அத்தியாயம் – 23
சிவதாசிடம் சில பல விஷயங்களை பகிர்ந்து கொண்டவன் “இது வெளில யாருக்கும் தெரியாது தாஸ். இப்போ உங்க கிட்ட சொல்லி இருக்கேன். சோ நீங்க எப்போனு சொன்னா அதற்கு தகுந்தார் போல முடிவு பண்ணிக்கலாம்”.
“ஓகே குட் சித்தார்த். நீங்க அந்த கம்பனி விஷயத்தை முடிங்க. அதற்குள் மற்ற டீடைல்ஸ் கலெக்ட் செஞ்சுகிறேன். பட் பீ கேர்புல். உங்க மனைவிக்கு ஆபத்து காத்திருக்கு”.
“இனியொரு தடவை அவளை பாதுகாப்பில்லாமல் விட மாட்டேன் பார்த்துக்கிறேன் தாஸ்”.
சித்தார்த் அவன் சொன்னவற்றை எண்ணியபடி தன்னை தந்தை அடைத்து வைத்திருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். நானாஜியும், தினுவை பற்றி அவன் மனதில் சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்கள் இத்தனை மோசமானவர்களாக இருப்பார்கள் என்று எண்ணவில்லை. தாஸ் சொன்னவைகள் சிறிது தான். அதற்கு மேலும் இருக்கும் என்று நினைத்தவன் அவர்களை விடக் கூடாது என்று தீர்மானித்தான். அதிலும் வளர்ப்பு அன்னையான பிம்லா தேவியும் இத்தனை மோசமானவராக இருப்பார் என்ற எதிர்பார்க்கவில்லை.
ஹோட்டலில் அவனுக்காக காத்திருந்தனர் அவனது நண்பர்களும், ஒரு சில ஷேர் ஹோல்டர்களும். அவர்கள் அனைவரிடமும் நலம் விசாரித்து விட்டு தனக்கு என்ன தேவை என்பதை விளக்கினான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தான். அதில் ஒன்று இரண்டு பேர் அவன் சொல்வதை ஏற்க மறுக்க, அவர்களுக்கு ஒரு ஆடியோவை போட்டு காட்டினான். அதை கேட்டதுமே அவர்களும் அவனுக்கு உதவுவதாக ஒத்துக் கொண்டனர்.
“எனக்கு வேண்டியது எல்லாம் கம்பனியிலிருந்து பிம்லா தேவியை விடுவிக்கணும். அவங்களுக்கும் கம்பனிக்கும் எந்த சம்மந்தமும் இருக்க கூடாது. அதற்கு என்ன செய்யணுமோ செய்ங்க. சட்ட விரோதமா இருந்தால் கூட பரவாயில்லை”.
“அவங்க உங்க அம்மா தானே சித்தார்த்? பின் ஏன்?”
“உங்க கேள்விகளுக்கு எல்லாம் நிச்சயம் பதில் கிடைக்கும். அதோட நாம செய்யப் போகிற இந்த விஷயம் குஜராத்தில் பிஸ்னெஸ் வட்டாரத்தில் நிறைய விளைவுகளை ஏற்படுத்தும்.நல்ல விளைவுகளை”.
“உங்களுக்காக இல்லேன்னாலும் அவருக்காக நாங்க இதை செய்து முடிக்கிறோம்” என்று உறுதி செய்தனர்.
அதன்பின் நண்பர்களில் வழக்கறிஞரான ஒருவரை வைத்து என்னென்ன செய்யலாம் என்று பலவிதமாக ஆராய்ந்தனர். எந்த இடத்திலும் சந்தேகம் எழாதவாறு காரியத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து திட்டங்களை வகுத்தனர். அதன்படி பிம்லா தேவியின் கையெழுத்தால் சில பிரச்சனைகளை உண்டாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு நானாஜியிடம் இருந்தோ, தினுவீடம் இருந்தோ அவருக்கு உதவி கிடைக்காமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை மறுநாளே செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு சித்தார்த் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் ஹோட்டலை விட்டு வெளியேறி காரில் பயணிக்கும் போது, அவனை பின்தொடர்ந்தது ஒரு கார். அதைக் கண்டதும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் தனது மொபைலில் இருந்து மெச்செஜ் கொடுத்தான் “ஸ்டார்ட் ஆபரேஷன்” என்று. அதை கொடுத்துவிட்டு ஜாலியாக காரை ஓட்ட ஆரம்பித்தான்.
அவனை விடாது தொடர்ந்தது அந்தக் கார். நேர் பாதையில் சென்று கொண்டிருந்த காரை திடீர் என்று வழிமறித்து ஒரு கார். சடாரென்று ப்ரேக் போட்டு நிறுத்தியவன் காரின் ஜன்னலைத் திறந்து என்னவென்று பார்க்க, அந்தக் காரிலிருந்து இறங்கிய ஆட்கள் அவனது காரை நோக்கி ஓடி வந்தனர்.
அவனை பின்தொடர்ந்த காரில் இருந்தவர்கள் அதிர்ந்து போய் இதை பார்த்துக் கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் சித்தார்த் அவனது காரிலிருந்து அந்த காருக்கு மாற்றபட்டான். அடுத்த நிமிடம் அந்தக் கார் சீறிப் பாய்ந்திருந்தது.
என்னவென்று உணரும் முன்பே சித்தார்த் கடத்தப்பட்டிருந்தான். அந்தக் காரிளிருந்தவர்கள் உடனே தகவலை தெரிவித்தனர். இப்படியொரு திருப்பத்தை எதிர்பாராதவர்கள் திகைத்து போய் அமர்ந்திருந்தனர்.
“பப்பா யாராக இருக்கும்? நம்மை விட அவனுக்கு வேற எதிரி யார் இருக்காங்க?’ என்றான் தினு கோபமாக.
“தெரியல தினு. ஒருவேளை இது அவனுடைய வேலையாக இருக்குமோ?”
“இருக்காது! அவன் பொண்டாட்டியை இங்கே விட்டு வச்சிட்டு நிச்சயம் இதை செய்ய மாட்டான். நம்ம எதிரிகள் தான் யாரோ அவனை கடத்தி இருக்கணும். அதன் மூலியமா நம்ம கிட்ட காரியத்தை சாதிக்க நினைத்திருக்கலாம்”.
“ம்ம்...பார்க்கலாம். என்ன வருதுன்னு. நீ எதுக்கும் பிம்லாவுக்கு சொல்லிடு”.
“வேண்டாம் பப்பா. அவ சரியில்லை. தானாக தெரியட்டும்”.
“சரி”.
அதே நேரம் வர்ஷுவின் எண்ணிற்கு ஒரு செய்தி வந்தது. நாளை என்னைப் பற்றி என்ன செய்தி வந்தாலும் தைரியமாக இரு. இது என்னுடைய போராட்டத்தின் ஒரு ஆட்டம். என்னைப் பற்றிய செய்தியை கேள்விப்படும் போது உன்னுடைய பயத்தை, வருத்தத்தை எல்லோரின் முன்பும் பதிவு செய். அப்போது தான் சந்தேகம் மற்றவர்களின் மேல் பாயும். என்னுடைய போராட்டமும் ஜெயிக்கும் என்று கொடுத்திருந்தான். அதை தாதியிடம் அவள் காட்டினாள்.
அவர் இதழ்களில் மெல்லிய புன்னகை “என் பேரன் ஆரம்பிச்சிட்டான். அவன் சொன்ன மாதிரி நீ நடந்துக்கோ. ஜெயிச்சிடலாம்” என்றார்.
சிவதாசிடம் சில பல விஷயங்களை பகிர்ந்து கொண்டவன் “இது வெளில யாருக்கும் தெரியாது தாஸ். இப்போ உங்க கிட்ட சொல்லி இருக்கேன். சோ நீங்க எப்போனு சொன்னா அதற்கு தகுந்தார் போல முடிவு பண்ணிக்கலாம்”.
“ஓகே குட் சித்தார்த். நீங்க அந்த கம்பனி விஷயத்தை முடிங்க. அதற்குள் மற்ற டீடைல்ஸ் கலெக்ட் செஞ்சுகிறேன். பட் பீ கேர்புல். உங்க மனைவிக்கு ஆபத்து காத்திருக்கு”.
“இனியொரு தடவை அவளை பாதுகாப்பில்லாமல் விட மாட்டேன் பார்த்துக்கிறேன் தாஸ்”.
சித்தார்த் அவன் சொன்னவற்றை எண்ணியபடி தன்னை தந்தை அடைத்து வைத்திருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். நானாஜியும், தினுவை பற்றி அவன் மனதில் சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்கள் இத்தனை மோசமானவர்களாக இருப்பார்கள் என்று எண்ணவில்லை. தாஸ் சொன்னவைகள் சிறிது தான். அதற்கு மேலும் இருக்கும் என்று நினைத்தவன் அவர்களை விடக் கூடாது என்று தீர்மானித்தான். அதிலும் வளர்ப்பு அன்னையான பிம்லா தேவியும் இத்தனை மோசமானவராக இருப்பார் என்ற எதிர்பார்க்கவில்லை.
ஹோட்டலில் அவனுக்காக காத்திருந்தனர் அவனது நண்பர்களும், ஒரு சில ஷேர் ஹோல்டர்களும். அவர்கள் அனைவரிடமும் நலம் விசாரித்து விட்டு தனக்கு என்ன தேவை என்பதை விளக்கினான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தான். அதில் ஒன்று இரண்டு பேர் அவன் சொல்வதை ஏற்க மறுக்க, அவர்களுக்கு ஒரு ஆடியோவை போட்டு காட்டினான். அதை கேட்டதுமே அவர்களும் அவனுக்கு உதவுவதாக ஒத்துக் கொண்டனர்.
“எனக்கு வேண்டியது எல்லாம் கம்பனியிலிருந்து பிம்லா தேவியை விடுவிக்கணும். அவங்களுக்கும் கம்பனிக்கும் எந்த சம்மந்தமும் இருக்க கூடாது. அதற்கு என்ன செய்யணுமோ செய்ங்க. சட்ட விரோதமா இருந்தால் கூட பரவாயில்லை”.
“அவங்க உங்க அம்மா தானே சித்தார்த்? பின் ஏன்?”
“உங்க கேள்விகளுக்கு எல்லாம் நிச்சயம் பதில் கிடைக்கும். அதோட நாம செய்யப் போகிற இந்த விஷயம் குஜராத்தில் பிஸ்னெஸ் வட்டாரத்தில் நிறைய விளைவுகளை ஏற்படுத்தும்.நல்ல விளைவுகளை”.
“உங்களுக்காக இல்லேன்னாலும் அவருக்காக நாங்க இதை செய்து முடிக்கிறோம்” என்று உறுதி செய்தனர்.
அதன்பின் நண்பர்களில் வழக்கறிஞரான ஒருவரை வைத்து என்னென்ன செய்யலாம் என்று பலவிதமாக ஆராய்ந்தனர். எந்த இடத்திலும் சந்தேகம் எழாதவாறு காரியத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து திட்டங்களை வகுத்தனர். அதன்படி பிம்லா தேவியின் கையெழுத்தால் சில பிரச்சனைகளை உண்டாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு நானாஜியிடம் இருந்தோ, தினுவீடம் இருந்தோ அவருக்கு உதவி கிடைக்காமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை மறுநாளே செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு சித்தார்த் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் ஹோட்டலை விட்டு வெளியேறி காரில் பயணிக்கும் போது, அவனை பின்தொடர்ந்தது ஒரு கார். அதைக் கண்டதும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் தனது மொபைலில் இருந்து மெச்செஜ் கொடுத்தான் “ஸ்டார்ட் ஆபரேஷன்” என்று. அதை கொடுத்துவிட்டு ஜாலியாக காரை ஓட்ட ஆரம்பித்தான்.
அவனை விடாது தொடர்ந்தது அந்தக் கார். நேர் பாதையில் சென்று கொண்டிருந்த காரை திடீர் என்று வழிமறித்து ஒரு கார். சடாரென்று ப்ரேக் போட்டு நிறுத்தியவன் காரின் ஜன்னலைத் திறந்து என்னவென்று பார்க்க, அந்தக் காரிலிருந்து இறங்கிய ஆட்கள் அவனது காரை நோக்கி ஓடி வந்தனர்.
அவனை பின்தொடர்ந்த காரில் இருந்தவர்கள் அதிர்ந்து போய் இதை பார்த்துக் கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் சித்தார்த் அவனது காரிலிருந்து அந்த காருக்கு மாற்றபட்டான். அடுத்த நிமிடம் அந்தக் கார் சீறிப் பாய்ந்திருந்தது.
என்னவென்று உணரும் முன்பே சித்தார்த் கடத்தப்பட்டிருந்தான். அந்தக் காரிளிருந்தவர்கள் உடனே தகவலை தெரிவித்தனர். இப்படியொரு திருப்பத்தை எதிர்பாராதவர்கள் திகைத்து போய் அமர்ந்திருந்தனர்.
“பப்பா யாராக இருக்கும்? நம்மை விட அவனுக்கு வேற எதிரி யார் இருக்காங்க?’ என்றான் தினு கோபமாக.
“தெரியல தினு. ஒருவேளை இது அவனுடைய வேலையாக இருக்குமோ?”
“இருக்காது! அவன் பொண்டாட்டியை இங்கே விட்டு வச்சிட்டு நிச்சயம் இதை செய்ய மாட்டான். நம்ம எதிரிகள் தான் யாரோ அவனை கடத்தி இருக்கணும். அதன் மூலியமா நம்ம கிட்ட காரியத்தை சாதிக்க நினைத்திருக்கலாம்”.
“ம்ம்...பார்க்கலாம். என்ன வருதுன்னு. நீ எதுக்கும் பிம்லாவுக்கு சொல்லிடு”.
“வேண்டாம் பப்பா. அவ சரியில்லை. தானாக தெரியட்டும்”.
“சரி”.
அதே நேரம் வர்ஷுவின் எண்ணிற்கு ஒரு செய்தி வந்தது. நாளை என்னைப் பற்றி என்ன செய்தி வந்தாலும் தைரியமாக இரு. இது என்னுடைய போராட்டத்தின் ஒரு ஆட்டம். என்னைப் பற்றிய செய்தியை கேள்விப்படும் போது உன்னுடைய பயத்தை, வருத்தத்தை எல்லோரின் முன்பும் பதிவு செய். அப்போது தான் சந்தேகம் மற்றவர்களின் மேல் பாயும். என்னுடைய போராட்டமும் ஜெயிக்கும் என்று கொடுத்திருந்தான். அதை தாதியிடம் அவள் காட்டினாள்.
அவர் இதழ்களில் மெல்லிய புன்னகை “என் பேரன் ஆரம்பிச்சிட்டான். அவன் சொன்ன மாதிரி நீ நடந்துக்கோ. ஜெயிச்சிடலாம்” என்றார்.