அத்தியாயம் – 4
எத்தனை இனிமையான நினைவுகள். அனைத்தும் வசந்தியால் மொத்தமாக சிதைக்கப்பட்டு விட்டது. இனி, தங்களின் காதல் உயிர்ப்புடன் திரும்புமா என்கிற கேள்விக்கு விடையில்லை.
அங்கே அன்னையை சமாளித்து விட்டு கடைக்கு கிளம்பிச் சென்றான் குணா. அவன் சென்றதும் அர்ஜுனின் கைகளைப் பற்றிக் கொண்ட கல்யாணி “நானே அவன் வாழ்க்கையை கெடுத்துட்டேன் அர்ஜுன். நல்ல பெண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன்னு நினைச்சு...” என்று பேசியவரை தடுத்து நிறுத்தியவன் “போதும்மா! நடந்தையே பேசிப்பேசி உங்க மனசை புண்ணாக்கி வச்சிருக்கீங்க. நமக்கு கயல் கிடைச்சா போதும். மற்றதை பேச வேண்டாம்”.
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர் “கிடைச்சிடுவா தானே?” என்றார் ஏக்கமாக.
“கண்டிப்பாம்மா! அவளுக்கு எதுவும் இருக்காது. நல்லா இருப்பா”.
அப்போது வாசல் மணி அழைக்க, கல்யாணியை அமர வைத்துவிட்டு சென்று கதவை திறந்தான். அங்கே பழனியும், ஞானமும் நின்றிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததுமே அர்ஜுனுக்கு உள்ளுக்குள் எரிச்சல் எழுந்தது. அதை அடக்கிக் கொண்டு “வாங்க அத்தை! வாங்க மாமா” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
இருவரும் வந்து சோபாவில் அமர்ந்தார்கள். ஞானம் தான் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு “என்ன கல்யாணி எங்கே உன் மருமகளும் பேரனும்?” தெரியாத மாதிரி.
“அவங்க அம்மா வீட்டில் இருக்கா அண்ணி”.
“அது சரி! உன் பொண்ணு ஓடிப் போனதுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணை எதுக்கு தண்டிக்கிற?”
“அண்ணி!”
“ஆம்பள புள்ளையை வளர்க்கிறது பெருசில்லை. பெண்ணை வளர்க்கிறது தான் பெரிய காரியம். நீ அதை ஒழுங்கா செய்யாம அடுத்த வீட்டுப் பெண்ணை ஒதுக்கி வச்சிருக்க” என்று முடிக்கவுமே “அத்தை! இது எங்க வீட்டு விவகாரம். நாங்க என்ன செய்யணும் செய்யக் கூடாது என்பதை முடிவு பண்ணிக்கிறோம்” என்று விட்டான்.
அவனது பேச்சில் பழனிக்கு கோபம் வந்துவிட “என்னடா பேசுற? சொந்தபந்தம் பெரியவங்கன்னு எதுக்கு இருக்கோம்? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற?”
ஞானமோ கண்களை கசக்கிக் கொண்டு “ஏண்டா மாமான்னு கொஞ்சமாவது மரியாதை கொடுக்குறீங்களா இந்த வீட்டில்? என் தம்பி குடும்பம்ன்னு நாங்க பார்த்து பார்த்து செஞ்சது போக இப்படி அநியாயமா பேசுறீங்களே”.
அர்ஜுன் பேசும் முன் “அண்ணி! அவன் சொன்னதை தான் நானும் சொல்றேன். எங்க வீட்டு விவகாரம் இது. முடிவெடுக்க வேண்டியது நாங்க தான்” என்று விட்டார் கல்யாணி.
பழனிக்கு இப்போது ஆங்காரம் எழ “என்னம்மா பேச்செல்லாம் புதுசா இருக்கு? ஓஹோ! காசு பணமெல்லாம் வந்ததும் பேசுறீங்க..ம்ம்..”.
அவர்களில் எள்ளல் பேச்சைக் கண்டு கொள்ளாமல் “இல்ல அண்ணன். நிதர்சனத்தைப் பேசுறேன். இப்போ உங்க வீட்டுல ஒரு பிரச்சனைன்னா நாங்க வந்து நாட்டாமை பண்ணினா நீங்க ஒத்துக்குவீங்களா?”
கல்யாணியின் கேள்வியில் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அதெப்படி! எங்க வீட்டுல நீ வந்து நாட்டமை பண்ண முடியும்?”
“அதே தான் அண்ணி. எங்க வீட்டுப் பிரச்சனைகளை நாங்க பார்த்துக்கிறோம்”.
“ஒரு நிமிஷம் இரு! எங்க வீடும் உங்க வீடும் ஒண்ணா? என் தம்பி இறந்த பிறகு இந்த குடும்பத்துக்கு நாங்க தான் எல்லாம். எங்களை கேட்டு தான் நீ செய்யணும்”.
“அப்படியா அத்தை! அப்போ நாங்க சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டப்ப நீங்க ஏன் உதவல? அப்போ எங்கே போச்சு இந்த கரிசனமும் அக்கறையும்”.
பழனிக்கு பொறுமை போக “ஞானம் கிளம்பு! நமக்கு இந்த வீட்டில் மரியாதை கிடையாது” என்று வெளியேற தொடங்கினார்.
ஞானம் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே “என் தம்பி இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? புழுக்கை எல்லாம் படம் எடுத்து ஆடுது” என்று புலம்பிக் கொண்டே சென்றார்.
கல்யாணி ஓய்ந்து போய் விட்டார். எத்தனை கேள்விகளையும் பேச்சுகளையும் தான் சமாளிப்பது.
அன்னையின் மனநிலையை கவனித்த அர்ஜுன் அவரை அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு வந்தவன் ஹாலில் அமர்ந்து விட்டான்.
சுடரை பார்ப்பதற்காகவே விடுமுறை எடுத்திருந்தான். அன்று தொடங்கிய எதுவுமே சரியாக செல்லவில்லை. சுரேஷை வைத்து கமிஷனர் அலுவலகத்திற்கும் சென்று அங்கும் பெரிதாக உதவி கிடைக்கவில்லை.
அடுத்து என்ன செய்வது? கயலை எப்படி கண்டுபிடிப்பது என்றும் புரியவில்லை. அதோடு குணாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. சுடருக்கும் தனக்குமான உறவிற்கும் எதிர்காலமில்லை என்று எண்ணி மண்டை காய்ந்து போனான்.
அதே நேரம் வசந்தி குணாவின் கடைக்கு வந்திருந்தாள். அவள் கடைக்கு வருவாள் என்று எதிர்பார்க்காதவன் பதட்டமடைந்து விட்டான்.
“ஏய்! இங்கே எதுக்கு வந்த?”
எத்தனை இனிமையான நினைவுகள். அனைத்தும் வசந்தியால் மொத்தமாக சிதைக்கப்பட்டு விட்டது. இனி, தங்களின் காதல் உயிர்ப்புடன் திரும்புமா என்கிற கேள்விக்கு விடையில்லை.
அங்கே அன்னையை சமாளித்து விட்டு கடைக்கு கிளம்பிச் சென்றான் குணா. அவன் சென்றதும் அர்ஜுனின் கைகளைப் பற்றிக் கொண்ட கல்யாணி “நானே அவன் வாழ்க்கையை கெடுத்துட்டேன் அர்ஜுன். நல்ல பெண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன்னு நினைச்சு...” என்று பேசியவரை தடுத்து நிறுத்தியவன் “போதும்மா! நடந்தையே பேசிப்பேசி உங்க மனசை புண்ணாக்கி வச்சிருக்கீங்க. நமக்கு கயல் கிடைச்சா போதும். மற்றதை பேச வேண்டாம்”.
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர் “கிடைச்சிடுவா தானே?” என்றார் ஏக்கமாக.
“கண்டிப்பாம்மா! அவளுக்கு எதுவும் இருக்காது. நல்லா இருப்பா”.
அப்போது வாசல் மணி அழைக்க, கல்யாணியை அமர வைத்துவிட்டு சென்று கதவை திறந்தான். அங்கே பழனியும், ஞானமும் நின்றிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததுமே அர்ஜுனுக்கு உள்ளுக்குள் எரிச்சல் எழுந்தது. அதை அடக்கிக் கொண்டு “வாங்க அத்தை! வாங்க மாமா” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
இருவரும் வந்து சோபாவில் அமர்ந்தார்கள். ஞானம் தான் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு “என்ன கல்யாணி எங்கே உன் மருமகளும் பேரனும்?” தெரியாத மாதிரி.
“அவங்க அம்மா வீட்டில் இருக்கா அண்ணி”.
“அது சரி! உன் பொண்ணு ஓடிப் போனதுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணை எதுக்கு தண்டிக்கிற?”
“அண்ணி!”
“ஆம்பள புள்ளையை வளர்க்கிறது பெருசில்லை. பெண்ணை வளர்க்கிறது தான் பெரிய காரியம். நீ அதை ஒழுங்கா செய்யாம அடுத்த வீட்டுப் பெண்ணை ஒதுக்கி வச்சிருக்க” என்று முடிக்கவுமே “அத்தை! இது எங்க வீட்டு விவகாரம். நாங்க என்ன செய்யணும் செய்யக் கூடாது என்பதை முடிவு பண்ணிக்கிறோம்” என்று விட்டான்.
அவனது பேச்சில் பழனிக்கு கோபம் வந்துவிட “என்னடா பேசுற? சொந்தபந்தம் பெரியவங்கன்னு எதுக்கு இருக்கோம்? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற?”
ஞானமோ கண்களை கசக்கிக் கொண்டு “ஏண்டா மாமான்னு கொஞ்சமாவது மரியாதை கொடுக்குறீங்களா இந்த வீட்டில்? என் தம்பி குடும்பம்ன்னு நாங்க பார்த்து பார்த்து செஞ்சது போக இப்படி அநியாயமா பேசுறீங்களே”.
அர்ஜுன் பேசும் முன் “அண்ணி! அவன் சொன்னதை தான் நானும் சொல்றேன். எங்க வீட்டு விவகாரம் இது. முடிவெடுக்க வேண்டியது நாங்க தான்” என்று விட்டார் கல்யாணி.
பழனிக்கு இப்போது ஆங்காரம் எழ “என்னம்மா பேச்செல்லாம் புதுசா இருக்கு? ஓஹோ! காசு பணமெல்லாம் வந்ததும் பேசுறீங்க..ம்ம்..”.
அவர்களில் எள்ளல் பேச்சைக் கண்டு கொள்ளாமல் “இல்ல அண்ணன். நிதர்சனத்தைப் பேசுறேன். இப்போ உங்க வீட்டுல ஒரு பிரச்சனைன்னா நாங்க வந்து நாட்டாமை பண்ணினா நீங்க ஒத்துக்குவீங்களா?”
கல்யாணியின் கேள்வியில் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அதெப்படி! எங்க வீட்டுல நீ வந்து நாட்டமை பண்ண முடியும்?”
“அதே தான் அண்ணி. எங்க வீட்டுப் பிரச்சனைகளை நாங்க பார்த்துக்கிறோம்”.
“ஒரு நிமிஷம் இரு! எங்க வீடும் உங்க வீடும் ஒண்ணா? என் தம்பி இறந்த பிறகு இந்த குடும்பத்துக்கு நாங்க தான் எல்லாம். எங்களை கேட்டு தான் நீ செய்யணும்”.
“அப்படியா அத்தை! அப்போ நாங்க சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டப்ப நீங்க ஏன் உதவல? அப்போ எங்கே போச்சு இந்த கரிசனமும் அக்கறையும்”.
பழனிக்கு பொறுமை போக “ஞானம் கிளம்பு! நமக்கு இந்த வீட்டில் மரியாதை கிடையாது” என்று வெளியேற தொடங்கினார்.
ஞானம் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே “என் தம்பி இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? புழுக்கை எல்லாம் படம் எடுத்து ஆடுது” என்று புலம்பிக் கொண்டே சென்றார்.
கல்யாணி ஓய்ந்து போய் விட்டார். எத்தனை கேள்விகளையும் பேச்சுகளையும் தான் சமாளிப்பது.
அன்னையின் மனநிலையை கவனித்த அர்ஜுன் அவரை அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு வந்தவன் ஹாலில் அமர்ந்து விட்டான்.
சுடரை பார்ப்பதற்காகவே விடுமுறை எடுத்திருந்தான். அன்று தொடங்கிய எதுவுமே சரியாக செல்லவில்லை. சுரேஷை வைத்து கமிஷனர் அலுவலகத்திற்கும் சென்று அங்கும் பெரிதாக உதவி கிடைக்கவில்லை.
அடுத்து என்ன செய்வது? கயலை எப்படி கண்டுபிடிப்பது என்றும் புரியவில்லை. அதோடு குணாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. சுடருக்கும் தனக்குமான உறவிற்கும் எதிர்காலமில்லை என்று எண்ணி மண்டை காய்ந்து போனான்.
அதே நேரம் வசந்தி குணாவின் கடைக்கு வந்திருந்தாள். அவள் கடைக்கு வருவாள் என்று எதிர்பார்க்காதவன் பதட்டமடைந்து விட்டான்.
“ஏய்! இங்கே எதுக்கு வந்த?”