அத்தியாயம் – 2
கல்யாணி கண்ணீருடன் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் அருகே அமர்ந்திருந்த குணா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மாமனார் வந்துவிட்டு சென்றதில் இருந்து இப்படித்தான் இருக்கிறார். என சொல்லியும் கேட்காமல் அழுது கொண்டே தான் இருக்கிறார்.
“அம்மா! அவன் ஏதோ ஒரு வேலையா தான் போய் இருக்கான். இப்போ தான் போன் பண்ணினேன். வந்துடுறேன்னு சொன்னான்”.
“என் பொண்ணு என்ன ஆனா? நீ ஸ்டேஷனுக்குப் போனியே என்ன சொன்னாங்க?”
“தேடிகிட்டு தான் இருக்கோம் கண்டுபிடிச்சிடுவோம்னு சொல்றாங்க”.
“மூணு மாசம் ஆச்சே குணா. அவளுக்கு எதுவும்னா நான் அந்த நிமிஷமே போய் சேர்ந்திடுவேன்”.
“மா! ஏன் இப்படி பேசுறீங்க? அவளுக்கு எதுவும் ஆகாது நல்லா இருப்பா” கோபமாக.
“எத்தனை பாடுபட்டு வளர்த்தேன். எல்லாமே பாழாப்போச்சு. உன் மாமனார் எதுக்கு வந்தாராம்? அந்த ராட்சசியை இங்கே கொண்டு வந்து விடவா?”
அவரின் கேள்வியில் முகம் சுருங்க “குழந்தையை நினைச்சுப் பாருங்க மாப்பிள்ளைன்னு கெஞ்சினார்”.
“என் பெண்ணை உயிரோட தூக்கிக் கொடுத்திட்டு உட்கார்ந்திருக்கேன். அதுக்கு காரணமானவளை நாம சேர்த்துக்கனுமா?”
“விடுங்கம்மா! நமக்கு இப்போ தங்கச்சி தான் முக்கியம்”.
அந்நேரம் உள்ளே வந்த அர்ஜுனைப் பார்த்ததும் “எங்கேடா போய் தொலைஞ்ச? அந்தக் குட்டியைப் பார்க்க போயிட்டியா?” என்று கத்த ஆரம்பித்தார்.
அவரின் கோபத்தைக் கண்டு தடுமாறி நின்றவன் “என்னம்மா இது! என் பிரெண்ட்டுக்கு கமிஷனரை தெரியும். அவர் கிட்ட உதவி கேட்கலாம் என்று தான் போனேன்”.
அவ்வளவு தான் எழுந்து வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டவர் “எனக்கு பயமா இருக்குடா. ரெண்டு பேரும் சேர்ந்து என் பெண்ணை அப்படியே விட்டுடுவீங்கலோன்னு பயமா இருக்கு. நீ அந்தக் குட்டியைப் பற்றியே நினைச்சிட்டு இருக்க. போனவ போனவளாளே இருக்கட்டும்னு விட்டுடாதீங்கடா” என்று கெஞ்சினார்.
அன்னையின் பேச்சில் அவனது உடலும் மனமும் தளர்ந்து போனது.
“அவ எங்களுக்கு தங்கச்சிம்மா. எப்படிம்மா அவளை விடுவோம்? எல்லாவற்றையும் விட அவள் தான் எங்களுக்கு முக்கியம்”.
அன்னையின் பயத்தைக் கண்டு சகோதரர்கள் இருவருக்கும் மனம் கலங்கிப் போய் விட்டது. எத்தனை கம்பீரமாக வாழ்ந்த மனுஷி. இந்த மூன்று மாதங்களாக உடைந்து போய் விட்டாரே என்று கண் கலங்கினார்கள்.
குணாவும் அருகே வந்து அன்னையின் கைகளைப் பற்றிக் கொள்ள அந்தக் குடும்பமே கலங்கிப் போய் நின்றது. அன்றைய நினைவுகளில் அன்னையை இறுக்கி அணைத்துக் கொண்டனர் இருவரும்.
தந்தை இறந்த பின்பு மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒரே நாளில் வாழ்க்கை என்னவென்று உணர்ந்து கொண்ட தருணம் அது. மூன்றும் சிறு பிள்ளைகள். கல்யாணிக்கோ படிப்பறிவும் இல்லை. வெளியுலக அறிவும் கிடையாது. கணவர் குழந்தைகள் தவிர வேறு எதுவும் அறியாதவராய் இருந்தார் அதுநாள் வரை.
ஒரே நாளில் அனைத்தும் மாறியது. வேலைக்குச் சென்ற மனிதன் பிணமாக திரும்பி வந்த போது அவருக்கு இருபதெட்டு வயது. குணாவிற்கு ஏழு வயது. அடுத்தவனுக்கு ஐந்து. கயலுக்கு இரண்டு வயது. தந்தை இறந்து விட்டார் என்று புரியாத வயது.
பிறந்த வீட்டில் கல்யாணிக்கு கீழே இருவர். அப்பா ஒரு தொழிற்ச்சாலையில் மேலாளர். அவரின் வருமானம் ஒரு மாதத்தை ஒட்டவே கஷ்டமாக இருக்கும், மூன்று குழந்தைகளோடு அங்கு சென்று நிற்க முடியாது. அடுத்து என்ன என்கிற கேள்வியே மிரட்டியது.
முதல் இரண்டு நாட்கள் அக்கம்பக்கத்தில் இருந்த சொந்தங்களிடம் இருந்து பிள்ளைகளுக்கும் அவளுக்கும் சேர்த்து உணவு வந்ததது. மெல்ல நாள் செல்ல செல்ல ஒவ்வொன்றாக நிற்க ஆரம்பித்தது.
குழந்தைகள் முதன்முறையாக பசியை உணர ஆரம்பித்தார்கள். பெரியவனுக்கு மட்டும் வீட்டின் நிலைமை லேசாக புரிந்தது. அடுத்தது இரெண்டும் சின்னவர்கள். அதிலும் கயல் எந்நேரமும் அழுது கொண்டே இருந்தாள்.
கல்யாணி கண்ணீருடன் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் அருகே அமர்ந்திருந்த குணா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மாமனார் வந்துவிட்டு சென்றதில் இருந்து இப்படித்தான் இருக்கிறார். என சொல்லியும் கேட்காமல் அழுது கொண்டே தான் இருக்கிறார்.
“அம்மா! அவன் ஏதோ ஒரு வேலையா தான் போய் இருக்கான். இப்போ தான் போன் பண்ணினேன். வந்துடுறேன்னு சொன்னான்”.
“என் பொண்ணு என்ன ஆனா? நீ ஸ்டேஷனுக்குப் போனியே என்ன சொன்னாங்க?”
“தேடிகிட்டு தான் இருக்கோம் கண்டுபிடிச்சிடுவோம்னு சொல்றாங்க”.
“மூணு மாசம் ஆச்சே குணா. அவளுக்கு எதுவும்னா நான் அந்த நிமிஷமே போய் சேர்ந்திடுவேன்”.
“மா! ஏன் இப்படி பேசுறீங்க? அவளுக்கு எதுவும் ஆகாது நல்லா இருப்பா” கோபமாக.
“எத்தனை பாடுபட்டு வளர்த்தேன். எல்லாமே பாழாப்போச்சு. உன் மாமனார் எதுக்கு வந்தாராம்? அந்த ராட்சசியை இங்கே கொண்டு வந்து விடவா?”
அவரின் கேள்வியில் முகம் சுருங்க “குழந்தையை நினைச்சுப் பாருங்க மாப்பிள்ளைன்னு கெஞ்சினார்”.
“என் பெண்ணை உயிரோட தூக்கிக் கொடுத்திட்டு உட்கார்ந்திருக்கேன். அதுக்கு காரணமானவளை நாம சேர்த்துக்கனுமா?”
“விடுங்கம்மா! நமக்கு இப்போ தங்கச்சி தான் முக்கியம்”.
அந்நேரம் உள்ளே வந்த அர்ஜுனைப் பார்த்ததும் “எங்கேடா போய் தொலைஞ்ச? அந்தக் குட்டியைப் பார்க்க போயிட்டியா?” என்று கத்த ஆரம்பித்தார்.
அவரின் கோபத்தைக் கண்டு தடுமாறி நின்றவன் “என்னம்மா இது! என் பிரெண்ட்டுக்கு கமிஷனரை தெரியும். அவர் கிட்ட உதவி கேட்கலாம் என்று தான் போனேன்”.
அவ்வளவு தான் எழுந்து வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டவர் “எனக்கு பயமா இருக்குடா. ரெண்டு பேரும் சேர்ந்து என் பெண்ணை அப்படியே விட்டுடுவீங்கலோன்னு பயமா இருக்கு. நீ அந்தக் குட்டியைப் பற்றியே நினைச்சிட்டு இருக்க. போனவ போனவளாளே இருக்கட்டும்னு விட்டுடாதீங்கடா” என்று கெஞ்சினார்.
அன்னையின் பேச்சில் அவனது உடலும் மனமும் தளர்ந்து போனது.
“அவ எங்களுக்கு தங்கச்சிம்மா. எப்படிம்மா அவளை விடுவோம்? எல்லாவற்றையும் விட அவள் தான் எங்களுக்கு முக்கியம்”.
அன்னையின் பயத்தைக் கண்டு சகோதரர்கள் இருவருக்கும் மனம் கலங்கிப் போய் விட்டது. எத்தனை கம்பீரமாக வாழ்ந்த மனுஷி. இந்த மூன்று மாதங்களாக உடைந்து போய் விட்டாரே என்று கண் கலங்கினார்கள்.
குணாவும் அருகே வந்து அன்னையின் கைகளைப் பற்றிக் கொள்ள அந்தக் குடும்பமே கலங்கிப் போய் நின்றது. அன்றைய நினைவுகளில் அன்னையை இறுக்கி அணைத்துக் கொண்டனர் இருவரும்.
தந்தை இறந்த பின்பு மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒரே நாளில் வாழ்க்கை என்னவென்று உணர்ந்து கொண்ட தருணம் அது. மூன்றும் சிறு பிள்ளைகள். கல்யாணிக்கோ படிப்பறிவும் இல்லை. வெளியுலக அறிவும் கிடையாது. கணவர் குழந்தைகள் தவிர வேறு எதுவும் அறியாதவராய் இருந்தார் அதுநாள் வரை.
ஒரே நாளில் அனைத்தும் மாறியது. வேலைக்குச் சென்ற மனிதன் பிணமாக திரும்பி வந்த போது அவருக்கு இருபதெட்டு வயது. குணாவிற்கு ஏழு வயது. அடுத்தவனுக்கு ஐந்து. கயலுக்கு இரண்டு வயது. தந்தை இறந்து விட்டார் என்று புரியாத வயது.
பிறந்த வீட்டில் கல்யாணிக்கு கீழே இருவர். அப்பா ஒரு தொழிற்ச்சாலையில் மேலாளர். அவரின் வருமானம் ஒரு மாதத்தை ஒட்டவே கஷ்டமாக இருக்கும், மூன்று குழந்தைகளோடு அங்கு சென்று நிற்க முடியாது. அடுத்து என்ன என்கிற கேள்வியே மிரட்டியது.
முதல் இரண்டு நாட்கள் அக்கம்பக்கத்தில் இருந்த சொந்தங்களிடம் இருந்து பிள்ளைகளுக்கும் அவளுக்கும் சேர்த்து உணவு வந்ததது. மெல்ல நாள் செல்ல செல்ல ஒவ்வொன்றாக நிற்க ஆரம்பித்தது.
குழந்தைகள் முதன்முறையாக பசியை உணர ஆரம்பித்தார்கள். பெரியவனுக்கு மட்டும் வீட்டின் நிலைமை லேசாக புரிந்தது. அடுத்தது இரெண்டும் சின்னவர்கள். அதிலும் கயல் எந்நேரமும் அழுது கொண்டே இருந்தாள்.