Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 14 | SudhaRaviNovels

அத்தியாயம் - 14

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
அத்தியாயம் – 14

ஜாக்கிற்கு ஏனோ மனதில் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. இந்த அமைச்சரை முழுவதுமாக நம்பவும் முடியவில்லை. தங்களிடம் இருந்து காசை மட்டுமே எதிர்பார்க்கும் இவன், பதவியில் இருப்பதால் மட்டுமே அவனிடம் போக வேண்டி இருக்கிறது.

இத்தனை மாதங்கள் நல்லவிதமாக சென்று கொண்டிருந்தது. ஏனோ சிவதாஸ் பதவி ஏற்றத்தில் இருந்து உள்ளுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. க்றிஸ் வேறு ஏதாவது புதிதாக இழுத்து வைத்து விடுவானோ என்றும் சந்தேகம் இருந்தது. இந்த ஆறு மாதங்களாக இந்த கூட்டத்தை இத்தனை தூரம் வளர்த்து கொண்டு வந்தாயிற்று. இனியும் ஒரு வருடம் சென்று விட்டால் இங்கு அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து விடுவோம்.

அதிலும் மரியாவும், டேனியும் வந்து விட்டால் நிச்சயம் இந்த பூஜை பெரிய அளவில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம். ஆனால் அவர்கள் நாட்டில் எந்தவித பிரச்னையும் இன்று நுழைய வேண்டும்.

இவ்வாறு பலவாறாக யோசித்துக் கொண்டே சென்றவன் காரில் ஏறி அமர்ந்து போனை எடுத்து “லால்! எனக்கொரு ஹெல்ப் வேணும்”.

“சொல்லுங்க ஜாக்!”

“இரண்டு பறவைகள் எல்லைகளை கடக்க உன் உதவி வேண்டும்”.

“ம்ம்..ஓகே”.

“இங்கே கோட்டையில் பாதுகாப்பு அதிகம். அதனால சேரனின் ராஜியத்தில் நுழையலாமா?”

“பண்ணிடலாம் ஜாக்”.

“அப்போ சேரனின் ராஜியத்தில் இறங்கி பல்லவனிடம் வந்து சேரட்டும். இது உன் பொறுப்பு. உனக்கு தேவையானவை சரியாக வந்து சேர்ந்துடும்”.

“சரி ஜாக். எனக்கு தேவையான தகவல்களை அனுப்பி வைங்க”.

அவனிடம் பேசி விட்டு போனை வைத்தவனின் முகத்தில் தெளிவு பிறந்தது. சென்னையில் வந்து இறங்கினால் நிச்சயம் அவர்கள் சிக்குவார்கள் என்கிற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது.

அதே நேரம் அவர்கள் இருவரின் புகைப்படங்களும் பலரின் கைகளுக்கு இடம் மாறியது. சிவதாஸின் டீம் நகரமெங்கும் தங்களின் கண்காணிப்பில் எடுக்க தொடங்கினர். அதே நேரம் கள்ளிகுடி கிராமத்தை நோக்கி சிவதாஸ் சென்று கொண்டிருந்தான்.

அவனது கையில் ஊர் தலைவரைப் பற்றியும், அந்த ஊரைப் பற்றிய அத்தனை தகவல்களும் அவன் கைகளில். அவனது முகம் சிந்தனையுடன் இருந்தது. அந்த ஊரில் இந்த கூட்டத்தைச் சேர்ந்த எவரும் உண்டா என்று கேட்டால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

கையிலிருந்த அனைத்து தகவல்களையும் சரி பார்த்துக் கொண்டவன் அந்த ஊர் தலைவர் ராஜேந்திரன் வீட்டிற்குள் நுழைந்தான். அவரை பார்த்து கும்பிட்டு நாற்காலியில் அமர்ந்தவனின் கண்கள் வீட்டை ஆராய்ந்தது.

“வணக்கம்! நீங்க என்னை பார்க்கனும்னு சொன்னதா சொன்னாங்க” என்று இழுத்தார் ராஜேந்திரன்.

“வணக்கம்! நான் ஒரு சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேச வந்திருக்கேன். இங்கே உட்கார்ந்து பேசலாமா? இல்ல வேற இடத்தில்..” என்று அவன் இழுத்தும் வேகமாக எழுந்து கொண்டவர் “வாங்க மச்சுக்கு போயிடுவோம்” என்று அழைத்துக் கொண்டு அங்கிருந்த மரப்படியில் ஏறினார்.

வீட்டின் பெண்கள் அனைவரும் சிவதாசை பயந்து கொண்டே ஒளிந்து மறைந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அவரின் பின்னே எரியவனின் பார்வை சுற்றுபுறத்தை ஆராய்ந்து கொண்டே இருந்தது. பார்த்தவரை எங்கேயும் எதுவும் தவறாக தெரியவில்லை.

மாடியில் ஒரு அறையில் நுழைந்தவர் அங்கிருந்த நாற்காலியை காட்டி சிவதாசை அமர சொன்னவர் தானும் அமர்ந்து கொண்டு “சொல்லுங்க? எங்க கிராமத்தில் என்ன பிரச்சனை?”

சற்றே யோசித்தவன் பின்னர் பிரச்சனையின் அடி முதல் நுனி வரை அவரிடம் புட்டு புட்டு வைத்தான். முதலில் சாதரணமாக கேட்டுக் கொண்டிருந்தவர் அவன் சொன்னவற்றை கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார்.

“இப்போ அவங்களோட அடுத்த பூஜைக்கு உங்கள் கிராமத்தை தான் தேர்ந்தெடுத்து இருக்காங்க” என்றான்.

எச்சிலை விழுங்கிக் கொண்டவர் “உறுதியாக தெரியுமா சார்?”

“ம்ம்...எல்லா தகவல்களையும் கையில் வைத்துக் கொண்டு தான் உங்களை பார்க்க வந்திருக்கேன். அதோட அவங்களோட பூஜைக்கு உங்கள் ஊரில் இருந்து தான் பெண்ணை தேர்ந்தெடுப்பாங்க” என்று குண்டை போட்டான்.

“சார்!’ என்று அதிர்ந்து எழுந்தே விட்டார்.

அவரை பார்த்து தலையசைத்து “உட்காருங்க! உங்களோட நாங்க இருப்போம். என்னுடைய கணக்குப்படி இன்றிலிருந்து உங்கள் கிராமத்திற்கு புதிய ஆட்கள் உள்ளே நுழைய தொடங்குவாங்க” என்றான்.

முகத்தில் மரண பயம் தெரிந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டவர் “நான் என்ன பண்ணனும் சொல்லுங்க சார்? எங்க கிராமத்தை நீங்க தான் காப்பாற்றனும்”.
 
  • Like
Reactions: Dsk

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
“நீங்க சொன்னா உங்க ஊர் மக்கள் கேட்பாங்கன்னு நினைக்கிறேன். நீங்க உடனடியாக ஊர் மக்களை சந்திக்கணும்” என்றான்.

“சரி சார்”

“ஊர் மக்களிடம் நான் சொன்ன அனைத்தையும் சொல்லி இன்றிலிருந்து ஊரின் புதிய வரவுகளை கண்காணிக்க வேண்டும்”.

“சார்! நீங்கள் இருக்கும் போதே கூட்டத்தை போட்டு அனைத்தையும் என் முன்னாடி நீங்களே சொல்லிடுங்க”.

“ம்ம்..சரி. அதற்கு முன் அவர்கள் உங்கள் ஊர் பெண்ணை தேடுவாங்க சொன்னார்கள் என்று சொன்னேன் இல்லையா? அந்தப் பெண்ணை நாங்களே அழைத்து வந்திருக்கிறோம். உங்கள் ஊர் பெண்ணாக அங்கீகரித்து அவளை அவர்கள் தேடும் பெண்ணாக மாற்றுவது உங்கள் கையில் தான்”.

அதை கேட்டு கண் கலங்கியவர் அவனது கைகளைப் பற்றிக் கொண்டு “எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. எங்களுக்காக செய்யும் உங்களுக்கு நாங்கள் இதை செய்ய மாட்டோமா? ஒரு அரை மணி நேரம் கொடுங்க சார். நான் கூட்டத்தை ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன்” என்றவர் வேகமாக கீழே இறங்கி சென்றார்.

அவர் சென்றதும் மெல்ல எழுந்து கொண்டவன் அங்கிருந்த ஜன்னலின் வழியே கீழே தெரிந்த தொட்ட்டத்தை நோட்டம் விட ஆரம்பித்தான். ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் சுத்தம் செய்து கொண்டிருக்க, ராஜெந்திறான் சென்று ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவனிடம் பேசி விட்டு அவர் உள்ளே செல்ல, அவன் வேகமாக அங்கிருந்து வெளியேறினான். அப்போது அறைக் கதவு மெல்ல திறக்கப்பட்டு சூடான காப்பியை கையில் ஏந்தியபடி ராஜேந்திரனின் மனைவி வந்து நின்றார்.

அவரிடம் வாங்கிக் கொண்டான் நன்றி சொல்லிவிட்டு அமைதியாக நாற்காலியில் அமர்ந்து பருக ஆரம்பித்தான். சுமார் பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்க, வெளியில் சலசலவென பேச்சு சப்தம் கேட்க ஆரம்பித்தது. எழுந்து சென்று தோட்டத்தைப் பார்க்க, அங்கே மக்கள் வர ஆரம்பித்திருந்தனர்.

ராஜேந்திரன் அவனை அழைக்க வந்து நின்றார். மௌனமாக அவருடன் இறங்கியவனை தோட்டத்தின் பக்கம் அழைத்துச் சென்றார். அவரிடம் வீட்டுப் பெண்களையும் வரும்படி சொல்ல சொல்ல, அவர்களும் வந்தனர்.

அந்த தோட்டத்தில் அதிகாலை நேரத்தில் ஊரே கூடி இருந்தது. சுமார் ஒரு நாலாயிரம் பேர் அங்கு நின்றிருந்தனர். குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் அங்கே கூடி இருந்தனர். தான் பேசுப் போவது அனைவரின் காதிலும் விழாது என்று யோசித்தவன் போனை எடுத்து தனது டிரைவரை அழைத்து வண்டியில் இருந்த ஸ்பீக்கரை எடுத்து வர சொன்னான்.

ஸ்பீக்கர் வந்ததும் கையில் எடுத்துக் கொண்டவன் “கள்ளிகுடி கிராம மக்களுக்கு வணக்கம். ஒரு பத்து நிமிஷம் நீங்க எல்லோரும் அமைதியாக இருந்தால் நாங்கள் பேசப் போவதை கேட்கலாம்” என்றான்.

அவன் சொன்னதும் அங்கே அதுவரை இருந்த சலசலப்பு அடங்க, ராஜேந்திரனை கண்களை காட்டி முதலில் பேசும்படி கூறினான். அவரும் அவன் யார் எதற்காக வந்திருக்கிறான் என்று சொன்னார்.

அப்போது ஒரு பெரியவர் “நம்ம கிராமத்தில என்ன பிரச்சனை வந்திட போகுது. அதுக்கு எதுக்கு இந்த பெரிய அதிகாரி வந்திருக்காரு?” என்று கேட்டார்.

ஸ்பீக்கரை எடுத்துக் கொண்டவன் “ஐயா! நான் சொல்வதை அமைதியாக கேட்டால் என்ன பிரச்சனை என்ன விஷயம்னு புரியும்” என்றவன் நடக்கப் போகும் பூஜை, அந்த குழு என்னவெல்லாம் செய்வார்கள், செய்திருக்கிறார்கள் என்று அனைத்தையும் அவர்களுக்கு சொல்லி முடித்தான்.

அத்தனை கூட்டம் இருந்தும் அவன் சொல்லி முடித்ததை கேட்ட பின் சிறு சப்தம் கூட எழவில்லை. அவர்களால் அவன் சொன்னதை ஏற்க முடியவில்லை. இப்படியும் மனிதர்களா என்று அதிர்ந்து போய் நின்றார்கள். அனைவரின் முகங்களையும் ஆராய்ந்தவன் மெல்ல தொண்டையை செருமிக் கொண்டு “உங்கள் கிராமத்தை மட்டுமில்லை இந்த நாட்டை அவர்களிடம் இருந்து காப்பாற்றப் போகும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கு. இந்த பூஜை இங்கே நடந்து விட்டால் அவர்கள் இங்கே நன்றாக காலூன்றி விடுவார்கள். நம்ம ஊரில் தீயதை நெருங்க விடலாமா சொல்லுங்க”.

முதல் ஆளாக அந்த பெரியவர் “விடக் கூடாது தம்பி. நாங்க எல்லோரும் உங்கள் கூட இணைந்து அந்தப் பசங்களை விரட்டுகிறோம்” என்றார்.

அவரை ஆமோதிப்பதைப் போல ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவரும் ஒத்துக் கொண்டனர். அதன் பின்னர் நடக்க வேண்டியவற்றை எல்லாம் அவர்களிடம் கூறியவன் “நான் ஒரு பெண்ணை உங்க கிட்ட விட்டுட்டு போக போறேன். அவள் தான் அவர்களின் கவனத்தை கவர்ந்து அந்த பூஜைக்கு பிரசாதமாக போகணும். அது உங்கள் கைகளில் தான் இருக்கு” என்றான்.

அந்த ஊரின் இளைஞர்கல் அனைவரும் நாங்க பார்த்துக்கிறோம் என்றனர். அதன்படி சற்று நேரத்தில் சஞ்சலா என்கிற அகல்யா அந்த ஊருக்குள் வந்து விடுவாள் என்றும் அவள் யார் வீட்டுப் பெண்ணாக அங்கே இருக்கப் போகிறாள் என்றும் அனைத்தும் அவர்களுக்கு சொல்லப்பட்டது. அதோடு ஊரின் எல்லைக்குள் நுழையும் புதியவர்களை கவனித்து தங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கு இளைஞர் பட்டாளத்தை நான்கு ஐந்து குழுக்களாக பிரித்து ஊரின் எல்லைக்குளும், எல்லையை சுற்றி உள்ள பகுதிகளையும் காவல் காக்க உருவாக்கப்பட்டனர்.

அனைத்தும் பேசி முடிக்கப்பட்ட பின் சிவதாஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
சிவதாஸ் சொல்லிச் சென்ற செய்திகளில் மூழ்கி இருந்தவளுக்கு அதன் அதிர்வில் இருந்து வெளி வர அதிக நேரம் ஆனது. அதற்குள் துர்கா விழித்து தனது காலை வேலைகளை தொடங்கி இருந்தார். அந்த சப்தத்தில் தனது சிந்தனையில் இருந்து கலைந்தவள் மெல்ல எழுந்து தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவளை புன்னகையுடன் வரவேற்றவர் சமையல்கார அம்மாளிடம் அவளுக்கு காப்பி தரும்படி கூறினார்.

உறங்காமல் இருந்ததில் அவள் முகம் சற்று உப்பலாக தெரிய “என்னம்மா புது இடம் தூக்கம் வரலையா? முகம் அதைச்சு போயிருக்கு” என்றார் கனிவாக.

“ம்ம்...ஆமாம் மேம்” என்றாள் மெல்லிய குரலில்.

அந்த நேரம் அவளுக்கு காப்பியை கொண்டு வந்து சமயல்கார அம்மாள் கொடுக்க, அதை வாங்கி வாயருகே கொண்டு செல்லும் நேரம் அவளது கையிலிருந்த காப்பி பறிக்கப்பட்டது. அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க, சாவகாசமாக அந்த காப்பியை சுவைத்துக் கொண்டு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான் சிவதாஸ்.

அவனை முறைத்த துர்கா “என்ன சிவா இது? புது பழக்கமா இருக்கு?” என்றார் கோபமாக.

அவனோ ரசித்து சுவைத்து குடித்துக் கொண்டே “செம டயர்ட் மா! சீக்கிரம் டிபன் ரெடி பண்ண சொல்லுங்க. நான் உடனே கிளம்பனும்” என்றான்.

“என்ன திடீர் விஜயம்? உடனே கிளம்பனும்னு சொல்ற? எனக்கொன்னும் புரியலையே?”

அவரை நிமிர்ந்து பார்த்தவன் “மா! சொன்னதை செய்ங்க!” என்றவன் எழுந்து சென்று தந்தையின் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.

அவனது பேச்சிலும் நடவடிக்கையிலும் கடுப்ப்பானவர் “இவன் எல்லாம் என்ன டிசைன்னே தெரியல? அவன் பாட்டுக்கு வந்தான் உன் கையில உள்ள காபியை வாங்கி குடிச்சான் சாப்பாடு வேனும்ன்றான் கிளம்பனும்னு சொல்றான். இதென்ன வீடா சத்திரமான்னு புரியல?” என்றவர் அவள் திகைத்து பார்ப்பதை பார்த்து “அன்னம்! அகல்யாவுக்கு காப்பி கொண்டு வந்து கொடு” என்று சொல்லிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும் ஒருவித எரிச்சலுடன் அன்னம் கொண்டு வந்த காப்பியை குடித்துவிட்டு தனது அறைக்குச் சென்று கதவை மூடும் முன், ஒரு கையால் அதை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் “பத்து நிமிஷம் டைம் என்னோட நீயும் கிளம்பனும். போகும் வழியில் உனக்கான டீடைல்ஸ் தரப்படும். அங்கே போய் எப்படி நடந்துக்கணும்னு எல்லா விவரங்களும் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

அவன் அவளது அறையிளிருண்டு வெளியே வருவதை பார்த்த துர்கா “என்ன சிவா? அடுத்து என்ன பிரச்சனை?” என்றார் கவலையாக.

“மா அவளை அழைச்சுகிட்டு இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்புறேன்” என்றான்.

அதில் முகம் மாறி போனவர் “அப்பா கிட்ட சொல்லிட்டியா சிவா?”

“ம்ம்...சொல்லிட்டேன்”.

“ஏன் சிவா கண்டிப்பா இவளை தான் கூட்டிட்டு போகனுமா? இந்த கேசில் அவளுக்கு எதுவும் தவறா?” என்று முடிக்கும் முன் அன்னையை பார்த்து “என்னம்மா இதெல்லாம் ஏற்கனவே பேசினது தானே? இப்போ என்ன?” என்றான் கடுமையாக.

ஒருவித தயக்கத்துடன் “அவளை பார்ப்பதற்கு முன்னாடி நீ சொன்னதை வைத்து வேற மாதிரி கற்பனை செய்து வைத்திருந்தேண்டா. ஆனா ரொம்ப சின்ன பெண்ணா தெரியிறா. அவளை போய் இந்த விஷயத்தில் ஈடுபட வைக்கலாமா?” என்றார்.

இதழில் எழுந்த நக்கலான புன்னகையுடன் “ஒ...அவளை பார்த்து பரிதாபப்படுறீங்களா?” என்றவன் அவரது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு படாரென்று அவளது அறைக்குள் நுழைந்தான்.

அவன் அப்படி நுழைந்ததும் அங்கே ஓரமாக தனது துணிகளை எடுத்துக் கொண்டிருந்தவள் பட்டென்று தனது கால்களால் அவனது கழுத்தில் ஓங்கி உதைத்திருந்தாள். அவனோ அன்னையின் கையை விட்டுவிட்டு அந்த கால்களை பற்றி இழுக்க, அவளோ எகிறி குதித்து அவனது இடுப்பில் உதைத்திருந்தாள்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துர்கா வாயில் கை வைத்து அதிர்ந்து போய் நின்றார். அவனோ அவளது கரங்களைப் பற்றி இழுத்து ஒரே தள்ளாக படுக்கையின் மீது தள்ளியவன் அன்னையின் பக்கம் திரும்பி “சின்ன பொண்ணு” என்றான் முரட்டு இதழ்களில் மலர்ந்த சிரிப்புடன்.

அப்போது தான் அவனது அன்னையும் அங்கிருப்பதை பார்த்து சட்டென்று எழுந்து நின்றவள் “சாரி மேம்” என்றாள்.

அவரோ அவசரம் அவசரமாக “சாரி எல்லாம் வேண்டாம்டா. பொண்ணுங்க இப்படி இருப்பதை பார்த்து சந்தோஷமா இருக்கு. இவனையே சமாளிக்கிறேன்னா நீ பெரிய ஆள் தான்” என்றார் மலைப்புடன்.

அன்னையின் தோள்களை பற்றி அழுத்தியவன் “போதும்மா! நாங்க கிளம்பனும்” என்றவன் அவளிடம் இறுகிய முகத்தோடு “கிளம்பு!” என்றான்.

“அப்பாட்ட சொல்லிட்டு கூட்டிட்டு போடா”.

“சொல்லிட்டேன்-மா! கிளம்புறோம்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று ஜீப்பை நோக்கி சென்றான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் “வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு. நீ வாம்மா! நீ எதுக்கும் பயப்படாதே. அவன் உன்னை அவங்க கிட்ட விட்டுட மாட்டான். தைரியமா போயிட்டு வா” என்றார்.

அவர் சொன்னதை கேட்டதும் அதிர்ந்து போய் “உங்களுக்கு தெரியுமா?” என்றாள் மொட்டையாக.

மெல்லிய சிரிப்புடன் “இங்கே நீ எதுக்கு வந்தேன்னும் தெரியும். நீ யாருன்னும் தெரியும்மா ” என்றார். அவளது தோள்களை அழுந்தப் பற்றி.
 
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!