அத்தியாயம் – 3
தெரிந்தவர்கள் மூலமாக கல்யாணிக்கு ஒரு துணிக்கடையில் சேல்ஸ் கேர்ல் வேலை கிடைத்தது. நாள் முழுவதும் நிற்க வேண்டிய வேலை தான். சந்தியா சொன்னது போல அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பிள்ளைகளை தனியாக விட்டுப் போக வேண்டுமே என்று யோசிக்க, அப்போது அவளுக்கு ஆதரவாக வந்து சேர்ந்தார் அவளின் அத்தை.
திருமணமாகி குழந்தைகள் எதுவும் இல்லாமல் கணவரும் இறந்து போன பின்பு ஆதரவற்று இருந்தவருக்கு கல்யாணியின் நிலை தெரிய, தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு உனக்கு துணையாக இருக்கவா என்று கேட்டு வந்தார்.
அப்படியொரு உதவி கிடைக்கும் போது வேண்டாமென்று சொல்லாமல் உடனே அவரை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டாள். கல்யாணிக்கு வேலை கிடைத்திருப்பதை அறிந்ததும் உடனே கிளம்பி வந்தார் ஞானம்.
“வேலைக்குப் போக போறியாமே? யாரை கேட்டு முடிவு பண்ணின? நீ போக கூடாது”.
அவரின் பேச்சில் கடுப்பாகி “ஏன்?”
“துணிக்கடையில் வேலைக்கு போறது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு பழக்கமில்லை”.
“அப்படியா?”
“ஆமாம்!”
“அப்போ சரி! வேலைக்குப் போய் கிடைக்கிற சம்பளத்தை நீங்க கொடுத்திடுங்க. நான் போகல”.
“என்னடி கொழுப்பா?”
“என் குடும்பத்து வருமானத்துக்கு நான் எங்கே போக? யார் சொன்னாலும் நான் வேலைக்குப் போக தான் போறேன்”.
நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து கொண்டவர் “இங்கே பாருடி கொழுப்பெடுத்து போய் ஆடுற. ஏதாவது உதவி தேவைபடுதுன்னு எங்க கிட்ட வந்தா செருப்பால அடிப்போம் சொல்லிட்டேன்”.
“வரும் போது பார்த்துக்கலாம்”
அவளை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
அதன்பின் வந்த நாட்கள் மாதங்கள் எல்லாம் கல்யாணிக்கு ஓட்டம் தான். காலையில் சமைத்து வைத்துவிட்டு ஓடுபவள் இரவு வரும் போது ஓய்ந்து போய் தான் வருவாள். தனது மனச் சுணக்கம் குழந்தைகளுக்கு தெரியக் கூடாது என்று எண்ணி உற்சாகமாக இருப்பது போல காண்பித்துக் கொள்வாள்.
அத்தை இருந்தது பெரும் உதவியாக இருந்தது. குழந்தைகளைப் பத்திரமாக பார்த்துக் கொண்டார். பெரியவன் வீட்டின் நிலையை புரிந்து கொண்டிருந்தான். சின்னவனும் அண்ணனைப் பார்த்து குறைகள் எதுவும் சொல்லாமல் பள்ளிக்கூடம் சென்று வந்தான்.
கயல் மட்டும் தான் அன்னையை விட்டு இருப்பதை எண்ணி அழுவாள். நாட்கள் செல்ல செல்ல அவளும் சூழ்நிலைக்குப் பழகிக் கொண்டாள்.
கடையில் கிடைத்த தொடர்புகள் மூலம் மெல்ல அருகே இருந்த அபார்ட்மென்ட்ட்களில் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுவதை அறிந்து கொண்டாள். கடையை வேலையை விட்டுவிட்டு வீட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
அதற்கும் பலத்த எதிர்ப்பு வந்தது. வீட்டு வேலைக்குச் செல்வதால் குடும்ப மானமே போய் விட்டதாக சொல்லிக் காட்ட, எதையும் கண்டு கொள்ளவில்லை. அவளின் ஒரே குறிக்கோள் தனது பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே.
பிள்ளைகளைப் பற்றியும் கண்டபடி பேசினார்கள். தந்தை இல்லாத பிள்ளைகள் நல்ல முறையில் வளராது என்று. ஆனால் சிறு வயதில் இருந்தே அனைத்தையும் பார்த்திருந்தவர்களுக்கு அன்னையின் உழைப்பும் கஷ்டமும் புரிந்து போக, மூவரும் நன்றாகப் படித்தார்கள். அவளுக்கு உதவியும் புரிந்தார்கள்.
குணா படித்து முடித்து கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்க ஆரம்பித்தான். பின்னர் எலெக்ட்ரிகல் ஷாப் ஒன்றை திறந்து விட்டான். முதலாளியாக அவன் அமர்ந்ததும் முதல் ஆளாக ஞானம் வந்து நின்றார்.
“மருமகனே உங்க அம்மாவை முதல்ல கூப்பிடாம நானும் மாமாவும் வந்து கடையைத் திறக்கிறோம்” என்றார் கடை திறப்பு அன்று.
அத்தையைப் பார்த்து புன்னகைத்தவன் “இல்ல அத்தை எங்கம்மா கையால தான் இந்தக் கடையைத் திறக்கனும். அதோட கடையும் அம்மா பேரில் தான் திறக்கவே போறேன்”.
அதில் கோபம் அடைந்தவர் “டேய்! உங்கம்மா ஒரு துக்கிரிடா. அவளை கூப்பிட்டு நல்லது எதுவும் செய்யக் கூடாது”.
“முடியாது அத்தை! எங்களுக்கு எங்கம்மாவை விட நல்லது நினைக்கிறவங்க யாரும் கிடையாது! அவங்க தான் வந்து திறப்பாங்க”.
அவனது பேச்சில் கடுப்பாகிப் போனவர் “கல்யாணி! உன் பிள்ளைக்கு நல்லது எதுவும் சொல்லிக் கொடுக்கலையா? வீட்டுக்குப் பெரியவர் மாமா. அவரை தானே மரியாதை பண்ணி கூப்பிட்டிருக்கணும். உன் பையன் ஓவரா பேசிட்டு இருக்கான்”.
தெரிந்தவர்கள் மூலமாக கல்யாணிக்கு ஒரு துணிக்கடையில் சேல்ஸ் கேர்ல் வேலை கிடைத்தது. நாள் முழுவதும் நிற்க வேண்டிய வேலை தான். சந்தியா சொன்னது போல அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பிள்ளைகளை தனியாக விட்டுப் போக வேண்டுமே என்று யோசிக்க, அப்போது அவளுக்கு ஆதரவாக வந்து சேர்ந்தார் அவளின் அத்தை.
திருமணமாகி குழந்தைகள் எதுவும் இல்லாமல் கணவரும் இறந்து போன பின்பு ஆதரவற்று இருந்தவருக்கு கல்யாணியின் நிலை தெரிய, தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு உனக்கு துணையாக இருக்கவா என்று கேட்டு வந்தார்.
அப்படியொரு உதவி கிடைக்கும் போது வேண்டாமென்று சொல்லாமல் உடனே அவரை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டாள். கல்யாணிக்கு வேலை கிடைத்திருப்பதை அறிந்ததும் உடனே கிளம்பி வந்தார் ஞானம்.
“வேலைக்குப் போக போறியாமே? யாரை கேட்டு முடிவு பண்ணின? நீ போக கூடாது”.
அவரின் பேச்சில் கடுப்பாகி “ஏன்?”
“துணிக்கடையில் வேலைக்கு போறது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு பழக்கமில்லை”.
“அப்படியா?”
“ஆமாம்!”
“அப்போ சரி! வேலைக்குப் போய் கிடைக்கிற சம்பளத்தை நீங்க கொடுத்திடுங்க. நான் போகல”.
“என்னடி கொழுப்பா?”
“என் குடும்பத்து வருமானத்துக்கு நான் எங்கே போக? யார் சொன்னாலும் நான் வேலைக்குப் போக தான் போறேன்”.
நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து கொண்டவர் “இங்கே பாருடி கொழுப்பெடுத்து போய் ஆடுற. ஏதாவது உதவி தேவைபடுதுன்னு எங்க கிட்ட வந்தா செருப்பால அடிப்போம் சொல்லிட்டேன்”.
“வரும் போது பார்த்துக்கலாம்”
அவளை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
அதன்பின் வந்த நாட்கள் மாதங்கள் எல்லாம் கல்யாணிக்கு ஓட்டம் தான். காலையில் சமைத்து வைத்துவிட்டு ஓடுபவள் இரவு வரும் போது ஓய்ந்து போய் தான் வருவாள். தனது மனச் சுணக்கம் குழந்தைகளுக்கு தெரியக் கூடாது என்று எண்ணி உற்சாகமாக இருப்பது போல காண்பித்துக் கொள்வாள்.
அத்தை இருந்தது பெரும் உதவியாக இருந்தது. குழந்தைகளைப் பத்திரமாக பார்த்துக் கொண்டார். பெரியவன் வீட்டின் நிலையை புரிந்து கொண்டிருந்தான். சின்னவனும் அண்ணனைப் பார்த்து குறைகள் எதுவும் சொல்லாமல் பள்ளிக்கூடம் சென்று வந்தான்.
கயல் மட்டும் தான் அன்னையை விட்டு இருப்பதை எண்ணி அழுவாள். நாட்கள் செல்ல செல்ல அவளும் சூழ்நிலைக்குப் பழகிக் கொண்டாள்.
கடையில் கிடைத்த தொடர்புகள் மூலம் மெல்ல அருகே இருந்த அபார்ட்மென்ட்ட்களில் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுவதை அறிந்து கொண்டாள். கடையை வேலையை விட்டுவிட்டு வீட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
அதற்கும் பலத்த எதிர்ப்பு வந்தது. வீட்டு வேலைக்குச் செல்வதால் குடும்ப மானமே போய் விட்டதாக சொல்லிக் காட்ட, எதையும் கண்டு கொள்ளவில்லை. அவளின் ஒரே குறிக்கோள் தனது பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே.
பிள்ளைகளைப் பற்றியும் கண்டபடி பேசினார்கள். தந்தை இல்லாத பிள்ளைகள் நல்ல முறையில் வளராது என்று. ஆனால் சிறு வயதில் இருந்தே அனைத்தையும் பார்த்திருந்தவர்களுக்கு அன்னையின் உழைப்பும் கஷ்டமும் புரிந்து போக, மூவரும் நன்றாகப் படித்தார்கள். அவளுக்கு உதவியும் புரிந்தார்கள்.
குணா படித்து முடித்து கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்க ஆரம்பித்தான். பின்னர் எலெக்ட்ரிகல் ஷாப் ஒன்றை திறந்து விட்டான். முதலாளியாக அவன் அமர்ந்ததும் முதல் ஆளாக ஞானம் வந்து நின்றார்.
“மருமகனே உங்க அம்மாவை முதல்ல கூப்பிடாம நானும் மாமாவும் வந்து கடையைத் திறக்கிறோம்” என்றார் கடை திறப்பு அன்று.
அத்தையைப் பார்த்து புன்னகைத்தவன் “இல்ல அத்தை எங்கம்மா கையால தான் இந்தக் கடையைத் திறக்கனும். அதோட கடையும் அம்மா பேரில் தான் திறக்கவே போறேன்”.
அதில் கோபம் அடைந்தவர் “டேய்! உங்கம்மா ஒரு துக்கிரிடா. அவளை கூப்பிட்டு நல்லது எதுவும் செய்யக் கூடாது”.
“முடியாது அத்தை! எங்களுக்கு எங்கம்மாவை விட நல்லது நினைக்கிறவங்க யாரும் கிடையாது! அவங்க தான் வந்து திறப்பாங்க”.
அவனது பேச்சில் கடுப்பாகிப் போனவர் “கல்யாணி! உன் பிள்ளைக்கு நல்லது எதுவும் சொல்லிக் கொடுக்கலையா? வீட்டுக்குப் பெரியவர் மாமா. அவரை தானே மரியாதை பண்ணி கூப்பிட்டிருக்கணும். உன் பையன் ஓவரா பேசிட்டு இருக்கான்”.