அத்தியாயம் - 4
நிகிலும் துபாயில் தாங்கள் இருந்த நாட்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோல ஆறுமாத வாழ்க்கையை நோக்கிப் பயணித்தது.
துபாயின் டிஸ்கவரி கார்டன்.
ஜென் அபார்ட்மெண்டின் எட்டாவது மாடியில் அமைந்திருந்த தங்களது பிளாட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.
தொலைவிலிருந்த கட்டிடங்களில் தெரிந்த பொட்டுப்பொட்டான வெளிச்சம், அந்த ஊருக்கே சீரியல் விளக்குப் போட்டது போன்ற ஒர் அழகைத் தந்தன.
அவள் கண்கள் - அவ்விரவின் ஒளியில் நகரத்தின் அமைப்பைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தது.
சிறிதும் பெரிதுமாய்க் கட்டிடங்கள் பல எழும்பி நின்றன. பால்கனியில் இருந்து பார்க்கையில் தெரிந்த அரை வட்டமான காட்சி - மனதை கொள்ளை கொண்டது! இரவு பதினொரு மணிக்கும் கூடப் பரபரத்துக் கொண்டிருந்த அந்நகரத்தைப் பார்த்து,அவள் ஆரம்பத்தில் மலைத்து போயிருக்கிறாள். துபாய்வாசியான கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்த வாழ்க்கை அவளுக்குப் பழகிப் போனது.
துபாய் என்றதும், எண்ணற்ற கனவுகளுடன்தான் அங்கு வந்திறங்கினாள். இந்நகரம் அவளுக்குப் பலப்பல புதுமைகளைக் காட்டியது. ஆனால், ஒருபோதும் தாம் இந்தப் பால்கனியிலேயே சிறைபடுவோம் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.
‘இந்தப் பால்கனியும் இல்லாமல் போயிருந்தால் - நான்கு சுவர்களுக்குள்ளாகவே வெறும் ஏசியின் ஓசையை மட்டும் கேட்டுக்கொண்டு பைத்தியம் பிடித்து அலைந்திருப்பேன்!’ என்று எண்ணிக் கொண்டாள்.
“கிளிக்” என்று கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
‘வந்துவிட்டான்’ என்றறிந்து கொண்டவள், மறந்தும் அங்கே செல்ல நினைக்கவில்லை.
அவன் அங்குமிங்கும் நடப்பதும், தனது அறைக்கதவைத் திறப்பதும், பாத்திரங்ககளை உருட்டுகின்ற சப்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. அவன் எதையோ தேடுவது போல் தோன்றியது.
‘போய், என்னவென்று கேட்டுவிடுவோமா’ என்று எண்ணினாள்.
அன்றொரு நாள் அப்படிக் கேட்டதற்கு, முகத்தில் அடித்தார் போல் வந்த பதில் நினைவிற்கு வந்தது.
இரு படுக்கை அறைகளைக் கொண்ட அந்தப் பிளாட்டில் ஆளுக்கொரு தீவாக வசிக்கும் தங்களை நினைத்து அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்கூட நேருக்கு நேர் சந்தித்து விட்டால் ஒரு புன்சிரிப்போ, ஒரு ஹாய், ஹலோவோ சொல்லிக் கொள்ளும்போது, கணவன் மனைவியான தாங்கள் இருவரும் வாழ்ந்து வரும் விசித்திரமான வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு எழுந்தது.
எதிரே மனைவி வந்து விட்டால் அவளை அறிமுகமற்ற ஒருவரை பார்க்கும் விதத்தில் நடத்தும் கணவனின் நடத்தையை என்னவென்று சொல்வது?
பெருமூச்சுடன் அமர்ந்திருந்தவளை குளிர்காற்று உடலைத் தீண்ட, மனமே இல்லாமல் எழுந்து அறைக்குச் சென்றாள். ஹாலில் டிவி ஓடும் சப்தம் கேட்டது. ஏதோ அரசியல் விவாத நிகழ்ச்சி... சந்தைக்கடை போல் காரசாரமாகச் சேற்றை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டிருந்தனர்.
அப்படியே விட்டத்தைப் பார்த்தபடி படுக்கையில் சாய்ந்தாள். ஆறு மாதத்திற்கு முன்பு யாராவது தன்னை இப்படிப் பேசாமடந்தையாகிப் போவாய் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டாள்.
ஆனால், இன்று உள்ள நிலை?
‘தூரதேசத்தில் கணவனை மட்டுமே ஆதாரமாக நம்பி வந்தவளுக்கு அவன் கொடுத்த இடம் என்ன?’ பல்வேறு எண்ணச் சுழலில் சிக்கித்தவித்தவள், சலிப்புடன் படுக்கையை விட்டு எழுந்தாள். தொண்டை வறண்டு போனது போலிருக்க, தண்ணீர் எடுத்து வர எழுந்தாள்.
ஹாலில் டிவியின் ஓசை குறைந்து மெல்லிய பாடல் ஒலி கேட்டது.
“ஒன்றா ரெண்டா ஆசைகள்” அதைக் கேட்டவுடன் அப்படியே கதவின் மேல் சாய்ந்து நின்றவள், ‘போச்சு மிட் நைட் மசாலா பார்க்க ஆரம்பிச்சாச்சு போல.இனி அங்கே போக முடியாது’ என்று அலுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தாள்.
தன் நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் படுத்திருந்தாள். ஒருவர் தண்டிக்கப்படுவதற்குத் தகுந்த காரணமிருந்தால் அந்தத் தண்டனை சரியானது. ஆனால், இங்கே அவளது கணவன் அனுதினம் அவளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தண்டனைக்குக் காரணமே தெரியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறாளே.
சுவிட்சுகள் அணைக்கப்படும் சப்தம் கேட்டு எழுந்து வெளியே சென்றாள். எதிரே வந்த நிகில் அவளைக் காணாதவாறு யோசனையுடன் தன் அறை வாயிலுக்குச் சென்றான். அவனைப் பார்த்ததும் தயங்கிய கால்களைக் கஷ்டப்பட்டு நகர்த்தினாள். அவனோ அங்கு ஒருத்தி இருப்பதைப் பற்றிக் கவலைப்படாது தன் அறைக் கதவை வேகமாக அறைந்து சாத்தினான்.
ஸ்ருதிக்குப் பயங்கரக் கோபம் எழுந்தது.
‘பேசாம நேராப் போய்ச் சட்டையைப் பிடித்து உனக்கு என்னதான்யா பிரச்சனைன்னு கேட்டுவோமா?’ என்று நினைத்தாள். அதற்கு அவள் மனசாட்சி இடித்தது ‘ஆமா, நீ கேட்டா மட்டும் அப்படியே வாயைத் திறந்து பதில் சொல்லிடுவானா?’
பல எண்ணங்களுடன் போராடி உறக்கம் வராமல் தவித்து விடியும் நேரத்தில் உறங்கிப் போனாள்.
மூடியிருந்த திரைச்சீலையைத் தாண்டி முகத்தில் பட்ட வெளிச்சக் கீற்றுகளில் விடிந்து விட்டதை உணர்த்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஆறு என்று காட்டியது. மனமில்லாமல் எழுந்தவளது மனமோ ‘சீக்கிரம் எழுந்து என்ன பண்ணப்போறே? அவனுக்குச் சமைச்சு கொடுக்குப் போறீயா? அப்படியே சமைச்சு வச்சாலும் அவன் சாப்பிட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பான்’ என்று கேலிப் பேசியது.
மனதிலிருந்த சோர்வுடன் அறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தவள், கால்களை மடக்கி தன் கைகளால் கன்னங்களைத் தாங்கிக் கொண்டு சுவாரசியமாகக் கிச்சனில் ஆம்லேட் போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்க்கத் துவங்கினாள்.
நிகிலும் துபாயில் தாங்கள் இருந்த நாட்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோல ஆறுமாத வாழ்க்கையை நோக்கிப் பயணித்தது.
துபாயின் டிஸ்கவரி கார்டன்.
ஜென் அபார்ட்மெண்டின் எட்டாவது மாடியில் அமைந்திருந்த தங்களது பிளாட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.
தொலைவிலிருந்த கட்டிடங்களில் தெரிந்த பொட்டுப்பொட்டான வெளிச்சம், அந்த ஊருக்கே சீரியல் விளக்குப் போட்டது போன்ற ஒர் அழகைத் தந்தன.
அவள் கண்கள் - அவ்விரவின் ஒளியில் நகரத்தின் அமைப்பைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தது.
சிறிதும் பெரிதுமாய்க் கட்டிடங்கள் பல எழும்பி நின்றன. பால்கனியில் இருந்து பார்க்கையில் தெரிந்த அரை வட்டமான காட்சி - மனதை கொள்ளை கொண்டது! இரவு பதினொரு மணிக்கும் கூடப் பரபரத்துக் கொண்டிருந்த அந்நகரத்தைப் பார்த்து,அவள் ஆரம்பத்தில் மலைத்து போயிருக்கிறாள். துபாய்வாசியான கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்த வாழ்க்கை அவளுக்குப் பழகிப் போனது.
துபாய் என்றதும், எண்ணற்ற கனவுகளுடன்தான் அங்கு வந்திறங்கினாள். இந்நகரம் அவளுக்குப் பலப்பல புதுமைகளைக் காட்டியது. ஆனால், ஒருபோதும் தாம் இந்தப் பால்கனியிலேயே சிறைபடுவோம் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.
‘இந்தப் பால்கனியும் இல்லாமல் போயிருந்தால் - நான்கு சுவர்களுக்குள்ளாகவே வெறும் ஏசியின் ஓசையை மட்டும் கேட்டுக்கொண்டு பைத்தியம் பிடித்து அலைந்திருப்பேன்!’ என்று எண்ணிக் கொண்டாள்.
“கிளிக்” என்று கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
‘வந்துவிட்டான்’ என்றறிந்து கொண்டவள், மறந்தும் அங்கே செல்ல நினைக்கவில்லை.
அவன் அங்குமிங்கும் நடப்பதும், தனது அறைக்கதவைத் திறப்பதும், பாத்திரங்ககளை உருட்டுகின்ற சப்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. அவன் எதையோ தேடுவது போல் தோன்றியது.
‘போய், என்னவென்று கேட்டுவிடுவோமா’ என்று எண்ணினாள்.
அன்றொரு நாள் அப்படிக் கேட்டதற்கு, முகத்தில் அடித்தார் போல் வந்த பதில் நினைவிற்கு வந்தது.
இரு படுக்கை அறைகளைக் கொண்ட அந்தப் பிளாட்டில் ஆளுக்கொரு தீவாக வசிக்கும் தங்களை நினைத்து அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்கூட நேருக்கு நேர் சந்தித்து விட்டால் ஒரு புன்சிரிப்போ, ஒரு ஹாய், ஹலோவோ சொல்லிக் கொள்ளும்போது, கணவன் மனைவியான தாங்கள் இருவரும் வாழ்ந்து வரும் விசித்திரமான வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு எழுந்தது.
எதிரே மனைவி வந்து விட்டால் அவளை அறிமுகமற்ற ஒருவரை பார்க்கும் விதத்தில் நடத்தும் கணவனின் நடத்தையை என்னவென்று சொல்வது?
பெருமூச்சுடன் அமர்ந்திருந்தவளை குளிர்காற்று உடலைத் தீண்ட, மனமே இல்லாமல் எழுந்து அறைக்குச் சென்றாள். ஹாலில் டிவி ஓடும் சப்தம் கேட்டது. ஏதோ அரசியல் விவாத நிகழ்ச்சி... சந்தைக்கடை போல் காரசாரமாகச் சேற்றை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டிருந்தனர்.
அப்படியே விட்டத்தைப் பார்த்தபடி படுக்கையில் சாய்ந்தாள். ஆறு மாதத்திற்கு முன்பு யாராவது தன்னை இப்படிப் பேசாமடந்தையாகிப் போவாய் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டாள்.
ஆனால், இன்று உள்ள நிலை?
‘தூரதேசத்தில் கணவனை மட்டுமே ஆதாரமாக நம்பி வந்தவளுக்கு அவன் கொடுத்த இடம் என்ன?’ பல்வேறு எண்ணச் சுழலில் சிக்கித்தவித்தவள், சலிப்புடன் படுக்கையை விட்டு எழுந்தாள். தொண்டை வறண்டு போனது போலிருக்க, தண்ணீர் எடுத்து வர எழுந்தாள்.
ஹாலில் டிவியின் ஓசை குறைந்து மெல்லிய பாடல் ஒலி கேட்டது.
“ஒன்றா ரெண்டா ஆசைகள்” அதைக் கேட்டவுடன் அப்படியே கதவின் மேல் சாய்ந்து நின்றவள், ‘போச்சு மிட் நைட் மசாலா பார்க்க ஆரம்பிச்சாச்சு போல.இனி அங்கே போக முடியாது’ என்று அலுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தாள்.
தன் நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் படுத்திருந்தாள். ஒருவர் தண்டிக்கப்படுவதற்குத் தகுந்த காரணமிருந்தால் அந்தத் தண்டனை சரியானது. ஆனால், இங்கே அவளது கணவன் அனுதினம் அவளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தண்டனைக்குக் காரணமே தெரியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறாளே.
சுவிட்சுகள் அணைக்கப்படும் சப்தம் கேட்டு எழுந்து வெளியே சென்றாள். எதிரே வந்த நிகில் அவளைக் காணாதவாறு யோசனையுடன் தன் அறை வாயிலுக்குச் சென்றான். அவனைப் பார்த்ததும் தயங்கிய கால்களைக் கஷ்டப்பட்டு நகர்த்தினாள். அவனோ அங்கு ஒருத்தி இருப்பதைப் பற்றிக் கவலைப்படாது தன் அறைக் கதவை வேகமாக அறைந்து சாத்தினான்.
ஸ்ருதிக்குப் பயங்கரக் கோபம் எழுந்தது.
‘பேசாம நேராப் போய்ச் சட்டையைப் பிடித்து உனக்கு என்னதான்யா பிரச்சனைன்னு கேட்டுவோமா?’ என்று நினைத்தாள். அதற்கு அவள் மனசாட்சி இடித்தது ‘ஆமா, நீ கேட்டா மட்டும் அப்படியே வாயைத் திறந்து பதில் சொல்லிடுவானா?’
பல எண்ணங்களுடன் போராடி உறக்கம் வராமல் தவித்து விடியும் நேரத்தில் உறங்கிப் போனாள்.
மூடியிருந்த திரைச்சீலையைத் தாண்டி முகத்தில் பட்ட வெளிச்சக் கீற்றுகளில் விடிந்து விட்டதை உணர்த்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஆறு என்று காட்டியது. மனமில்லாமல் எழுந்தவளது மனமோ ‘சீக்கிரம் எழுந்து என்ன பண்ணப்போறே? அவனுக்குச் சமைச்சு கொடுக்குப் போறீயா? அப்படியே சமைச்சு வச்சாலும் அவன் சாப்பிட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பான்’ என்று கேலிப் பேசியது.
மனதிலிருந்த சோர்வுடன் அறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தவள், கால்களை மடக்கி தன் கைகளால் கன்னங்களைத் தாங்கிக் கொண்டு சுவாரசியமாகக் கிச்சனில் ஆம்லேட் போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்க்கத் துவங்கினாள்.