அத்தியாயம் – 3
அவளின் மனம் ஏனோ அன்று தடுமாற்றமாகவே இருக்க, அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவளுடன் பார்கிங் வரை வந்த மாறன் “வீட்டுக்குப் போய் நல்லா ரெஸ்ட் எடு தர்ஷ். தேவையில்லாம எதையும் யோசிக்காதே” என்றான் ஆறுதலாக.
அவனுடைய வார்த்தைகள் மயிலிறகாய் மனதை வருட, என் விருப்பம் கண்டிப்பாக பலிக்க வேண்டும். இவனே எனக்கு கணவனாக வர வேண்டும் என்று ஏக்கம் எழுந்தது அவளுள்.
சோர்வான முகத்துடன் “ம்ம்..ஓகே மாறன்” என்றவள் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
மதியமே வீட்டிற்கு வந்த மகளைக் கண்டு திகைத்து “என்னாச்சு தர்ஷும்மா? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டு நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.
கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தவள் “தலைவலிம்மா...கொஞ்சம் டல்லாக இருந்தது. அதுதான் கிளம்பி வந்துட்டேன்” என்றாள்.
அவளின் பதில் கேட்டு “இந்த மனுஷனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. வேலைக்குப் போகிறப்ப இதெல்லாம் பேசாதீங்கன்னு சொன்னா கேட்கிறாரா? அப்பா பேசினதை எல்லாம் மனசில வச்சுக்காதே தர்ஷு. உன் ரூமில் போய் கதவை சாத்திட்டு நல்லா படுத்து தூங்கு”.
“ம்ம்...சரிம்மா” என்றவள் அன்னை சொல்லியபடியே சென்று படுத்து விட்டாள்.
சுமார் இரண்டு மணி நேரம் அயர்ந்து உறங்கி எழுந்தவளின் மனம் சற்றே தெளிவடைந்திருந்தது.
அறையை விட்டு வெளியே வந்தவளிடம் “என்னடா இப்போ பரவாயில்லையா? என்றவர் காப்பி டம்ளரைக் கொடுத்தார்.
அன்னையின் காப்பி ருசியை அனுபவித்தபடி “மா! கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?”
சட்டென்று மணியைப் பார்த்தவர் “அப்பா இன்னைக்கு ஏழு மணிக்குத்தான் வருவேன்னு சொன்னார். அதுக்குள்ள போயிட்டு வந்துடலாம்” என்றார்.
“அப்பா கிட்ட சாவி இருக்கில்லம்மா. கொஞ்ச நேரம் ஆனால் தான் என்ன?”
“நீ என்ன புதுசா கேட்கிற? அவர் வரும் நேரம் நான் வீட்டில் இல்லேன்னா சாமியாடிட மாட்டாரா?”
மனதில் எழுந்த ஒருவித சலிப்புடன் “இன்னும் எத்தனை வருஷத்துக்கும்மா இப்படியே பயந்து பயந்தே வாழப்போறீங்க?”
மகளை அதிசயமாகப் பார்த்து “காலையில அப்பா பேசும்போது என்னால வேலையை விட முடியாது. நான் வேலைக்குப் போறதை ஏற்றுக் கொள்வதைப் போல ஒரு மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்ல வேண்டியது தானே?”
அன்னை கேட்டதும் “அதெப்படிம்மா? அஞ்சனா மாதிரி பேசணும்னு தோணுது. ஆனா, அப்பாவை பார்த்ததும் வார்த்தை தொண்டையை விட்டு வெளியே வரவே மாட்டேங்குது”.
“இதே தான் எனக்கும். சரி விடு! நான் கிளம்பி வரேன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடுவோம்”.
சற்று நேரத்தில் இருவரும் கோவிலுக்கு கிளம்பிச் சென்று கடவுளை தரிசித்துவிட்டு, பிரகாரத்தில் வந்தமர்ந்தனர்.
போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி “எனக்கு அஞ்சனாவைப் பற்றி கவலை இல்லை தர்ஷு. உன்னை நினைத்தால் தான் கவலையாக இருக்கு. அப்பா நிச்சயமாக தன்னைப் போல ஒருவரை தான் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுப்பார்”.
“அப்பாவாக எனக்கு அவர் மீது அழுத்தம் மட்டும் தான் இருக்கு. அவரைப் போல குணங்களுடன் கணவர் என்று வரும்போது, நிச்சயம் பயப்படத்தான் வேண்டும். நீங்க எப்படிம்மா சமாளிக்கிறீங்க?”
நீண்ட நெடிய பெருமூச்சுடன் “திருமணமான புதிதில் அவரை கேட்காமல் பல விஷயங்கள் செய்துவிட்டு, நிறைய பேச்சு வாங்கி இருக்கிறேன். எதிலும் அவர் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும். எனக்கும் வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. நீ சம்பாதித்து நான் சாப்பிடுவதா? என்று தடை போட்டார். சம்பாத்தியம் எனக்கான ஒரு சுதந்திரம் என்பதை தெரிந்து கொண்டே வேண்டாம் என்றார்”.
“நீங்க ஏனம்மா ஒத்துக் கொண்டீர்கள்?”
“இன்றைக்கு இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கும் காலகட்டத்திலேயே உனக்குப் பிடித்த ஒரு வாழ்கையை தேர்ந்தெடுக்க முடியுமா? அவர் சொல்வதற்கு தலையாட்டத்தானே செய்கிறாய்?”
காயத்ரி அப்படி சொன்னதும் முகவாட்டத்துடன் “ஆமாம்மா”.
அவளின் மனம் ஏனோ அன்று தடுமாற்றமாகவே இருக்க, அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவளுடன் பார்கிங் வரை வந்த மாறன் “வீட்டுக்குப் போய் நல்லா ரெஸ்ட் எடு தர்ஷ். தேவையில்லாம எதையும் யோசிக்காதே” என்றான் ஆறுதலாக.
அவனுடைய வார்த்தைகள் மயிலிறகாய் மனதை வருட, என் விருப்பம் கண்டிப்பாக பலிக்க வேண்டும். இவனே எனக்கு கணவனாக வர வேண்டும் என்று ஏக்கம் எழுந்தது அவளுள்.
சோர்வான முகத்துடன் “ம்ம்..ஓகே மாறன்” என்றவள் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
மதியமே வீட்டிற்கு வந்த மகளைக் கண்டு திகைத்து “என்னாச்சு தர்ஷும்மா? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டு நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.
கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தவள் “தலைவலிம்மா...கொஞ்சம் டல்லாக இருந்தது. அதுதான் கிளம்பி வந்துட்டேன்” என்றாள்.
அவளின் பதில் கேட்டு “இந்த மனுஷனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. வேலைக்குப் போகிறப்ப இதெல்லாம் பேசாதீங்கன்னு சொன்னா கேட்கிறாரா? அப்பா பேசினதை எல்லாம் மனசில வச்சுக்காதே தர்ஷு. உன் ரூமில் போய் கதவை சாத்திட்டு நல்லா படுத்து தூங்கு”.
“ம்ம்...சரிம்மா” என்றவள் அன்னை சொல்லியபடியே சென்று படுத்து விட்டாள்.
சுமார் இரண்டு மணி நேரம் அயர்ந்து உறங்கி எழுந்தவளின் மனம் சற்றே தெளிவடைந்திருந்தது.
அறையை விட்டு வெளியே வந்தவளிடம் “என்னடா இப்போ பரவாயில்லையா? என்றவர் காப்பி டம்ளரைக் கொடுத்தார்.
அன்னையின் காப்பி ருசியை அனுபவித்தபடி “மா! கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?”
சட்டென்று மணியைப் பார்த்தவர் “அப்பா இன்னைக்கு ஏழு மணிக்குத்தான் வருவேன்னு சொன்னார். அதுக்குள்ள போயிட்டு வந்துடலாம்” என்றார்.
“அப்பா கிட்ட சாவி இருக்கில்லம்மா. கொஞ்ச நேரம் ஆனால் தான் என்ன?”
“நீ என்ன புதுசா கேட்கிற? அவர் வரும் நேரம் நான் வீட்டில் இல்லேன்னா சாமியாடிட மாட்டாரா?”
மனதில் எழுந்த ஒருவித சலிப்புடன் “இன்னும் எத்தனை வருஷத்துக்கும்மா இப்படியே பயந்து பயந்தே வாழப்போறீங்க?”
மகளை அதிசயமாகப் பார்த்து “காலையில அப்பா பேசும்போது என்னால வேலையை விட முடியாது. நான் வேலைக்குப் போறதை ஏற்றுக் கொள்வதைப் போல ஒரு மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்ல வேண்டியது தானே?”
அன்னை கேட்டதும் “அதெப்படிம்மா? அஞ்சனா மாதிரி பேசணும்னு தோணுது. ஆனா, அப்பாவை பார்த்ததும் வார்த்தை தொண்டையை விட்டு வெளியே வரவே மாட்டேங்குது”.
“இதே தான் எனக்கும். சரி விடு! நான் கிளம்பி வரேன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடுவோம்”.
சற்று நேரத்தில் இருவரும் கோவிலுக்கு கிளம்பிச் சென்று கடவுளை தரிசித்துவிட்டு, பிரகாரத்தில் வந்தமர்ந்தனர்.
போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி “எனக்கு அஞ்சனாவைப் பற்றி கவலை இல்லை தர்ஷு. உன்னை நினைத்தால் தான் கவலையாக இருக்கு. அப்பா நிச்சயமாக தன்னைப் போல ஒருவரை தான் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுப்பார்”.
“அப்பாவாக எனக்கு அவர் மீது அழுத்தம் மட்டும் தான் இருக்கு. அவரைப் போல குணங்களுடன் கணவர் என்று வரும்போது, நிச்சயம் பயப்படத்தான் வேண்டும். நீங்க எப்படிம்மா சமாளிக்கிறீங்க?”
நீண்ட நெடிய பெருமூச்சுடன் “திருமணமான புதிதில் அவரை கேட்காமல் பல விஷயங்கள் செய்துவிட்டு, நிறைய பேச்சு வாங்கி இருக்கிறேன். எதிலும் அவர் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும். எனக்கும் வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. நீ சம்பாதித்து நான் சாப்பிடுவதா? என்று தடை போட்டார். சம்பாத்தியம் எனக்கான ஒரு சுதந்திரம் என்பதை தெரிந்து கொண்டே வேண்டாம் என்றார்”.
“நீங்க ஏனம்மா ஒத்துக் கொண்டீர்கள்?”
“இன்றைக்கு இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கும் காலகட்டத்திலேயே உனக்குப் பிடித்த ஒரு வாழ்கையை தேர்ந்தெடுக்க முடியுமா? அவர் சொல்வதற்கு தலையாட்டத்தானே செய்கிறாய்?”
காயத்ரி அப்படி சொன்னதும் முகவாட்டத்துடன் “ஆமாம்மா”.