அத்தியாயம் – 3
நன்மங்கலம் காட்டுப் பகுதியில் அடர்ந்த ஆட்கள் யாருமில்லாத அந்த இடத்தில் பத்து பேர் நின்றிருந்தனர். அவர்களின் முகங்களில் கவலையும், அடுத்து என்ன என்கிற கோபமும் இருந்தது.
“ஏண்டா உங்கப்பா மந்திரியா இருந்து இப்படியொரு வேலையை செஞ்சிட்டாரே?” என்று கோபப்பட்டான் ராஜேஷ்.
அவனை முறைத்த பிரபு “அவரு என்னடா பண்ண முடியும்? மக்களுக்கு ரொட்டித் துணடு போட்டா தான் ஆட்சியை பிடிக்க முடியும்னு கட்சி மேலிடம் சொல்லும் போது என்ன செய்ய முடியும்?”
“நீ என்ன சொன்னாலும் இப்போ மாட்டி இருக்கிறது நாம தானே? உன்னை உங்கப்பா எப்படியாவது காப்பாத்திடுவாறு. ஆனா நாங்க?” என்றான் வீரா.
சுற்றி இருந்த மற்றவர்கள் முகங்களிலும் அதே கேள்வி இருந்தது. அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு “என்னை நம்பலையாடா நீங்க? அவன் என்ன பெரிய பு...யா? அரசாங்கத்தில் வேலை பார்ப்பவன் தானே? பார்த்துக்கலாம் விடுங்கடா”.
“இல்லடா பிரபு! அவ்வளவு ஈஸியா அவனை எடை போடாதே. இனி நாம ரொம்ப கவனமா இருக்கணும்” என்றான் ரமேஷ்.
“அப்போ ரத்னாவை எப்படி கொண்டு போகிறது?”
அவனது கேள்வியை கண்டு அனைவரின் கண்களிலும் கலவரம்.
“என்ன பேசுற பிரபு? கொஞ்ச நாளைக்கு எதையும் செய்யாம இருக்கிறது தான் நமக்கு நல்லது. அவன் நம்ம மேல ஒரு கண்ணை வச்சிருப்பான்”.
“டேய்! நாம என்ன கிரிமினலா? எந்த இடத்திலேயும் ஆதாரத்தை விடாம செஞ்சிட்டு இருக்கோம். இப்படியொரு கூட்டம் இருக்கிறது அந்தப் பயலுக்கு தெரியவே தெரியாது” என்றான் இகழ்ச்சியாக.
“நாம எதையாவது செய்யப் போய் அது அவனோட கவனத்துக்கு போயிட்டா சிக்கி சின்னாபின்னம் ஆகிடுவோம் பார்த்துக்க”.
“இல்லடா அப்படி எல்லாம் விட முடியாது! நாம விட்டாலும் அவனுங்க விட மாட்டானுங்க. பெண்ணை இன்னும் நாலு நாளைக்குள்ள அங்கே கொண்டு போகலேன்னா பிரச்சனையாகிடும்”.
அப்போது ரமேஷின் போன் அடித்திட அதை எடுத்து பார்த்தவனின் முகம் மாற “அவ தான் அடிக்கிறா. ரெண்டு நாளா சாமியை பார்க்கனும்னு கேட்டுகிட்டு இருக்கா. இப்போ நான் என்ன சொல்றது?”
போனையும் அவனையும் மாறி மாறி பார்த்த பிரபு “கல் மண்டபத்துக்கு வர சொல்லிடு” என்றான் தீவிரமான பார்வையுடன் பிரபு.
அதில் பயந்து போன வீரா “டேய் வேண்டாம்டா! இது சரியான நேரமில்ல” என்றான்.
அனைவரின் மௌனமும் அதையே பிரபுவிற்கு உணர்த்த “பயந்துடீங்களாடா? நாம இதுக்கெல்லாம் பயப்படுகிற ஆளுங்களா? கச்சிதமா ப்ளான் பண்ணி காரியத்தை முடிச்சிட்டு கொஞ்ச நாளைக்கு அமைதியா இருப்போம்”.
அவனது பேச்சில் தெரிந்த தைரியமும் தெனாவெட்டும் அனைவரையும் சமாதானப்படுத்த, சற்றே இளகி வந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானார்கள். சற்றே நெருங்கி நின்று சில பல விஷயங்களை பேசியவர்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.
பிரபு முன்னே நடக்க அனைவரும் அவனை தொடர்ந்தனர். காட்டின் உட்பகுதிக்குச் சென்றவன் அங்கிருந்த சிதிலமடைந்த பழங்கால கட்டிடங்கள் இருக்கும் பகுதிக்கு சென்றான். மிகவும் தொன்மையான அந்த கட்டிடத்தின் வாசலுக்குச் சென்றவன் ஒரு நிமிடம் நின்று பின்னே வந்தவர்களைப் பார்க்க அவர்களும் அவனை தீவிரமான முகத்தோடு பார்த்தனர். பின்னர் அமைதியாக ஒருவர் பின் ஒருவராக அந்த கட்டிடத்தின் உள்ளே சென்றனர்.
அந்த கட்டிடத்தின் எல்லா இடமும் உடைந்து கிடக்க, ஒரே ஒரு சுவரு மட்டும் நின்றிருக்க, அதில் ஒரு கதவும் இருந்தது. அதன் அருகே சென்ற பிரபு மெல்ல அதன் மீது கை வைத்து தள்ள முயன்றான். அவனோடு ரமேஷும் சேர்ந்து கொள்ள, கரகரவென்ற சப்தத்துடன் அது திறந்து கொண்டது. கதவின் அந்தப் பக்கம் இருளடைந்து காணப்பட்டது.
பிரபுவே ஓரடி எடுத்து வைத்து உள்ளே செல்ல, அவனை அனைவரும் தொடர்ந்தனர். கடைசியாக வந்தவன் மறக்காமல் கதவை இழுத்து சாற்றி விட்டே முன்னேறினான். இருளில் கண்கள் தெரியாமல் போக, மெல்ல தன் மொபைலை எடுத்து லைட்டைப் போட்டவன் எதிரே தெரிந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சற்று தூரம் நடந்து வந்தவன் கீழே குனிந்து ஒரு கல்லை நகர்த்தி அதன் உள்ளே இறங்க ஆரம்பித்தான்.
அவனை பின்பற்றி அனைவரும் அந்த சுரங்கத்தினுள் நுழைந்தனர். எங்கும் பேரமைதி. வவ்வால்களின் சப்தமும், சுரங்கத்தின் ஒருவித வாடையும் அவர்களை வேகமாக நடக்கச் சொல்லியது. சுமார் பத்து நிமிட நடைக்குப் பிறகு ஒரு சிறு கீற்று வெளிச்சம் தெரிய, அதை நோக்கி முன்னேறியவன் அங்கு தெரிந்த படியில் ஏற ஆரம்பித்தான்.
மேலே ஏறி நின்றவன் தலைக்கு மீதிருந்த கல்லை பலம் கொண்ட மட்டும் நகர்த்தினான். அது கீச்சென்ற சப்தத்துடன் நகர ஆரம்பிக்க, ஒரு ஆள் நுழையும் அளவிற்கு நகர்த்தியவன் முதலில் வெளியே சென்றான். அவனை தொடர்ந்து வந்தவர்களும் அனைவரும் மேலே வந்திருந்தனர்.
நன்மங்கலம் காட்டுப் பகுதியில் அடர்ந்த ஆட்கள் யாருமில்லாத அந்த இடத்தில் பத்து பேர் நின்றிருந்தனர். அவர்களின் முகங்களில் கவலையும், அடுத்து என்ன என்கிற கோபமும் இருந்தது.
“ஏண்டா உங்கப்பா மந்திரியா இருந்து இப்படியொரு வேலையை செஞ்சிட்டாரே?” என்று கோபப்பட்டான் ராஜேஷ்.
அவனை முறைத்த பிரபு “அவரு என்னடா பண்ண முடியும்? மக்களுக்கு ரொட்டித் துணடு போட்டா தான் ஆட்சியை பிடிக்க முடியும்னு கட்சி மேலிடம் சொல்லும் போது என்ன செய்ய முடியும்?”
“நீ என்ன சொன்னாலும் இப்போ மாட்டி இருக்கிறது நாம தானே? உன்னை உங்கப்பா எப்படியாவது காப்பாத்திடுவாறு. ஆனா நாங்க?” என்றான் வீரா.
சுற்றி இருந்த மற்றவர்கள் முகங்களிலும் அதே கேள்வி இருந்தது. அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு “என்னை நம்பலையாடா நீங்க? அவன் என்ன பெரிய பு...யா? அரசாங்கத்தில் வேலை பார்ப்பவன் தானே? பார்த்துக்கலாம் விடுங்கடா”.
“இல்லடா பிரபு! அவ்வளவு ஈஸியா அவனை எடை போடாதே. இனி நாம ரொம்ப கவனமா இருக்கணும்” என்றான் ரமேஷ்.
“அப்போ ரத்னாவை எப்படி கொண்டு போகிறது?”
அவனது கேள்வியை கண்டு அனைவரின் கண்களிலும் கலவரம்.
“என்ன பேசுற பிரபு? கொஞ்ச நாளைக்கு எதையும் செய்யாம இருக்கிறது தான் நமக்கு நல்லது. அவன் நம்ம மேல ஒரு கண்ணை வச்சிருப்பான்”.
“டேய்! நாம என்ன கிரிமினலா? எந்த இடத்திலேயும் ஆதாரத்தை விடாம செஞ்சிட்டு இருக்கோம். இப்படியொரு கூட்டம் இருக்கிறது அந்தப் பயலுக்கு தெரியவே தெரியாது” என்றான் இகழ்ச்சியாக.
“நாம எதையாவது செய்யப் போய் அது அவனோட கவனத்துக்கு போயிட்டா சிக்கி சின்னாபின்னம் ஆகிடுவோம் பார்த்துக்க”.
“இல்லடா அப்படி எல்லாம் விட முடியாது! நாம விட்டாலும் அவனுங்க விட மாட்டானுங்க. பெண்ணை இன்னும் நாலு நாளைக்குள்ள அங்கே கொண்டு போகலேன்னா பிரச்சனையாகிடும்”.
அப்போது ரமேஷின் போன் அடித்திட அதை எடுத்து பார்த்தவனின் முகம் மாற “அவ தான் அடிக்கிறா. ரெண்டு நாளா சாமியை பார்க்கனும்னு கேட்டுகிட்டு இருக்கா. இப்போ நான் என்ன சொல்றது?”
போனையும் அவனையும் மாறி மாறி பார்த்த பிரபு “கல் மண்டபத்துக்கு வர சொல்லிடு” என்றான் தீவிரமான பார்வையுடன் பிரபு.
அதில் பயந்து போன வீரா “டேய் வேண்டாம்டா! இது சரியான நேரமில்ல” என்றான்.
அனைவரின் மௌனமும் அதையே பிரபுவிற்கு உணர்த்த “பயந்துடீங்களாடா? நாம இதுக்கெல்லாம் பயப்படுகிற ஆளுங்களா? கச்சிதமா ப்ளான் பண்ணி காரியத்தை முடிச்சிட்டு கொஞ்ச நாளைக்கு அமைதியா இருப்போம்”.
அவனது பேச்சில் தெரிந்த தைரியமும் தெனாவெட்டும் அனைவரையும் சமாதானப்படுத்த, சற்றே இளகி வந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானார்கள். சற்றே நெருங்கி நின்று சில பல விஷயங்களை பேசியவர்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.
பிரபு முன்னே நடக்க அனைவரும் அவனை தொடர்ந்தனர். காட்டின் உட்பகுதிக்குச் சென்றவன் அங்கிருந்த சிதிலமடைந்த பழங்கால கட்டிடங்கள் இருக்கும் பகுதிக்கு சென்றான். மிகவும் தொன்மையான அந்த கட்டிடத்தின் வாசலுக்குச் சென்றவன் ஒரு நிமிடம் நின்று பின்னே வந்தவர்களைப் பார்க்க அவர்களும் அவனை தீவிரமான முகத்தோடு பார்த்தனர். பின்னர் அமைதியாக ஒருவர் பின் ஒருவராக அந்த கட்டிடத்தின் உள்ளே சென்றனர்.
அந்த கட்டிடத்தின் எல்லா இடமும் உடைந்து கிடக்க, ஒரே ஒரு சுவரு மட்டும் நின்றிருக்க, அதில் ஒரு கதவும் இருந்தது. அதன் அருகே சென்ற பிரபு மெல்ல அதன் மீது கை வைத்து தள்ள முயன்றான். அவனோடு ரமேஷும் சேர்ந்து கொள்ள, கரகரவென்ற சப்தத்துடன் அது திறந்து கொண்டது. கதவின் அந்தப் பக்கம் இருளடைந்து காணப்பட்டது.
பிரபுவே ஓரடி எடுத்து வைத்து உள்ளே செல்ல, அவனை அனைவரும் தொடர்ந்தனர். கடைசியாக வந்தவன் மறக்காமல் கதவை இழுத்து சாற்றி விட்டே முன்னேறினான். இருளில் கண்கள் தெரியாமல் போக, மெல்ல தன் மொபைலை எடுத்து லைட்டைப் போட்டவன் எதிரே தெரிந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சற்று தூரம் நடந்து வந்தவன் கீழே குனிந்து ஒரு கல்லை நகர்த்தி அதன் உள்ளே இறங்க ஆரம்பித்தான்.
அவனை பின்பற்றி அனைவரும் அந்த சுரங்கத்தினுள் நுழைந்தனர். எங்கும் பேரமைதி. வவ்வால்களின் சப்தமும், சுரங்கத்தின் ஒருவித வாடையும் அவர்களை வேகமாக நடக்கச் சொல்லியது. சுமார் பத்து நிமிட நடைக்குப் பிறகு ஒரு சிறு கீற்று வெளிச்சம் தெரிய, அதை நோக்கி முன்னேறியவன் அங்கு தெரிந்த படியில் ஏற ஆரம்பித்தான்.
மேலே ஏறி நின்றவன் தலைக்கு மீதிருந்த கல்லை பலம் கொண்ட மட்டும் நகர்த்தினான். அது கீச்சென்ற சப்தத்துடன் நகர ஆரம்பிக்க, ஒரு ஆள் நுழையும் அளவிற்கு நகர்த்தியவன் முதலில் வெளியே சென்றான். அவனை தொடர்ந்து வந்தவர்களும் அனைவரும் மேலே வந்திருந்தனர்.