அத்தியாயம் – 14
அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோவில் மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்த வேலையில் கண் விழித்தான் மாறன். உடலெல்லாம் வலி. தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் கண்களைச் சுழற்றினான். அதுவொரு மருத்துவமனை என்பது மட்டும் புரிந்தது.
திரும்பி படுக்க முயற்சிக்க, சுளீர் என்று வலி எழ, முகச்சுளிப்புடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். மெல்ல கண்களைத் திறந்து தனக்கு என்னவானது என்று புரிந்து கொள்ள முயற்சிக்க ஆரம்பித்தான்.
அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நர்ஸ் அவன் விழித்திருப்பதை பார்த்ததும் அவனது நலத்தை ஆராய்ந்து விட்டு “எப்படி இருக்கீங்க?” என்றார்.
“முதுகில் வலி இருக்கு. எனக்கு என்ன ஆனது? எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறேன்?”
“உங்களுக்கு விபத்து நடந்து முதுகு தண்டில் பலமாக அடிபட்டிருக்கு. இருபத்தைந்து நாட்களாக இங்கே அனுமதிக்கபட்டிருக்கீங்க” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போய் விட்டான். அதோடு அமெரிக்க மருத்துவமனையில் இருபத்தைந்து நாட்கள் இருப்பது என்றால் அதன் செலவை எப்படி சமாளிப்பது என்கிற யோசனைக்குச் சென்று விட்டான். அதை அவரிடம் கேட்கவும் செய்து விட்டான்.
அவனது கவலையை உணர்ந்தவர் சிரித்த முகத்துடனே “நடந்த விபத்தில் உங்களது காரை இடித்து தள்ளியவர் மேல் தான் தவறு. அதனால் அவருடைய இன்ஷுரன்ஸ் கம்பனி தான் உங்களுக்கு ஆகும் செலவுகளை பொறுபேற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.
அதைக் கேட்டதும் பெருத்த நிம்மதி எழ, அடுத்து தன்னைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டுமே என்கிற எண்ணம் எழுந்தது. அதிலும் தர்ஷணா என்ன நினைத்திருப்பாள் என்கிற கவலை அதிகமாக இருந்தது.
இவன் விழிப்பதற்கு பத்து நாட்கள் முன்னரே விபத்து பற்றிய அனைத்து தகவல்களும் அவன் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டு விட்டது. மாறனின் அமெரிக்க நண்பன் ராபர்ட் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருந்தான். இந்திய அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது.
தர்ஷணா திருமணத்தை ஒட்டி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்ததால் அவளுக்கு இந்த விவரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கார்த்திக்கிற்கு மாறனுக்கு நடந்தவை அனைத்தும் தெரிந்திருந்தது.
மாறன் விழித்து விட்டான் என்று தெரிந்ததும் ராபர்ட் வந்து விட்டான். அவனிடம் சொல்லி மாறனின் பெற்றவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவனுடைய போன் முற்றிலுமாக சிதைந்து போயிருக்க, ராபர்ட் உதவியுடன் புதிய சிம் வாங்கி தாய், தந்தைக்கு அழைத்துப் பேசினான்.
அவர்களுக்கு அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மாற்றி மாற்றி இருவரும் பேசினார்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு “தர்ஷு எப்படி இருக்காம்மா? என்னை காணவில்லை என்றதும் பதறி போய் இருப்பாள். அவள் உங்களை தொடர்பு கொண்டாளா?”
அவன் அவளைப் பற்றி பேசியதும் “வேண்டாததை எல்லாம் இப்போ எதுக்கு தம்பி பேசுற? சீக்கிரம் குணமாகி இங்கே வந்து சேருகிற வழியைப் பார்” என்றார் அன்னை.
அவரின் பேச்சில் தெரிந்த ஒரு கோபத்தை கண்டு அதிர்ந்து போனவன் “என்னம்மா? ஏன் இப்படி பேசுறீங்க?” என்று பதறினான்.
அதற்குள் மாறனின் தந்தை சுதாரித்துக் கொண்டு “அது ஒன்னுமில்லப்பா உனக்கு என்னாச்சுன்னு தெரியாம ரெண்டு பேரும் தவிச்சுப் போயிட்டோம். அந்த ஆதங்கத்துல பேசுறா” என்றார் சமாளிப்பாக.
அவர்களின் வேதனையை உணர்ந்தவன் “சரிப்பா! நான் இந்த நம்பரில் இருந்து இனி கூப்பிடுவேன். இன்னைக்கு டாக்டரைப் பார்த்தால் தான் தெரியும் குணமாக எத்தனை நாள் ஆகும் என்று. அதன் பின்னாடி எப்போ வருவது என்று முடிவெடுக்கிறேன்” என்று சொல்லி வைத்தவனின் மனம் தர்ஷணாவை தான் சுற்றி வந்தது.
அவளும் மிகவும் தவித்துப் போயிருப்பாள் என்றெண்ணி அவளது எண்ணிற்கு அழைத்தான்.
திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில் தர்ஷ்ணாவிற்கு வாழ்வே வெறுத்துப் போயிருந்தது. உன்னை எனக்குப் பிடிக்கும், என்னைத் தவிர வேறொருவரால் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்கிற வசனத்தைக் கேட்டு கேட்டு அலுத்துப் போயிற்று.
அவளின் முகம் எந்நேரமும் இறுக்கத்துடனே இருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த சுகன்யா ஊரில் தான் இருந்தாள். கார்த்திக்கின் மனைவியிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருந்தவளுக்கு தர்ஷணாவின் இறுக்கம் ஒருவித எரிச்சலை கொடுத்தது.
விஜியுமே என்ன இந்தப் பெண் இப்படி இருக்கிறது? என்று யோசனையுடன் இருந்தார்.
அன்று காலை கார்த்திக் வெளியில் சென்றிருக்க, மாமியார் நாத்தனாருடன் ஹாலில் அமர்ந்திருந்தாள் தர்ஷ்ணா.
அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோவில் மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்த வேலையில் கண் விழித்தான் மாறன். உடலெல்லாம் வலி. தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் கண்களைச் சுழற்றினான். அதுவொரு மருத்துவமனை என்பது மட்டும் புரிந்தது.
திரும்பி படுக்க முயற்சிக்க, சுளீர் என்று வலி எழ, முகச்சுளிப்புடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். மெல்ல கண்களைத் திறந்து தனக்கு என்னவானது என்று புரிந்து கொள்ள முயற்சிக்க ஆரம்பித்தான்.
அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நர்ஸ் அவன் விழித்திருப்பதை பார்த்ததும் அவனது நலத்தை ஆராய்ந்து விட்டு “எப்படி இருக்கீங்க?” என்றார்.
“முதுகில் வலி இருக்கு. எனக்கு என்ன ஆனது? எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறேன்?”
“உங்களுக்கு விபத்து நடந்து முதுகு தண்டில் பலமாக அடிபட்டிருக்கு. இருபத்தைந்து நாட்களாக இங்கே அனுமதிக்கபட்டிருக்கீங்க” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போய் விட்டான். அதோடு அமெரிக்க மருத்துவமனையில் இருபத்தைந்து நாட்கள் இருப்பது என்றால் அதன் செலவை எப்படி சமாளிப்பது என்கிற யோசனைக்குச் சென்று விட்டான். அதை அவரிடம் கேட்கவும் செய்து விட்டான்.
அவனது கவலையை உணர்ந்தவர் சிரித்த முகத்துடனே “நடந்த விபத்தில் உங்களது காரை இடித்து தள்ளியவர் மேல் தான் தவறு. அதனால் அவருடைய இன்ஷுரன்ஸ் கம்பனி தான் உங்களுக்கு ஆகும் செலவுகளை பொறுபேற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.
அதைக் கேட்டதும் பெருத்த நிம்மதி எழ, அடுத்து தன்னைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டுமே என்கிற எண்ணம் எழுந்தது. அதிலும் தர்ஷணா என்ன நினைத்திருப்பாள் என்கிற கவலை அதிகமாக இருந்தது.
இவன் விழிப்பதற்கு பத்து நாட்கள் முன்னரே விபத்து பற்றிய அனைத்து தகவல்களும் அவன் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டு விட்டது. மாறனின் அமெரிக்க நண்பன் ராபர்ட் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருந்தான். இந்திய அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது.
தர்ஷணா திருமணத்தை ஒட்டி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்ததால் அவளுக்கு இந்த விவரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கார்த்திக்கிற்கு மாறனுக்கு நடந்தவை அனைத்தும் தெரிந்திருந்தது.
மாறன் விழித்து விட்டான் என்று தெரிந்ததும் ராபர்ட் வந்து விட்டான். அவனிடம் சொல்லி மாறனின் பெற்றவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவனுடைய போன் முற்றிலுமாக சிதைந்து போயிருக்க, ராபர்ட் உதவியுடன் புதிய சிம் வாங்கி தாய், தந்தைக்கு அழைத்துப் பேசினான்.
அவர்களுக்கு அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மாற்றி மாற்றி இருவரும் பேசினார்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு “தர்ஷு எப்படி இருக்காம்மா? என்னை காணவில்லை என்றதும் பதறி போய் இருப்பாள். அவள் உங்களை தொடர்பு கொண்டாளா?”
அவன் அவளைப் பற்றி பேசியதும் “வேண்டாததை எல்லாம் இப்போ எதுக்கு தம்பி பேசுற? சீக்கிரம் குணமாகி இங்கே வந்து சேருகிற வழியைப் பார்” என்றார் அன்னை.
அவரின் பேச்சில் தெரிந்த ஒரு கோபத்தை கண்டு அதிர்ந்து போனவன் “என்னம்மா? ஏன் இப்படி பேசுறீங்க?” என்று பதறினான்.
அதற்குள் மாறனின் தந்தை சுதாரித்துக் கொண்டு “அது ஒன்னுமில்லப்பா உனக்கு என்னாச்சுன்னு தெரியாம ரெண்டு பேரும் தவிச்சுப் போயிட்டோம். அந்த ஆதங்கத்துல பேசுறா” என்றார் சமாளிப்பாக.
அவர்களின் வேதனையை உணர்ந்தவன் “சரிப்பா! நான் இந்த நம்பரில் இருந்து இனி கூப்பிடுவேன். இன்னைக்கு டாக்டரைப் பார்த்தால் தான் தெரியும் குணமாக எத்தனை நாள் ஆகும் என்று. அதன் பின்னாடி எப்போ வருவது என்று முடிவெடுக்கிறேன்” என்று சொல்லி வைத்தவனின் மனம் தர்ஷணாவை தான் சுற்றி வந்தது.
அவளும் மிகவும் தவித்துப் போயிருப்பாள் என்றெண்ணி அவளது எண்ணிற்கு அழைத்தான்.
திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில் தர்ஷ்ணாவிற்கு வாழ்வே வெறுத்துப் போயிருந்தது. உன்னை எனக்குப் பிடிக்கும், என்னைத் தவிர வேறொருவரால் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்கிற வசனத்தைக் கேட்டு கேட்டு அலுத்துப் போயிற்று.
அவளின் முகம் எந்நேரமும் இறுக்கத்துடனே இருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த சுகன்யா ஊரில் தான் இருந்தாள். கார்த்திக்கின் மனைவியிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருந்தவளுக்கு தர்ஷணாவின் இறுக்கம் ஒருவித எரிச்சலை கொடுத்தது.
விஜியுமே என்ன இந்தப் பெண் இப்படி இருக்கிறது? என்று யோசனையுடன் இருந்தார்.
அன்று காலை கார்த்திக் வெளியில் சென்றிருக்க, மாமியார் நாத்தனாருடன் ஹாலில் அமர்ந்திருந்தாள் தர்ஷ்ணா.