அத்தியாயம் -20
குஜராத் வந்து இறங்குவதற்குள் கேஷ்விக்கு நடந்த அனைத்தும் சொல்லப்பட்டது. அதை கேட்டதும் அவளது உள்மனம் எரிமலையென கொதிக்க ஆரம்பித்தது. வெளி உலகிற்கு தான் அவனது இரெண்டாவது மனைவியாகி போனதில் உள்ளம் உலை களமானது. அவளது அலைப்பேசியில் வந்திருந்த கால்களின் எண்ணிக்கை அவளது பிபியை ஏற்றிக் கொண்டிருந்தது. நட்பு வட்டம், சொந்தங்கள் என்று அவளது வாழ்க்கையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
இறுகிய மனதுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளை நேராக நானாஜியிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் முன்னே சென்றமர்ந்தவள் எதுவும் பேசாமல் ஆழ்ந்து பார்த்தவண்ணம் இருந்தாள். அவளது பெற்றோர்களோ அடித்து பிடித்து ஓடி வந்தார்கள். அவளை ஆரத் தழுவி கண்ணீர் சிந்தி, நானாஜிக்கு நன்றி தெரிவித்தார்கள்.
“எதுக்கு மா அவருக்கு நன்றி தெரிவிச்சீங்க?”
“என்ன பேட்டி இப்படி கேட்டுட்ட? உன்னை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு பயந்து போயிட்டோம். நானாஜியால தான் இது சாத்தியாமாச்சு”.
“ஆமாம்! அவரால தான்! என்னுடைய மானம் மரியாதை கௌரவம் எல்லாமே கெட்டது அவரால தான்” என்றாள் அழுத்தமாக.
“பேட்டி! பெரியவர் கிட்ட மரியாதை இல்லாம என்ன பேச்சு இது?”
அன்னையை முறைத்து “இவர் பேச்சைக் கேட்டு தானே-மா எனக்கு கல்யாணம் பண்ணுனீங்க? விருப்பம் இல்லாத ஒருவனுக்கு இரெண்டாம் தாரமா கட்டி வச்சிருக்கீங்க. அதை சொன்னாரா? எந்த விஷயத்தையும் நம்ம கிட்ட சொல்லாம மூடி மறைச்சு எதுக்கு இந்த கல்யாணம்? இதனால யாருக்கு ஆதாயம்?” என்று கேட்டு அங்கிருந்தவர்களை பார்த்தாள்.
அவளது கேள்வியை கண்டு கோபமடைந்த தினு “ஏய்! எங்கே வந்து என்ன பேச்சு பேசுற? யார் கிட்ட பேசுறோம்னு யோசிச்சு பேசு! உன்னை எல்லாம் ஒரு ஆளா நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு இப்படி பேசுவியா?”
“அது தான் ஏன் பண்ணி வச்சீங்க? உங்களுக்கு ஆதாயம் இருக்கப் போய் தானே செஞ்சீங்க? இப்போ என்னுடைய பேர் சமூகத்தில் தி கிரேட் சித்தார்த் மல்ஹோத்ராவின் கீப். சீ!”.
அதுவரை அமைதியாக இருந்தவர் “எங்க குடும்பத்தில் வைப்பாட்டியாக இருக்க கூட ஒரு அந்தஸ்து தேவைப்படும்” என்றார் அவளை கூர்மையாக பார்த்தபடி.
அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்து நின்றவள் “இதை நான் சும்மா விட மாட்டேன். சித்தார்த்தின் மனைவி என்கிற அந்தஸ்து எனக்கு வந்தாகணும்” என்றாள்.
அவளை ஏளனமாக பார்த்து சிரித்தவர்கள் “அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? அவன் இங்கே பொம்மை மாதிரி. எந்த அதிகாரமும் கிடையாது. இங்கே நாங்கள் வைத்தது தான் சட்டம்” என்றான் தினு.
அதில் முகம் சுருங்கிப் போனவள் தாய் தந்தையிடம் திரும்பி “இது தான் இவர்களோட உண்மை முகம். இதற்காகவா என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தீங்க?” என்றாள் கோபமாக.
“அவர்களுக்கு வேற வழி கிடையாது கேஷ்வி. குஜராத்தை பொறுத்தவரை இங்கே நடக்கும் ஒவ்வொரு தொழிலும் எங்கள் கட்டுப்பாட்டில். பெண் கொடுக்க மறுத்தால் உங்கள் தொழிலை மூட்டைகட்ட வேண்டிய சூழ்நிலை” என்றார் நக்கலான சிரிப்போடு.
அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனவள் அப்படியே சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தாள். இதற்கு தீர்வு தான் என்ன? தொழிலிலும் பிரச்சனை கொடுப்பார்கள், திருமண வாழ்க்கையும் கேலிக்குறியதாகி போய் இருக்கிறது. எந்தப் பக்கமும் போக முடியாத நிலை.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த நானாஜி “பேட்டி! நான் சொல்வதை கேட்பதை தவிர உனக்கு வேறவழியில்லை. அப்படி கேட்பதால் உனக்கு சித்தார்த் மட்டுமாவது கிடைப்பான் கூடவே உங்கள் தொழிலும் காப்பாற்றப்படும்” என்றார்.
அவரை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் ஒரு அயர்ச்சி “சோ வியுகம் அமைச்சு எங்களை முடக்கிட்டீங்க. உங்க பேச்சை கேட்பதை தவிர எங்களுக்கு வழியில்லை. சொல்லுங்க என்ன செய்யணும்” என்றாள் ஒரு தெளிவுடன்.
மெல்லிய குரலில் செய்ய வேண்டியவைகளை சொல்லத் தொடங்கினார் நானாஜி. தொழிலில் அவனுக்கு கொடுக்க வேண்டிய குடைச்சல்களை மட்டும் காதில் வாங்கிக் கொண்டவள் அவனை தன் வழிக்கு கொண்டு வர சொல்லப்பட்டவைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். அதை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி தடுத்தாள். அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிறகு அங்கிருந்து கிளம்பியவளை யோசனையுடனே பார்த்துக் கொண்டிருந்தார் நானாஜி.
தினுவோ ‘இவ சரி வர மாட்டா பப்பா. இவளை நம்பி காரியத்தில் இறந்காதீங்க” என்று குதித்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர் “அவளை நம்பி இறங்க நான் ஒன்னும் முட்டாளில்லை. அவ ஒரு துருப்பு சீட்டு நமக்கு. சித்தார்த் கிட்ட நேரடியா நெருங்க போகிறவ அவள். நிச்சயமா அவளால் சில விஷயங்கள் நமக்கு கைகூடும்” என்றார்.
ஏனோ அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால். சித்தார்த்தை தாங்கள் சாதரணமாக எண்ணி இருக்க, அவன் சாதுர்யமாக செயல்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி தான். ஒருவித திருப்தியின்றி அங்கிருந்து கிளம்பிச் சென்றான் தின்னு. ஆனால் தேவோ மனதிற்குள் எழுந்த சந்தோஷத்தை வெளிக்காட்டாது தந்தையை திரும்பியும் பார்க்காது சென்றார். பிள்ளைகள் இருவரும் கிளம்பியதும் தன ஆட்களில் ஒருவனை அழைத்து மூத்த பிள்ளையை கண்காணிக்கும்படி கூறினார்.
குஜராத் வந்து இறங்குவதற்குள் கேஷ்விக்கு நடந்த அனைத்தும் சொல்லப்பட்டது. அதை கேட்டதும் அவளது உள்மனம் எரிமலையென கொதிக்க ஆரம்பித்தது. வெளி உலகிற்கு தான் அவனது இரெண்டாவது மனைவியாகி போனதில் உள்ளம் உலை களமானது. அவளது அலைப்பேசியில் வந்திருந்த கால்களின் எண்ணிக்கை அவளது பிபியை ஏற்றிக் கொண்டிருந்தது. நட்பு வட்டம், சொந்தங்கள் என்று அவளது வாழ்க்கையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
இறுகிய மனதுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளை நேராக நானாஜியிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் முன்னே சென்றமர்ந்தவள் எதுவும் பேசாமல் ஆழ்ந்து பார்த்தவண்ணம் இருந்தாள். அவளது பெற்றோர்களோ அடித்து பிடித்து ஓடி வந்தார்கள். அவளை ஆரத் தழுவி கண்ணீர் சிந்தி, நானாஜிக்கு நன்றி தெரிவித்தார்கள்.
“எதுக்கு மா அவருக்கு நன்றி தெரிவிச்சீங்க?”
“என்ன பேட்டி இப்படி கேட்டுட்ட? உன்னை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு பயந்து போயிட்டோம். நானாஜியால தான் இது சாத்தியாமாச்சு”.
“ஆமாம்! அவரால தான்! என்னுடைய மானம் மரியாதை கௌரவம் எல்லாமே கெட்டது அவரால தான்” என்றாள் அழுத்தமாக.
“பேட்டி! பெரியவர் கிட்ட மரியாதை இல்லாம என்ன பேச்சு இது?”
அன்னையை முறைத்து “இவர் பேச்சைக் கேட்டு தானே-மா எனக்கு கல்யாணம் பண்ணுனீங்க? விருப்பம் இல்லாத ஒருவனுக்கு இரெண்டாம் தாரமா கட்டி வச்சிருக்கீங்க. அதை சொன்னாரா? எந்த விஷயத்தையும் நம்ம கிட்ட சொல்லாம மூடி மறைச்சு எதுக்கு இந்த கல்யாணம்? இதனால யாருக்கு ஆதாயம்?” என்று கேட்டு அங்கிருந்தவர்களை பார்த்தாள்.
அவளது கேள்வியை கண்டு கோபமடைந்த தினு “ஏய்! எங்கே வந்து என்ன பேச்சு பேசுற? யார் கிட்ட பேசுறோம்னு யோசிச்சு பேசு! உன்னை எல்லாம் ஒரு ஆளா நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு இப்படி பேசுவியா?”
“அது தான் ஏன் பண்ணி வச்சீங்க? உங்களுக்கு ஆதாயம் இருக்கப் போய் தானே செஞ்சீங்க? இப்போ என்னுடைய பேர் சமூகத்தில் தி கிரேட் சித்தார்த் மல்ஹோத்ராவின் கீப். சீ!”.
அதுவரை அமைதியாக இருந்தவர் “எங்க குடும்பத்தில் வைப்பாட்டியாக இருக்க கூட ஒரு அந்தஸ்து தேவைப்படும்” என்றார் அவளை கூர்மையாக பார்த்தபடி.
அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்து நின்றவள் “இதை நான் சும்மா விட மாட்டேன். சித்தார்த்தின் மனைவி என்கிற அந்தஸ்து எனக்கு வந்தாகணும்” என்றாள்.
அவளை ஏளனமாக பார்த்து சிரித்தவர்கள் “அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? அவன் இங்கே பொம்மை மாதிரி. எந்த அதிகாரமும் கிடையாது. இங்கே நாங்கள் வைத்தது தான் சட்டம்” என்றான் தினு.
அதில் முகம் சுருங்கிப் போனவள் தாய் தந்தையிடம் திரும்பி “இது தான் இவர்களோட உண்மை முகம். இதற்காகவா என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தீங்க?” என்றாள் கோபமாக.
“அவர்களுக்கு வேற வழி கிடையாது கேஷ்வி. குஜராத்தை பொறுத்தவரை இங்கே நடக்கும் ஒவ்வொரு தொழிலும் எங்கள் கட்டுப்பாட்டில். பெண் கொடுக்க மறுத்தால் உங்கள் தொழிலை மூட்டைகட்ட வேண்டிய சூழ்நிலை” என்றார் நக்கலான சிரிப்போடு.
அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனவள் அப்படியே சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தாள். இதற்கு தீர்வு தான் என்ன? தொழிலிலும் பிரச்சனை கொடுப்பார்கள், திருமண வாழ்க்கையும் கேலிக்குறியதாகி போய் இருக்கிறது. எந்தப் பக்கமும் போக முடியாத நிலை.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த நானாஜி “பேட்டி! நான் சொல்வதை கேட்பதை தவிர உனக்கு வேறவழியில்லை. அப்படி கேட்பதால் உனக்கு சித்தார்த் மட்டுமாவது கிடைப்பான் கூடவே உங்கள் தொழிலும் காப்பாற்றப்படும்” என்றார்.
அவரை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் ஒரு அயர்ச்சி “சோ வியுகம் அமைச்சு எங்களை முடக்கிட்டீங்க. உங்க பேச்சை கேட்பதை தவிர எங்களுக்கு வழியில்லை. சொல்லுங்க என்ன செய்யணும்” என்றாள் ஒரு தெளிவுடன்.
மெல்லிய குரலில் செய்ய வேண்டியவைகளை சொல்லத் தொடங்கினார் நானாஜி. தொழிலில் அவனுக்கு கொடுக்க வேண்டிய குடைச்சல்களை மட்டும் காதில் வாங்கிக் கொண்டவள் அவனை தன் வழிக்கு கொண்டு வர சொல்லப்பட்டவைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். அதை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி தடுத்தாள். அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிறகு அங்கிருந்து கிளம்பியவளை யோசனையுடனே பார்த்துக் கொண்டிருந்தார் நானாஜி.
தினுவோ ‘இவ சரி வர மாட்டா பப்பா. இவளை நம்பி காரியத்தில் இறந்காதீங்க” என்று குதித்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர் “அவளை நம்பி இறங்க நான் ஒன்னும் முட்டாளில்லை. அவ ஒரு துருப்பு சீட்டு நமக்கு. சித்தார்த் கிட்ட நேரடியா நெருங்க போகிறவ அவள். நிச்சயமா அவளால் சில விஷயங்கள் நமக்கு கைகூடும்” என்றார்.
ஏனோ அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால். சித்தார்த்தை தாங்கள் சாதரணமாக எண்ணி இருக்க, அவன் சாதுர்யமாக செயல்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி தான். ஒருவித திருப்தியின்றி அங்கிருந்து கிளம்பிச் சென்றான் தின்னு. ஆனால் தேவோ மனதிற்குள் எழுந்த சந்தோஷத்தை வெளிக்காட்டாது தந்தையை திரும்பியும் பார்க்காது சென்றார். பிள்ளைகள் இருவரும் கிளம்பியதும் தன ஆட்களில் ஒருவனை அழைத்து மூத்த பிள்ளையை கண்காணிக்கும்படி கூறினார்.