அத்தியாயம் – 17
அவனது முதல் திருமணத்தைப் பற்றிக் கேட்டறிந்த செய்திகளை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.
இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?
தனது சுயநலத்திற்காக ஒருவனை மணந்து, அவனது உணர்வுகளைக் காயப்படுத்தி, குத்தி,கிழித்துக் கூறு போட்டு, அதன் மீது தனக்கொரு வாழக்கையை அமைத்துக் கொள்ள எப்படி முடிந்தது அவளால்?
முதல் மனைவியைப் பற்றி அவன் பேசும்போது மனம் வலித்தாலும்,அதன் பின்னே இருந்த ஏமாற்றத்தை கண்ட போது நெஞ்சிலிருந்த வலி காணாமல் போயிருந்தது.
எப்படிப்பட்டதொரு நம்பிக்கை துரோகத்தைக் கடந்து வந்திருக்கிறான்.எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பான்.என்னதான் குடும்பத்தாரின் துனையிருந்தாலும் இதயத்தில் ஏற்பட்ட ரணம் ஆறா வடுவாகி அல்லவா போயிருக்கும் என்று அவனுக்கு நடந்தவற்றை நினைத்து மிகவும் வேதனை அடைந்தாள்.
எதிரிலமர்ந்து அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நிகிலுக்கு,அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளிலிருந்தே, தனக்கு நடந்தவற்றை எண்ணி கலக்கமடைகிறாள் என்று புரிந்து கொண்டான்.
அவளது முகத்தைத் தன் இருகரங்களால் தாங்கிப் பிடித்தவன் சிறிது நேரம் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரின் மனமும் வேதனையை விழி வழியே வெளிப்படுத்தியது.
“சாரி ஸ்ருதி!நான் நந்தனாவை பற்றிச் சொல்லும் போது உன் கண்களில் தெரிந்த வலியை பார்த்தேன்.உன்னை காயப்படுத்தனும் என்பதற்காக அதைச் சொல்லவில்லை.கண்ணியமான ஒவ்வொரு ஆணுக்குள்ளும் தன் வருங்கால மனைவி மீது எத்தகைய எதிர்பார்ப்பு,காதல் இருக்கும் என்பதைச் சொல்ல நினைச்சேன்.அது உனக்குள்ளே வேதனையை உண்டாக்கியிருக்கும் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியுது.ஆனா, அதைச் சொன்னா தான் என்னோட ஏமாற்றத்தோட அளவு என்ன என்பது தெரியும்.”
“எனக்குப் புரியுதுங்க.வலிகள் எனக்கொண்ணும் புதுசில்லையே”என்றவளது விழிகள் கண்ணீரில் பளபளத்தது.
அவளது கலங்கிய கண்களைப் பார்த்தவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“அவ கிட்ட ஏமாந்து போனதில் என்னால யாரையும் நம்ப முடியல.அதனால தான் உன்னை, உன் மனதை ரொம்பவே காயப்படுத்திட்டேன்.”
அவனிடமிருந்து பிரிந்து உட்கார்ந்தவள் “அவ செஞ்ச அதே தப்பை தான் நீங்களும் செஞ்சீங்க”என்றாள் அழுத்தமாக.
அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து “இல்ல..”
அவன் மறுத்து பேச ஆரம்பித்ததும் இடைமறித்தவள் “அவ உங்க கூடப் போன்ல பேசினப்பயாவது, திருமணதிற்குப் பிறகாவது சொல்லி இருக்கலாம்ன்னு வருத்தப்பட்டீங்க. என் விஷயத்தில் நீங்க என்ன பண்ணுனீங்க?ஏன் என் கிட்ட பேசல?. உங்களுடைய ஏமாற்றத்துக்கு நான் எந்த வகையில் காரணமானேன்.எதுவுமே இல்லையே?அப்புறம் ஏன் என்னை மோசமா நடத்தினீங்க. அவ செஞ்ச மாதிரி தானே நீங்களும் எனக்குத் துரோகம் பண்ணிங்க.உங்க சுயநலத்துக்காக நீங்களும் என்னை யூஸ் பண்ணிகிட்டீங்க.உங்களுக்கும் அவளும் என்ன வித்தியாசம் சொல்லுங்க? என்று அதுநாள் தன் மனதில் அழுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டாள்.
தனது தவறை அவள் சுட்டிக் காட்டவும் தலையைக் குனிந்து கொண்டவன் அவள் விரல்களைப் பற்றி வருடிக் கொண்டே “ஆமாம் ஸ்ருதி! நீ சொன்னது சரி தான். அவள் ஒரு வகையில் என்னை ஏமாற்றினாள் என்றால் நானுமே வேறு வகையில் உன்னை ஏமாற்றி இருக்கேன்.ஆனா, நான் உன்னைக் காயப்படுதணும்-னு நினைச்சு எதுவும் செய்யல.எனக்குள்ள இருந்த பயம் என்னை அப்படி நடக்க வச்சுது.ஒரு முறை பட்ட அடியே தாங்க முடியாமல் போனதுனால அவ்வளவு மோசமா நடந்து கிட்டேன்.”
அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்டவள் “விடுங்க!என் தலையெழுத்து!நான் அன்பை யாரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.இந்த ஜென்மத்தில் உனக்கு இதுதான்-னு கடவுள் எழுதி வச்சிட்டார்.இதில் யாரை குறை சொல்ல முடியும்.”
அவள் சலிப்புடன் சொன்னதும் அவசரமாக “இல்ல ஸ்ருதி! அப்படிச் சொல்லாதே!என்னோட காதலை, அன்பை உனக்கு உணர்த்த தயாராயிருக்கேன்.என்னை நீ மன்னிக்கணும்.”என்றான் கெஞ்சலாக.
அவளது மனம் அவனுக்காக வாதாடியது. அவன் நல்லவன் தான்! அதிலும் தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணி அவனே வருந்துகிறான் என்றாலும், ஏனோ மனம் அவன் நந்தனாவை ரசித்ததைப் பற்றிச் சொன்னதை நினைத்துச் சுணங்கியது.
அவளது மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை அறிய முடியுமா என்று அவள் முகத்தையே பார்த்திருந்தான்.சிறிது நேரம் அவளின் பதிலுக்காகக் காத்திருந்தவன் பொறுக்க முடியாமல் “மத்தவங்களை விட உனக்குத் தான் என்னோட நிலைமை நல்லாவே புரியும் ஸ்ருதி. கொஞ்சம் முன்னாடி என் கிட்ட அழுதியே,என்னால இன்னொரு ஏமாற்றத்தை தாங்க முடியாது என்னை இப்படியே விட்டுடுங்கன்னு.அதே நிலையில் தான் நானும் இருந்தேன்.உன்னைக் கண்டு பயம்.உன்னிடம் பேசினால் உன் மீது அன்பு வந்துவிட்டால், நீயும் ஏமாற்றி விட்டு போயிட்டேனா என்கிற பயம் தான் என்னை உன்கிட்ட இயல்பா பேச விடல, பழக விடல.நான் உன்னைத் துன்புறுத்த நினைக்கல.உன்னை என்னிடமிருந்து விலக்கி வைக்கத் தான் பார்த்தேன். அதுவும் நீயா விலகிப் போகணும்-னு நினைச்சு தான் செய்தேன்.அது உன்னை எந்த அளவுக்குப் பாதிச்சிருக்கும்-னு ஒருநாள் உணர்ந்தேன்.நான் செஞ்ச தப்போட அளவும் புரிந்தது”என்றான் வேதனையுடன்.
அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அதிலிருந்த ஞாயத்தை உணர்ந்து கொண்டவள் மெல்ல விழியுர்த்தி அவனைப் பார்த்து “நந்தனா ரொம்ப அழகா?” என்றாள்.
அவளின் பெயரைக் கேட்டதும் அதுவரை இயல்பாய் இருந்தவன் மீண்டும் இறுகிப் போனான்.
“அழகா?அசிங்கம்! பெண் இனத்துக்கே அவமானம்!”என்றான் ஆத்திரத்துடன்.
அவன் கோபபட்டாலும் சில விஷயங்கள் தெரிய வேண்டியிருந்ததால் விடாமல் அவனிடம் கேட்டாள்“ஒருநாள் முழுக்க ஏர்போர்ட்டிலேயே இருந்தீங்க?அப்புறம் என்ன ஆச்சு?எப்போ சொன்னீங்க அத்தை கிட்ட”என்றாள்.
ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பாரத்தவனின் எண்ணங்கள் அன்றைய நினைவுகளைத் தேடி ஓடியது.
அவள் சென்ற நிமிடத்திலிருந்து அதே இடத்தில் பிரமை பிடித்து அமர்ந்திருந்தவனைக் கண்ட ஏர்போர்ட் தொழிலாளி ஒருவர் தட்டி எழுப்பி வீட்டுக்கு போகவில்லையா என்று கேட்ட பின்பே, தான் இருக்கும் நிலையை உணர்ந்தான்.
அடுத்து என்ன என்று குழம்பி போனது மனது.உலகமே ஸ்தம்பித்துப் போனது போல் உணர்ந்தான்.
மெல்ல எழுந்து சென்று முகம் கழவிவிட்டு வந்தவன் யோசித்தான்.இந்த சூழ்நிலையைத் தனியாகச் சமாளிக்க முடியாது என்றெண்ணியவன், டிக்கெட் கவுண்டருக்கு சென்று மீண்டும் ஊருக்கு செல்ல டிக்கெட் எடுத்து வந்தான்.
எப்படி விமானத்தில் ஏறினான், எப்படி வந்திறங்கினான் என்றே தெரியாது.சுய நினைவின்றி எல்லாவற்றையும் செய்து அம்மாவின் மடியை தேடி ஓடிக் கொண்டிருந்தான்.
காயத்ரியின் இல்லத்தில்..
இரவு உணவை முடித்துக் கொண்டு ஆகாஷும், நீரஜும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.ஆர்த்தியும்,காயத்ரியும் மறுநாளுக்குத் தேவையான காய் கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர்.
சாம்பசிவமோ வாசலில் நடந்து கொண்டிருந்தார்.
“என்னடா நீரஜ்? இந்த நிக்கி பண்ற வேலையைப் பாரு!போனவன் ஒரு போன் பண்ணி கூடச் சொல்லல”.
அவனது முதல் திருமணத்தைப் பற்றிக் கேட்டறிந்த செய்திகளை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.
இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?
தனது சுயநலத்திற்காக ஒருவனை மணந்து, அவனது உணர்வுகளைக் காயப்படுத்தி, குத்தி,கிழித்துக் கூறு போட்டு, அதன் மீது தனக்கொரு வாழக்கையை அமைத்துக் கொள்ள எப்படி முடிந்தது அவளால்?
முதல் மனைவியைப் பற்றி அவன் பேசும்போது மனம் வலித்தாலும்,அதன் பின்னே இருந்த ஏமாற்றத்தை கண்ட போது நெஞ்சிலிருந்த வலி காணாமல் போயிருந்தது.
எப்படிப்பட்டதொரு நம்பிக்கை துரோகத்தைக் கடந்து வந்திருக்கிறான்.எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பான்.என்னதான் குடும்பத்தாரின் துனையிருந்தாலும் இதயத்தில் ஏற்பட்ட ரணம் ஆறா வடுவாகி அல்லவா போயிருக்கும் என்று அவனுக்கு நடந்தவற்றை நினைத்து மிகவும் வேதனை அடைந்தாள்.
எதிரிலமர்ந்து அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நிகிலுக்கு,அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளிலிருந்தே, தனக்கு நடந்தவற்றை எண்ணி கலக்கமடைகிறாள் என்று புரிந்து கொண்டான்.
அவளது முகத்தைத் தன் இருகரங்களால் தாங்கிப் பிடித்தவன் சிறிது நேரம் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரின் மனமும் வேதனையை விழி வழியே வெளிப்படுத்தியது.
“சாரி ஸ்ருதி!நான் நந்தனாவை பற்றிச் சொல்லும் போது உன் கண்களில் தெரிந்த வலியை பார்த்தேன்.உன்னை காயப்படுத்தனும் என்பதற்காக அதைச் சொல்லவில்லை.கண்ணியமான ஒவ்வொரு ஆணுக்குள்ளும் தன் வருங்கால மனைவி மீது எத்தகைய எதிர்பார்ப்பு,காதல் இருக்கும் என்பதைச் சொல்ல நினைச்சேன்.அது உனக்குள்ளே வேதனையை உண்டாக்கியிருக்கும் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியுது.ஆனா, அதைச் சொன்னா தான் என்னோட ஏமாற்றத்தோட அளவு என்ன என்பது தெரியும்.”
“எனக்குப் புரியுதுங்க.வலிகள் எனக்கொண்ணும் புதுசில்லையே”என்றவளது விழிகள் கண்ணீரில் பளபளத்தது.
அவளது கலங்கிய கண்களைப் பார்த்தவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“அவ கிட்ட ஏமாந்து போனதில் என்னால யாரையும் நம்ப முடியல.அதனால தான் உன்னை, உன் மனதை ரொம்பவே காயப்படுத்திட்டேன்.”
அவனிடமிருந்து பிரிந்து உட்கார்ந்தவள் “அவ செஞ்ச அதே தப்பை தான் நீங்களும் செஞ்சீங்க”என்றாள் அழுத்தமாக.
அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து “இல்ல..”
அவன் மறுத்து பேச ஆரம்பித்ததும் இடைமறித்தவள் “அவ உங்க கூடப் போன்ல பேசினப்பயாவது, திருமணதிற்குப் பிறகாவது சொல்லி இருக்கலாம்ன்னு வருத்தப்பட்டீங்க. என் விஷயத்தில் நீங்க என்ன பண்ணுனீங்க?ஏன் என் கிட்ட பேசல?. உங்களுடைய ஏமாற்றத்துக்கு நான் எந்த வகையில் காரணமானேன்.எதுவுமே இல்லையே?அப்புறம் ஏன் என்னை மோசமா நடத்தினீங்க. அவ செஞ்ச மாதிரி தானே நீங்களும் எனக்குத் துரோகம் பண்ணிங்க.உங்க சுயநலத்துக்காக நீங்களும் என்னை யூஸ் பண்ணிகிட்டீங்க.உங்களுக்கும் அவளும் என்ன வித்தியாசம் சொல்லுங்க? என்று அதுநாள் தன் மனதில் அழுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டாள்.
தனது தவறை அவள் சுட்டிக் காட்டவும் தலையைக் குனிந்து கொண்டவன் அவள் விரல்களைப் பற்றி வருடிக் கொண்டே “ஆமாம் ஸ்ருதி! நீ சொன்னது சரி தான். அவள் ஒரு வகையில் என்னை ஏமாற்றினாள் என்றால் நானுமே வேறு வகையில் உன்னை ஏமாற்றி இருக்கேன்.ஆனா, நான் உன்னைக் காயப்படுதணும்-னு நினைச்சு எதுவும் செய்யல.எனக்குள்ள இருந்த பயம் என்னை அப்படி நடக்க வச்சுது.ஒரு முறை பட்ட அடியே தாங்க முடியாமல் போனதுனால அவ்வளவு மோசமா நடந்து கிட்டேன்.”
அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்டவள் “விடுங்க!என் தலையெழுத்து!நான் அன்பை யாரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.இந்த ஜென்மத்தில் உனக்கு இதுதான்-னு கடவுள் எழுதி வச்சிட்டார்.இதில் யாரை குறை சொல்ல முடியும்.”
அவள் சலிப்புடன் சொன்னதும் அவசரமாக “இல்ல ஸ்ருதி! அப்படிச் சொல்லாதே!என்னோட காதலை, அன்பை உனக்கு உணர்த்த தயாராயிருக்கேன்.என்னை நீ மன்னிக்கணும்.”என்றான் கெஞ்சலாக.
அவளது மனம் அவனுக்காக வாதாடியது. அவன் நல்லவன் தான்! அதிலும் தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணி அவனே வருந்துகிறான் என்றாலும், ஏனோ மனம் அவன் நந்தனாவை ரசித்ததைப் பற்றிச் சொன்னதை நினைத்துச் சுணங்கியது.
அவளது மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை அறிய முடியுமா என்று அவள் முகத்தையே பார்த்திருந்தான்.சிறிது நேரம் அவளின் பதிலுக்காகக் காத்திருந்தவன் பொறுக்க முடியாமல் “மத்தவங்களை விட உனக்குத் தான் என்னோட நிலைமை நல்லாவே புரியும் ஸ்ருதி. கொஞ்சம் முன்னாடி என் கிட்ட அழுதியே,என்னால இன்னொரு ஏமாற்றத்தை தாங்க முடியாது என்னை இப்படியே விட்டுடுங்கன்னு.அதே நிலையில் தான் நானும் இருந்தேன்.உன்னைக் கண்டு பயம்.உன்னிடம் பேசினால் உன் மீது அன்பு வந்துவிட்டால், நீயும் ஏமாற்றி விட்டு போயிட்டேனா என்கிற பயம் தான் என்னை உன்கிட்ட இயல்பா பேச விடல, பழக விடல.நான் உன்னைத் துன்புறுத்த நினைக்கல.உன்னை என்னிடமிருந்து விலக்கி வைக்கத் தான் பார்த்தேன். அதுவும் நீயா விலகிப் போகணும்-னு நினைச்சு தான் செய்தேன்.அது உன்னை எந்த அளவுக்குப் பாதிச்சிருக்கும்-னு ஒருநாள் உணர்ந்தேன்.நான் செஞ்ச தப்போட அளவும் புரிந்தது”என்றான் வேதனையுடன்.
அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அதிலிருந்த ஞாயத்தை உணர்ந்து கொண்டவள் மெல்ல விழியுர்த்தி அவனைப் பார்த்து “நந்தனா ரொம்ப அழகா?” என்றாள்.
அவளின் பெயரைக் கேட்டதும் அதுவரை இயல்பாய் இருந்தவன் மீண்டும் இறுகிப் போனான்.
“அழகா?அசிங்கம்! பெண் இனத்துக்கே அவமானம்!”என்றான் ஆத்திரத்துடன்.
அவன் கோபபட்டாலும் சில விஷயங்கள் தெரிய வேண்டியிருந்ததால் விடாமல் அவனிடம் கேட்டாள்“ஒருநாள் முழுக்க ஏர்போர்ட்டிலேயே இருந்தீங்க?அப்புறம் என்ன ஆச்சு?எப்போ சொன்னீங்க அத்தை கிட்ட”என்றாள்.
ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பாரத்தவனின் எண்ணங்கள் அன்றைய நினைவுகளைத் தேடி ஓடியது.
அவள் சென்ற நிமிடத்திலிருந்து அதே இடத்தில் பிரமை பிடித்து அமர்ந்திருந்தவனைக் கண்ட ஏர்போர்ட் தொழிலாளி ஒருவர் தட்டி எழுப்பி வீட்டுக்கு போகவில்லையா என்று கேட்ட பின்பே, தான் இருக்கும் நிலையை உணர்ந்தான்.
அடுத்து என்ன என்று குழம்பி போனது மனது.உலகமே ஸ்தம்பித்துப் போனது போல் உணர்ந்தான்.
மெல்ல எழுந்து சென்று முகம் கழவிவிட்டு வந்தவன் யோசித்தான்.இந்த சூழ்நிலையைத் தனியாகச் சமாளிக்க முடியாது என்றெண்ணியவன், டிக்கெட் கவுண்டருக்கு சென்று மீண்டும் ஊருக்கு செல்ல டிக்கெட் எடுத்து வந்தான்.
எப்படி விமானத்தில் ஏறினான், எப்படி வந்திறங்கினான் என்றே தெரியாது.சுய நினைவின்றி எல்லாவற்றையும் செய்து அம்மாவின் மடியை தேடி ஓடிக் கொண்டிருந்தான்.
காயத்ரியின் இல்லத்தில்..
இரவு உணவை முடித்துக் கொண்டு ஆகாஷும், நீரஜும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.ஆர்த்தியும்,காயத்ரியும் மறுநாளுக்குத் தேவையான காய் கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர்.
சாம்பசிவமோ வாசலில் நடந்து கொண்டிருந்தார்.
“என்னடா நீரஜ்? இந்த நிக்கி பண்ற வேலையைப் பாரு!போனவன் ஒரு போன் பண்ணி கூடச் சொல்லல”.