அத்தியாயம் - 22
மூன்று மாதங்களுக்குப் பிறகு அனைவரும் உத்ரா, கார்த்தியின் திருமணத்திற்காக சிதம்பரம் வந்திருந்தனர்.உடலவிலும் மனதளவிலும் உத்ரா நன்றாக தேறி இருந்தாள்.பெற்றோரின் அன்பும்,தங்கையின் பாசமும்,கார்த்திக்கின் காதலும் நான்கு வருடத் துன்பத்தை சற்று குறைத்திருந்தது..
கார்த்திக்கின் சார்பில் எடுத்துக் கொடுத்திருந்த கிரே கலர் உடலில் மெரூன் கலர் ஜரிகை பின்னிய பார்டர் போட்டப் புடவையும் ,அதற்கு மேட்சாக மெரூன் கலர் ப்ளௌசும் அணிந்து , காதுகளில் ரூபி ஜிமிக்கியும், நெற்றியில் சிவப்பு கல் பதித்த நெற்றி சுட்டியும் ,கழுத்தில் சிறிய சிறிய ரூபி கற்கள் பதித்த மாங்காய் மாலை ஒன்றும் அணிந்து, இரு கைகளிலும் மருதாணி இட்டு அதில் தங்கமும் ரூபியும் கலந்த வலையலணிந்து தயாராகி நின்ற மகளை பார்த்த ராஜிக்கு அதுவரை இருந்த மனக்கவலைகள் எல்லாம் அகல நிம்மதியாக அவளைப் பார்த்து புன்னகைத்தார்.
விஸ்வாவின் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்த கார்த்தியும் பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை அணிந்து தோளில் அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு கல்யாண மாப்பிள்ளைக்கான முழு தோரணையுடன் கிளம்பினான். அப்போது வெளியில் இருந்து வந்த ஆதி அன்றைய தினசரியை கார்த்திக்கின் கையில் கொடுத்து தலைப்பு செய்தியை காட்டினான். அதில் நாட்டிற்கு எதிராக திருட்டுத்தனமாக ஆயுதங்கள் செய்து தீவீரவாதிகளுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த தாண்டவத்திற்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வக்கீல் கேட்டு கொண்டதாக தெரிவிக்கப்படிருந்தது., அவருக்கு துணை நின்ற அவர் மகன்களுக்கு பத்தாண்டு கால சிறை தண்டனையும் விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக என்ற செய்தியை சொன்னது. கதிர் என்கிற ஆர்ஜேவை அவன் மனநலம் குன்றியவன் என்கிற காரணத்தினால் அவன் செய்த செயல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவனை அரசு மனநல காப்பகத்தில் அவனை ஒப்படைக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
அதைப் படித்ததும் கார்த்தியின் முகத்தில் மேலும் நிம்மதி தெரிந்தது.விஸ்வா வீட்டில் இருந்தவர்கள் கோவிலுக்கு முன்னே சென்று விட,உத்ராவை அழைத்து கொண்டு அவளின் பெற்றோர்கள் கோவிலுக்கு சென்று இறங்கினர். வாயிலேயே காத்திருந்த கார்த்தி, உத்ரா காரை விட்டு இறங்கியதும் இருவரின் பார்வைகளும் ஒரு நிமிடம் கலந்து பிரிந்தது. மணப்பெண் அலங்காரத்தில் அவளை பார்த்தவன் மூச்சு விடவும் மறந்து நின்றான். அவளும் அவனை வேஷ்டி சட்டையில் பார்த்து, அவனுருவத்தை தன் மனதிற்குள் பொக்கிஷமாக பூட்டி வைத்தாள். இருவரும் இணைந்து நடக்க சாமி சந்நிதானத்திற்கு சென்று கண் மூடி பிரார்த்தித்தனர்., ஐயர் தாலியை எடுத்து கொடுக்க அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.அவளின் திருமாங்கல்யத்தில் பொட்டு வைக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் விழுந்து அவளின் நிலையை அவனுக்கு எடுத்துரைத்தது.
பின்னர் பெரியவர்கள் முன்னே செல்ல கார்த்திக்கும் உத்ராவும் இணைந்து பிரகாரத்தை சுற்றி வந்தனர். இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை ஆனால் வாய் தான் பேசிக் கொள்ளவில்லையே தவிர அவ்விரு மனங்களும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டு தான் இருந்தது.. உத்ராவின் மனமோ ‘இந்த நாளுக்காக இந்த நிமிடத்திற்காக எத்தனை போராட்டம், எத்தனை அழுகை, தவிப்பு,மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி இன்று கைகூடி இருக்கிறது’ என்று எண்ணியபடியே நடந்தாள்.
வீட்டிற்கு சென்று மற்ற சடங்குகளை முடித்த பிறகு உத்ரா தன் அறையிலே முடங்கி கொண்டாள். அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டனர். கார்த்தி, ஆதி, விஸ்வா மூவரும் அன்றைய பொழுதை நடந்து முடிந்தவைகளை பற்றி பேசியே கழித்தனர்.
அன்று இரவு தனிமையில் அவனை சந்திக்க தயாரான போது அவள் மனம் இனம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் உத்ராவின் வீட்டில் விட்டு விட்டு அனைவரும் விஸ்வாவின் வீட்டிற்கு சென்று விட்டனர்.
அறையில் இருந்த ஜன்னலை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் பின்னால் வந்து நின்றாள் உத்ரா. மெல்லிய கொலுசொலியும், வளையோசையும் அவள் வந்ததை அவனுக்குத் தெரிவிக்க, அவள் புறம் திரும்பியவன் “வா”என்று தன் கையை நீட்ட அதைப் பற்றி கொண்டு அவன் அருகில் சென்று நின்றாள். அந்த ஜன்னலின் வழியே தெரிந்த இருள் சூழ்ந்த வானத்தில் வெள்ளி நிலவு தக தகவென்று மின்னிக் கொண்டிருந்தது. “நம்ம காதலுக்கும் இந்த நிலவுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கு சின்னு. நாம சந்தித்துக் கொண்ட பொழுதுகள், நாம் பேசிக் கொண்டவை, சந்தோஷ நிகழ்வுகள், நமது துயரமான நாட்கள் என்று எல்லாமே இந்த நிலவு பார்த்துக் கொண்டிருந்தது இல்லையா?”.
அவளும் மெல்ல அடியெடுத்து ஜன்னலின் புறம் நகர்ந்து நிலவைப் பார்த்து அவனுடைய கேள்விக்கு “ம்ம்” என்று சொல்லி மயங்கி நின்றாள். அப்போது கார்த்திக்கின் அலைபேசியில் இருந்து
மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மன்றத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி...
என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த பாடல் அவளின் நினைவலையை தூண்ட , உத்ரா அப்படியே அவன் மார்பில் சாய்ந்து நின்று விட்டாள்.
இருவரின் நினைவுகளும் நான்கு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. மெல்ல அவளை தன் கையணைவில் கொண்டு வந்தவன் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.அவர்களின் நிலையை கண்ட காற்று மகிழ்ந்து போய் துள்ளி குதித்து ஆட்டம் போட ஆரம்பித்தது. காற்றின் மகிழ்ச்சியில் ஜன்னலின் கதவுகள் வேகமாக அடித்துக் கொண்டது.. அவர்களின் காதலின் சங்கமம் இனிதே தொடங்கியது...
ஐந்து வருடங்களுக்குப் பிறகு....
சிதம்பரத்தில் இருந்த உத்ராவின் வீட்டிற்கு வந்திருந்தனர் இரு ஜோடிகளும்.
இரு வருடங்கள் முன்பு தான் ஆதிக்கும் , மித்ராவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. கா கார்த்திக், தங்கள் திருமணம் முடிந்த கையோடு உத்ராவை சென்னை அழைத்து சென்று, அங்கு உள்ள ஒரு கல்லூரியில்
அவளைச் சேர்த்து, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடர செய்தான். திடிந்த கையோடு
அவள் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அவர்கள் காதலின் பரிசாக ரித்விக் பிறந்தான். இரு ஜோடிகளும் ஒரு நான்கு நாட்களுக்கு விடுமுறையை கழிக்க சிதம்பரம் வந்திருந்தனர். உத்ராவிற்கு அங்கு வருவதற்கு மனமில்லாவிட்டாலும் கார்த்திக்கிற்காக வந்திருந்தாள்.தங்கள் திருமணத்திற்கு பிறகு இப்பொழுது தான் அவள் முதன் முறையாக சிதம்பரம் வருகிறாள்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அனைவரும் உத்ரா, கார்த்தியின் திருமணத்திற்காக சிதம்பரம் வந்திருந்தனர்.உடலவிலும் மனதளவிலும் உத்ரா நன்றாக தேறி இருந்தாள்.பெற்றோரின் அன்பும்,தங்கையின் பாசமும்,கார்த்திக்கின் காதலும் நான்கு வருடத் துன்பத்தை சற்று குறைத்திருந்தது..
கார்த்திக்கின் சார்பில் எடுத்துக் கொடுத்திருந்த கிரே கலர் உடலில் மெரூன் கலர் ஜரிகை பின்னிய பார்டர் போட்டப் புடவையும் ,அதற்கு மேட்சாக மெரூன் கலர் ப்ளௌசும் அணிந்து , காதுகளில் ரூபி ஜிமிக்கியும், நெற்றியில் சிவப்பு கல் பதித்த நெற்றி சுட்டியும் ,கழுத்தில் சிறிய சிறிய ரூபி கற்கள் பதித்த மாங்காய் மாலை ஒன்றும் அணிந்து, இரு கைகளிலும் மருதாணி இட்டு அதில் தங்கமும் ரூபியும் கலந்த வலையலணிந்து தயாராகி நின்ற மகளை பார்த்த ராஜிக்கு அதுவரை இருந்த மனக்கவலைகள் எல்லாம் அகல நிம்மதியாக அவளைப் பார்த்து புன்னகைத்தார்.
விஸ்வாவின் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்த கார்த்தியும் பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை அணிந்து தோளில் அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு கல்யாண மாப்பிள்ளைக்கான முழு தோரணையுடன் கிளம்பினான். அப்போது வெளியில் இருந்து வந்த ஆதி அன்றைய தினசரியை கார்த்திக்கின் கையில் கொடுத்து தலைப்பு செய்தியை காட்டினான். அதில் நாட்டிற்கு எதிராக திருட்டுத்தனமாக ஆயுதங்கள் செய்து தீவீரவாதிகளுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த தாண்டவத்திற்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வக்கீல் கேட்டு கொண்டதாக தெரிவிக்கப்படிருந்தது., அவருக்கு துணை நின்ற அவர் மகன்களுக்கு பத்தாண்டு கால சிறை தண்டனையும் விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக என்ற செய்தியை சொன்னது. கதிர் என்கிற ஆர்ஜேவை அவன் மனநலம் குன்றியவன் என்கிற காரணத்தினால் அவன் செய்த செயல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவனை அரசு மனநல காப்பகத்தில் அவனை ஒப்படைக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
அதைப் படித்ததும் கார்த்தியின் முகத்தில் மேலும் நிம்மதி தெரிந்தது.விஸ்வா வீட்டில் இருந்தவர்கள் கோவிலுக்கு முன்னே சென்று விட,உத்ராவை அழைத்து கொண்டு அவளின் பெற்றோர்கள் கோவிலுக்கு சென்று இறங்கினர். வாயிலேயே காத்திருந்த கார்த்தி, உத்ரா காரை விட்டு இறங்கியதும் இருவரின் பார்வைகளும் ஒரு நிமிடம் கலந்து பிரிந்தது. மணப்பெண் அலங்காரத்தில் அவளை பார்த்தவன் மூச்சு விடவும் மறந்து நின்றான். அவளும் அவனை வேஷ்டி சட்டையில் பார்த்து, அவனுருவத்தை தன் மனதிற்குள் பொக்கிஷமாக பூட்டி வைத்தாள். இருவரும் இணைந்து நடக்க சாமி சந்நிதானத்திற்கு சென்று கண் மூடி பிரார்த்தித்தனர்., ஐயர் தாலியை எடுத்து கொடுக்க அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.அவளின் திருமாங்கல்யத்தில் பொட்டு வைக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் விழுந்து அவளின் நிலையை அவனுக்கு எடுத்துரைத்தது.
பின்னர் பெரியவர்கள் முன்னே செல்ல கார்த்திக்கும் உத்ராவும் இணைந்து பிரகாரத்தை சுற்றி வந்தனர். இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை ஆனால் வாய் தான் பேசிக் கொள்ளவில்லையே தவிர அவ்விரு மனங்களும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டு தான் இருந்தது.. உத்ராவின் மனமோ ‘இந்த நாளுக்காக இந்த நிமிடத்திற்காக எத்தனை போராட்டம், எத்தனை அழுகை, தவிப்பு,மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி இன்று கைகூடி இருக்கிறது’ என்று எண்ணியபடியே நடந்தாள்.
வீட்டிற்கு சென்று மற்ற சடங்குகளை முடித்த பிறகு உத்ரா தன் அறையிலே முடங்கி கொண்டாள். அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டனர். கார்த்தி, ஆதி, விஸ்வா மூவரும் அன்றைய பொழுதை நடந்து முடிந்தவைகளை பற்றி பேசியே கழித்தனர்.
அன்று இரவு தனிமையில் அவனை சந்திக்க தயாரான போது அவள் மனம் இனம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் உத்ராவின் வீட்டில் விட்டு விட்டு அனைவரும் விஸ்வாவின் வீட்டிற்கு சென்று விட்டனர்.
அறையில் இருந்த ஜன்னலை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் பின்னால் வந்து நின்றாள் உத்ரா. மெல்லிய கொலுசொலியும், வளையோசையும் அவள் வந்ததை அவனுக்குத் தெரிவிக்க, அவள் புறம் திரும்பியவன் “வா”என்று தன் கையை நீட்ட அதைப் பற்றி கொண்டு அவன் அருகில் சென்று நின்றாள். அந்த ஜன்னலின் வழியே தெரிந்த இருள் சூழ்ந்த வானத்தில் வெள்ளி நிலவு தக தகவென்று மின்னிக் கொண்டிருந்தது. “நம்ம காதலுக்கும் இந்த நிலவுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கு சின்னு. நாம சந்தித்துக் கொண்ட பொழுதுகள், நாம் பேசிக் கொண்டவை, சந்தோஷ நிகழ்வுகள், நமது துயரமான நாட்கள் என்று எல்லாமே இந்த நிலவு பார்த்துக் கொண்டிருந்தது இல்லையா?”.
அவளும் மெல்ல அடியெடுத்து ஜன்னலின் புறம் நகர்ந்து நிலவைப் பார்த்து அவனுடைய கேள்விக்கு “ம்ம்” என்று சொல்லி மயங்கி நின்றாள். அப்போது கார்த்திக்கின் அலைபேசியில் இருந்து
மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மன்றத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி...
என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த பாடல் அவளின் நினைவலையை தூண்ட , உத்ரா அப்படியே அவன் மார்பில் சாய்ந்து நின்று விட்டாள்.
இருவரின் நினைவுகளும் நான்கு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. மெல்ல அவளை தன் கையணைவில் கொண்டு வந்தவன் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.அவர்களின் நிலையை கண்ட காற்று மகிழ்ந்து போய் துள்ளி குதித்து ஆட்டம் போட ஆரம்பித்தது. காற்றின் மகிழ்ச்சியில் ஜன்னலின் கதவுகள் வேகமாக அடித்துக் கொண்டது.. அவர்களின் காதலின் சங்கமம் இனிதே தொடங்கியது...
ஐந்து வருடங்களுக்குப் பிறகு....
சிதம்பரத்தில் இருந்த உத்ராவின் வீட்டிற்கு வந்திருந்தனர் இரு ஜோடிகளும்.
இரு வருடங்கள் முன்பு தான் ஆதிக்கும் , மித்ராவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. கா கார்த்திக், தங்கள் திருமணம் முடிந்த கையோடு உத்ராவை சென்னை அழைத்து சென்று, அங்கு உள்ள ஒரு கல்லூரியில்
அவளைச் சேர்த்து, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடர செய்தான். திடிந்த கையோடு
அவள் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அவர்கள் காதலின் பரிசாக ரித்விக் பிறந்தான். இரு ஜோடிகளும் ஒரு நான்கு நாட்களுக்கு விடுமுறையை கழிக்க சிதம்பரம் வந்திருந்தனர். உத்ராவிற்கு அங்கு வருவதற்கு மனமில்லாவிட்டாலும் கார்த்திக்கிற்காக வந்திருந்தாள்.தங்கள் திருமணத்திற்கு பிறகு இப்பொழுது தான் அவள் முதன் முறையாக சிதம்பரம் வருகிறாள்.