அத்தியாயம் – 4
அறைக்குள் நடந்து கொண்டிருந்த சித்தார்த்திற்கு தலை வெடிப்பது போலிருந்தது. தன்னிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை என்று வர்ஷு தவித்து போயிருப்பாள் என்பதை உணர்ந்தவன் மனது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது. தந்தையிடம் இருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்கவில்லை.
வர்ஷுவின் குடும்பத்தில் தான் காதலுக்கு எதுவும் பிரச்சனை வரும் என்று நினைத்திருக்க, தனது தந்தையே இப்படி விவகாரமாக செயல்படுவார் என்று நினைக்கவில்லை. முதலில் இங்கிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும். அவளுக்கு செய்தி அனுப்பவில்லை என்றாலும் நண்பர்களுக்காவது தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.
தந்தையின் கையாள்களிடம் அலைபேசியை பெற முயன்று முடியாமல் போனது. அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். அவனை மடக்கும் எல்லா வழிகளையும் தந்தை பிரயோகித்திருந்தார். அவனை மொத்தமாக அங்கேயே முடக்கிப் போடும் வழியும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் போனான்.
இப்படியே ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் தனக்கு உணவு கொண்டு வரும் பையனை மெதுவே தாஜா செய்து அவனிடமிருந்து அலைபேசியை வாங்கி இருந்தான். அவனோ பயத்துடன் இரு கால்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற கண்டிஷனோடு கொடுத்தான்.
அவசரமாக அலைப்பேசியை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து கொண்டு வர்ஷியை அழைத்தான். அவளோ புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதை நிராகரித்தாள். இருமுறை தவிப்புடன் அழைத்து ஓய்ந்தவன் இது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து சரவணனுக்கு அழைத்தான்.
அவன் அழைப்பை எடுத்ததும் அவசரமாக அவனிடம் தனது நிலையை கூறினான். அவனும் அங்கிருந்த நிலையை சித்தார்த்திற்கு எடுத்துக் கூறினான். அதை கேட்டு சித்துவிற்கு பேரதிர்ச்சி. தந்தை இத்தனை வேகமாக செயல்படுவார் என்று நினைக்கவில்லை.
உடனே தன்னை சமாளித்துக் கொண்டவன் சரவணனிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொண்டு தனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்துரைத்தான்.
“நான் சொல்றபடி நீ ஏற்பாடு செஞ்சிடு சரவணா. நான் எப்படியும் வந்து சேர்ந்திடுவேன்” என்று கூறி போனை அணைத்தான்.
அதற்குள் அந்த பையன் வெளியில் கதவை தட்ட ஆரம்பித்தான். அதிக யோசனை செய்யாமல் உடனே அந்த எண்ணிலிருந்து அன்னைக்கு அழைத்தான்.
உடனே எடுத்த பிம்லா தேவி “சொல்லு பேட்டா” என்றார்.
அதில் அதிர்ந்தவன் “மாம்! எப்படி உங்களுக்கு தெரியும் நான் தான் கூப்பிடுறேன்னு? இந்த நம்பர் நியூ நம்பர்ல இருந்து கூப்பிடுறேனே”.
“பேட்டா! நீ இப்போ எங்கே இருக்க என்ன பண்ற எல்லாம் எனக்கு தெரியும். பப்பா சொல்றதை கேட்டு அங்கேயே இரு. தப்பா எதையும் முயற்சிக்காதே. அது நீ அன்பு வைத்திருக்கிறவங்களுக்கு நல்லதில்லை”.
“மாம்! என்னை மிரட்டி பார்க்குறீங்களா?”
“உண்மையை சொல்றேன் பேட்டா! நம்ம குடும்பத்துக்கு எது நல்லது கெட்டதுன்னு எங்களுக்கு தெரியும். அனாவசியமா எதையும் முயற்சி செய்யாதே. நானோ அப்பாவோ இல்ல உன்னுடைய பிரிய தாதியோ அதை விரும்ப மாட்டோம்”.
“இது என்னுடைய வாழ்க்கை மாம்!”
“நம்ம குடும்பத்து ஆட்களுக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இருந்ததில்லை. எல்லாமே தொழிலை முன்வைத்து தான். சோ நம்ம தொழிலுக்கு எது நல்லதோ அது தான் நமக்கும் நல்லது”.
“என்னால முடியாது மாம்!”
“நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உன்னிஷ்டம்” என்று கூறி அலைப்பேசியை வைத்து விட்டார்.
அவனுக்கு பேரதிர்ச்சி. முதலில் தந்தை மட்டும் தான் தன்னை தடுக்கிறார் என்று எண்ணி இருந்தவனுக்கு இப்போது குடும்பமே தனக்கு எதிராக இருப்பது தெரிந்ததும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பானது பற்றி எரிய ஆரம்பித்தது. யார் தடுத்தாலும் வர்ஷினி தான் என் மனைவி.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வெளியே வந்தவன் அந்த பையனிடம் போனை கொடுத்து விட்டு தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான். இன்று மாலைக்குள் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. வர்ஷினி அழுததைப் பற்றி சரவணன் சொன்னது மனதை காயப்படுத்தியது.
தந்தை வேகமாக இருக்கிறார் என்றால் நிச்சயம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் தயாராக இருப்பார் என்று புரிந்தது. அன்னையின் பேச்சில் அது உறுதியானது. அதுவரை அவனது வாழ்வில் இப்படியொரு சந்தர்ப்பத்தை சந்தித்ததில்லை. எப்படியாவது அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்கிற வெறி எழ, தீவிரமாக யோசித்து சில, பல முடிவுகளை எடுத்துக் கொண்டான்.
அன்று மாலையே அந்த ஹோட்டலில் இருந்து சித்தார்த் தப்பி இருந்தான். அவனை தேடி ஏர்போர்ட் ரயில்வே ஸ்டேஷன் என்று எல்லா இடங்களிலும் தேடலை தொடங்கி இருந்தனர். அவனோ நகரத்தை விட்டு செல்லும் லாரி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தான்.
அவனது வாழ்வில் அப்படியொரு பயணத்தை மேற்கொண்டது இல்லை. காதலுக்காக எதையும் எதிர்க்கும் தைரியம் வந்திருந்தது. கையிலிருந்த காசை வைத்து புது போன் ஒன்றை வாங்கி அதில் புதிய சிம்மை போட்டவன் நண்பர்களுக்கு அழைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து விட்டே நிம்மதியானான்.
அறைக்குள் நடந்து கொண்டிருந்த சித்தார்த்திற்கு தலை வெடிப்பது போலிருந்தது. தன்னிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை என்று வர்ஷு தவித்து போயிருப்பாள் என்பதை உணர்ந்தவன் மனது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது. தந்தையிடம் இருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்கவில்லை.
வர்ஷுவின் குடும்பத்தில் தான் காதலுக்கு எதுவும் பிரச்சனை வரும் என்று நினைத்திருக்க, தனது தந்தையே இப்படி விவகாரமாக செயல்படுவார் என்று நினைக்கவில்லை. முதலில் இங்கிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும். அவளுக்கு செய்தி அனுப்பவில்லை என்றாலும் நண்பர்களுக்காவது தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.
தந்தையின் கையாள்களிடம் அலைபேசியை பெற முயன்று முடியாமல் போனது. அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். அவனை மடக்கும் எல்லா வழிகளையும் தந்தை பிரயோகித்திருந்தார். அவனை மொத்தமாக அங்கேயே முடக்கிப் போடும் வழியும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் போனான்.
இப்படியே ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் தனக்கு உணவு கொண்டு வரும் பையனை மெதுவே தாஜா செய்து அவனிடமிருந்து அலைபேசியை வாங்கி இருந்தான். அவனோ பயத்துடன் இரு கால்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற கண்டிஷனோடு கொடுத்தான்.
அவசரமாக அலைப்பேசியை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து கொண்டு வர்ஷியை அழைத்தான். அவளோ புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதை நிராகரித்தாள். இருமுறை தவிப்புடன் அழைத்து ஓய்ந்தவன் இது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து சரவணனுக்கு அழைத்தான்.
அவன் அழைப்பை எடுத்ததும் அவசரமாக அவனிடம் தனது நிலையை கூறினான். அவனும் அங்கிருந்த நிலையை சித்தார்த்திற்கு எடுத்துக் கூறினான். அதை கேட்டு சித்துவிற்கு பேரதிர்ச்சி. தந்தை இத்தனை வேகமாக செயல்படுவார் என்று நினைக்கவில்லை.
உடனே தன்னை சமாளித்துக் கொண்டவன் சரவணனிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொண்டு தனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்துரைத்தான்.
“நான் சொல்றபடி நீ ஏற்பாடு செஞ்சிடு சரவணா. நான் எப்படியும் வந்து சேர்ந்திடுவேன்” என்று கூறி போனை அணைத்தான்.
அதற்குள் அந்த பையன் வெளியில் கதவை தட்ட ஆரம்பித்தான். அதிக யோசனை செய்யாமல் உடனே அந்த எண்ணிலிருந்து அன்னைக்கு அழைத்தான்.
உடனே எடுத்த பிம்லா தேவி “சொல்லு பேட்டா” என்றார்.
அதில் அதிர்ந்தவன் “மாம்! எப்படி உங்களுக்கு தெரியும் நான் தான் கூப்பிடுறேன்னு? இந்த நம்பர் நியூ நம்பர்ல இருந்து கூப்பிடுறேனே”.
“பேட்டா! நீ இப்போ எங்கே இருக்க என்ன பண்ற எல்லாம் எனக்கு தெரியும். பப்பா சொல்றதை கேட்டு அங்கேயே இரு. தப்பா எதையும் முயற்சிக்காதே. அது நீ அன்பு வைத்திருக்கிறவங்களுக்கு நல்லதில்லை”.
“மாம்! என்னை மிரட்டி பார்க்குறீங்களா?”
“உண்மையை சொல்றேன் பேட்டா! நம்ம குடும்பத்துக்கு எது நல்லது கெட்டதுன்னு எங்களுக்கு தெரியும். அனாவசியமா எதையும் முயற்சி செய்யாதே. நானோ அப்பாவோ இல்ல உன்னுடைய பிரிய தாதியோ அதை விரும்ப மாட்டோம்”.
“இது என்னுடைய வாழ்க்கை மாம்!”
“நம்ம குடும்பத்து ஆட்களுக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இருந்ததில்லை. எல்லாமே தொழிலை முன்வைத்து தான். சோ நம்ம தொழிலுக்கு எது நல்லதோ அது தான் நமக்கும் நல்லது”.
“என்னால முடியாது மாம்!”
“நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உன்னிஷ்டம்” என்று கூறி அலைப்பேசியை வைத்து விட்டார்.
அவனுக்கு பேரதிர்ச்சி. முதலில் தந்தை மட்டும் தான் தன்னை தடுக்கிறார் என்று எண்ணி இருந்தவனுக்கு இப்போது குடும்பமே தனக்கு எதிராக இருப்பது தெரிந்ததும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பானது பற்றி எரிய ஆரம்பித்தது. யார் தடுத்தாலும் வர்ஷினி தான் என் மனைவி.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வெளியே வந்தவன் அந்த பையனிடம் போனை கொடுத்து விட்டு தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான். இன்று மாலைக்குள் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. வர்ஷினி அழுததைப் பற்றி சரவணன் சொன்னது மனதை காயப்படுத்தியது.
தந்தை வேகமாக இருக்கிறார் என்றால் நிச்சயம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் தயாராக இருப்பார் என்று புரிந்தது. அன்னையின் பேச்சில் அது உறுதியானது. அதுவரை அவனது வாழ்வில் இப்படியொரு சந்தர்ப்பத்தை சந்தித்ததில்லை. எப்படியாவது அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்கிற வெறி எழ, தீவிரமாக யோசித்து சில, பல முடிவுகளை எடுத்துக் கொண்டான்.
அன்று மாலையே அந்த ஹோட்டலில் இருந்து சித்தார்த் தப்பி இருந்தான். அவனை தேடி ஏர்போர்ட் ரயில்வே ஸ்டேஷன் என்று எல்லா இடங்களிலும் தேடலை தொடங்கி இருந்தனர். அவனோ நகரத்தை விட்டு செல்லும் லாரி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தான்.
அவனது வாழ்வில் அப்படியொரு பயணத்தை மேற்கொண்டது இல்லை. காதலுக்காக எதையும் எதிர்க்கும் தைரியம் வந்திருந்தது. கையிலிருந்த காசை வைத்து புது போன் ஒன்றை வாங்கி அதில் புதிய சிம்மை போட்டவன் நண்பர்களுக்கு அழைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து விட்டே நிம்மதியானான்.