அத்தியாயம் – 4
இருளடைந்த அறை, மூச்சுக்காற்றின் சப்தம் மட்டும் எங்கும் விரவிக் கிடந்தது. கைகள் நாற்காலியோடு கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தவள் மெல்ல நிமிர்ந்து இருட்டில் கண்களை சுழற்றினாள்.
முதலில் இருட்டு கண்களுக்கு பழக சற்று நேரம் எடுத்தது. பெரியதுமில்லாத சிறியதுமில்லாத ஒரு அறை. சிறிய மேஜை ஒன்றும், சிறிய கட்டில் மட்டுமே இருந்தது. அறையின் சுவற்றில் கண்களைப் பதித்தவளுக்கு அது சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்ட அறை என்பது புரிந்து போனது.
அந்நேரம் கிளிக் என்கிற சத்தம் கதவில் கேட்க, அவசரமாக தலையை தொங்கப் போட்டுக் கொண்டாள்.
உயர்ந்த மனிதன் ஒருவன் உள்ளே நுழைந்தான். அவனது ஆகிருதியிலேயே தெரிந்தது பத்து பேரை சமாளிக்க கூடியவன் என்று. அவள் இருந்த பக்கம் கூட திரும்பாதவன் மேஜை மீது எதையோ வைத்து விட்டு, அறையின் விளக்கைப் போட்டான்.
அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் “நேராவே பார்க்கலாம். உனக்கு கொடுத்த மருந்தோட அளவுக்கான நேரம் முடிஞ்சு போச்சு. என்னைப் பார்” என்றான் அழுத்தமான குரலில்.
அவன் அப்படி சொன்னதும் சட்டென்று நிமிர்ந்தவள் அலட்சியமான பாவனையுடன் அவனது கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளது முகத்தைப் பார்த்து “அங்கே நீ எப்படி போய் சேர்ந்த? உன்னை எந்த ஆபரேஷனுக்கு தேர்ந்தெடுத்தாங்க?” என்றான்.
இதழை கிண்டலாக வளைத்து தோள்களை குலுக்கி அவனை கேலியாகப் பார்த்தாள்.
சட்டென்று நாற்காலியை பின்னுக்குத் தள்ளி எழுந்த சிவதாஸ் அவளது கழுத்தைப் பிடித்திருந்தான்.
“இந்த சிவதாஸ் கிட்ட சிக்கினவன் உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கும். உன் மேல இன்னும் கையை வைக்காதது பெண்ணா இருக்கியேன்னு தான்” என்றான் உக்கிரமாக.
தொண்டை வலி எடுத்தாலும் “உன்னால முடிஞ்சதை பார்த்துக்க..”என்றவள் அவன் மேலும் கொடுத்த அழுத்தத்தில் இரும ஆரம்பித்தாள்.
அவளது அலட்சியம் அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிவதாஸ் என்கிற பெயரை கேட்டாலே ஆண்களே பேண்ட்டில் ஒன்றுக்கு அடித்து விடுவார்கள். ஆனால் இவளோ அலட்சியம் காட்டுகிறாள் என்றெண்ணியவன் அவளது கட்டுக்களை அவிழ்த்து இருகைகளையும் மடக்கிப் பிடித்து சுவற்றோடு திருப்பி நிற்க வைத்தான்.
அவன் கைகளைப் பிடித்ததிலேயே வலி உயிர் போனது. அதிலும் இரு கைகளையும் மடக்கி பின்பக்கம் வளைத்துப் பிடித்ததில் உயிர் போனது.
ஒரு கையால் அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன் மறுகையால் அவளது போனி டெயிலைப் பிடித்து முகத்தை சுவற்றோடு மோதினான். அதில் மூக்கு நேராக சுவற்றில் அடித்து உள்ளி மூக்கு உடைந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது.
“யார் நீ! எதற்காக உனக்கு அவங்க ட்ரைனிங் கொடுக்கிறாங்க?” என்றான் உறுமலாக.
அவளிடமிருந்து சிறு சத்தம் கூட வரவில்லை. அவன் அடித்த அடியின் வீரியம் அறிந்தவனுக்கு வேறொரு பெண்ணாக இருந்தாள் இந்நேரம் கதறி மயங்கி விழுந்திருப்பாள் என்று தெரியும். ஆனால் இவளோ மேலும் அழுத்தமாக உடல் விறைக்க நின்றிருந்தாள்.
ஒருபக்கம் அவளின் தைரியம் கண்டு ஆச்சர்யமாக இருந்தாலும், தனது ட்ரீட்மென்ட்டில் அலட்சியமாக நிற்பதா? என்றெண்ணி அப்படியே தன் பக்கம் திருப்பியவன் தன் உடலோடு அழுத்திப் பிடித்துக் கொண்டு “சொல்லு! யார் நீ ? அந்த இயக்கத்தில் எப்படி போய் சேர்ந்த?” என்றான்.
அவனது உடல் முழுவதும் அவள் மேல் பட்டதும் அதுவரை இருந்த வலியை மறந்து அவன் மடக்கிப் பிடித்திருந்த கைகளின் முட்டியால் வேகமாக அவன் வயிற்றில் தாக்கி விட்டு, லேசாக அவன் தள்ளடியதும் , அவனிடமிருந்து போராடினாள்.
அவனோ சற்றே சிரிப்புடன் அவள் எதிர்பார்க்கும் முன் அவள் இடையை வளைத்து வெயிட் லிப்டிங் தூக்குவது போல தூக்கி இருந்தான். இதை சிறிதும் எதிர்பார்கவில்லை.
“இந்த சிவதாஸ் கிட்டேயே விளையாடி பார்க்கிறியா?மரியாதையா நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிடு” என்றான்.
“இந்த உயிர் இருக்கிற வரை உன்னோட கேள்விகளுக்கு பதில் கிடைக்காது” என்றாள் முதன்முறையாக வாயைத் திறந்து.
பட்டென்று கீழே போட்டவன் வலியில் சுருங்கிய அவளது முகத்தைப் பார்த்து “இன்னும் என் ட்ரீட்மென்ட்டை ஆரம்பிக்கல. இன்னைக்கே சொல்லிட்டா உனக்கு நல்லது. பொண்ணுன்னு பார்க்க மாட்டேன் பிரிச்சு மேஞ்சிடுவேன்” என்றான் உறுமலாக.
நிமிர்ந்து அவனை பார்த்தவளின் இதழ்களில் ஏளனப் புன்னகை.
அவளின் முகம் நோக்கி குனிந்தவன் முடியை காதோரம் ஒதுக்கி விட்டு “அழகான கண்கள், ஆரஞ்சு சுளை போல உதடுகள், வெண்ணை போன்ற கன்னங்கள் இப்படி இருக்கிற இந்த முகம் அடி வாங்கி கருத்து சிவந்து போகனுமா?” என்றான் மென்மையான குரலில்.
அவனது பேச்சைக் கேட்டு அவளது கண்களும், இதழ்களும் ஏளனமாக சிரித்தது. நீயும் ஆண் தானே? என்று கேலியாக பார்த்தாள்.
சிரித்த உதடுகள் மீண்டும் சுருங்கும் முன்பே அவனது முஷ்டி அந்த உதடுகளை கிழித்திருந்தது.
“மனசுல நினைக்கிறது கூட என்னைப் பற்றி மரியாதையா நினைக்கணும். எனக்கு வேண்டியது உண்மை! இந்த உடல் இல்ல” என்றான் உறுமலாக.
இருளடைந்த அறை, மூச்சுக்காற்றின் சப்தம் மட்டும் எங்கும் விரவிக் கிடந்தது. கைகள் நாற்காலியோடு கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தவள் மெல்ல நிமிர்ந்து இருட்டில் கண்களை சுழற்றினாள்.
முதலில் இருட்டு கண்களுக்கு பழக சற்று நேரம் எடுத்தது. பெரியதுமில்லாத சிறியதுமில்லாத ஒரு அறை. சிறிய மேஜை ஒன்றும், சிறிய கட்டில் மட்டுமே இருந்தது. அறையின் சுவற்றில் கண்களைப் பதித்தவளுக்கு அது சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்ட அறை என்பது புரிந்து போனது.
அந்நேரம் கிளிக் என்கிற சத்தம் கதவில் கேட்க, அவசரமாக தலையை தொங்கப் போட்டுக் கொண்டாள்.
உயர்ந்த மனிதன் ஒருவன் உள்ளே நுழைந்தான். அவனது ஆகிருதியிலேயே தெரிந்தது பத்து பேரை சமாளிக்க கூடியவன் என்று. அவள் இருந்த பக்கம் கூட திரும்பாதவன் மேஜை மீது எதையோ வைத்து விட்டு, அறையின் விளக்கைப் போட்டான்.
அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் “நேராவே பார்க்கலாம். உனக்கு கொடுத்த மருந்தோட அளவுக்கான நேரம் முடிஞ்சு போச்சு. என்னைப் பார்” என்றான் அழுத்தமான குரலில்.
அவன் அப்படி சொன்னதும் சட்டென்று நிமிர்ந்தவள் அலட்சியமான பாவனையுடன் அவனது கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளது முகத்தைப் பார்த்து “அங்கே நீ எப்படி போய் சேர்ந்த? உன்னை எந்த ஆபரேஷனுக்கு தேர்ந்தெடுத்தாங்க?” என்றான்.
இதழை கிண்டலாக வளைத்து தோள்களை குலுக்கி அவனை கேலியாகப் பார்த்தாள்.
சட்டென்று நாற்காலியை பின்னுக்குத் தள்ளி எழுந்த சிவதாஸ் அவளது கழுத்தைப் பிடித்திருந்தான்.
“இந்த சிவதாஸ் கிட்ட சிக்கினவன் உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கும். உன் மேல இன்னும் கையை வைக்காதது பெண்ணா இருக்கியேன்னு தான்” என்றான் உக்கிரமாக.
தொண்டை வலி எடுத்தாலும் “உன்னால முடிஞ்சதை பார்த்துக்க..”என்றவள் அவன் மேலும் கொடுத்த அழுத்தத்தில் இரும ஆரம்பித்தாள்.
அவளது அலட்சியம் அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிவதாஸ் என்கிற பெயரை கேட்டாலே ஆண்களே பேண்ட்டில் ஒன்றுக்கு அடித்து விடுவார்கள். ஆனால் இவளோ அலட்சியம் காட்டுகிறாள் என்றெண்ணியவன் அவளது கட்டுக்களை அவிழ்த்து இருகைகளையும் மடக்கிப் பிடித்து சுவற்றோடு திருப்பி நிற்க வைத்தான்.
அவன் கைகளைப் பிடித்ததிலேயே வலி உயிர் போனது. அதிலும் இரு கைகளையும் மடக்கி பின்பக்கம் வளைத்துப் பிடித்ததில் உயிர் போனது.
ஒரு கையால் அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன் மறுகையால் அவளது போனி டெயிலைப் பிடித்து முகத்தை சுவற்றோடு மோதினான். அதில் மூக்கு நேராக சுவற்றில் அடித்து உள்ளி மூக்கு உடைந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது.
“யார் நீ! எதற்காக உனக்கு அவங்க ட்ரைனிங் கொடுக்கிறாங்க?” என்றான் உறுமலாக.
அவளிடமிருந்து சிறு சத்தம் கூட வரவில்லை. அவன் அடித்த அடியின் வீரியம் அறிந்தவனுக்கு வேறொரு பெண்ணாக இருந்தாள் இந்நேரம் கதறி மயங்கி விழுந்திருப்பாள் என்று தெரியும். ஆனால் இவளோ மேலும் அழுத்தமாக உடல் விறைக்க நின்றிருந்தாள்.
ஒருபக்கம் அவளின் தைரியம் கண்டு ஆச்சர்யமாக இருந்தாலும், தனது ட்ரீட்மென்ட்டில் அலட்சியமாக நிற்பதா? என்றெண்ணி அப்படியே தன் பக்கம் திருப்பியவன் தன் உடலோடு அழுத்திப் பிடித்துக் கொண்டு “சொல்லு! யார் நீ ? அந்த இயக்கத்தில் எப்படி போய் சேர்ந்த?” என்றான்.
அவனது உடல் முழுவதும் அவள் மேல் பட்டதும் அதுவரை இருந்த வலியை மறந்து அவன் மடக்கிப் பிடித்திருந்த கைகளின் முட்டியால் வேகமாக அவன் வயிற்றில் தாக்கி விட்டு, லேசாக அவன் தள்ளடியதும் , அவனிடமிருந்து போராடினாள்.
அவனோ சற்றே சிரிப்புடன் அவள் எதிர்பார்க்கும் முன் அவள் இடையை வளைத்து வெயிட் லிப்டிங் தூக்குவது போல தூக்கி இருந்தான். இதை சிறிதும் எதிர்பார்கவில்லை.
“இந்த சிவதாஸ் கிட்டேயே விளையாடி பார்க்கிறியா?மரியாதையா நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிடு” என்றான்.
“இந்த உயிர் இருக்கிற வரை உன்னோட கேள்விகளுக்கு பதில் கிடைக்காது” என்றாள் முதன்முறையாக வாயைத் திறந்து.
பட்டென்று கீழே போட்டவன் வலியில் சுருங்கிய அவளது முகத்தைப் பார்த்து “இன்னும் என் ட்ரீட்மென்ட்டை ஆரம்பிக்கல. இன்னைக்கே சொல்லிட்டா உனக்கு நல்லது. பொண்ணுன்னு பார்க்க மாட்டேன் பிரிச்சு மேஞ்சிடுவேன்” என்றான் உறுமலாக.
நிமிர்ந்து அவனை பார்த்தவளின் இதழ்களில் ஏளனப் புன்னகை.
அவளின் முகம் நோக்கி குனிந்தவன் முடியை காதோரம் ஒதுக்கி விட்டு “அழகான கண்கள், ஆரஞ்சு சுளை போல உதடுகள், வெண்ணை போன்ற கன்னங்கள் இப்படி இருக்கிற இந்த முகம் அடி வாங்கி கருத்து சிவந்து போகனுமா?” என்றான் மென்மையான குரலில்.
அவனது பேச்சைக் கேட்டு அவளது கண்களும், இதழ்களும் ஏளனமாக சிரித்தது. நீயும் ஆண் தானே? என்று கேலியாக பார்த்தாள்.
சிரித்த உதடுகள் மீண்டும் சுருங்கும் முன்பே அவனது முஷ்டி அந்த உதடுகளை கிழித்திருந்தது.
“மனசுல நினைக்கிறது கூட என்னைப் பற்றி மரியாதையா நினைக்கணும். எனக்கு வேண்டியது உண்மை! இந்த உடல் இல்ல” என்றான் உறுமலாக.