அத்தியாயம் – 5
அவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள். திடீரென்று ஒரு பதினைந்து நாட்களுக்குள் தன் வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் வரும் என்று எண்ணவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்னைச் சுற்றி? சித்துவின் குடும்பத்தினர் தங்களது காதலை ஏற்கவில்லை என்றால், இந்த திருமணத்தை எப்படி ஏற்பார்கள்? தன்னை பெற்றவர்களையும் ஏமாற்றி விட்டு என்ன வாழ்க்கை வாழ்ந்துவிடப் போகிறோம்? என்று எண்ணங்களின் சுழற்சியில் சிக்கிக் கொண்டவளை மாலினியும், சரவணனும் அழைத்துக் கொண்டு லைப்ரரிக்கு சென்றார்கள்.
அங்கு வைத்து தங்களது பிளானை கூறினார்கள். கல்லூரியிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து தோழிகளுடன் வெளியே செல்வது போல கிளம்பி வர வேண்டும் என்று கூற, அவளோ அதை மறுத்தாள்.
“நாளைக்கு கல்யாணம்னு சொல்றீங்க? இன்னைக்கு நைட் நான் திரும்பலேன்னா பிரச்சனை ஆகுமே?” என்றாள் கவலையுடன்.
அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்ட மாலினி “எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றேன் வர்ஷூ. நீயும் நானும் எப்பவும் க்ரூப் ஸ்டடி பண்றது புது விஷயமில்லையே” என்றாள்.
“அப்போ உங்க வீட்டில் என்ன சொல்லுவ?”
“உங்க வீட்டில் க்ரூப் ஸ்டடின்னு தான்” என்று சிரித்தாள்.
வர்ஷினிக்கு மனசு ஆறவே இல்லை. பெரிய தவறை நோக்கி தான் அடியெடுத்து வைப்பதாக தோன்றியது. சரவணனிடம் திரும்பி “சித்துவை மறுபடியும் பேசி பார்க்க சொல்லலாமா?” என்றாள் தவிப்புடன்.
அவளது நிலையை உணர்ந்த சரவணன் உடனே சித்துவை அழைத்து விட்டான். அவளிடம் போனை கொடுத்து விட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
கண்களில் அலைபுருதளுடன் “சித்து!” என்றழைத்தவளின் அழைப்பு அவனது உயிர் வரை தீண்டியது.
“சொல்லு சோட்டி? என்ன பயம் உனக்கு?”
“இ...இது சரியா வருமா? எனக்கு பயமா இருக்கு” என்றாள் குரலில் நடுக்கத்துடன்.
அவனது மூச்சு சீறலாக அவளது செவியைத் தீண்ட “என் மேல நம்பிக்கை இருக்கில்ல? என்னோட உடலில் உயிர் இருக்கும் வரை உனக்கு எந்த சங்கடமும் வர விட மாட்டேன்னு நம்பு-டா. நமக்கு இப்போ இதை விட்டா வேறுவழியில்லை” என்றாள் அவளின் பயத்தை போக்கும் வண்ணம்.
அவனது குரலில் தன் மீதான நேசம் வழிந்தோடுவதை உணர்ந்தவளுக்கு அதன் பிறகு அடுத்த சிந்தனை வரவில்லை.
“நான் வரேன் சித்து” என்று விட்டாள்.
“எதற்கும் பயப்படாதே! நானிருக்கேன்”.
“ம்ம்..” என்று கூறி போனை வைத்துவிட்டு சரவணனை தேடினாள். அவள் போனை வைத்ததும் அவளிடம் வந்தவர்கள் அவளது கண்களில் பிறந்திருந்த தெளிவை கண்டு நிம்மதி அடைந்தார்கள்.
அதன்பிறகு மாலை மாலினியும், வர்ஷுவும் ஒன்றாக அவள் வீட்டிற்கு சென்றார்கள். அடுத்து வரப் போகும் பரீட்சைக்கு க்ரூப் ஸ்டடி செய்யப் போவதாக அனுமதி கேட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். அவளது கல்லூரி பையிலேயே இரு நாட்களுக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு மாலினி வீட்டை அடைந்தார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை நீராஜின் ஆட்கள் தொடர்ந்தார்கள். வர்ஷினி மாலினியின் வீட்டில் இருக்கவும் அதையும் நீரஜிற்கு தெரிவிக்கப்பட்டது.
“அவளை மிஸ் பண்ணிடாதீங்க. நிச்சயம் என் மகன் அவளைத் தேடி வருவான்”.
“ஓகே சாப்”.
மாலினியின் வீட்டில் அவளது அறையில் இருந்தவளின் மனநிலை நேரம் ஆக-ஆக மேலும் பதட்டம் அடைந்தது. கலவரம் அடைந்த முகத்துடனே அமர்ந்திருந்தவளை கண்டு பாவமாக இருந்தது மாலினிக்கு. இந்த காதல் படுத்தும் பாட்டை பார்த்தவளுக்கு அவளின் நிலை பரிதாபத்தையே கொடுத்தது.
அவளது தோளில் கை வைத்து ஆதரவாக தட்டிக் கொடுத்தவள் “எதையும் நினைச்சு கலங்காதே வர்ஷூ. சித்தார்த் எல்லாவற்றையும் ஹாண்டில் பண்ணிடுவார்” என்று தைரியமூட்டினாள்.
“ம்ம்..” என்று சொன்னாலும் அவளது மனநிலை மாறவே இல்லை.
அவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள். திடீரென்று ஒரு பதினைந்து நாட்களுக்குள் தன் வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் வரும் என்று எண்ணவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்னைச் சுற்றி? சித்துவின் குடும்பத்தினர் தங்களது காதலை ஏற்கவில்லை என்றால், இந்த திருமணத்தை எப்படி ஏற்பார்கள்? தன்னை பெற்றவர்களையும் ஏமாற்றி விட்டு என்ன வாழ்க்கை வாழ்ந்துவிடப் போகிறோம்? என்று எண்ணங்களின் சுழற்சியில் சிக்கிக் கொண்டவளை மாலினியும், சரவணனும் அழைத்துக் கொண்டு லைப்ரரிக்கு சென்றார்கள்.
அங்கு வைத்து தங்களது பிளானை கூறினார்கள். கல்லூரியிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து தோழிகளுடன் வெளியே செல்வது போல கிளம்பி வர வேண்டும் என்று கூற, அவளோ அதை மறுத்தாள்.
“நாளைக்கு கல்யாணம்னு சொல்றீங்க? இன்னைக்கு நைட் நான் திரும்பலேன்னா பிரச்சனை ஆகுமே?” என்றாள் கவலையுடன்.
அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்ட மாலினி “எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றேன் வர்ஷூ. நீயும் நானும் எப்பவும் க்ரூப் ஸ்டடி பண்றது புது விஷயமில்லையே” என்றாள்.
“அப்போ உங்க வீட்டில் என்ன சொல்லுவ?”
“உங்க வீட்டில் க்ரூப் ஸ்டடின்னு தான்” என்று சிரித்தாள்.
வர்ஷினிக்கு மனசு ஆறவே இல்லை. பெரிய தவறை நோக்கி தான் அடியெடுத்து வைப்பதாக தோன்றியது. சரவணனிடம் திரும்பி “சித்துவை மறுபடியும் பேசி பார்க்க சொல்லலாமா?” என்றாள் தவிப்புடன்.
அவளது நிலையை உணர்ந்த சரவணன் உடனே சித்துவை அழைத்து விட்டான். அவளிடம் போனை கொடுத்து விட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
கண்களில் அலைபுருதளுடன் “சித்து!” என்றழைத்தவளின் அழைப்பு அவனது உயிர் வரை தீண்டியது.
“சொல்லு சோட்டி? என்ன பயம் உனக்கு?”
“இ...இது சரியா வருமா? எனக்கு பயமா இருக்கு” என்றாள் குரலில் நடுக்கத்துடன்.
அவனது மூச்சு சீறலாக அவளது செவியைத் தீண்ட “என் மேல நம்பிக்கை இருக்கில்ல? என்னோட உடலில் உயிர் இருக்கும் வரை உனக்கு எந்த சங்கடமும் வர விட மாட்டேன்னு நம்பு-டா. நமக்கு இப்போ இதை விட்டா வேறுவழியில்லை” என்றாள் அவளின் பயத்தை போக்கும் வண்ணம்.
அவனது குரலில் தன் மீதான நேசம் வழிந்தோடுவதை உணர்ந்தவளுக்கு அதன் பிறகு அடுத்த சிந்தனை வரவில்லை.
“நான் வரேன் சித்து” என்று விட்டாள்.
“எதற்கும் பயப்படாதே! நானிருக்கேன்”.
“ம்ம்..” என்று கூறி போனை வைத்துவிட்டு சரவணனை தேடினாள். அவள் போனை வைத்ததும் அவளிடம் வந்தவர்கள் அவளது கண்களில் பிறந்திருந்த தெளிவை கண்டு நிம்மதி அடைந்தார்கள்.
அதன்பிறகு மாலை மாலினியும், வர்ஷுவும் ஒன்றாக அவள் வீட்டிற்கு சென்றார்கள். அடுத்து வரப் போகும் பரீட்சைக்கு க்ரூப் ஸ்டடி செய்யப் போவதாக அனுமதி கேட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். அவளது கல்லூரி பையிலேயே இரு நாட்களுக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு மாலினி வீட்டை அடைந்தார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை நீராஜின் ஆட்கள் தொடர்ந்தார்கள். வர்ஷினி மாலினியின் வீட்டில் இருக்கவும் அதையும் நீரஜிற்கு தெரிவிக்கப்பட்டது.
“அவளை மிஸ் பண்ணிடாதீங்க. நிச்சயம் என் மகன் அவளைத் தேடி வருவான்”.
“ஓகே சாப்”.
மாலினியின் வீட்டில் அவளது அறையில் இருந்தவளின் மனநிலை நேரம் ஆக-ஆக மேலும் பதட்டம் அடைந்தது. கலவரம் அடைந்த முகத்துடனே அமர்ந்திருந்தவளை கண்டு பாவமாக இருந்தது மாலினிக்கு. இந்த காதல் படுத்தும் பாட்டை பார்த்தவளுக்கு அவளின் நிலை பரிதாபத்தையே கொடுத்தது.
அவளது தோளில் கை வைத்து ஆதரவாக தட்டிக் கொடுத்தவள் “எதையும் நினைச்சு கலங்காதே வர்ஷூ. சித்தார்த் எல்லாவற்றையும் ஹாண்டில் பண்ணிடுவார்” என்று தைரியமூட்டினாள்.
“ம்ம்..” என்று சொன்னாலும் அவளது மனநிலை மாறவே இல்லை.