும் பொறுமையாக இருந்தேன். இதைக் கேட்கவா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன்’ என்று உறைந்து போய் அமர்ந்துவிட்டாள்.
அவளின் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்து சற்றும் கவலைப்படாமல், அவள் முகத்தின் முன்னே சொடக்கு போட்டு “ஹலோ..ஹலோ..இப்படி உட்கார்ந்தா என்ன அர்த்தம்?” என்றான்.
நெஞ்சில் வலியுடன் அவனைப் பார்த்து “ஒரு பெண்ணோட வாழ்க்கை அவ்வளவு எளிதா போயிடுச்சு இல்ல உங்களுக்கு?”
எப்படி அவளிடம் சொல்லப் போகிறோம் என்று யோசித்து யோசித்துத் தலை வேதனை அடைய இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வீட்டினில் சுற்றி வந்த குருமா வாசத்தில் அவன் வயிறு சப்தம் போட மெல்ல எழுந்தான். ‘குருமா பண்ணி யிருப்பா போலருக்கு.பசி வேற வயிற்றைப் பிடித்து இழுக்குது. இப்போவே போன் பண்ணினாதான் அரைமணி நேரத்திலேயாவது கொண்டு வருவான். அதுக்குள்ளே பசி கெண்டை ஏறிடும்’ என்று நினைத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போன் செய்தான்.
“ம்ம்..ஆமாங்க அந்தப் பிளாட்லே இருந்துதான் கூப்பிடுறேன்.ரெண்டு ரொட்டி ஒரு குருமா அனுப்பிடுங்க.”
வெளியில் அவன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் காதில் அவன் பேசியது விழ, ‘அடபாவி! நான் இவன் வருவான்னு காத்துகிட்டு இருந்தா, இவர் குருமா வாசனையில் ஹோட்டலில் ஆர்டர் பண்ணிட்டான் போல. எல்லாம் தலையெழுத்து ‘எம்ஸ்கொயர்’. பொண்டாட்டி வீட்டிலிருக்கிறப்ப வெளில சாப்பிடனும்னு உனக்குத் தலையெழுத்து’ என்று அவனைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் அவன் மனையாள்.
அவனும் அவசரமாக ரெப்ரெஷ் செய்து கொண்டு டிராக் பாண்டும், டீ-ர்ட்டும் அணிந்து கொண்டு அவள் எதிரில் அமர்ந்தான்.
தலைக்குக் குளித்திருப்பான் போல அலைஅலையான கூந்தலில் ஆங்காங்கே நீர் துளிகள் படிந்திருக்க, பிரெஷ்ஷாகத் தன் முன்னே அமர்ந்திருந்தவனை அவ்வளவு அருகே பார்த்ததும், தனக்கு அவன் செய்த அக்கிரமங்கள் எல்லாம் மறைந்து போய் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மெல்ல தொண்டையைக் கனைத்தவன் “அப்புறம் எப்போ கிளம்புறே?” என்றான்.
அவன் பேசியதில் சுயநினைவுக்கு வந்து ‘இதென்ன கேள்வி’ என்பது போல் பார்த்து வைத்தாள்.
“உன்னைத் தான் கேட்கிறேன்..எப்போ கிளம்புறதா உத்தேசம்?”
“எங்கே”
“அதை நீ தான் முடிவு செய்யனும்.”
“எனக்குப் புரியல. நீங்க என்ன சொல்ல வரீங்களோ அதைத் தெளிவா சொல்லுங்க.”
“நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற. எனக்கு இங்கே ப்ரைவசி இல்லாம போச்சு.நீ என் வீட்டில் இருக்கிறதால என்னோட தனிமையே பாதிக்கப்படுது.”
அவன் சொன்னதைக் கேட்டு அதுவரை இருந்த பொறுமை பறந்து போக “நீங்க என்ன லூசா?பொண்டாட்டி கிட்ட போய் ப்ரைவசி போச்சுன்னு சொல்றீங்க?”
“ஏய்!..என்ற அரட்டலுடன் கையை ஓங்கிக் கொண்டு அவளை அடிக்கச் சென்றான்.
“இந்தக் கையை ஓங்குற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். அது ஒன்னு தான் செய்யாம இருந்தீங்க. இப்போ அதையும் செஞ்சாச்சு” என்று ஆத்திரமாக மொழிந்தாள்.
“ஏய்! நீ அதிகமா பேசுற. உன்னை இங்க தங்க வச்சு, என் செலவுல சாப்பாடு போட்டு வசதியா உட்கார வச்சிருக்கிறேன் பாரு. இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ” என்றான்.
“என்ன! நீங்க இவ்வளோ சீப்பான ஆளா? நான் யார் சார் உங்களுக்கு. பொண்டாடிக்கு சாப்பாடு போட கூடக் கணக்கு பார்க்கும் நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?”
“நீ ரொம்ப ஓவரா பேசுற! நானென்ன உன்னை விரும்பியா கட்டிக்கிட்டு வந்தேன்.”
“ஒ..இதுவேறையா? பிடிக்கலேன்னு சொல்லவே தைரியமில்லாத ஆளெல்லாம் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்.”
“அறைஞ்சிடுவேன் ராஸ்கல்!இத்தனை நாள் என்னவோ ரொம்ப நல்லவ மாதிரி சீன் போட்ட, இப்போ வெளி வந்துடுச்சு இல்ல உன் சுயரூபம்.”
“ஆறுமாசத்தில் நீங்க பண்ணிய கொடுமைக்கு இதைக் கூடப் பேசலேன்னா நான் மனுஷியே இல்ல.”
“என்ன கொடுமை பண்ணினேன்.உன் கையைப் பிடிச்சு இழுத்தேனா, இல்ல அடிச்சேன்னா. சொல்ல வந்துட்டா? எனக்குத் தான் பிடிக்கலேன்னு தெரியுதில்ல போக வேண்டியது தானே.”
“இதெல்லாம் பண்ணினா தான் கொடுமையா? மனசை காயப்படுத்தினாலும் அதுவும் கொடுமை தான்” என்றவளுக்கு அவன் மீண்டும்மீண்டும் பிடிக்கல..பிடிக்கல என்று சொல்வதைக் கேட்டவளின் மனம் நொறுங்கிப் போனது. “உங்களுக்கு என்ன பிரச்சனை..எதுவா இருந்தாலும் சொல்லுங்க. நாம பேசி தீர்த்துக்கலாம்” என்றாள் கெஞ்சும் குரலில்.
“எனக்கு இந்தத் திருமணத்தைத் தொடருவதில் விருப்பமில்ல. நாம பிரிஞ்சிடலாம்” என்று ஒரே வரியில் அவள் தலையில் இடியை இறக்கினான்.
அந்த நிமிடம் அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நெஞ்சை அழித்திப் பிழிந்தது போல் ஒரு வலி. கண்களில் கண்ணீர் குளம் கட்ட ‘இதற்காகவா இந்த ஆறு மாதமும் பொறுமையாக இருந்தேன். இதைக் கேட்கவா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன்’ என்று உறைந்து போய் அமர்ந்துவிட்டாள்.
அவளின் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்து சற்றும் கவலைப்படாமல், அவள் முகத்தின் முன்னே சொடக்கு போட்டு “ஹலோ..ஹலோ..இப்படி உட்கார்ந்தா என்ன அர்த்தம்?” என்றான்.
நெஞ்சில் வலியுடன் அவனைப் பார்த்து “ஒரு பெண்ணோட வாழ்க்கை அவ்வளவு எளிதா போயிடுச்சு இல்ல உங்களுக்கு?”