அத்தியாயம்- 19
வர்ஷினியை கீழே விடாது தூக்கிக் கொண்டே தன்னறைக்குச் சென்றான். அவளோ அவனிடமிருந்து விடுபட போராட, அதை கண்டுகொள்ளாமல் அசால்ட்டாக சமாளித்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான். அவர்களின் பின்னோடு வந்த தான்யா அறைக்குள் செல்ல தயங்கியபடி நிற்க, “தான்யா உள்ளே வாம்மா” என்றழைத்து விட்டு “மதுவை பார்த்துக்கோ வரேன்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அவன் வெளியேறியதும் கோபத்தோடு எழுந்து நின்ற வர்ஷினியை லேசாக அணைத்துக் கொண்டவள் “அக்கா! கோபப்படாதே! அமைதியா இரு” என்று சமாதானப்படுத்தினாள்.
“நம்மை சுற்றி என்ன நடக்குது தானு? ஒருமுறை நாம இழந்தது எல்லாம் போதாதா? எதுவுமே நடக்காத மாதிரி வந்து நின்னா நமக்கு நடந்தது இல்லேன்னு ஆகிடுமா?”
அவளின் பேச்சைக் கேட்டு சங்கடத்துடன் நின்ற தான்யா “நீ சொல்றது எல்லாம் சரி அக்கா. ஆனா இங்கே நடக்கிறதை பார்த்தா நம்மை மாதிரி மாமாவும் பெரிய சுழலில் சிக்கி இருப்பாருன்னு தோணுது. அவருக்கு நமக்கு நடந்த எதுவுமே தெரியாதுன்னு தோணுது”.
“எதுவேணா இருக்கட்டும் தானு. நமக்கு இது வேண்டாம். என்னால இங்கே இருக்க முடியாது. இப்போவே மூச்சு முட்டுது” என்றாள் கலங்கிய கண்களுடன்.
அவளை அணைத்துக் கொண்ட தான்யா “எனக்கு உன்னை நல்லா புரியுது அக்கா. நீ சொல்கிற எல்லாம் உண்மை தான். எனக்குமே இந்த சூழ்நிலையை எப்படி ஏத்துகிறதுன்னு புரியல. ஆனா ஒன்று மட்டும் புரியுது. மாமா பக்கம் நம்மிடம் சொல்லாத ஒரு ஞாயம் இருக்கு. அதுக்காக முயற்சி செய்து பார்க்கலாமே? முடியலேன்னா கிளம்பி போயிட்டே இருப்போம்”.
தங்கையை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அத்தனை வலி. அவள் மனது நிச்சயமாக தன்னால் சமாளிக்க முடியாது என்று சொன்னது. எத்தனைக்கு எத்தனை அவனை காதலித்தாலோ இப்போது அது வெறுப்பாக மாறி இருக்கிறது. நிச்சயமாக அவனுடன் ஒரே அறையில் தன்னால் தங்க முடியாது என்றே தோன்றியது. இதை எல்லாம் தான்யாவிற்கு புரிய வைக்க முடியாதே என்று யோசனையாக பார்த்தாள்.
அந்நேரம் கதவு லேசாக தட்டப்பட, அவசரமாக இருவரும் ஒருவரை பார்த்தனர். அப்போது சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு இருவரையும் பார்த்து புன்னகை சிந்தியபடி வந்தார் தாதி.
இருவரும் அவரை ‘வா’வென்று கூட அழைக்காமல் அமைதியாக பார்த்தபடி இருந்தனர். அவரோ அதை கண்டுகொள்ளாமல் “உட்காருங்கம்மா! பயணம் சௌகரியமா இருந்ததா?” என்றார்.
வர்ஷினியோ அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் “இவ்வளவு பெரியவங்க நீங்க இருந்தும் உங்க பேரன் செய்ததை எல்லாம் எப்படி அனுமதித்தீங்க? ஒரு பெண்ணோட மனசு என்ன அவ்வளவு இளக்காரமாகவா போயிட்டு?” என்றாள் கோபமாக.
அவளையே பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் “உன்னுடைய இழப்பு ரொம்ப பெருசும்மா. நானோ என் பேரனோ என்ன பேசினாலும் செய்தாலும் அதை சரி செய்ய முடியாது. ஆனா அவன் உன் மேல வைத்த காதலை மட்டும் சந்தேகப்படாதே. அதில் துளி அளவும் பழுதில்லை”.
இகழ்ச்சியாக சிரித்து “ஆமாம் உண்மையான காதல் தான். ஒருத்தியை ஏமாத்திட்டு அந்த குற்ற உணர்வு கூட இல்லாமல் இன்னொருத்தியையும் கட்டிகிட்ட அந்தக் காதல் புனிதமானது தான்”.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவர் “நான் இப்போ என்ன சொன்னாலும் உன்னால நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாதும்மா. எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லணும்” என்றவர் தான்யாவிடம் “இங்கே உங்களுக்கு நான் இருக்கேன். எதுனாலும் என்னை கேளுங்க. இந்த வீடு உங்களுடைய உரிமை. யார் எது பேசினாலும் தைரியமா கடந்து போங்க. நானும் என் பேரனும் இனி உங்களை எந்த துயரமும் நெருங்காமல் பார்த்துக்குவோம்”.
வர்ஷினி சலிப்புடன் வேறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீ என்னோட தங்கிக்கலாம்” என்றார் தான்யாவிடம்.
பட்டென்று திரும்பியவள் “எனக்கும் அவளுக்கும் வேற ரூம் கொடுங்க. நானும் அவளும் தங்கிக்கிறோம். என்னால இந்த ரூமில் தங்க முடியாது. மூச்சு முட்டுது”.
அந்நேரம் கூர்மையான பார்வையுடன் உள்ளே வந்தான் சித்தார்த். அவனைக் கண்டதும் தான்யா பயத்துடன் அக்காவை பார்த்தாள்.
“தாதி! தான்யாவை உங்க கூட தங்க வைப்பது தான் நல்லது” என்றவனது பார்வை அழுத்தமாக வர்ஷினியின் மீது விழ “உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ நீ இந்த அறையில் தான் தங்கியாகனும்”.
அதைக் கேட்டதும் சீறலுடன் “அப்போ உங்க இன்னொரு மனைவி எங்கே தங்குவாங்க? என்னால இங்கே தங்க முடியாது” என்றாள் ஆங்காரமாக.
ஆழ்ந்த பார்வையுடன் “எனக்கு மனைவி என்றால் அது நீ மட்டும் தான். என்னுடைய மனைவி என் அறையில் தான் இருக்கணும்” என்றவன் தாதியிடம் “நீங்க தான்யாவை அழைச்சிட்டு போங்க. எனக்கு இவளிடம் சில விஷயங்கள் பேசணும்” என்றான்.
அவனை புரிந்து கொண்ட தாதி தான்யாவை அழைத்துக் கொண்டு வெளியேறினார். அவர்கள் வெளியேறியதும் கதவடைத்து விட்டு வந்தவன் அவள் முன்னே சென்று நின்றான். வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள். மெல்ல அவளின் தோள்களைப் பற்றி அங்கிருந்த படுக்கையில் அமர வைத்தான். அவன் கை பட்டதுமே உடல் இறுகிப் போக “என்ன பேசப் போறீங்க?” என்றாள் இறுகிய குரலில்.
வர்ஷினியை கீழே விடாது தூக்கிக் கொண்டே தன்னறைக்குச் சென்றான். அவளோ அவனிடமிருந்து விடுபட போராட, அதை கண்டுகொள்ளாமல் அசால்ட்டாக சமாளித்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான். அவர்களின் பின்னோடு வந்த தான்யா அறைக்குள் செல்ல தயங்கியபடி நிற்க, “தான்யா உள்ளே வாம்மா” என்றழைத்து விட்டு “மதுவை பார்த்துக்கோ வரேன்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அவன் வெளியேறியதும் கோபத்தோடு எழுந்து நின்ற வர்ஷினியை லேசாக அணைத்துக் கொண்டவள் “அக்கா! கோபப்படாதே! அமைதியா இரு” என்று சமாதானப்படுத்தினாள்.
“நம்மை சுற்றி என்ன நடக்குது தானு? ஒருமுறை நாம இழந்தது எல்லாம் போதாதா? எதுவுமே நடக்காத மாதிரி வந்து நின்னா நமக்கு நடந்தது இல்லேன்னு ஆகிடுமா?”
அவளின் பேச்சைக் கேட்டு சங்கடத்துடன் நின்ற தான்யா “நீ சொல்றது எல்லாம் சரி அக்கா. ஆனா இங்கே நடக்கிறதை பார்த்தா நம்மை மாதிரி மாமாவும் பெரிய சுழலில் சிக்கி இருப்பாருன்னு தோணுது. அவருக்கு நமக்கு நடந்த எதுவுமே தெரியாதுன்னு தோணுது”.
“எதுவேணா இருக்கட்டும் தானு. நமக்கு இது வேண்டாம். என்னால இங்கே இருக்க முடியாது. இப்போவே மூச்சு முட்டுது” என்றாள் கலங்கிய கண்களுடன்.
அவளை அணைத்துக் கொண்ட தான்யா “எனக்கு உன்னை நல்லா புரியுது அக்கா. நீ சொல்கிற எல்லாம் உண்மை தான். எனக்குமே இந்த சூழ்நிலையை எப்படி ஏத்துகிறதுன்னு புரியல. ஆனா ஒன்று மட்டும் புரியுது. மாமா பக்கம் நம்மிடம் சொல்லாத ஒரு ஞாயம் இருக்கு. அதுக்காக முயற்சி செய்து பார்க்கலாமே? முடியலேன்னா கிளம்பி போயிட்டே இருப்போம்”.
தங்கையை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அத்தனை வலி. அவள் மனது நிச்சயமாக தன்னால் சமாளிக்க முடியாது என்று சொன்னது. எத்தனைக்கு எத்தனை அவனை காதலித்தாலோ இப்போது அது வெறுப்பாக மாறி இருக்கிறது. நிச்சயமாக அவனுடன் ஒரே அறையில் தன்னால் தங்க முடியாது என்றே தோன்றியது. இதை எல்லாம் தான்யாவிற்கு புரிய வைக்க முடியாதே என்று யோசனையாக பார்த்தாள்.
அந்நேரம் கதவு லேசாக தட்டப்பட, அவசரமாக இருவரும் ஒருவரை பார்த்தனர். அப்போது சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு இருவரையும் பார்த்து புன்னகை சிந்தியபடி வந்தார் தாதி.
இருவரும் அவரை ‘வா’வென்று கூட அழைக்காமல் அமைதியாக பார்த்தபடி இருந்தனர். அவரோ அதை கண்டுகொள்ளாமல் “உட்காருங்கம்மா! பயணம் சௌகரியமா இருந்ததா?” என்றார்.
வர்ஷினியோ அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் “இவ்வளவு பெரியவங்க நீங்க இருந்தும் உங்க பேரன் செய்ததை எல்லாம் எப்படி அனுமதித்தீங்க? ஒரு பெண்ணோட மனசு என்ன அவ்வளவு இளக்காரமாகவா போயிட்டு?” என்றாள் கோபமாக.
அவளையே பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் “உன்னுடைய இழப்பு ரொம்ப பெருசும்மா. நானோ என் பேரனோ என்ன பேசினாலும் செய்தாலும் அதை சரி செய்ய முடியாது. ஆனா அவன் உன் மேல வைத்த காதலை மட்டும் சந்தேகப்படாதே. அதில் துளி அளவும் பழுதில்லை”.
இகழ்ச்சியாக சிரித்து “ஆமாம் உண்மையான காதல் தான். ஒருத்தியை ஏமாத்திட்டு அந்த குற்ற உணர்வு கூட இல்லாமல் இன்னொருத்தியையும் கட்டிகிட்ட அந்தக் காதல் புனிதமானது தான்”.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவர் “நான் இப்போ என்ன சொன்னாலும் உன்னால நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாதும்மா. எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லணும்” என்றவர் தான்யாவிடம் “இங்கே உங்களுக்கு நான் இருக்கேன். எதுனாலும் என்னை கேளுங்க. இந்த வீடு உங்களுடைய உரிமை. யார் எது பேசினாலும் தைரியமா கடந்து போங்க. நானும் என் பேரனும் இனி உங்களை எந்த துயரமும் நெருங்காமல் பார்த்துக்குவோம்”.
வர்ஷினி சலிப்புடன் வேறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீ என்னோட தங்கிக்கலாம்” என்றார் தான்யாவிடம்.
பட்டென்று திரும்பியவள் “எனக்கும் அவளுக்கும் வேற ரூம் கொடுங்க. நானும் அவளும் தங்கிக்கிறோம். என்னால இந்த ரூமில் தங்க முடியாது. மூச்சு முட்டுது”.
அந்நேரம் கூர்மையான பார்வையுடன் உள்ளே வந்தான் சித்தார்த். அவனைக் கண்டதும் தான்யா பயத்துடன் அக்காவை பார்த்தாள்.
“தாதி! தான்யாவை உங்க கூட தங்க வைப்பது தான் நல்லது” என்றவனது பார்வை அழுத்தமாக வர்ஷினியின் மீது விழ “உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ நீ இந்த அறையில் தான் தங்கியாகனும்”.
அதைக் கேட்டதும் சீறலுடன் “அப்போ உங்க இன்னொரு மனைவி எங்கே தங்குவாங்க? என்னால இங்கே தங்க முடியாது” என்றாள் ஆங்காரமாக.
ஆழ்ந்த பார்வையுடன் “எனக்கு மனைவி என்றால் அது நீ மட்டும் தான். என்னுடைய மனைவி என் அறையில் தான் இருக்கணும்” என்றவன் தாதியிடம் “நீங்க தான்யாவை அழைச்சிட்டு போங்க. எனக்கு இவளிடம் சில விஷயங்கள் பேசணும்” என்றான்.
அவனை புரிந்து கொண்ட தாதி தான்யாவை அழைத்துக் கொண்டு வெளியேறினார். அவர்கள் வெளியேறியதும் கதவடைத்து விட்டு வந்தவன் அவள் முன்னே சென்று நின்றான். வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள். மெல்ல அவளின் தோள்களைப் பற்றி அங்கிருந்த படுக்கையில் அமர வைத்தான். அவன் கை பட்டதுமே உடல் இறுகிப் போக “என்ன பேசப் போறீங்க?” என்றாள் இறுகிய குரலில்.