அத்தியாயம் – 2
மறுநாள் காலை எழுந்ததில் இருந்து சிந்தனையுடனே வேலை செய்து கொண்டிருந்தாள் தர்ஷனா. மாறனிடம் இதுவரை தன் பிடித்ததை கூறவில்லை என்றாலும் அவன் உணர்ந்திருக்கிறான். ஆனால் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளாமல் நேரடியாக எப்படி திருமணத்தைப் பற்றி பேசுவது என்று யோசனையாக இருந்தது.
வேலைக்குச் செல்ல கிளம்பி தயாராகி உணவு மேஜைக்கு வர, அங்கே கல்யாணராமன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அவளை பார்த்ததும் “உட்கார்” என்றார்.
அமைதியாக எதுவும் பேசாமல் அமர்ந்தவளிடம் “தரகர் கிட்ட பேசப் போறேன். எதாவது வரன் அமைஞ்சா வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னா அதற்கு ஒத்துக்கொள்ளத் தயாராக இருக்கணும். என்ன புரியுதா?” என்றார்.
அப்போது அவளது தட்டில் இட்லிகளை கொண்டு வந்து வைத்த காயத்ரி “வேலையை விடுறது அவளுக்கு நல்லது இல்லங்க” என்றார் மெதுவாக.
“ஏன்? நீ என்ன வேலைக்கா போன?”
அவரோ ‘அதனால தான் சொல்றேன்’ என்று முணுமுணுத்துக் கொண்டே “இல்லங்க! கஷ்டப்பட்டுப் படிச்சு இவ்வளவு தூரம் வந்திருக்கா அவளுக்கு என்று ஒரு அங்கீகாரம் வேண்டாமா?” என்று விட்டார்.
சட்டென்று இருவரையும் நிமிர்ந்து பார்த்தவர் “இது தான்! இந்த மாதிரி யோசிக்கிறதால தான் இன்னைக்கு குடும்ப அமைப்பே கெட்டுப் போய் இருக்கு. பொண்ணுங்க குடும்பத்தை தான் முதல்ல யோசிக்கணும்” என்றார் கோபமாக.
“இல்லங்க...” என்று காயத்ரி ஆரம்பிக்கவும் “மா! விடுங்க!” என்றவள் தந்தையின் பக்கம் திரும்பி “சரிப்பா! நான் பார்த்துக்கிறேன்” என்று விட்டாள்.
அப்போது தர்ஷுவின் அருகில் வந்தமர்ந்த அஞ்சனா மெல்லிய குரலில் “இப்படி எல்லாவற்றுக்கும் தலையாட்டாதே. உனக்கு என்ன வேணும்னு நீ தான் அக்கா சொல்லணும்” என்றாள்.
அதை கவனித்துக் கொண்டிருந்த கல்யாணராமன் “அஞ்சனா! படிக்கிற வேலையை மட்டும் பாரு” என்றார் கோபமாக.
அவரை நிமிர்ந்து பார்த்தவள் “நான் அக்கா மாதிரி இருக்க மாட்டேன்பா. எனக்கு என்ன பிடிக்குதோ அதைத் தான் செய்வேன்” என்று விட்டாள்.
அவ்வளவு தான் எதிரே இருந்த தட்டை எடுத்து ஓங்கி அடித்துவிட்டு “பெண்ணை எப்படி வளர்த்திருக்கப் பாரு. இது உருப்படாது” என்று கத்தி விட்டுச் சென்றார்.
தர்ஷனாவும், காயத்ரியும் பயந்திருக்க, அஞ்சனாவோ “மா! இட்லியை எடுத்து வை. எனக்குப் பிடிச்ச சட்னியை அரைச்சு வச்சிருக்க அதை சாப்பிடாம போவேனா?” என்று காரியத்தில் கண்ணாக இருந்தாள்.
அவரோ பயத்துடன் “நான் பாக்ஸ்ல போட்டு கொடுத்திடுறேன்-டி. அவர் வந்து கத்தப் போறாரு”.
“அவருக்கு வேண்டாம்னு தூக்கி அடிச்சிட்டு போயிட்டாரு அதுக்காக நான் சாப்பிடாம போக முடியுமா?”
யோசனையுடன் தர்ஷனா சாப்பிடாமல் எழ முயல, அவளது கையைப் பற்றி அமர வைத்தவள் “சாப்பிட்டிட்டு எழுந்திரு” என்றாள்.
காயத்ரியோ “இந்தப் பொண்ணுக்கு இவ்வளவு அழுத்தம் கூடாது தர்ஷு” என்றார் பயத்துடன்.
மௌனமாக மூவரும் அமர்ந்திருக்க, கோபத்தோடு உள்ளே சென்றவர் ஆபிசிற்கு கிளம்பி வெளியே வர, அங்கே தர்ஷுவும் அஞ்சனாவும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும் மேலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது அவர் முகத்தில்.
அதைக் கண்ட காயத்ரி “நான் சப்பிடலைங்க. ஆபிஸ் போறதுனால அவங்க ரெண்டு பேர் தான் சாப்பிடுறாங்க”.
“ஏன் நீயும் கொட்டிக்க வேண்டியது தானே? சம்பாதிக்கிற மனுஷனுக்கு இங்கே மரியாதை கிடையாது. பொண்ணுங்களை பெத்துக்கச் சொன்னா பேய்களை பெத்து வச்சிருக்க” என்று எகிறி விட்டு வெளியேறினார்.
கையைப் பிசைந்தபடி கதவை சாத்திவிட்டு வந்தமர்ந்தவரை பார்த்த அஞ்சனா “விடுமா! விடுமா! வாழ்க்கையில எவ்வளவோ பார்த்திட்ட இது ஒரு விஷயமா?” என்றாள் சிரிப்புடன்.
அவளை முறைத்தவர் “அடியே! இதோட முடிஞ்சிடுச்சுன்னா நினைச்ச? வேதாளத்தை சொறிஞ்சு விட்டுட்ட. இதோட பாதிப்பை நான் தான் இனி தினமும் அனுபவித்தாகனும்”.
“என்னம்மா செய்வார் ? பேசிப்பேசியே கொல்வார் அதானே? காதுல பஞ்சை வச்சுக்கோ கொஞ்ச நாளைக்கு”.
மறுநாள் காலை எழுந்ததில் இருந்து சிந்தனையுடனே வேலை செய்து கொண்டிருந்தாள் தர்ஷனா. மாறனிடம் இதுவரை தன் பிடித்ததை கூறவில்லை என்றாலும் அவன் உணர்ந்திருக்கிறான். ஆனால் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளாமல் நேரடியாக எப்படி திருமணத்தைப் பற்றி பேசுவது என்று யோசனையாக இருந்தது.
வேலைக்குச் செல்ல கிளம்பி தயாராகி உணவு மேஜைக்கு வர, அங்கே கல்யாணராமன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அவளை பார்த்ததும் “உட்கார்” என்றார்.
அமைதியாக எதுவும் பேசாமல் அமர்ந்தவளிடம் “தரகர் கிட்ட பேசப் போறேன். எதாவது வரன் அமைஞ்சா வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னா அதற்கு ஒத்துக்கொள்ளத் தயாராக இருக்கணும். என்ன புரியுதா?” என்றார்.
அப்போது அவளது தட்டில் இட்லிகளை கொண்டு வந்து வைத்த காயத்ரி “வேலையை விடுறது அவளுக்கு நல்லது இல்லங்க” என்றார் மெதுவாக.
“ஏன்? நீ என்ன வேலைக்கா போன?”
அவரோ ‘அதனால தான் சொல்றேன்’ என்று முணுமுணுத்துக் கொண்டே “இல்லங்க! கஷ்டப்பட்டுப் படிச்சு இவ்வளவு தூரம் வந்திருக்கா அவளுக்கு என்று ஒரு அங்கீகாரம் வேண்டாமா?” என்று விட்டார்.
சட்டென்று இருவரையும் நிமிர்ந்து பார்த்தவர் “இது தான்! இந்த மாதிரி யோசிக்கிறதால தான் இன்னைக்கு குடும்ப அமைப்பே கெட்டுப் போய் இருக்கு. பொண்ணுங்க குடும்பத்தை தான் முதல்ல யோசிக்கணும்” என்றார் கோபமாக.
“இல்லங்க...” என்று காயத்ரி ஆரம்பிக்கவும் “மா! விடுங்க!” என்றவள் தந்தையின் பக்கம் திரும்பி “சரிப்பா! நான் பார்த்துக்கிறேன்” என்று விட்டாள்.
அப்போது தர்ஷுவின் அருகில் வந்தமர்ந்த அஞ்சனா மெல்லிய குரலில் “இப்படி எல்லாவற்றுக்கும் தலையாட்டாதே. உனக்கு என்ன வேணும்னு நீ தான் அக்கா சொல்லணும்” என்றாள்.
அதை கவனித்துக் கொண்டிருந்த கல்யாணராமன் “அஞ்சனா! படிக்கிற வேலையை மட்டும் பாரு” என்றார் கோபமாக.
அவரை நிமிர்ந்து பார்த்தவள் “நான் அக்கா மாதிரி இருக்க மாட்டேன்பா. எனக்கு என்ன பிடிக்குதோ அதைத் தான் செய்வேன்” என்று விட்டாள்.
அவ்வளவு தான் எதிரே இருந்த தட்டை எடுத்து ஓங்கி அடித்துவிட்டு “பெண்ணை எப்படி வளர்த்திருக்கப் பாரு. இது உருப்படாது” என்று கத்தி விட்டுச் சென்றார்.
தர்ஷனாவும், காயத்ரியும் பயந்திருக்க, அஞ்சனாவோ “மா! இட்லியை எடுத்து வை. எனக்குப் பிடிச்ச சட்னியை அரைச்சு வச்சிருக்க அதை சாப்பிடாம போவேனா?” என்று காரியத்தில் கண்ணாக இருந்தாள்.
அவரோ பயத்துடன் “நான் பாக்ஸ்ல போட்டு கொடுத்திடுறேன்-டி. அவர் வந்து கத்தப் போறாரு”.
“அவருக்கு வேண்டாம்னு தூக்கி அடிச்சிட்டு போயிட்டாரு அதுக்காக நான் சாப்பிடாம போக முடியுமா?”
யோசனையுடன் தர்ஷனா சாப்பிடாமல் எழ முயல, அவளது கையைப் பற்றி அமர வைத்தவள் “சாப்பிட்டிட்டு எழுந்திரு” என்றாள்.
காயத்ரியோ “இந்தப் பொண்ணுக்கு இவ்வளவு அழுத்தம் கூடாது தர்ஷு” என்றார் பயத்துடன்.
மௌனமாக மூவரும் அமர்ந்திருக்க, கோபத்தோடு உள்ளே சென்றவர் ஆபிசிற்கு கிளம்பி வெளியே வர, அங்கே தர்ஷுவும் அஞ்சனாவும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும் மேலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது அவர் முகத்தில்.
அதைக் கண்ட காயத்ரி “நான் சப்பிடலைங்க. ஆபிஸ் போறதுனால அவங்க ரெண்டு பேர் தான் சாப்பிடுறாங்க”.
“ஏன் நீயும் கொட்டிக்க வேண்டியது தானே? சம்பாதிக்கிற மனுஷனுக்கு இங்கே மரியாதை கிடையாது. பொண்ணுங்களை பெத்துக்கச் சொன்னா பேய்களை பெத்து வச்சிருக்க” என்று எகிறி விட்டு வெளியேறினார்.
கையைப் பிசைந்தபடி கதவை சாத்திவிட்டு வந்தமர்ந்தவரை பார்த்த அஞ்சனா “விடுமா! விடுமா! வாழ்க்கையில எவ்வளவோ பார்த்திட்ட இது ஒரு விஷயமா?” என்றாள் சிரிப்புடன்.
அவளை முறைத்தவர் “அடியே! இதோட முடிஞ்சிடுச்சுன்னா நினைச்ச? வேதாளத்தை சொறிஞ்சு விட்டுட்ட. இதோட பாதிப்பை நான் தான் இனி தினமும் அனுபவித்தாகனும்”.
“என்னம்மா செய்வார் ? பேசிப்பேசியே கொல்வார் அதானே? காதுல பஞ்சை வச்சுக்கோ கொஞ்ச நாளைக்கு”.