அத்தியாயம் – 18
சித்தார்த்தின் வீட்டு வாசலில் பத்திரிக்கையாளர்கள் ஒருபுறம், போலீஸ் ஒருபுறம் கேஷ்வியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருபுறம் என்று கூட்டம் கூடி இருந்தது. அதைக் கண்டு பயந்து போனவள் நடுக்கத்துடன் தன்னை மீறி அவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். காரிலிருந்து இறங்கும் முன் அவளை திரும்பி பார்த்தவன் “நான் பார்த்துக்கிறேன் மது! தைரியமா வா” என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
தான்யாவை மட்டும் காரிலிருந்து இறங்க வேண்டாம் என்று சொல்லி விட்டான். அவன் இறங்கியதுமே அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர். போலீசார் பத்திரிக்கையாளர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு அவனருகே வந்து “சார் உங்க மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு” என்றனர்.
அதற்குள் கேஷ்வியின் தந்தை கோபமாக அவன் முன்னே வந்து அடிக்கப் பாய்ந்தார். அதை தடுத்தவர்களை எல்லாம் திட்டிவிட்டு “என் பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு எப்படி நீ இன்னொரு கல்யாணம் செய்துப்ப?” என்று ஆங்காரமாக கத்தினார்.
கேஷ்வியின் தாயோ கண்ணீருடன் அவனுக்கு சாபம் அளித்துக் கொண்டிருந்தார். இறுகிய முகத்துடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சித்தார்த். அப்போது போலீசாரிடம் அவனை கைது செய்யும்படி கத்தினார் கேஷ்வியின் தந்தை.
அதை கேட்டு அவனருகில் வந்த போலீஸ் அதிகாரி “உங்க மேல அவங்க கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. அதனால நாங்க உங்களை கைது செய்து அழைச்சிட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்” என்றார்.
அவரை ஒரு பார்வை பார்த்தவன் “அஞ்சு நிமிஷம் வைட் பண்ண முடியுமா சார்?” என்றான்.
“சரி சார் வெயிட் பண்றோம்” என்று அவனுக்கு அருகிலேயே நின்று கொண்டார்.
அப்போது கருப்பு நிற ஜீப் பூம்-பூம் என்கிற ஹாரனுடன் கூட்டத்தை கலைத்தபடி வந்து நின்றது. அந்த ஜீப்பை பார்த்ததும் யோசனையுடன் நின்றிருந்தான் சித்தார்த். கூட்டம் மொத்தமும் ஒதுங்கி நிற்க, ஜீப்பின் கதவை திறந்து கொண்டு இறங்கி நின்றான் சிவதாஸ். (அடுத்த கதையின் ஹீரோ இவன் தான்)வாயில் சூயிங் கம் மெல்லப்பட்டுக் கொண்டிருக்க, அங்கிருந்த கூட்டத்தின் மீது பார்வையை பதித்தான். அவனைக் கண்டதுமே கண்களில் பீதியுடன் அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பித்தனர்.
இடுப்பில் இரு கையையும் வைத்தபடி அவர்கள் அருகே சென்றவன் “இங்கே எதுக்கு வந்திருக்கீங்க?” என்றான்.
அவன் எதிரே இருந்த பத்திரிகையாளர் நடுக்கத்துடன் “சித்தார்த் சார் இரெண்டாவது கல்யாணம் செஞ்சிட்டு வந்திருக்கார்னு நியுஸ் வந்துது...அது தான்” என்றான் தடுமாற்றத்துடன்.
“அதற்கு நீ இங்கே வந்து என்ன பண்ணப் போற? முதல் பொண்டாட்டியோட எத்தனை நாள் படு...அடுத்த பொண்டாட்டியோட எத்தனை நாள்னு தெரிஞ்சுகிட்டு எழுதப் போறியா?”.
அவனது கேள்வியில் வெடவெடத்துப் போனவன் “இல்ல சார்...அது” என்றவனை முறைத்து “உங்க எல்லோருக்கும் பத்து செகண்ட் டைம். ஒரு பய இங்கே நிற்க கூடாது” என்றான்.
அவனது பேச்சைக் கேட்டு சித்தார்த் முகத்தை சுளித்தபடி நின்றிருந்தான். சித்தார்த்தின் அருகில் நின்றிருந்த போலீஸ் அதிகாரியோ கடுகடுவென்று நின்று கொண்டிருந்தார். இவன் எதுக்கு வந்தான் என்பது போல மனதிற்குள் அவனை தாளித்துக் கொண்டிருந்தார்.
அவன் சொன்னது போல அடுத்த நிமிடம் அங்கிருந்த அனைவரும் அடித்து பிடித்து அங்கிருந்து கிளம்பி இருந்தனர். மீதம் இருந்தவர்கள் கேஷ்வியின் பெற்றோரும் போலீஸ் அதிர்காரிகள் மட்டுமே. சித்தார்த்தையும் வர்ஷூவையும் பார்த்துக் கொண்டே வந்தவன் அவன் அருகே நின்ற போலீஸ் அதிகாரியிடம் “என்ன கிஷோர்? நீ எதுக்கு இங்கே வந்த?” சூயிங் கம்மில் முட்டை விட்டபடி.
அவன் கேட்டதும் பல்லைக் கடித்துக் கொண்டு “கேஷ்வி மேடமோட பேரெண்ட்ஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. விசாரணைக்கு வந்திருக்கேன்” என்றான் கடுப்புடன்.
தலையை மேலும் கீழும் ஆட்டியவன் “ஓகே நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்” என்றான் கேஷ்வியின் தந்தையை பார்த்தபடி.
“நோ சார்! என் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் வந்திருக்கு நான் தான் விசாரிசாகனும்” என்றான் அழுத்தமாக.
அவனை மேலும் கீழும் நக்கலாகப் பார்த்துவிட்டு “விசாரணை பண்ணப் போறியா? ஓகே பண்ணு” என்றவன் தன் ஜீப்பின் பானெட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.
அவன் சென்று விடுவான் என்று நினைத்திருக்க, அவனோ அங்கேஏ அமர்ந்ததும் ஒருவித டென்ஷனுடன் சித்தார்த்திடம் “முதல் வைப் உயிருடன் இருக்கும் போது இரெண்டாவது திருமணம் சட்டப்படி குற்றம். அதனால உங்களை கைது செய்து சிறையில் அடைக்கலாம். உங்க முதல் வைப்பின் பேரெண்ட்ஸ் உங்களை கைது செய்ய சொல்லி கேட்டிருக்காங்க” என்றான்.
சித்தார்த்தோ நன்றாக நிமிர்ந்து நின்றவன் ஒருவித கிண்டலுடன் “நீங்க சொல்றது சரி தான். ஆனா முதல் வைப்னு நீங்க சொல்றவங்க தான் என்னுடைய இரெண்டாவது மனைவி. என் அருகில் இருக்கும் இவங்க தான் என் முதல் மனைவி” என்றான்.
அப்போது வீட்டினுள் இருந்து வேக நடையுடன் வந்த பிம்லா தேவி கோபத்தோடு “பொய்! அவன் சொல்றது பொய்! கேஷ்வி தான் அவனோட முதல் மனைவி” என்றார்.
பிம்லா தேவியை கிண்டலாகப் பார்த்து “என் அப்பாவின் மனைவி இவங்க தான் கேஷ்வியை எனக்கு இர்ண்டாவதாக கல்யாணம் செய்து வைத்தாங்க. அதுவும் என்னை கடத்தி, மிரட்டி நடத்தி வச்சாங்க” என்றான் சித்தார்த்.
சித்தார்த்தின் வீட்டு வாசலில் பத்திரிக்கையாளர்கள் ஒருபுறம், போலீஸ் ஒருபுறம் கேஷ்வியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருபுறம் என்று கூட்டம் கூடி இருந்தது. அதைக் கண்டு பயந்து போனவள் நடுக்கத்துடன் தன்னை மீறி அவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். காரிலிருந்து இறங்கும் முன் அவளை திரும்பி பார்த்தவன் “நான் பார்த்துக்கிறேன் மது! தைரியமா வா” என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
தான்யாவை மட்டும் காரிலிருந்து இறங்க வேண்டாம் என்று சொல்லி விட்டான். அவன் இறங்கியதுமே அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர். போலீசார் பத்திரிக்கையாளர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு அவனருகே வந்து “சார் உங்க மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு” என்றனர்.
அதற்குள் கேஷ்வியின் தந்தை கோபமாக அவன் முன்னே வந்து அடிக்கப் பாய்ந்தார். அதை தடுத்தவர்களை எல்லாம் திட்டிவிட்டு “என் பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு எப்படி நீ இன்னொரு கல்யாணம் செய்துப்ப?” என்று ஆங்காரமாக கத்தினார்.
கேஷ்வியின் தாயோ கண்ணீருடன் அவனுக்கு சாபம் அளித்துக் கொண்டிருந்தார். இறுகிய முகத்துடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சித்தார்த். அப்போது போலீசாரிடம் அவனை கைது செய்யும்படி கத்தினார் கேஷ்வியின் தந்தை.
அதை கேட்டு அவனருகில் வந்த போலீஸ் அதிகாரி “உங்க மேல அவங்க கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. அதனால நாங்க உங்களை கைது செய்து அழைச்சிட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்” என்றார்.
அவரை ஒரு பார்வை பார்த்தவன் “அஞ்சு நிமிஷம் வைட் பண்ண முடியுமா சார்?” என்றான்.
“சரி சார் வெயிட் பண்றோம்” என்று அவனுக்கு அருகிலேயே நின்று கொண்டார்.
அப்போது கருப்பு நிற ஜீப் பூம்-பூம் என்கிற ஹாரனுடன் கூட்டத்தை கலைத்தபடி வந்து நின்றது. அந்த ஜீப்பை பார்த்ததும் யோசனையுடன் நின்றிருந்தான் சித்தார்த். கூட்டம் மொத்தமும் ஒதுங்கி நிற்க, ஜீப்பின் கதவை திறந்து கொண்டு இறங்கி நின்றான் சிவதாஸ். (அடுத்த கதையின் ஹீரோ இவன் தான்)வாயில் சூயிங் கம் மெல்லப்பட்டுக் கொண்டிருக்க, அங்கிருந்த கூட்டத்தின் மீது பார்வையை பதித்தான். அவனைக் கண்டதுமே கண்களில் பீதியுடன் அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பித்தனர்.
இடுப்பில் இரு கையையும் வைத்தபடி அவர்கள் அருகே சென்றவன் “இங்கே எதுக்கு வந்திருக்கீங்க?” என்றான்.
அவன் எதிரே இருந்த பத்திரிகையாளர் நடுக்கத்துடன் “சித்தார்த் சார் இரெண்டாவது கல்யாணம் செஞ்சிட்டு வந்திருக்கார்னு நியுஸ் வந்துது...அது தான்” என்றான் தடுமாற்றத்துடன்.
“அதற்கு நீ இங்கே வந்து என்ன பண்ணப் போற? முதல் பொண்டாட்டியோட எத்தனை நாள் படு...அடுத்த பொண்டாட்டியோட எத்தனை நாள்னு தெரிஞ்சுகிட்டு எழுதப் போறியா?”.
அவனது கேள்வியில் வெடவெடத்துப் போனவன் “இல்ல சார்...அது” என்றவனை முறைத்து “உங்க எல்லோருக்கும் பத்து செகண்ட் டைம். ஒரு பய இங்கே நிற்க கூடாது” என்றான்.
அவனது பேச்சைக் கேட்டு சித்தார்த் முகத்தை சுளித்தபடி நின்றிருந்தான். சித்தார்த்தின் அருகில் நின்றிருந்த போலீஸ் அதிகாரியோ கடுகடுவென்று நின்று கொண்டிருந்தார். இவன் எதுக்கு வந்தான் என்பது போல மனதிற்குள் அவனை தாளித்துக் கொண்டிருந்தார்.
அவன் சொன்னது போல அடுத்த நிமிடம் அங்கிருந்த அனைவரும் அடித்து பிடித்து அங்கிருந்து கிளம்பி இருந்தனர். மீதம் இருந்தவர்கள் கேஷ்வியின் பெற்றோரும் போலீஸ் அதிர்காரிகள் மட்டுமே. சித்தார்த்தையும் வர்ஷூவையும் பார்த்துக் கொண்டே வந்தவன் அவன் அருகே நின்ற போலீஸ் அதிகாரியிடம் “என்ன கிஷோர்? நீ எதுக்கு இங்கே வந்த?” சூயிங் கம்மில் முட்டை விட்டபடி.
அவன் கேட்டதும் பல்லைக் கடித்துக் கொண்டு “கேஷ்வி மேடமோட பேரெண்ட்ஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. விசாரணைக்கு வந்திருக்கேன்” என்றான் கடுப்புடன்.
தலையை மேலும் கீழும் ஆட்டியவன் “ஓகே நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்” என்றான் கேஷ்வியின் தந்தையை பார்த்தபடி.
“நோ சார்! என் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் வந்திருக்கு நான் தான் விசாரிசாகனும்” என்றான் அழுத்தமாக.
அவனை மேலும் கீழும் நக்கலாகப் பார்த்துவிட்டு “விசாரணை பண்ணப் போறியா? ஓகே பண்ணு” என்றவன் தன் ஜீப்பின் பானெட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.
அவன் சென்று விடுவான் என்று நினைத்திருக்க, அவனோ அங்கேஏ அமர்ந்ததும் ஒருவித டென்ஷனுடன் சித்தார்த்திடம் “முதல் வைப் உயிருடன் இருக்கும் போது இரெண்டாவது திருமணம் சட்டப்படி குற்றம். அதனால உங்களை கைது செய்து சிறையில் அடைக்கலாம். உங்க முதல் வைப்பின் பேரெண்ட்ஸ் உங்களை கைது செய்ய சொல்லி கேட்டிருக்காங்க” என்றான்.
சித்தார்த்தோ நன்றாக நிமிர்ந்து நின்றவன் ஒருவித கிண்டலுடன் “நீங்க சொல்றது சரி தான். ஆனா முதல் வைப்னு நீங்க சொல்றவங்க தான் என்னுடைய இரெண்டாவது மனைவி. என் அருகில் இருக்கும் இவங்க தான் என் முதல் மனைவி” என்றான்.
அப்போது வீட்டினுள் இருந்து வேக நடையுடன் வந்த பிம்லா தேவி கோபத்தோடு “பொய்! அவன் சொல்றது பொய்! கேஷ்வி தான் அவனோட முதல் மனைவி” என்றார்.
பிம்லா தேவியை கிண்டலாகப் பார்த்து “என் அப்பாவின் மனைவி இவங்க தான் கேஷ்வியை எனக்கு இர்ண்டாவதாக கல்யாணம் செய்து வைத்தாங்க. அதுவும் என்னை கடத்தி, மிரட்டி நடத்தி வச்சாங்க” என்றான் சித்தார்த்.