அத்தியாயம் – 28
சிவதாஸ் தன் ஆட்களுக்கு தகவல் தந்து கொண்டே ஜீப்பை ஓட்டினான். சித்தார்த்தின் மனமோ நிலையில்லாமல் தவித்தது. இத்தனை செய்தும் அவளை ஆபத்து நெருங்கி விட்டதே என்று எண்ணி உருகி போனான். ஏதாவது நடந்து விடுமோ என்று பயந்தான்.
அவனை திரும்பி பார்த்த சிவதாஸ் “பிடிச்சிடலாம் சித்தார்த். ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. இங்கே தான் எங்கேயாவது இருப்பானுங்க”.
“இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல. கேஷ்வி இப்படி செய்வான்னு நினைக்கல தாஸ். அவளுக்கு பாவம் பார்த்தது தப்புன்னு புரிஞ்சுகிட்டேன்”.
“ம்ம்..” என்றவனது மொபைல் தொடர்ந்து அழைக்க, அதை எடுத்து காதில் வைத்தவனது இதழில் மெல்லிய புன்னகை.
சரி! எனக்கு லொகேஷன் அனுப்பு. சுற்றி வளைச்சிடுங்க ஆனா உங்க மேல சந்தேகம் வராதவாறு நடந்துக்கோங்க. நான் வந்துடுவேன்” என்று கூறி வைத்தவன் சித்தார்த்திடம் “ட்ரேஸ் பண்ணியாச்சு சித்தார்த். நாம போயிடலாம்” என்றான்.
அதை கேட்டதும் “தேங்க்ஸ் தாஸ்” என்றவனது இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு புதிதாக கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு பகுதிக்குள் நுழைந்தது. பாதி முடிவடைந்த வீடுகளும், பணிகள் தொடங்கப்படாத நிலங்களும் அடங்கிய அந்தப் பகுதியில் மிகப் பெரிய பங்களா ஒன்று முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் இருந்தது. அதன் அருகே செல்லாமல் வண்டியை எட்டியே நிறுத்திவிட்டு போனை எடுத்து தன் ஆட்களை அழைத்தான்.
“எத்தனை பேர் இருப்பாங்க உள்ளே? அங்கே நிலவரம் என்ன?”
“பத்து பேருக்குள்ள தான் சார் இருப்பாங்க. இப்போவரை எந்த சப்தமும் கேட்கல அமைதியா தான் இருக்கு”.
“ஒ...நம்ம ஆட்கள் எத்தனை பேர் இருக்காங்க?”
“ஆறு பேர் இருக்காங்க”
“ம்ம்..ஓகே நான் சொல்றபடி எல்லோரும் மூவ் பண்ணுங்க. பிரன்ட் என்ட்ரன்ஸ் நான் பார்த்துக்கிறேன்” என்றவன் மடமடவென்று அவர்களுக்கான திட்டத்தை கூறினான்.
அதே போல அனைவரும் வீட்டின் எல்லா பக்கங்களில் இருந்தும் சுற்றி வளைத்து உள்ளே செல்ல நகர ஆரம்பித்தனர். சித்தார்த்தும் சிவதாசும் முன்பக்க கதவு வழியாக செல்வது என்று அந்தப் பக்கம் நகர்ந்தனர்.
“சித்து உன்னால முடியுமா? ஏன் கேட்கிறேன்னா நீ உணர்ச்சிவசபட்டா எல்லாமே கெட்டுடும்”.
“இல்ல தாஸ். நானும் வரேன்”.
அதுவரை அமைதியாக இருந்த சூழல் அவர்கள் வீட்டை சூழ்ந்ததை அறிந்து கொள்ளவும், வீட்டிற்குள் எதுவோ விழுந்து உடையும் சப்தமும் அதை தொடர்ந்து ஒரு பெண்ணின் சப்தமும் கேட்டது.
ஒரே நேரத்தில் நான்கு பக்கமும் வீட்டை தாக்குதலுக்கு உள்ளாக்கி அனைவரும் உள்ளே நுழைந்திருந்தனர். அங்கிருந்த ஆட்கள் போலீசாரின் மீது பாய்ந்து தாக்குதலை தொடங்க, பத்து நிமிடங்களுக்குள் அனைவரையும் அடித்து துவைத்து தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருந்தனர் சிவதாஸின் ஆட்கள். சித்தார்த்தோ மற்றதை கவனியாமல் அவசரம் அவசரமாக வர்ஷூவை தேடி ஓடினான்.
எங்கு தேடியும் கிடைக்காமல் ஒரு பெரிய அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் அதிர்ந்து நின்றான். அவன் பின்னே வந்த சிவதாசுக்கு கூட அதிர்ச்சி தான். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.
அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கேஷ்வி கட்டிப் போடப்பட்டிருந்தாள்.
வேகமாக அவளிடம் ஓடிச் சென்று “ஏய்! எங்கே வர்ஷூ? அவளை என்ன பண்ணின?” என்று அதட்டினான்.
அவளது வாய் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய மறுப்பாக தலையசைத்தாள். சித்தார்த்தின் பின்னே வந்து அவளை கவனித்துக் கொண்டிருந்த சிவதாஸ் “சித்தார்த்! அவ பதில் சொல்லனும்னா நாம அவள் வாயில் போட்டிருக்கிற பிளாஸ்திரியை எடுத்து விடனும்” என்றான்.
அப்போது தான் அவள் கட்டப்பட்டிருப்பதையே கவனித்தவன் “இவளை கட்டிப் போட்டிருக்கனும்கன்னா இவள் கடத்தலையா?” என்றான் அதிர்ச்சியாக.
“அப்படித்தான் போல” என்று சொல்லிக் கொண்டே சிவதாஸ் கேஷ்வியின் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.
பிளாஸ்திரி எடுக்கப்பட்டதுமே “சித்து! நான் வர்ஷூவை கடத்தல. அவ நல்லா இருக்கா” என்றாள் அழுது கொண்டே.
“எங்கே இருக்கா சொல்லு? உண்மையை சொல்லு” என்று அவளது தோள்களைப் பற்றி குலுக்கினான்.
சிவதாஸ் தன் ஆட்களுக்கு தகவல் தந்து கொண்டே ஜீப்பை ஓட்டினான். சித்தார்த்தின் மனமோ நிலையில்லாமல் தவித்தது. இத்தனை செய்தும் அவளை ஆபத்து நெருங்கி விட்டதே என்று எண்ணி உருகி போனான். ஏதாவது நடந்து விடுமோ என்று பயந்தான்.
அவனை திரும்பி பார்த்த சிவதாஸ் “பிடிச்சிடலாம் சித்தார்த். ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. இங்கே தான் எங்கேயாவது இருப்பானுங்க”.
“இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல. கேஷ்வி இப்படி செய்வான்னு நினைக்கல தாஸ். அவளுக்கு பாவம் பார்த்தது தப்புன்னு புரிஞ்சுகிட்டேன்”.
“ம்ம்..” என்றவனது மொபைல் தொடர்ந்து அழைக்க, அதை எடுத்து காதில் வைத்தவனது இதழில் மெல்லிய புன்னகை.
சரி! எனக்கு லொகேஷன் அனுப்பு. சுற்றி வளைச்சிடுங்க ஆனா உங்க மேல சந்தேகம் வராதவாறு நடந்துக்கோங்க. நான் வந்துடுவேன்” என்று கூறி வைத்தவன் சித்தார்த்திடம் “ட்ரேஸ் பண்ணியாச்சு சித்தார்த். நாம போயிடலாம்” என்றான்.
அதை கேட்டதும் “தேங்க்ஸ் தாஸ்” என்றவனது இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு புதிதாக கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு பகுதிக்குள் நுழைந்தது. பாதி முடிவடைந்த வீடுகளும், பணிகள் தொடங்கப்படாத நிலங்களும் அடங்கிய அந்தப் பகுதியில் மிகப் பெரிய பங்களா ஒன்று முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் இருந்தது. அதன் அருகே செல்லாமல் வண்டியை எட்டியே நிறுத்திவிட்டு போனை எடுத்து தன் ஆட்களை அழைத்தான்.
“எத்தனை பேர் இருப்பாங்க உள்ளே? அங்கே நிலவரம் என்ன?”
“பத்து பேருக்குள்ள தான் சார் இருப்பாங்க. இப்போவரை எந்த சப்தமும் கேட்கல அமைதியா தான் இருக்கு”.
“ஒ...நம்ம ஆட்கள் எத்தனை பேர் இருக்காங்க?”
“ஆறு பேர் இருக்காங்க”
“ம்ம்..ஓகே நான் சொல்றபடி எல்லோரும் மூவ் பண்ணுங்க. பிரன்ட் என்ட்ரன்ஸ் நான் பார்த்துக்கிறேன்” என்றவன் மடமடவென்று அவர்களுக்கான திட்டத்தை கூறினான்.
அதே போல அனைவரும் வீட்டின் எல்லா பக்கங்களில் இருந்தும் சுற்றி வளைத்து உள்ளே செல்ல நகர ஆரம்பித்தனர். சித்தார்த்தும் சிவதாசும் முன்பக்க கதவு வழியாக செல்வது என்று அந்தப் பக்கம் நகர்ந்தனர்.
“சித்து உன்னால முடியுமா? ஏன் கேட்கிறேன்னா நீ உணர்ச்சிவசபட்டா எல்லாமே கெட்டுடும்”.
“இல்ல தாஸ். நானும் வரேன்”.
அதுவரை அமைதியாக இருந்த சூழல் அவர்கள் வீட்டை சூழ்ந்ததை அறிந்து கொள்ளவும், வீட்டிற்குள் எதுவோ விழுந்து உடையும் சப்தமும் அதை தொடர்ந்து ஒரு பெண்ணின் சப்தமும் கேட்டது.
ஒரே நேரத்தில் நான்கு பக்கமும் வீட்டை தாக்குதலுக்கு உள்ளாக்கி அனைவரும் உள்ளே நுழைந்திருந்தனர். அங்கிருந்த ஆட்கள் போலீசாரின் மீது பாய்ந்து தாக்குதலை தொடங்க, பத்து நிமிடங்களுக்குள் அனைவரையும் அடித்து துவைத்து தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருந்தனர் சிவதாஸின் ஆட்கள். சித்தார்த்தோ மற்றதை கவனியாமல் அவசரம் அவசரமாக வர்ஷூவை தேடி ஓடினான்.
எங்கு தேடியும் கிடைக்காமல் ஒரு பெரிய அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் அதிர்ந்து நின்றான். அவன் பின்னே வந்த சிவதாசுக்கு கூட அதிர்ச்சி தான். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.
அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கேஷ்வி கட்டிப் போடப்பட்டிருந்தாள்.
வேகமாக அவளிடம் ஓடிச் சென்று “ஏய்! எங்கே வர்ஷூ? அவளை என்ன பண்ணின?” என்று அதட்டினான்.
அவளது வாய் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய மறுப்பாக தலையசைத்தாள். சித்தார்த்தின் பின்னே வந்து அவளை கவனித்துக் கொண்டிருந்த சிவதாஸ் “சித்தார்த்! அவ பதில் சொல்லனும்னா நாம அவள் வாயில் போட்டிருக்கிற பிளாஸ்திரியை எடுத்து விடனும்” என்றான்.
அப்போது தான் அவள் கட்டப்பட்டிருப்பதையே கவனித்தவன் “இவளை கட்டிப் போட்டிருக்கனும்கன்னா இவள் கடத்தலையா?” என்றான் அதிர்ச்சியாக.
“அப்படித்தான் போல” என்று சொல்லிக் கொண்டே சிவதாஸ் கேஷ்வியின் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.
பிளாஸ்திரி எடுக்கப்பட்டதுமே “சித்து! நான் வர்ஷூவை கடத்தல. அவ நல்லா இருக்கா” என்றாள் அழுது கொண்டே.
“எங்கே இருக்கா சொல்லு? உண்மையை சொல்லு” என்று அவளது தோள்களைப் பற்றி குலுக்கினான்.