அத்தியாயம் - 2
ஒன்றரை வருடங்களுக்கு முன்பொரு நாள். துபாயில் தனது அபார்ட்மெண்டின் ஸ்விம்மிங் பூலில் இரவு எட்டரை மணிக்கு சுகமாய் நீந்திக் கொண்டிருந்தவனைத் தொலைப்பேசி தொல்லைபேசியாய்க் கலைத்தது.
போனை எடுக்காமலே அன்னையிடமிருந்துதான் என்பதைப் புரிந்து கொண்டவன், ஈரம் சொட்டசொட்ட வெளியில் வந்து அரை மணி நேரம் கழித்து அழைப்பதாகக் கூறி வைத்தான்.
மனமோ இந்த அழைப்பு எதற்காக என்பதைப் புரிந்து கொண்டது போல் சலிப்பைக் காட்டியது. திருமணமில்லாமல் வாழவே முடியாதா? ஏன் இப்படிப் படுத்துகிறார்கள் என்று புலம்பிக் கொண்டே வீட்டிற்கு வந்து குளித்துத் தயாராகிப் போனுடன் அமர்ந்தான்.
“சொல்லுங்கம்மா, எப்படி இருக்கீங்க? எல்லோரும் நல்லா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்கோம். எப்பவும் லேட்டாத்தான் வீட்டுக்கு வருவியா நிக்கி.”
“ஆமாம்மா. நீங்க என்ன இந்த நேரத்துக்குத் தூங்காம இருக்கீங்க?”
“ என்ன பண்ண சொல்ற! எல்லாம் உன்னைப் பத்தி கவலைதான். தூக்கம் வந்து தொலைக்க மாட்டேங்குது.”
“...”
“பேசமாட்டியே! சரி உடனே உன் மெயிலை செக் பண்ணு. பொண்ணு போட்டோ அனுப்பி இருக்கேன்.”
“அம்மா! சொன்னா கேட்க மாட்டீங்களா? நான் எதையும் பார்க்க மாட்டேன். எனக்குக் கல்யாணம் வேண்டாம்.”
“ஏண்டா நீயென்ன சாமியாராகப் போறீயா? இதோ பாரு! உனக்கு அம்மா மேல உண்மையா பாசம் இருந்தா ஒழுங்கா பொண்ணு போட்டோவை பார்த்துச் சம்மதத்தைச் சொல்லு.”
“சரி எனக்கு உங்க மேல உண்மையான பாசமில்லேன்னு வச்சுகோங்க.”
அவனிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவனது பதிலில் அயர்ந்து போய் ரீசிவரை மூடிக் கொண்டு “ எப்பா, என்னால முடியல. தலையால தண்ணிக் குடிக்க வைக்கிறான்.இவனை நான் செத்துடுவேன்னு சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பார்த்தா இவனே கொண்டு தள்ளுவான் போலருக்குப் போய் சாவுன்னு” என்று கணவரிடம் புலம்பினார்.
“எதுக்கும் அப்படிச் சொல்லிப் பாரேன் காயு”என்றார் சாம்பசிவம்.
அவரை ஒருமாதிரியாகப் பார்த்து “ஓஹோ!..அந்த சாக்குல என்னைப் பரலோகத்துக்கு அனுப்ப ட்ரை பண்றீங்களா?”என்று நக்கலாகக் கேட்டார்.
அதற்குள் நிகில் “ஹலோ...அம்மா! அம்மா! லைன்லதான் இருக்கீங்களா?”
“இருக்கேன்..இருக்கேன்! எங்கே போகப்போறேன். எனக்குத்தான் முடிவை கொண்டு வர மாட்டேங்குறானே அந்த ஆண்டவன்.”
“அம்மா! இப்படியெல்லாம் பேசாதீங்க. நான் உங்களுக்கு விசாவுக்கு ஏற்பாடு பண்றேன். ஒரு மூணு மாசம் இங்கே வந்து என்னோட இருங்க.”
அவனை எப்படிச் சமாதானப்படுத்தித் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என்கிற யோசனையில் எழுந்து நடந்தவர் அங்கிருந்த டீபாயில் இடித்துக் கொள்ள வலியில் “ஸ்..ஸ்..ஆ..ஆ..” என்று அலறினார்.
அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷும், நீரஜும் பாய்ந்து வந்து “என்னம்மா ஆச்சு?” என்று பதற்றத்துடன் வினவினர்.
இடித்துக் கொண்டதில் கையிலிருந்த போன் கீழே விழுந்து ஸ்பீக்கர் ஆன் ஆகி இருந்தது. காயத்ரியின் அலறலும் அதைத் தொடர்ந்து ஆகாஷ், நீரஜின் விசாரிப்பும் போன் வழியே நிகிலை எட்ட, அவன் படபடப்புடன் “அம்மா! அம்மா! என்ன ஆச்சும்மா?” என்று பதறத் தொடங்கினான்.
அவன் பதறுவதைப் பார்த்த காயத்ரி ஆகாஷிடம் போனை ஆப் செய்யச் சொன்னார் சைகையில்.
“எதுக்கும்மா போனை ஆப் செய்யச் சொன்னீங்க?” என்று கேட்டான் ஆகாஷ்.
“உன் தம்பி தவிச்சதைப் பார்த்தேயில்ல.இதை வச்சு அவனைப் பிடிச்சு மடக்கிடலாம் அதுக்குத்தான்.”
“எது டீபாயில் இடிச்சு கிட்டதை வச்சா?” என்று கேலியாகக் கேட்டான் நீரஜ்.
“நீ அப்பப்போ சாம்பசிவம் வாரிசுதான்னு நிருபிக்கிறடா”.
அப்போது நிகில் மீண்டும் அழைக்க “டேய்! யாரும் போனை எடுக்காதீங்க.நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோங்க. நான் பேசிட்டு இருக்கும்போதே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். நீங்க என்னை டாக்டர்கிட்ட தூக்கிட்டு போனீங்க. டாக்டர் மைல்ட் அட்டாக்ன்னு சொல்லி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிட்டார். ஒருமணிநேரம் கழிச்சுப் போனை அட்டென்ட் பண்ணுங்க. பதட்டத்தோட பேசணும் சரியா” என்றார்.
“அவன் பாவம்மா. இப்போவே என்னவோ ஏதோன்னு பயந்து போயிருப்பான்.”
“இதோ பாருங்க! அவன் மேல இரக்கப்பட்டீங்கன்னா அவனுக்குக் கல்யாணமே நடக்காது. நமக்கு இப்போ நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. இதை வச்சு அவனை ஒத்துக்க வச்சிடலாம்.ஆனா, ஒன்னு எல்லோரும் ஒழுங்கா நடிக்கணும்.”
அதன்பின்னர் காயத்ரி சொல்லியபடி நிகிலின் அழைப்பை நிராகரித்தனர். ஒரூமணி நேரம் சென்ற பின்னர் மீண்டும்மீண்டும் அவன் அழைத்துக் கொண்டேயிருக்க “ சரி, போனை எடுத்து நான் சொன்ன மாதிரி சொல்லுடா நீரஜ்” என்றார்.
“ஹலோ! ஹலோ! யார் லைன்ல இருக்கீங்க? அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஏன் யாருமே போனை எடுக்கல?”
“நிக்கி! நீரஜ் பேசுறேன்டா.நான் சொல்றதை பதட்டப்படாம கேளு. அம்மா உன்கிட்ட பேசிட்டு இருக்கும்போதே மயங்கி கீழே விழுந்துட்டாங்க.”
“என்னது! மயங்கிட்டாங்களா?என்னடா நல்லாத்தானே இருந்தாங்க.திடீர்ன்னு என்ன உடம்புக்கு?”
“தண்ணியைத் தெளிச்சு பார்த்தும் எழுந்திரிக்கவேயில்லடா. பயந்துபோய் டாக்டர்கிட்ட தூக்கிட்டு போனோம். அவர் செக் பண்ணிட்டு மைல்ட் அட்டாக்னு சொல்லி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இன்னைக்கு நைட் அப்சர்வேஷன்ல இருக்கனும்-னு சொல்லிட்டாருடா” என்றான் கரகரப்புடன் கூடிய குரலில்.
“நீரு! நீரு! கவலைப்படாதேடா அம்மாவுக்கு ஒண்ணுமில்ல.நாளைக்குக் காலையில எழுந்துடுவாங்க.எனக்கு தகவல் சொல்லிக்கிட்டே இருடா.நான் இப்போவே டிக்கெட் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.”
“சரிடா..நான் சொல்றேன்” என்று போனை வைத்தான்.
அவனைப் பார்த்த காயத்ரி “டேய் நீரூ! எப்படிடா இந்த மாதிரி ஒரு நடிகனை உள்ளுக்குள்ள இத்தனை நாள் மறைச்சு வச்சிருந்த? என்னமா நடிக்கிற!” என்றார்.
“ஆமாம் அத்தை. கமல் எல்லாம் தோத்தார்” என்றாள் நீரஜின் மனைவி ஆர்த்தி.
“ சரி, சரி..அடுத்து என்ன பண்றதுன்னு யோசனை பண்ணுங்க”என்றார் சாம்பசிவம்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பொரு நாள். துபாயில் தனது அபார்ட்மெண்டின் ஸ்விம்மிங் பூலில் இரவு எட்டரை மணிக்கு சுகமாய் நீந்திக் கொண்டிருந்தவனைத் தொலைப்பேசி தொல்லைபேசியாய்க் கலைத்தது.
போனை எடுக்காமலே அன்னையிடமிருந்துதான் என்பதைப் புரிந்து கொண்டவன், ஈரம் சொட்டசொட்ட வெளியில் வந்து அரை மணி நேரம் கழித்து அழைப்பதாகக் கூறி வைத்தான்.
மனமோ இந்த அழைப்பு எதற்காக என்பதைப் புரிந்து கொண்டது போல் சலிப்பைக் காட்டியது. திருமணமில்லாமல் வாழவே முடியாதா? ஏன் இப்படிப் படுத்துகிறார்கள் என்று புலம்பிக் கொண்டே வீட்டிற்கு வந்து குளித்துத் தயாராகிப் போனுடன் அமர்ந்தான்.
“சொல்லுங்கம்மா, எப்படி இருக்கீங்க? எல்லோரும் நல்லா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்கோம். எப்பவும் லேட்டாத்தான் வீட்டுக்கு வருவியா நிக்கி.”
“ஆமாம்மா. நீங்க என்ன இந்த நேரத்துக்குத் தூங்காம இருக்கீங்க?”
“ என்ன பண்ண சொல்ற! எல்லாம் உன்னைப் பத்தி கவலைதான். தூக்கம் வந்து தொலைக்க மாட்டேங்குது.”
“...”
“பேசமாட்டியே! சரி உடனே உன் மெயிலை செக் பண்ணு. பொண்ணு போட்டோ அனுப்பி இருக்கேன்.”
“அம்மா! சொன்னா கேட்க மாட்டீங்களா? நான் எதையும் பார்க்க மாட்டேன். எனக்குக் கல்யாணம் வேண்டாம்.”
“ஏண்டா நீயென்ன சாமியாராகப் போறீயா? இதோ பாரு! உனக்கு அம்மா மேல உண்மையா பாசம் இருந்தா ஒழுங்கா பொண்ணு போட்டோவை பார்த்துச் சம்மதத்தைச் சொல்லு.”
“சரி எனக்கு உங்க மேல உண்மையான பாசமில்லேன்னு வச்சுகோங்க.”
அவனிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவனது பதிலில் அயர்ந்து போய் ரீசிவரை மூடிக் கொண்டு “ எப்பா, என்னால முடியல. தலையால தண்ணிக் குடிக்க வைக்கிறான்.இவனை நான் செத்துடுவேன்னு சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பார்த்தா இவனே கொண்டு தள்ளுவான் போலருக்குப் போய் சாவுன்னு” என்று கணவரிடம் புலம்பினார்.
“எதுக்கும் அப்படிச் சொல்லிப் பாரேன் காயு”என்றார் சாம்பசிவம்.
அவரை ஒருமாதிரியாகப் பார்த்து “ஓஹோ!..அந்த சாக்குல என்னைப் பரலோகத்துக்கு அனுப்ப ட்ரை பண்றீங்களா?”என்று நக்கலாகக் கேட்டார்.
அதற்குள் நிகில் “ஹலோ...அம்மா! அம்மா! லைன்லதான் இருக்கீங்களா?”
“இருக்கேன்..இருக்கேன்! எங்கே போகப்போறேன். எனக்குத்தான் முடிவை கொண்டு வர மாட்டேங்குறானே அந்த ஆண்டவன்.”
“அம்மா! இப்படியெல்லாம் பேசாதீங்க. நான் உங்களுக்கு விசாவுக்கு ஏற்பாடு பண்றேன். ஒரு மூணு மாசம் இங்கே வந்து என்னோட இருங்க.”
அவனை எப்படிச் சமாதானப்படுத்தித் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என்கிற யோசனையில் எழுந்து நடந்தவர் அங்கிருந்த டீபாயில் இடித்துக் கொள்ள வலியில் “ஸ்..ஸ்..ஆ..ஆ..” என்று அலறினார்.
அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷும், நீரஜும் பாய்ந்து வந்து “என்னம்மா ஆச்சு?” என்று பதற்றத்துடன் வினவினர்.
இடித்துக் கொண்டதில் கையிலிருந்த போன் கீழே விழுந்து ஸ்பீக்கர் ஆன் ஆகி இருந்தது. காயத்ரியின் அலறலும் அதைத் தொடர்ந்து ஆகாஷ், நீரஜின் விசாரிப்பும் போன் வழியே நிகிலை எட்ட, அவன் படபடப்புடன் “அம்மா! அம்மா! என்ன ஆச்சும்மா?” என்று பதறத் தொடங்கினான்.
அவன் பதறுவதைப் பார்த்த காயத்ரி ஆகாஷிடம் போனை ஆப் செய்யச் சொன்னார் சைகையில்.
“எதுக்கும்மா போனை ஆப் செய்யச் சொன்னீங்க?” என்று கேட்டான் ஆகாஷ்.
“உன் தம்பி தவிச்சதைப் பார்த்தேயில்ல.இதை வச்சு அவனைப் பிடிச்சு மடக்கிடலாம் அதுக்குத்தான்.”
“எது டீபாயில் இடிச்சு கிட்டதை வச்சா?” என்று கேலியாகக் கேட்டான் நீரஜ்.
“நீ அப்பப்போ சாம்பசிவம் வாரிசுதான்னு நிருபிக்கிறடா”.
அப்போது நிகில் மீண்டும் அழைக்க “டேய்! யாரும் போனை எடுக்காதீங்க.நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோங்க. நான் பேசிட்டு இருக்கும்போதே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். நீங்க என்னை டாக்டர்கிட்ட தூக்கிட்டு போனீங்க. டாக்டர் மைல்ட் அட்டாக்ன்னு சொல்லி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிட்டார். ஒருமணிநேரம் கழிச்சுப் போனை அட்டென்ட் பண்ணுங்க. பதட்டத்தோட பேசணும் சரியா” என்றார்.
“அவன் பாவம்மா. இப்போவே என்னவோ ஏதோன்னு பயந்து போயிருப்பான்.”
“இதோ பாருங்க! அவன் மேல இரக்கப்பட்டீங்கன்னா அவனுக்குக் கல்யாணமே நடக்காது. நமக்கு இப்போ நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. இதை வச்சு அவனை ஒத்துக்க வச்சிடலாம்.ஆனா, ஒன்னு எல்லோரும் ஒழுங்கா நடிக்கணும்.”
அதன்பின்னர் காயத்ரி சொல்லியபடி நிகிலின் அழைப்பை நிராகரித்தனர். ஒரூமணி நேரம் சென்ற பின்னர் மீண்டும்மீண்டும் அவன் அழைத்துக் கொண்டேயிருக்க “ சரி, போனை எடுத்து நான் சொன்ன மாதிரி சொல்லுடா நீரஜ்” என்றார்.
“ஹலோ! ஹலோ! யார் லைன்ல இருக்கீங்க? அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஏன் யாருமே போனை எடுக்கல?”
“நிக்கி! நீரஜ் பேசுறேன்டா.நான் சொல்றதை பதட்டப்படாம கேளு. அம்மா உன்கிட்ட பேசிட்டு இருக்கும்போதே மயங்கி கீழே விழுந்துட்டாங்க.”
“என்னது! மயங்கிட்டாங்களா?என்னடா நல்லாத்தானே இருந்தாங்க.திடீர்ன்னு என்ன உடம்புக்கு?”
“தண்ணியைத் தெளிச்சு பார்த்தும் எழுந்திரிக்கவேயில்லடா. பயந்துபோய் டாக்டர்கிட்ட தூக்கிட்டு போனோம். அவர் செக் பண்ணிட்டு மைல்ட் அட்டாக்னு சொல்லி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இன்னைக்கு நைட் அப்சர்வேஷன்ல இருக்கனும்-னு சொல்லிட்டாருடா” என்றான் கரகரப்புடன் கூடிய குரலில்.
“நீரு! நீரு! கவலைப்படாதேடா அம்மாவுக்கு ஒண்ணுமில்ல.நாளைக்குக் காலையில எழுந்துடுவாங்க.எனக்கு தகவல் சொல்லிக்கிட்டே இருடா.நான் இப்போவே டிக்கெட் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.”
“சரிடா..நான் சொல்றேன்” என்று போனை வைத்தான்.
அவனைப் பார்த்த காயத்ரி “டேய் நீரூ! எப்படிடா இந்த மாதிரி ஒரு நடிகனை உள்ளுக்குள்ள இத்தனை நாள் மறைச்சு வச்சிருந்த? என்னமா நடிக்கிற!” என்றார்.
“ஆமாம் அத்தை. கமல் எல்லாம் தோத்தார்” என்றாள் நீரஜின் மனைவி ஆர்த்தி.
“ சரி, சரி..அடுத்து என்ன பண்றதுன்னு யோசனை பண்ணுங்க”என்றார் சாம்பசிவம்.