அத்தியாயம் -3
இருவாரங்களில் அழகான விடியலுடன் ஆராவரமில்லாத எளிமையான திருமணமாகக் கோவிலில் நடந்தது.அவன் மனமோ எந்தவித ஆர்வமோ,சந்தோஷமோ இல்லாமல் வெறுமையாக இருந்தது. இந்தத் திருமணம் தேவைதானா என்றே தோன்றியது.
நிகில் குடும்பத்தினரும் நிம்மதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .எந்தநேரம் அவன் முரண்டு பிடிப்பானோ திருமணம் வேண்டாம் என்று போய் விடுவானோ , என்றெண்ணி பயந்து கொண்டிருந்தது போக மிக அமைதியாக எந்தவித சங்கடங்களுமின்றி முடிந்தது திருப்தியை தந்தது.
காயத்ரி தன் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.நிகிலுக்கோ அம்மாவின் முகத்தில் தெரிந்த நிம்மதியில் சந்தோஷம் அடைந்தாலும், வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று கலக்கம் மனதை அரித்துக் கொண்டிருந்தது..
ஸ்ருதியின் பாட்டியோ மாலையும் கழுத்துமாக நின்றிருந்த பேத்தியின் மேல் கண் வைத்திருந்தவர்,பொறுப்பை முடித்த திருப்தியுடன் நின்றிருந்தார். அருகில் நின்ற பேரனைப் பார்த்து மெலிதாக ஒரு புன்னகையைச் சிந்தியவர் “இப்போதான் நிம்மதியா இருக்குப்பா.இவளை கட்டிக் கொடுத்து அவளுக்கு ஒருவழியைக் காண்பிச்சாச்சு. தேவையில்லாத பாரத்தை இத்தனை நாள் தூக்கிச் சுமந்தோம். இப்போ அடுத்தவன் தலையில் இறக்கி வச்சாச்சு.இனியாவது புத்தியுள்ள புள்ளயா அவளைத் தள்ளி வைக்கிற வழியைப் பாரு. அப்போ தான் உனக்கு நல்ல குடும்பத்து பொண்ணு கிடைக்கும்.”என்றார்.
அவரைச் சற்று கோபத்துடன் திரும்பி பார்த்த அருண் “என்ன பாட்டி இது!எந்த நேரத்தில் என்ன பேசுறது கணக்கில்லாம போச்சு !”என்று அதட்டினான்.
சாமி சன்னதியில் இருந்து வெளியே வந்து பெரியவர்கள் பிரகாரத்தில் அமர்ந்து விட, நிகிலையும் ஸ்ருதியையும் பிரகாரத்தைச் சுற்றி வரும்படி கூறினார்கள்.இருவரும் சேர்ந்து நடக்கும் போது லேசாக அவள் உடல் அவன் மீது உரச சட்டென்று தீப்பட்டார் போல் விலகி நடந்தான். அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஸ்ருதி. தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டே சென்றாள்.
அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த நிகிலுடைய அண்ணன்கள் ஆகாஷ் , நீரஜ் இருவரும் தம்பி செய்த செயலை கண்டு திட்டிக் கொண்டே வந்தார்கள். “என்னடா இவன், இப்படி இருந்தான்னா அந்தப் பொண்ணு வாழ்க்கையும் இல்ல கெடும்.எத்தனை நாளைக்குதான் நடந்ததையே நினைச்சுச் சந்தோஷங்களை இழக்கப் போறானோ தெரியல”என்று சலிப்புடன் கூறினான்ஆகாஷ்.
“நேத்து அவ்வளவு நேரம் உட்கார வச்சு பேசினேன் ஆகாஷ்.ஆனா, இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன்றானே.பொண்ணு பார்க்க கூட வர முடியாதுன்னு தான் பிடிவாதம் பண்ணினானே”என்று புலம்பினான் நீரஜ்.
கையில் குழந்தையுடன் நீரஜின் அருகில் வந்த மனைவி ஆர்த்தி “எல்லாம் சரியா போகும் விடுங்க”என்றாள் சிரித்துக் கொண்டே.
அவளிடம் அண்ணன் மகனை வாங்கிக் கொண்டவன் “ஸ்ருதி நல்ல அமைதியான பொண்ணா தான் தெரியுது. இனியாவது அவனுக்கு அமைதியான வாழ்க்கை அமையட்டும்.”
அவர்கள் இருவரும் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த ஆகாஷ் “அவ சின்னப் பொண்ணுமா.இவன் இந்த மாதிரி உதாசீனப்படுத்தினா மனசு சுணங்கி போயிடாது”.
“ அப்படி எல்லாம் விட்டுட மாட்டோம். நாம எல்லாம் எதுக்கு இருக்கோம்”என்று சொல்லியபடியே அவர்களுடன் வந்து இணைந்து கொண்டாள் அகல்யா ஆகாஷின் மனைவி.
“அதானே ! சாதாரணக் கூட்டணியா?எமகாதகக் கூட்டமாச்சே! ஆளை கவுக்காம விடமாட்டீங்களே!”என்றான் நீரஜ்.
இருவாரங்களில் அழகான விடியலுடன் ஆராவரமில்லாத எளிமையான திருமணமாகக் கோவிலில் நடந்தது.அவன் மனமோ எந்தவித ஆர்வமோ,சந்தோஷமோ இல்லாமல் வெறுமையாக இருந்தது. இந்தத் திருமணம் தேவைதானா என்றே தோன்றியது.
நிகில் குடும்பத்தினரும் நிம்மதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .எந்தநேரம் அவன் முரண்டு பிடிப்பானோ திருமணம் வேண்டாம் என்று போய் விடுவானோ , என்றெண்ணி பயந்து கொண்டிருந்தது போக மிக அமைதியாக எந்தவித சங்கடங்களுமின்றி முடிந்தது திருப்தியை தந்தது.
காயத்ரி தன் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.நிகிலுக்கோ அம்மாவின் முகத்தில் தெரிந்த நிம்மதியில் சந்தோஷம் அடைந்தாலும், வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று கலக்கம் மனதை அரித்துக் கொண்டிருந்தது..
ஸ்ருதியின் பாட்டியோ மாலையும் கழுத்துமாக நின்றிருந்த பேத்தியின் மேல் கண் வைத்திருந்தவர்,பொறுப்பை முடித்த திருப்தியுடன் நின்றிருந்தார். அருகில் நின்ற பேரனைப் பார்த்து மெலிதாக ஒரு புன்னகையைச் சிந்தியவர் “இப்போதான் நிம்மதியா இருக்குப்பா.இவளை கட்டிக் கொடுத்து அவளுக்கு ஒருவழியைக் காண்பிச்சாச்சு. தேவையில்லாத பாரத்தை இத்தனை நாள் தூக்கிச் சுமந்தோம். இப்போ அடுத்தவன் தலையில் இறக்கி வச்சாச்சு.இனியாவது புத்தியுள்ள புள்ளயா அவளைத் தள்ளி வைக்கிற வழியைப் பாரு. அப்போ தான் உனக்கு நல்ல குடும்பத்து பொண்ணு கிடைக்கும்.”என்றார்.
அவரைச் சற்று கோபத்துடன் திரும்பி பார்த்த அருண் “என்ன பாட்டி இது!எந்த நேரத்தில் என்ன பேசுறது கணக்கில்லாம போச்சு !”என்று அதட்டினான்.
சாமி சன்னதியில் இருந்து வெளியே வந்து பெரியவர்கள் பிரகாரத்தில் அமர்ந்து விட, நிகிலையும் ஸ்ருதியையும் பிரகாரத்தைச் சுற்றி வரும்படி கூறினார்கள்.இருவரும் சேர்ந்து நடக்கும் போது லேசாக அவள் உடல் அவன் மீது உரச சட்டென்று தீப்பட்டார் போல் விலகி நடந்தான். அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஸ்ருதி. தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டே சென்றாள்.
அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த நிகிலுடைய அண்ணன்கள் ஆகாஷ் , நீரஜ் இருவரும் தம்பி செய்த செயலை கண்டு திட்டிக் கொண்டே வந்தார்கள். “என்னடா இவன், இப்படி இருந்தான்னா அந்தப் பொண்ணு வாழ்க்கையும் இல்ல கெடும்.எத்தனை நாளைக்குதான் நடந்ததையே நினைச்சுச் சந்தோஷங்களை இழக்கப் போறானோ தெரியல”என்று சலிப்புடன் கூறினான்ஆகாஷ்.
“நேத்து அவ்வளவு நேரம் உட்கார வச்சு பேசினேன் ஆகாஷ்.ஆனா, இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன்றானே.பொண்ணு பார்க்க கூட வர முடியாதுன்னு தான் பிடிவாதம் பண்ணினானே”என்று புலம்பினான் நீரஜ்.
கையில் குழந்தையுடன் நீரஜின் அருகில் வந்த மனைவி ஆர்த்தி “எல்லாம் சரியா போகும் விடுங்க”என்றாள் சிரித்துக் கொண்டே.
அவளிடம் அண்ணன் மகனை வாங்கிக் கொண்டவன் “ஸ்ருதி நல்ல அமைதியான பொண்ணா தான் தெரியுது. இனியாவது அவனுக்கு அமைதியான வாழ்க்கை அமையட்டும்.”
அவர்கள் இருவரும் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த ஆகாஷ் “அவ சின்னப் பொண்ணுமா.இவன் இந்த மாதிரி உதாசீனப்படுத்தினா மனசு சுணங்கி போயிடாது”.
“ அப்படி எல்லாம் விட்டுட மாட்டோம். நாம எல்லாம் எதுக்கு இருக்கோம்”என்று சொல்லியபடியே அவர்களுடன் வந்து இணைந்து கொண்டாள் அகல்யா ஆகாஷின் மனைவி.
“அதானே ! சாதாரணக் கூட்டணியா?எமகாதகக் கூட்டமாச்சே! ஆளை கவுக்காம விடமாட்டீங்களே!”என்றான் நீரஜ்.